Banner 468 x 60px

 

Friday, November 28, 2014

பெண்களின் திருமணத்தடை போக்கும் காளத்தீஸ்வரர்

0 Facebook
ராகு, கேது தோஷத்தை விரட்டும் ஆற்றல் கொண்ட, பிரபலமான தலமாக காளஹஸ்தி தலம் உள்ளது. ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தாலே ராகு, கேதுக்களால் ஏற்படும் கஷ்டங்கள் சீக்கிரமே விலகுகின்றது என்பது பெரும்பாலானவர்களின் அனுபவம்.

சுவயம்பு மூர்த்தியான காளஹஸ்தீஸ்வரரின் மேனியிலேயே சிலந்தியும், யானையும், சர்ப்பமும் உண்டு. இவை யாவும் வழிபட்ட, சிவபெருமானின் லிங்க வடிவான காளத்தீஸ்வரரின் தரிசனம் எண்ணற்ற பக்தர்களுக்கு நன்மை பயக்கின்றது. 

லக்னத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் ஜாதகத்தில் அமைந்துள்ள பெண்களின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். இத்தகைய ஜாதக அமைப்புகள் பெண்கள், காளத்தீஸ்வரரையும், காளஹஸ்திக் கோவிலில் வீற்றிருக்கும் பாதாள விநாயகரையும் தரிசனம் செய்து வந்தால், உடனே திருமணம் நிச்சயமாகிவிடும். 

அநேக விதமான ஹோமங்களும், சாந்திகளும் ராகு, கேது தோஷ பரிகாரமாக விதிக்கப்பட்டிருந்தாலும் இவற்றை விதிப்படி செய்ய முடியாத தற்கால சூழ்நிலையில் பக்தியுடன் காளத்தீஸ்வரரையும், பாதாள விநாயகரையும் தரிசனம் செய்து வணங்கி வருவது சுலபமாக யாவரும் செய்யக் கூடியதாகும்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini