Banner 468 x 60px

 

Wednesday, November 12, 2014

மண்டலகால பூஜைக்கு சபரிமலை நடை திறப்பு!

0 Facebook
நவம்பர் 17- 2014 இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மண்டல பூஜைக்காக, இன்று காலை ஐயப்பன் சன்னதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் ஐயப்பனை காண திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் இன்று தொடங்குகிறது. இதற்காக இன்று கார்த்திகை 1 முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டல பூஜைக்காக இன்று காலை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடைதிறந்து, இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கி, நெய்யபிஷேகம் தொடகியது, இன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini