குடும்பத்தை நடத்துவோருக்கு வாழ்க்கையில் பொறுப்பு உணர்ச்சி அதிகம் ஏற்படுகிறது. அதுவும் அந்த குடும்பத்தில் குழந்தைகள் பிறந்த பிறகுதான் கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் வாழ்க்கையின் பந்த பாசங்களின் பிணைப்பும், பிடிப்பும், இணைப்பும் இசைவும் ,பொறுப்பும் ,கடமையும், கௌரவமும் ஏற்படுகின்றன. அதனால் தான் குடும்ப வாழ்க்கையை இல்லறம் என்னும் நல்லறம் என்கின்றோம்.
ஜோதிட சாஸ்திரப்படி ஒரு மனிதனுடைய குடும்பத்தை பற்றி நிச்சயிப்பது ஒருவருடைய ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாவது பாவமே (இடம்) ஆகும். ஒருவரது ஜாதகத்தில் இரண்டாவது பாவத்தில் இருந்து அவரால்
இரட்சிக்கத்தக்கவர்கள், முகம், வாக்கு, வலதுகண், முன்னுள்ளதனங்கள், கல்விச்சிறப்பு, புத்திசாதுர்யம், ஆகாரச்சிறப்பு, வேலைக்காரர்கள், நண்பர்கள் ஆகியோரைப்பற்றியும் அறிந்து கொள்ளலாம். மொத்தத்தில் ஒரு மனிதனுக்கு குடும்பத்தை நடத்திச் செல்லும் தகுதியை குறிப்பது தான் இந்த இரண்டாவது அமைப்பாகும்.
பொராவளி என்ற ஜோதிட நூல் இந்த இரண்டாம் பாவத்தினை ':தனபவனம்' என்று வழங்குகின்றது. இந்த பாவத்தைக் கொண்டு பொன் முதலிய லோகங்களை வாங்கல் , விற்றல், மணிகளை சேர்த்து வைத்தல் முதலியவற்றையும் அறியலாம். என்று கூறுவதோடு இந்த இரண்டாம் அமைப்பாக அமையும் மேஷம் முதல் மீனம் ஈறாகவுள்ள ராசிகள் மூலம் அடையும் பலன்களை பின்வருமாறு கூறுகிறது.;.
மேஷராசி 2ம் இடமாக வருமானால் ,அது அந்த ஜாதகருக்குரிய மனிதனை பலவிதமாயும் அதிகமாகவுள்ள தனத்தினால் நிறைந்தவனாகச் செய்யும். அத்துடன் அதிக பாக்கியம் உள்ளவனாகவும் , பெரியகுடும்பம் உள்ளவனாகவும் , கன்றுகாலிகள் நிறைந்தவனாகவும் பண்டிதர்களால் அறியப்பட்டவனாகவும் செய்துவிடும்
.
ரிசப ராசி 2ம் இடமாக வருமானால் ,அது அந்த ஜாதகனை எப்போதும் பயிரிடுவதற்கான முயற்சிகளை செய்விப்பதால் பொருளையும் நாற்கால் உயிரினங்களால் இழுக்கப்பட்ட வண்டியால் சஞ்சாரத்தையும் வழங்குவதோடு , அவனுக்கு தங்கம், நவரத்தினம் போன்றவைகளையும் வழங்குகின்றது.
கடக ராசி 2ம் இடமாக வருமானால் அந்த ஜாதகன் எப்போதும் சூதாட்டத்தில் கிடைத்த பொருளையும் , பத்தினியின் மூலம் கிடைக்கும் நல்ல சுகத்தையும், அவன் விரும்பிய உணவையும், தன் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கான பொருளை தனது நியாயமான மார்க்கத்தில் சம்பாதிப்பவனாவான்.
சிம்ம ராசி 2ம் இடமாக வருமானால் அந்த மனிதன் மனிதர்களால் போற்றப்பட்டும் ,எல்லோருக்கும் உபகாரம் செய்வதில் உபயோகப்படுவதும், தனது முயற்சியால் சம்பாதிக்கப்பட்டடமான பொருள் அன்னம் பானம் அகியவற்றை அதிகமாகவும் தந்து தனது உறவினர்களின் பாராட்டையும் போற்றுதல்களையும் அடைவான்.
கன்னி ராசி 2ம் இடமாக வருமானால் அந்த மனிதன் அரசாங்கத்தின் மூலம் தனத்தையடைவான். அவன் பொன் ,நவரத்தினம், யானை, குதிரை, வாகனங்கள் போன்றவைகளையும் அடைவான்.
துலா ராசி 2ம் இடமாக வருமானால் அந்த மனிதன் பாறைகளில் இருந்தும் ,பூமியில் இருந்தும் பயிர்களில் இருந்தும் உண்டாவதும் தனது முயற்சியினால் கிடைப்பதுமான தனத்தை அதிக அளவில் அடைவான். நல்ல காரியங்களுக்கே பயன்படுவதாக அந்த பொருளும் அமையும்.
விருச்சிக ராசி 2ம் இடமாக வருமானால் அந்த மனிதன் எப்போதும் தனது சுயதர்மத்தில் பற்றுடையவனாக இருப்பான். பெண் போகத்திலேயே எப்போதும் விருப்பமுடையவனாவான். அந்தணரிடத்தும், தேவர்களிடத்தும் பக்தியுள்ளவனாகத் திகழ்வான். பிறர் வியக்கத்தக்க வகையில் பேசுவதில் வல்லவனாக விளங்குவான்.
தனுசு ராசி 2ம் இடமாக வருமானால் அந்த மனிதன் தீரச் செயல்களாலும் தர்ம காரியங்களினாலும், யுத்தங்களின் மூலமாகவும், பல வழிகளில் பொருள் சம்பாதிப்பதோடு நாற்கால் பிராணிகள், வாகனங்கள் முதலியவற்றையும் பெற்று மகிழ்வான்.
மகர ராசி 2ம் இடமாக வருமானால் அந்த மனிதன் பலவித உபாயங்களாலும், பயிர்த் தொழிலாலும், அன்னிய தேசத்தொடர்பாலும், அரசர்களையும், அரசாங்கத்தையும் தன் வசமாக்குவதாலும் பெரும் பொருள் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவான்.
கும்ப ராசி 2ம் இடமாக வருமானால் அந்த மனிதன் மலர்கள் , பழங்கள் இவைகளின் மூலமாகவும், நல்லவர்களால் பரோபகாரமாக வழங்கப்பட்ட பொருளையும் பெற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுபவனாவான்.
மீன ராசி 2ம் இடமாக வருமானால் அந்த மனிதன் நியமம், உபவாசம் போன்றவைகளாலும் வித்தையின் பிரபாவத்தாலும், புதையல் கிடைப்பதாலும், தாய் , அரசாங்கம் இவைகள் மூலமாகவும் பெரும் பொருள் சம்பாதித்து தன் குடும்பத்தை காப்பாற்றுபவனாவான்.
0 Facebook:
Post a Comment