Banner 468 x 60px

 

Friday, November 28, 2014

பெண்களின் திருமணத்தடை போக்கும் காளத்தீஸ்வரர்

0 Facebook
ராகு, கேது தோஷத்தை விரட்டும் ஆற்றல் கொண்ட, பிரபலமான தலமாக காளஹஸ்தி தலம் உள்ளது. ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தாலே ராகு, கேதுக்களால் ஏற்படும் கஷ்டங்கள் சீக்கிரமே விலகுகின்றது என்பது பெரும்பாலானவர்களின் அனுபவம்.

சுவயம்பு மூர்த்தியான காளஹஸ்தீஸ்வரரின் மேனியிலேயே சிலந்தியும், யானையும், சர்ப்பமும் உண்டு. இவை யாவும் வழிபட்ட, சிவபெருமானின் லிங்க வடிவான காளத்தீஸ்வரரின் தரிசனம் எண்ணற்ற பக்தர்களுக்கு நன்மை பயக்கின்றது. 

லக்னத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் ஜாதகத்தில் அமைந்துள்ள பெண்களின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். இத்தகைய ஜாதக அமைப்புகள் பெண்கள், காளத்தீஸ்வரரையும், காளஹஸ்திக் கோவிலில் வீற்றிருக்கும் பாதாள விநாயகரையும் தரிசனம் செய்து வந்தால், உடனே திருமணம் நிச்சயமாகிவிடும். 

அநேக விதமான ஹோமங்களும், சாந்திகளும் ராகு, கேது தோஷ பரிகாரமாக விதிக்கப்பட்டிருந்தாலும் இவற்றை விதிப்படி செய்ய முடியாத தற்கால சூழ்நிலையில் பக்தியுடன் காளத்தீஸ்வரரையும், பாதாள விநாயகரையும் தரிசனம் செய்து வணங்கி வருவது சுலபமாக யாவரும் செய்யக் கூடியதாகும்.
Read more...

வம்ச விருத்தி பரிகார பூஜை

0 Facebook
பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும். 

அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும். 


'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். 

மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.
Read more...

சனியின் தாக்கத்தை குறைக்கும் பைரவர் வழிபாடு

0 Facebook
சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும். பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்;பிறகு அதை இரும்புக் கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்; வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

 அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்;அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்; இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்;இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.
Read more...

ஷிர்டி பாபா புனிதத் திருச்சரிதம் பகுதி - 2

0 Facebook
ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபாவடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு.

அப்படியான ஓர் அதிகாலை... வேப்ப மரத்தடிக்கு வந்த சிலர் வியப்போடு மரத்தடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கலானார்கள். காலையில் சூரியன் தோன்றும். ஆனால், இன்று அங்கே ஒரு வெண்ணிலவல்லவா தோன்றியிருக்கிறது! பளீரென்று பிரகாசமாக ஓர் இளைஞன் மர நிழலில் சாந்தி தவழும் முகத்தோடு அமர்ந்திருந்தான். மானிடனா... இல்லை தேவனா... இத்தனை பேரழகை மனிதர்களிடம் பார்க்க முடியுமா! கண்ணும் மூக்கும் பிற அங்கங்களும் சேர்ந்து யாரோ சிற்பி சர்வ லட்சணமான ஒரு சிற்பத்தைச் செய்து அங்கே கொண்டுவைத்த மாதிரியல்லவா இருக்கிறது!

அவனைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. பார்த்த கண்கள் தித்தித்தன. அந்த வாலிபன் முகத்தில் தென்பட்ட தூய்மையும் குழந்தைத்தனமும் பார்ப்பவர் நெஞ்சங்களை அள்ளிச் சாப்பிட்டன. அப்படியொருவன் அங்கே அமர்ந்திருக்கிறான் என்ற செய்தி விறுவிறுவென அந்தச் சிற்றூரில் எங்கும் பரவியது. எல்லோரும் வேப்ப மரத்தடியில் ஒன்றுகூடி விட்டார்கள். 
இந்த அழகான பெரிய பொம்மை பேசுமா? வியப்போடு சில குழந்தைகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

இதுவரை எங்கிருந்தான்? இப்போது திடீரென்று எங்கிருந்து இங்கு வந்தான்? இவன் யார்? மனத்தை மயக்குகிறதே இவன் தோற்றம்? வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்குமா? இப்போது இவன் இங்கே வந்திருப்பதன் நோக்கமென்ன?நேரம் கடந்து கொண்டிருந்தது. வெய்யில் ஏறத் தொடங்கிவிட்டது. அவன் எல்லோரையும் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தவாறே அமர்ந்திருந்தான். யாரப்பா நீ? என்று யாராவது விசாரிக்க வேண்டாமோ? யாருக்கும் என்ன கேட்பதென்றே தோன்றவில்லை. திகட்டத் திகட்ட அவனது அருள்பொங்கும் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள் அனைவரும். அவர்களிடையே கணபதிராவ் கோட்டி படேல் என்பவரும் அவரது மனைவி பாய்ஜா பாயியும் நின்றிருந்தார்கள்.

திடீரென பாய்ஜா பாயி பதட்டம் அடைந்தாள். அவனைப் பார்க்கும்போது குழந்தைஇல்லாத அவள் மனத்தில் தாயன்பு பொங்கியது. இந்தப் பிள்ளை சாப்பிட்டானோ! இல்லையோ! பசிக்குமே இவனுக்கு! அவள் தன் கணவரிடம், ஒருநிமிஷம், இதோ வந்துவிட்டேன்! என்றவாறே வீட்டுக்கு ஓடினாள். அவசர அவசரமாக நான்கைந்து சப்பாத்திகளைத் தயார் செய்தாள். தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் சப்ஜியும் தயாரித்தாள். அவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு லோட்டாவில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மீண்டும் வேப்பமரத்தடிக்கு ஓடி வந்தாள். கூட்டத்தின் நடுவே புகுந்து இளைஞன் அரு@க வந்து சேர்ந்தாள். 

வியர்வை வழிந்த முகத்தை முந்தானையால் ஒற்றிக்கொண்ட அவள், மகனே! நீ எப்போது சாப்பிட்டாயோ.. என்னவோ? கொஞ்சம் சப்பாத்தி எடுத்துக்கொள் அப்பா! என்றவாறே பாத்திரத்தைத் திறந்து அவன்முன் வைத்தாள். அவன் அவளையே பாசம் பொங்கப் பார்த்தவாறிருந்தான். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறாளே! இவளின் இந்த உணர்வில் அல்லவா இறைவன் குடியிருக்கிறான்! அவன் தேனை விட இனிமையான தெய்வீகக் குரலில் பேசலானான்: பாய்ஜாபாயி! நீ செய்த சப்பாத்தியைச் சாப்பிடக் கசக்குமா? உன்னைப்போல் சமைக்க இந்த ஊரில் யாருண்டு? என்றவாறே சப்பாத்திப் பாத்திரத்தைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டான்.

பாய்ஜாபாயிக்கு மட்டுமல்ல, கூட்டத்தினர் அனைவருக்குமே மயக்கம் வரும்போல் இருந்தது. பாய்ஜாபாயியின் பெயர் இவனுக்கு எப்படித் தெரிந்தது! அகில உலகங்கள் அனைத்தையும் படைத்து ரட்சிக்கும் ஆண்டவனுக்குத் தன் குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரும் தெரியாமலா இருக்கும்! இளைஞன் தொடர்ந்து பேசலானான்: அம்மா! உன் சப்பாத்தியை எனக்கும் முன்னால், என் அண்ணா சாப்பிட வேண்டாமா? அவனுக்கும் பசிக்குமே? அவனுக்குக் கொடுத்துவிட்டு மீதியை நான் சாப்பிடுகிறேன்! இவனுக்கு ஓர் அண்ணாவா? யார் அந்த அண்ணா? கூட்டம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் கூவினான்:அண்ணா! ஓடிவா. வந்து சாப்பிட்டு விட்டுப் போ! அடுத்த கணம் வெள்ளைவெளேர் என்ற ஒரு பன்றி காட்டுக்குள்ளிருந்து பாய்ந்து ஓடிவந்தது. கூட்டம் விலகி வழிவிட்டது. 

அவ்வளவு அழகான பன்றியை யாரும் அதற்குமுன் பார்த்ததே கிடையாது. இது பன்றியா! இல்லை வராக அவதாரமே தானா! வாலைக் குழைத்துக்கொண்டு நின்ற பன்றி, இளைஞன் தூக்கிப்போட்ட இரண்டு சப்பாத்திகளைத் தாவிப் பிடித்துத் தின்றது. பின் ஒரே ஓட்டமாகக்காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது! இந்த இளைஞன் யார்? கடவுளே தானா? அப்படியானால் இந்தச் சம்பவத்தின் மூலம் கடவுள் எதை உணர்த்த விரும்புகிறார்? மனிதர்கள் மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்துமே தன் குழந்தைகள் தான் என்கிறாரா? விலங்குகளிடமும் நீங்கள் அன்பாயிருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறாரா? எஞ்சியிருந்த சப்பாத்திகளைச் சாப்பிட்ட இளைஞன் லோட்டாவில் இருந்த நீரால் கைகழுவினான்.

