1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். இதுவரை வராமலிருந்த பாக்கிகள் யாவும் வசூலாகும். தொழிலதிபர்கள் புதிதாக தொழில்தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். வங்கியில் எதிர்பார்த்த கடன் வந்துசேரும். வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ள பொருட்கள் யாவும் நல்ல விலைக்குச் செல்லும்.
விவசாயிகள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். கோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை வைத்திருப்போரும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். உடன் பணிபுரியும் பெண் ஊழியர்களால் பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிதானமாகச் செயல்படும் ஒவ்வொரு காரியத்திலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு.
சுயதொழில் புரிவோருக்கு இந்த மாதம் முழுவதும் விருத்தி ஏற்படும். திருமணமாகாத ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வரன்கள் அமையும். குழந்தையே இல்லையென்று ஏங்கும் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்வு பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் புதிய பதவிகளை அடைவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 22, 31; 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.
2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் செயல்பாடுகளில் மிகுந்த கவனம் தேவை. தடை, தாமதங்கள் ஏற்படலாம். எனினும் முயற்சிக்குத் தகுந்த பலன்களை அடைவீர்கள். கடன் தொல்லை நீங்கும். புதிய வரவுகள் உங்களை மகிழ்ச்சியில் திளைக்கவைக்கும்.
பொருளாதாரம் மேம்படும். கணவன்- மனைவியிடையே வாக்குவாதம் வந்து நீங்கும். பிரிந்துவாழும் தம்பதியர் திடீரென மனம் மாறி ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். புதிய பங்குதாரர்கள் வந்துசேர்வார்கள். வியாபாரிகளுக்கு- போட்டி வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை மாறும். உங்கள் விற்பனை கூடும்.
அரசு ஊழியர் மற்றும் இதர பணியாளர்களின் வேலைப்பளு கூடும். அதிகாரிகள் பாராட்டி கௌரவப்படுத்துவார்கள். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிட்டும். ஒருசிலர் பதவி உயர்வையும் அடைவார்கள். உடல்நிலை சீராகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டிய மாதம். கடினமாகப் படிக்கவேண்டும். அரசியல் பிரமுகர்கள் சிலர் பொதுமக்களால் வெறுக்கப்படுவார்கள். எனவே மக்கள் சேவையில் கவனமுடன் செயல்படவேண்டும்.
அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20; 29; 7, 25.
வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.
3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. பெண்களால் உயர்வுண்டு. மனைவியின் யோசனையைக் கேட்டு செயல்படுபவர்கள் கூடுதல் பலன்களைப் பெறுவார்கள்.
இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். வெளிநாடு சென்று வேலைசெய்ய எடுத்த முயற்சிகள் கைகூடும். ஒருசிலர் மத்திய அரசில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். கணவன்- மனைவியிடையே இணக்கமான நிலை நீடிக்கும். ஒருசில பெண்களுக்கு தாய்வீட்டு சொத்துகள் வந்துசேரும்.
தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி தொழிலில் வளர்ச்சி கூடும். தொழிலாளர்கள் ஒற்றுமையும் உண்டு. வியாபாரிகளுக்கு, வியாபாரம் கூடுவதோடு பழைய பாக்கிகளும் வசூலாகும். வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் கேட்ட இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். இதுவரை இருந்துவந்த வேலைப் பளுவும் குறையும்.
பங்காளிகளுக்குள் நிலவிய சொத்துப் பிரிவினை சம்பந்தமான பிரச்சினைகள் சுமுக தீர்வுக்கு வரும். பூர்வீக சொத்துகள் வந்துசேரும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறும். அரசியல் பிரமுகர்கள் அதிக பதட்டத்துடனேயே மாதம் முழுவதும் இருப்பார்கள். எதிலும் நிதானமாகச் செயல்படவேண்டும்.
அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.
வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.
4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாணவர்கள் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப அரசுப் பதவிகளைப் பெறுவார்கள். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். துணிச்சலாக அதிகநேரம் வேலைசெய்து, கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள். உங்களை மிகவும் வாட்டிவதைத்த நோய் நீங்கும்.
தொல்லை கொடுத்துவந்த உறவினர்களும் விலகிச்செல்வார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து கோரிய தம்பதியர் திடீரென ஒன்றுசேர்ந்து இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியைத் தருவார்கள். நீண்டகாலமாக தாய்- தந்தையரைவிட்டு விலகி வாழ்ந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதலை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வும் வந்துசேரும்.
தொழிலதிபர்களுக்கு, தொழிலாளர்கள் ஒற்றுமையால் உற்பத்தி கூடும். ஆனால் நிர்வாகத்தில் உள்ளவர்களால் மறைமுகத் தொல்லை வந்துபோகும். வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ள சரக்குகள் அனைத்தும் விற்பனையாகி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. மகான்களின் தரிசனம் கிட்டும்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.
தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.
வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.
5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இம்மாதம் உங்களுக்கு பொற்காலம். மாதம் முழுவதும் நல்ல பலன்களாகவே நடக்கும். நாள்தோறும் நல்ல செய்திகளையும், காரிய வெற்றிகளையும் சந்திப்பீர்கள். ஆலய தரிசனங்கள் நினைத்தபடி நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்திட போட்ட திட்டம் நிறைவேறும். புதிய பங்குதாரர்கள் வரவால் மூலதனம் உயரும். வியாபாரிகள் புதிய கிளைகளைத் தொடங்கி அதிகமான வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். இளம் விஞ்ஞானிகள் சிலர் வெளியுலகத்துக்கு வருவார்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தடையில்லாமல் கிட்டும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும்.
இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்த உடல்நலக்குறைவுகள் முற்றிலுமாகத் தீரும். பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச்செலவும் குறையும். வெளிநாடு சென்று நீண்டகாலமாக வராத பிள்ளைகள் வந்துசேர்வார்கள். மாணவர்கள் மிகவும் கவனமாகப் படிக்கவேண்டும். அரசியல் பிரமுகர்கள் சிலர் தலைமையால் பாராட்டப்பட்டு, புதிய பதவிகளையும் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.
வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.
6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இதுவரை உங்களுக்கு கிடைக்காமலிருந்த பூர்வீகச் சொத்துகள் கிட்டும். அரசு ஊழியர்களில் ஒருசிலர் தற்காலிகப் பணிநீக்க தண்டனை மாறி, மீண்டும் பணியில் சேர்வார்கள். அதிகாரிகளின் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்று ஏங்கும் பெற்றோர்களின் கவலை தீரும்; நல்ல வரன்கள் வந்துசேரும்.
வீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றிவந்த பிள்ளைகள் தங்களுக்கென ஒரு வேலையைத் தேடிக்கொள்வார்கள். கணவன்- மனைவியிடையே சண்டை வராது. குழந்தை பாக்கியமில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருள் அனைத்தையும் விற்பனை செய்து, நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் வரவால் வியாபாரம் கூடும்.
பழைய பாக்கிகள் அனைத்து வசூலாகும். இளைஞர்கள் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கப்பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும். மாணவர்கள் அதிக நாட்டத்தோடும் உற்சாகத்தோடும் படிப்பார்கள். அரசியல் பிரமுகர்கள் ஆதாய வரவுகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.
தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.
வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி.
7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
மாத ஆரம்பம் முதல் முடிவுவரை சுறுசுறுப்பிற்குப் பஞ்சமில்லை. பம்பரமாகச் சுழன்று வேலைசெய்வீர்கள். நல்ல வருவாயையும் பெறுவீர்கள். செலவுகள் கூடுதலாகும். அதனை சமாளிக்க மனைவியின் சேமிப்பு கைகொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த உறவுகள் விலகிச்செல்லும். பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள்; பெற்றோர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பார்கள்.
மத்திய அரசு வேலைக்குத் தேர்வெழுதி பதவி நியமன ஆணைக்காகக் காத்திருப்போரின் எண்ணம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் நிலுவை பாக்கிகள் வரப்பெறுவார்கள். ஒருசிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிட்டும். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தங்கள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். புதியதொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். வியாபாரிகளுக்கு விற்பனையில் இருந்துவந்த மந்தநிலை மாறும். அனைத்து தரப்பு மக்களும் நல்ல பலன்களைப் பெறக்கூடிய மாதம். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல் பிரமுகர்களில் ஒருசிலர் புதிய பதவிகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.
தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.
வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.
8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்களது முயற்சிகள் அனைத்திலும் வெற்றியையும் அதனால் நல்ல பலன்களையும் அடைவீர்கள். பொருளாதார நிலையில் இருந்துவந்த தட்டுப்பாடுகள் நீங்கும். கடன் படிப்படியாகக் குறையும். பிள்ளைகள் வகையில் தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரன்களாக அமையும். மக்களால் நன்மையடையும் காலம்.
தொழிலதிபர்கள் வெளிநாட்டில் தொழில்தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதற்கான நிதி உதவிகளும் கிடைக்கும். பங்குதாரர்கள் பக்கத்துணையாக இருப்பார்கள். வியாபாரிகள் வர்த்தகத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப அரசுப்பணியில் சேர்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்தவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். காணாமல்போன பொருட்கள் கிடைக்கும்.
அரசுப்பணியில் உள்ளவர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலைப் பெறுவார்கள். தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் உத்தரவு பெற்று நல்ல இடத்தில் பணியில் சேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அரசியல் பிரமுகர்கள் ஒருசிலர் தலைமையின் போக்கு பிடிக்காமல் கட்சியிலிருந்து விலகுவார்கள். நிதானம் தேவை.
அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.
வணங்கவேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி, முருகன்.
9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் உங்கள் காரியங்களில் முயற்சிக்குத் தக்க மேன்மையை அடைவீர்கள். பொருளாதார வரவு தடையின்றி அமையும். ஒருசிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். கணவன்- மனைவி ஒற்றுமை யில் குறைவிருக்காது. பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்.
இளைஞர்கள் வேலைதேடி வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் அவர்கள் வேலைபார்க்கும் கம்பெனிமூலம் வெளிநாடு சென்றுவருவார்கள். பிள்ளைகளின் திருமணம் நல்லபடியாக முடியும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவாக்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலாளர்கள் ஒற்றுமை கூடும். மகான்களின் தரிசனம் கிட்டும்.
வியாபாரிகளுக்கு விற்பனை படுஜோராக இருக்கும். அரசு ஊழியர்களின் வேலைப்பளு கூடும். அதனை சிறப்பாகச் செய்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத் தலைவர்கள் பொருளாதார உயர்வால் மகிழ்ச்சிகொள்வார்கள். பிரிந்துசென்ற உறவுகள் மற்றும் பிள்ளைகள் வந்துசேர்வார்கள்.
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.
வணங்கவேண்டிய தெய்வம்: முருகன்.