திருக்காளத்தி கோவிலில் லிங்க வடிவமாகத் தரிசனம் தரும் இறைவனுடன் சேர்ந்து ஒரு சேர ஐக்கியமாகி ராகு, கேது இருவரும் தரிசனம் தருகிறார்கள். இது இக்கலியுகத்தில் அளவற்ற சக்தி பெற்ற தெய்வீகப் பரிகாரத் திருத்தலமாகும்..
வீட்டில் பூஜை அறையில் தினமும் கூடுதலாக ஒரு தீபம் ஏற்றி, ராகு துதியை 108 தடவைகள் கூறி ராகு படத்தை வணங்கி வரவும். தங்க மோதிரத்தில் கோமேதகம் கல் பதித்து அணியலாம்.
ஜாதகத்தில் முக்கியமாக புத்திர தோஷம், சயன தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், கால சர்ப்பதோஷம் இருப்பவர்கள் ராகு ப்ரீதி செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
எவ்வித வசதியும் இல்லாதவர்கள் அருகிலுள்ள கோவில் ஒன்றில், கர்ப்பக்கிரகத்தில் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கும் தூங்கா விளக்கில் முடிந்தபோதெல்லாம் சிறிது நெய் சேர்த்து வரவும். ராகு தசை அல்லது ராகு புத்தி காலங்களில் மட்டும் இந்த பரிகாரம் செய்வது சிறந்த பலன்களைத் தரும்.
0 Facebook:
Post a Comment