பின் மிகுந்த சொந்தத்தோடு சிரித்தவாறே, பாய்ஜாபாயியின் சேலை முந்தானையில் ஈரக் கையைத் துடைத்துக் கொண்டான். அந்த முந்தானை பெற்ற பாக்கியமே பாக்கியம். அந்தக் காட்சியைப் பார்த்த பிற பெண்கள், பாய்ஜா பாயியைப் போல் தங்களுக்கு சப்பாத்தி எடுத்துவரத் தோன்றவில்லையே என ஏங்கினார்கள். அங்கிருந்த அத்தனை பெண்மணிகளும் கோகுலத்தில் குழந்தைக் கண்ணனைக் கண்ட தாய்மார்களின் மனநிலையை அடைந்தார்கள். வந்திருப்பது யார்? கண்ணனே தானா? ஆனால், கையில் குழலைக் காணோமே? கையில் இல்லாத குழல் அவன் குரலில் இருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு இனிமையாக அவன் பேசலானான்: 

பாய்ஜா பாயி! இவ்வளவு ருசியான சப்பாத்தியை நாள்தோறும் சாப்பிடும் உன் கணவர் கணபதிராவ் கொடுத்துவைத்தவர்தான்! அடடே. கணபதிராவ் பெயரும் இவனுக்குத் தெரிந்திருக்கிறதே? அடுத்த கணம் அங்கே வந்து கூட்டத்தோடு நின்றிருந்த அவ்வூர்க் கோயில் பூஜாரிமேல் அருளாவேசம் வந்தது. மக்கள் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டே பூஜாரியைப் பார்த்தார்கள். பூஜாரி முழங்கினார். இந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள, இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பாருங்கள்! இதைக் கேட்ட இளைஞன் கலகலவென்று நகைத்தான். 

அப்படியே ஆகட்டும். தோண்டுங்கள்! என்றவாறே வேப்பமரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சிலர் ஓடோடிப்போய் கடப்பாரையை எடுத்துவந்து வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்ட எத்தனித்தார்கள். அப்போது யாரோ பெருமூச்சோடும் கோபத்தோடும் சீறும் ஒலி கேட்டது. கடப்பாரையைத் தூக்கியவர்கள் திகைத்துப் பின்வாங்கினார்கள்....!
Read more...

சபரிமலை வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம்!

0 Facebook
சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது.சபரிமலை ஐயப்பன் அன்னதான பிரபுவாக அழைக்கப்படுகிறார். அந்த வகையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு மூன்று வேளையும் அன்னதானம் வழங்குகிறது. 

மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அன்னதான மண்டபத்தில் காலை 6 முதல் இரவு 11 மணி வரை அன்னதானம் நடக்கிறது. காலை 6 முதல் 11 மணி வரை உப்புமா, கடலைக்கறி, காபி வழங்கப்படுகிறது. மதியம் 3 மணி வரை சோறு, சாம்பார், அவியல், ஊறுகாய் வழங்கப்படுகிறது. அதன் பின் மாலை 5 மணி முதல் இரவு வரை கஞ்சி, பயறு, ஊறுகாய் வழங்கப்படுகிறது. அதன் பின்பும் கூட்டம் வந்தால் உப்புமா வழங்கப்படும். 125 ஊழியர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையில் தினமும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது.
Read more...

Thursday, November 27, 2014

பிறந்த நாள் பலன்கள்

0 Facebook
பிறந்த நாள் பலன்கள்
25-11-2014 முதல் 8-12-2014 வரை

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28
நிர்வாகத்திறமை கூடும் நேரம் இது. முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொருளாதார நிலை உயரும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் சேரும்.
நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நிலை உயரும்.
தெய்வப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்கள் உங்களுக்கு ஆசி புரிவார்கள். எதிரிகளின் கரம் வலுக்குறையும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். பயணத்தின் மூலம் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும்.
அறநிலையங்களில் பணிபுரிபவர் களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 3ம் தேதி முதல் உயர் பொறுப்புக்களும் பதவிகளும் தேடிவரும்.
1ம் தேதி பிறந்தவர்களுக்கு: பதவியில் உயர்வு உண்டாகும். தொழில் நுட்பத்திறமையால் புகழ் பெறுவீர்கள்.  
10ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். பண வரவு அதிகரிக்கும்.
19ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். சொத்துக்கள் சேரும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
28ம் தேதி பிறந்தவர்களுக்கு: வீண் செலவுகள் ஏற்படும்.  கண் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர். 27, 28, டிசம்பர்.1.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29
திப்பும் அந்தஸ்தும் உயரும் நேரம் இது. பிற மொழி, இனங்களைச் சார்ந்தவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். மக்களால் நலம் உண்டாகும். அறிவாற்றல் பளிச்சிடும். கலைஞானம் கூடும். திரவப்பொருட்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள்.
அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிட்டும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.
3-ம் தேதி முதல் பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம்.
ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். 7-ம் தேதி முதல் வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
2ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும்.
11ம் தேதி பிறந்தவர்களுக்கு: நிர்வாகத்திறமை கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
20ம் தேதி பிறந்தவர்களுக்கு: மனத்துணிவு கூடும். அலைச்சல் சற்று அதிகரிக்கும். நண்பர்களால் சிறு சங்கடம் ஏற்படும்.
29ம் தேதி பிறந்தவர்களுக்கு: சொத்துக்கள் சேரும். திறமை வெளிப்படும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 27, 28, டிசம்பர் 1, 2.

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30
ங்கள் சுய பலம் கூடும் நேரம் இது. எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பொருள்வரவு அதிகரிக்கும்.  
மக்களால் மன மகிழ்ச்சி பெருகும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும்.
எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமையால் வளர்ச்சி காண்பார்கள். 3ம் தேதி முதல் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகமாகும். சொத்துக்கள் சேரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். மாணவர்களது நிலை உயரும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
3ம் தேதி பிறந்தவர்களுக்கு: புத்திசாலித்தனம் பளிச்சிடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.
12ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: மன உற்சாகம் பெருகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். ஆன்மிகத்துறைகளில் ஈடுபாடு உண்டாகும்.
21ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். மருத்துவர்களுக்கு செல்வாக்கு உயரும்.
30ஆம் தேதி பிறந்தவர்களுக்கு: மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். பொன், ரத்தினம், மற்றும் பொருள் சேர்க்கை நிகழும். மன மகிழ்ச்சி பெருகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 27, 28, 30, டிசம்பர் 1. 3.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31
ற்பனை ஆற்றல் கூடும் நேரம் இது. எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் செழிப்பு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.  புதிய பதவிகளும் தேடிவரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடல் வாணிபம் லாபம் தரும்.
ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். உங்களைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். 3ம் தேதி முதல் சுபச் செலவுகள் கூடும்.
7ம் தேதி முதல் புதிய ஆடை, அணிமணிகள் சேரும். சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும்.
மகான்கள் சாதுக்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு தெளிவான போக்கு தென்படும். மாதர்களது நிலை உயரும்.
4ம் தேதி பிறந்தவர்களுக்கு: ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக் கும். வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும்.
13ம் தேதி பிறந்தவர்களுக்கு: அரசியல் ஈடுபாடு பயன்படும். ஆசைகள் நிறைவேறும். நல்ல தகவல் கிடைக்கும்.
22ம் தேதி பிறந்தவர்களுக்கு: கற்பனை வளம் கூடும். எழுத்தாற்றல் பளிச்சிடும். கடல் சார்ந்த பொருட்களால் லாபம் கிடைக்கும்.
31ம் தேதி பிறந்தவர்களுக்கு: செல்வ வளம் பெருகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெற வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 28, டிசம்பர் 1, 4.

பிறந்த தேதிகள்: 5, 14, 23
திர்ப்புக்கள் இருக்கும் என்றாலும், அவற்றைச் சமாளிக்கும் சக்தியும் பிறக்கும். தைரியமாக காரியமாற்றுவீர்கள். நல்லவர்களின் நட்புறவு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல்நலம் பாதிக்கக்கூடும் என்பதால், உடல்நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது.
கலைத்துறைகளைச் சேர்ந்தவர் களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணை நலம் சீராகும். பொறியியல் துறை லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி காணலாம்.
வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படுமாதலால், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. அரசாங்கத்தாரால் அனுகூலம் பெறச் சந்தர்ப்பம் உருவாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். 3ம் தேதி முதல் செய்துவரும் தொழிலில் ஒரு மாற்றம் உண்டாகும்.
7ம் தேதி முதல் குடும்ப நலம் சிறக்கும். விருந்து, உபசாரங்களிலும் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள்.
5ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிரிகள் இருப்பார்கள். விழிப்பு தேவை. உடல்நலனில் கவனம் செலுத்தவும்.
14ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தால் நலம் உண்டாகும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும்.
23ம் தேதி பிறந்தவர்களுக்கு: தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். பண நடமாட்டம் அதிகமாகும். சுப காரியங்கள் நிகழும்.  .தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 28, 30, டிசம்பர் 1, 3, 5.

பிறந்த தேதிகள்: 6, 15, 24
திர்ப்புக்களை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும் நேரம் இது. போட்டிகளிலும் பந்தயங்களிலும் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினர் ஊக்கத்துடன் பணியாற்றக் கூடிய சூழ்நிலை ஏற்படும். பெண்களால் அனுகூலம் உண்டாகும்.
இயந்திரப்பணியாளர்களுக்கு ஆதாயம் கூடும். நல்லோர் தொடர்பால் நலம் பல ஏற்படும். இறைவழிபாடு, குரு வழிபாடு ஆகியவற்றில் நாட்டம் அதிகரிக்கும். அதனால் மனத்தில் தெளிவும் பிறக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். என்றாலும், கூடவே வீண் செலவுகளும் இழப்புக்களும்  ஏற்படும்.
சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதுடன், கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் நல்லது. கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். 7ம் தேதி முதல் வெளியூர், வெளிநாட்டுத் பயணத்தாலும் தொடர்பாலும் அனுகூலம் உண்டாகும்.  தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும்.
வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.  பெரியவர்கள், தனவந்தர்களின் தொடர்பு பயன்படும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். வியாபாரிகள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பதால், விழிப்புடன் செயல்படுவது நல்லது.
6ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிர்ப்புக்கள் விலகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
15ம் தேதி பிறந்தவர்களுக்கு: தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.
24ம் தேதி பிறந்தவர்களுக்கு: திடீர்ப் பொருள்வரவும் சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும். வெளிநாட்டவரால் நலம் ஏற்படும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 27, 30, டிசம்பர் 6.

