பக்தர்கள் கூட்டத்திற்கேற்ப சபரிமலையில் நடை திறந்து அடைக்கும் நேரத்தை மாற்றியமைத்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டது. இது நேற்று அமலுக்கு வந்தது.
சபரிமலையில் மண்டலபூஜை காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணிக்கும், மாலை நான்கு மணிக்கு நடை திறந்து இரவு 11 மணிக்கும் அடைக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் 24 மணி நேரமும் 18-ம் படியில் பக்தர்கள் ஏற்றப்படுகின்றனர். நடை அடைக்கப்பட்டிருக்கும் போது படியேறுபவர்கள் மீண்டும் வடக்கு வாசல் வழியாக சென்று சாமி கும்பிட வேண்டும். கூட்டம் மிக அதிகமாக இருக்கும் போது பல சிரமங்கள் ஏற்படுகிறது.
எனவே கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் நடை திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அதிகாலை நான்கு மணிக்கு பதிலாக 3.00-க்கு நடை திறக்கும். பகல் ஒரு மணிக்கு பதிலாக 1.30மணிக்கு அடைக்கப்படும். மாலையில் நான்கு மணிக்கு பதிலாக 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு பதிலாக 11.45-க்கு அடைக்கப்படும்.
கூட்ட நிலைமைக்கேற்ப கோயில் நிர்வாக அதிகாரி, தந்திரி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பார். நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலையிலும், இரவிலும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு நடைதிறந்தது. எனினும் நேற்று பகலில் பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் மாலையில் வழக்கம் போல 4 மணிக்குதான் நடை திறந்தது.
சபரி மலையில் நாளை
காலை
4.00 நடைதிறப்பு
4.05 நிர்மால்ய தரிசனம்
4.10 கணபதிஹோமம்
4.15
7.00 நெய் அபிஷேகம்
7.30 உஷ பூஜை
8.30
12.30 நெய் அபிஷேகம்
பகல்
1.00 உச்ச பூஜை
1.30 நடை அடைப்பு
மாலை
4.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழ பூஜை
10.30 ஹரிவராசனம்
11.00 நடை அடைப்பு
Monday, November 24, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 Facebook:
Post a Comment