பிறந்த தேதிகள்: 7, 16, 25
ங்கள் புத்திசாலித்தனம் பளிச்சிடும் நேரம் இது. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும்.
மக்களால் மன உற்சாகம் பெருகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாறுதல் தெரியும். பிரிந்தவர்கள் ஒன்று கூட வழிபிறக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்வாங்கல் இனங்கள் லாபம் தரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கவே செய்யும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு பயன்படும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும்.
வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். 3ம் தேதிமுதல் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தலைதூக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். 7ம் தேதி முதல் தொழில் ரீதியாகச் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். என்றாலும் சமாளிப்பீர்கள். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். இளைய சகோதரிகளின் நலனில் கவனம் தேவைப்படும்.
7ம் தேதி பிறந்தவர்களுக்கு: நண்பர்கள் உதவுவார்கள். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். சொத்துக்கள் சேரும்.
16ம் தேதி பிறந்தவர்களுக்கு: எதிரிகள் இருப்பார்கள். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.
25ம் தேதி பிறந்தவர்களுக்கு: அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மக்களால் நலம் உண்டாகும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 25, 29, டிசம்பர் 2, 7.

பிறந்த தேதிகள்: 8, 17, 26
ங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும் நேரம் இது. உடல்நலம் சீராக இருக்கும். உயர் பதவிகளும் பொறுப்புக்களும் வந்து சேரும். கலைத்துறை ஆக்கம் தரும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டா கும். வியாபாரம் பெருகும். தந்தையால் நலம் ஏற்படும்.
பிதுரார்ஜித சொத்துக்களும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படும்.
கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் தெளிவு பிறக்கும். கடல் வாணிபம் லாபம் தரும்.
நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். பயணத்தால் சிறு சங்கடமும் பொருள் இழப்பும் உண்டாகும்.
3ம் தேதி முதல் பண நடமாட்டம் அதிகமாகும். நல்ல தகவல் வந்து சேரும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் வெற்றி காண சந்தர்ப்பம் உருவாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். 7ம் தேதி முதல் வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும்.
8ம் தேதி பிறந்தவர்களுக்கு: உயர்பதவிகளும் பொறுப்புக்களும் தேடிவரும். செல்வ வளம் பெருகும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
17ம் தேதி பிறந்தவர்களுக்கு: பண நடமாட்டம் கூடும். காரியத்தில் வெற்றி கிட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
26ம் தேதி பிறந்தவர்களுக்கு: செல்வாக்கு உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். சுய முயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 26, 29 டிசம்பர் 7, 8.

பிறந்த தேதிகள்: 9, 18, 27
ங்கள் பராக்கிரமம் வெளிப்படும் நேரம் இது. எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொத்துக்கள் லாபம் தரும்.
இன்ஜினீயர்களது நிலை உயரும். செந்நிறப்பொருட்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிப்பொருட்கள், தளவாடங்கள், கூரிய ஆயுதங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் சில முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். சகோதர நலம் சிறக்கும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும்.
ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பல வழிகளில் ஆதாயம் கிடைத்துவரும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். 3ம் தேதி முதல் வீண் செலவுகள் ஏற்படும்.
பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். கொடுக்கல்வாங்கலில் விழிப்பு தேவை.
9ம் தேதி பிறந்தவர்களுக்கு: மதிப்பு உயரும். எதிரிகள் விலகுவார்கள். நிலபுலங்கள் சேரும். வெற்றிகள் குவியும்.
18ம் தேதி பிறந்தவர்களூக்கு: தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். செல்வம் சேரும். திறமை வீண்போகாது.
27ம் தேதி பிறந்தவர்களுக்கு: வெற்றிகள் குவியும். எதிர்ப்புக்கள் விலகும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். சுகம் கூடும். வியாபாம் பெருகும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: நவம்பர் 27, 28, டிசம்பர் 1, 3, 6.


நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
Read more...

அருள் சுரக்கும் ஸ்ரீஐயப்ப அனுபவங்கள்!

0 Facebook
கல்லும் கனியாகும்,  முள்ளும் மலராகும், உடல் நடுங்கும் குளிரும் இதமாகும், வடவாக்னியாய் வயிற்றை வருத்தும் பசிப் பிணியும் பறந்துபோகும்... ஐயனே, கண்மலரில் தண்ணொளி காட்டும் நின் திருமுக தரிசனத்தால்’ என்று ஐயப்பமார்கள் மெய்ம்மறந்து சுவாமி ஐயப்பனை வணங்கி நிற்கும் புண்ணிய கார்த்திகை பிறந்துவிட்டது.

ஐயனின் சந்நிதானத்தில் எந்த வகையிலும் உயர்வு-தாழ்வு பேதம் இல்லை என்பதை உணர்த்த கறுப்புச் சீருடை தரித்து, சத்திய சங்கல்பமாய் துளசி மாலை அணிந்து சாரி சாரியாய் சாமிமார்கள் அவன் திருக்கோயிலைத் தேடிவருவதையும், தரிசித்து வழிபடுவதையும் காணக் கண்கோடி வேண்டும். விண்ணதிர அவர்கள் எழுப்பும் சரணகோஷத்தைக் காதாரக் கேட்டு மகிழ இந்த ஒரு ஜென்மம் போதுமா என்ன?!
அடியார்களில் ஒருவனாக வருவான் ஐயப்பன் என்பது சத்திய வாக்கு அல்லவா? ஆக, ஐயப்பமார்களைத் தரிசிப்பதே ஐயப்பனைத் தரிசிப்பதற்குச் சமம் ஆயிற்றே? நாமும் ஓர் அதிகாலை வேளையில் ஐயனைத் தரிசிக்கக் கிளம்பினோம். சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த ஐயப்பன் திருக்கோயில், கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. உள்ளே நுழைந்த நம்மைப் பரவசத்தில் ஆழ்த்திய ஆராதனை ஒலியும், செண்டை மேளச் சத்தமும், ஆலயமணி ஓசையும் சட்டென்று நின்று நிசப்தம் தர, கணீரென்று ஒலித்த ஒரு குரல், கூட்டத்துடன் சேர்த்து நம்மையும் கட்டிப்போட்டது.
பகவான் சரணம்... பகவதி சரணம்...
சரணம் சரணம் ஐயப்பா!
பக்தர்களில் நடுநாயகமாக நின்று ஐயன் ஐயப்பனைப் போற்றிப் பாடிக்கொண்டிருந்தார் பக்திப் பாடகர் வீரமணிராஜூ. பல ஆண்டுகளாக, ஒருவர் 'ஐயனே சரணாகதி’ என்று அவரின் திருவடிகளைப் பற்றிக்கொண்டிருக்கிறார் என்றால், ஏதோ ஓர் அனுபவம்... ஓர் அருளாடல் அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்தானே? அந்த அனுபவங்கள் நமக்கான வாழ்க்கைப் பாடம் அல்லவா?
பாடி முடித்து பக்தர்களோடு உரையாடிக் கொண்டிருந்த வீரமணிராஜூவிடம் நமது விருப்பத்தைத் தெரிவித்தோம். ஐயன் ஐயப்பனின் திருவருளால் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருளாடல் களை, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டினோம்.
'சுவாமியின் மகிமையைச் சொல்லக் கசக்குமா என்ன?'' என்று உற்சாகமானவர், சில அற்புத அனுபவங்களை நமக்கும் அங்கிருந்த  பக்தர்களுக்கும் சேர்த்து விவரித்தார்:
'நான் ஐயப்பனை கடவுளா நினைக்கிறதில்ல. என் நண்பனாகத்தான் நினைக்கிறேன். 'மாலை போட்டு விரதமிருந்து உன்னைத் தேடி சபரி மலைக்கு வரேன். என் பிரச்னையை நீதான் தீர்த்து வைக்கணும்'னு நம்ம பாரத்தை அவன் மேல போட்டுட்டு அவனை நினைச்சுக்கிட்டே நிம்மதியா இருங்க, அதுபோதும். உங்க வாழ்க்கையில் நிச்சயமாக நல்லது நடக்கும். எனக்கு நடந்திருக்கு, அந்த நம்பிக்கையில் சொல்றேன். தூய எண்ணத்தோடு அவரை வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் ஒரு நாள் காட்சி அளிப்பார்.  அப்படிப் பலமுறை நான் ஐயப்பனைப் பார்த்திருக்கேன் -உணர்ந்திருக்கேன். அதை நினைத்தால் இப்பவும் உள்ளம் சிலிர்க்கும்...' என்றவர் தொடர்ந்து பேசினார்.
'சிறுவனாக வந்தான்... சிந்தை மகிழ்ந்தேன்!’
'ஒருமுறை பம்பையில் நானும் என் ஐயப்ப சாமி குழுவினரும் ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு பையன்
என்னிடம் வந்து, சொடக்குப் போட்டு 'ஏய்’ என்று அதட்டலாகக் கூப்பிட்டான். நான் 'என்னையா கூப்பிடுறே?’ என்று கேட்டேன். 'ஆமாம்... உன்னைதான், இங்கே வா’ என்றான் அதட்டலாக.எனக்கு உள்ளுக்குள் அதிர்ச்சி என்றாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவன் அருகில் சென்றேன். 'சொல்லு கண்ணா, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.
'நீதானே அந்த பாட்டெல்லாம் பாடுறவன்?’ என்றான். என் நண்பர்கள் துணுக்குற்றார்கள். 'என்ன இவன்... மரியாதை இல்லாம பேசிக்கிட்டி ருக்கான். நீங்களும் பதில் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே... வாங்க போகலாம்’ என்றார்கள். ஆனால், எனக்குத் தெரிந்துவிட்டது, வந்திருப்பது யாரென்று!
சபரிமலைக்கு மேலிருந்து நம்மையெல்லாம் காக்கும் அந்த சாஸ்தாவே என் முன்னாடி நிற்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். பணிவோடு அவன் பேச்சுக்கு செவிமடுத்தேன்.
'ஒரு பாட்டு பாடுவியே... தாய் தந்தைன்னு ஏதோ வருமே...’ என்று இழுத்தான் சிறுவன். நானும் 'ஆமா தாய் என்று சொல்வதா? தந்தை என்று சொல்வதா?’ என்று அந்த பாடல் வரியை எடுத்துக் கொடுத்தேன். உடனே உற்சாகமானவன், 'ஆமா, அதே பாட்டுதான். பாடுறியா?’ என்று கேட்டான். எனக்கு உடம்பு சிலிர்த்தது. 'பாடறேன். ஆனா, அதுக்கு முன்னாடி உன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கவா?’ என்று கேட்டேன். 'தாராளமா’ என்றான் அவன். என் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவன் எனது பாட்டை ரசித்திருக்கிறான். அவன் என் ரசிகன். அதனால் நான் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு, பாடியும் முடித்தேன்.
'நல்லாருக்கு’ என்ற பாலகன், 'எனக்கு பிஸ்கட் வாங்கித் தரியா?’ என்றான். அந்தக் கடையிலேயே வாங்கிக் கொடுத்தேன். பாக்கெட்டைப் பிரித்து இரண்டு பிஸ்கட்டை சாப்பிட்டவன், மீதியை என் கையில் கொடுத்துவிட்டு 'இதோ வர்றேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினான். ஆனால், பத்து நிமிடம் கழித்தும் அவன் திரும்பவில்லை. நாங்கள் தேட ஆரம்பித் தோம். ம்ஹூம்... எங்கு தேடியும் அவனைக் காணவில்லை. பிறகு, நண்பர்களுக்கு நான் புரிய வைத்தேன், தேடி வந்தது சபரிநாதன்தான் என்று.
சாதாரண சிறுவனாக இருந்தால் பிஸ்கட்டோ, டீயோ கேட்டு வாங்கி சாப்பிட்டுச் சென்றிருப்பான். என்னைப் பாடகன் என்று   அடையாளம் கண்டதோடு, குறிப்பிட்ட ஒரு பாடலைப் பாடச் சொல்லிக் கேட்கிறான் என்றால், அவன் சாதாரணமானவன் இல்லையே? நண்பர்கள் புரிந்துகொண்டார்கள்.
பிறகென்ன, கண்ணீர் மல்க எல்லோரும் அவன் சென்ற திசையை நோக்கி சரணகோஷம் எழுப்பி வணங்கித் தொழுதோம்''.
நா தழுதழுக்க கூறிமுடித்தவர். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வேறொரு சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.
நெய்யும் மெய்யும்!
''ஒருமுறை சபரி யாத்திரையின்போது, வேறொரு குழு எங்களைத் தொடர்ந்து வந்தது. அவர்களில் ஒருவன் வேகமாக நடந்து அருகில் வந்தான்.
'சாமி, கொஞ்சம் நெய் கொடுங்க’ என்று கேட்டான். சபரிமலையில் இருக்கும் வரையிலும், யார் என்ன கேட்டாலும் மறுக்காமல் கொடுத்து விடுவது என் வழக்கம். ஏனென்றால், ஐயப்பன் எப்படி எவர் உருவில் வருவான் என்று யாருக்குத் தெரியும்? நான் கொடுக்காமல் விட்டால், ஐயப்பன் கேட்டும் கொடுக்காத பாவியாகி விடுவோமே என்ற பயம் எனக்கு.
அப்படித்தான் அவன் கேட்டதும் நெய் வைத்திருந்த பாத்திரத்தைத் திறந்து சிறிது நெய் எடுத்துக் கொடுத்தேன். கொஞ்சமாகச் சாப்பிட்டவன், 'என்ன... நெய் புளிக்குதே?’ என்றான், பிறகு புன்னகைத்தபடி, 'ஆனாலும் நல்லாத்தான் இருக்கு’ என்று கூறிவிட்டு நகர்ந் தான். நான் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் அவன் ஆளைக்காணோம். அருகில் வந்து கொண்டிருந்தவர்களைக் கவனித்தேன். அங்கேயும் அவன் இல்லை. அவர்களிடமும் கேட்டுவிட்டேன்.
'என்ன சாமி சொல்றீங்க. நீங்க சொல்றமாதிரி யாரும் எங்ககூட வரலியே’ என்றார்கள் திகைப்புடன். நம்மோடுதான் நடந்து வந்தான். சட்டென்று எப்படிக் காணாமல் போவான்? அதுவும் தவிர, அவன் நம்மிடம் குறிப்பா நெய்யைக் கேட்பானேன்? நெய் என்றால்... அது சுவாமி ஐயப்பனுக்கு உகந்தது! அப்படியென்றால் வந்தது சாட்சாத் சாஸ்தாவேதான் என்று புரிந்துகொண்டேன்'' என்று புன்னகைத்த வீரமணிராஜூ பிரபல நடிகரும் சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தருமான நம்பியார் சாமி சொன்ன அறிவுரையையும் பகிர்ந்துகொண்டார்.
'சபரிமலைக்கு வந்துவிட்டால் 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற அகங்காரத்தை விட்டுடணும். சபரிமலையில எல்லாம் தெரிஞ்ச வன் ஒருத்தன்தான். விஷ்ணு சிவனை தாய் தந்தையாகக் கொண்ட அந்த மணிகண்டன்தான் அது. பெரியவங்க, சின்னவங்கன்னு இல்லாம ஒவ்வொருத்தரும் ஐயனின் அம்சம்தான். நீ நடக்கும்போது உன்கூடவே வருதே, அது உன் நிழல் இல்லை. மாலை போட்டுக்கிட்டு மலையேறும் ஒவ்வொருத்தர் கூடவும் சாஸ்தாதான் நிழலாய் தொடர்வார்’ என்பார் நம்பியார் சாமி. அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று இந்த சம்பவங்கள் எனக்கு உணர்த்தின'' என்று கூறி முடித்தார் பாடகர் வீரமணி ராஜூ.
உண்மைதான்! இறைவன் எப்போதும் நம்முடன் இருக்கிறான். அதை நாம்தான் உணர்ந்துகொள்வது இல்லை. அதை உணர்ந்து கொண்டால், நாம் வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே!
Read more...

தங்கம் பெருகிட அருள் செய்யும்... தங்க கணபதி திருநாள்!

0 Facebook
ட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்கினால், மேலும் மேலும் தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. வைகாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திருதியை திதியைத்தான் அட்சயதிருதியை  என்கிறோம். இது வருஷத்துக்கு ஒருமுறைதான் வரும்.
இந்த தினத்தைப் போன்றே, தங்க ஆபரணங்கள் செய்து அணிவதற்கு ஏற்ற மற்றொரு புண்ணிய தினமும் உண்டு. அதை, முழுமுதற் கடவுளான விநாயகரின் திருப்பெயரால் 'தங்க கணபதி தினம்’ என்றே சிறப்பித்திருக் கிறார்கள் நம் முன்னோர். இந்த தினம், வருடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை வரும் என்பது கூடுதல் சிறப்பு!
தங்கத்தை விரும்பாத மனிதனே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருக்கும் தங்கத்தின்மீது பற்று உண்டு. வெறும் அழகு ஆபரணங்களாக மட்டுமே இல்லாமல், சேமிப்புக்குத் தகுதியான பொருள் அது. அவசர கால பொருளாதாரத் தேவைக்கும் தங்கம் பயன்படும். அப்படிப்பட்ட தங்கத்தைச் சேமிக்கவும், சிறுகச் சிறுக சேமித்து தங்க ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழவும் உகந்த தினம்தான் தங்க கணபதி தினம்.
பொதுவாக தங்கம் வாங்கி அணிவதற்குத் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைளும், பிரதமை, பெளர்ணமி, சஷ்டி, ஏகாதசி, பஞ்சமி, தசமி ஆகிய நாட்களும் சிறப்பானவை என்கின்றன ஞானநூல்கள். அதிலும், குறிப்பிட்ட இந்த நாட்களில் அமிர்தயோகம் மற்றும் சுக்ர ஹோரைகளில் புதிய ஆபரணம் அணிவதால், ஆபரண யோகம் பெருகும்.
இதுபோன்று பலன் அருளும் புண்ணிய தருணங்களை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள் நம் முன்னோர். முற்கால அரசர்கள் பலரும், சாஸ்திர அறிஞர்கள் அறிவுறுத்தும் இந்தத் தருணங்களில் கிரீடமும், நகைகளும் செய்து அணிந்து பலன் பெற்றிருக்கிறார்கள். அப்படியான ஒரு சிறப்புத் திருநாள்தான் தங்க கணபதி தினம்.
ரோகிணி நட்சத்திரம், சனிக்கிழமை, அமிர்தயோகம் மூன்றும் கூடி வரும் தினத்தையே தங்க கணபதி தினமாக அனுஷ்டித்திருக்கிறார்கள்.
சரி, தங்கத்துக்கும் கணபதிக்கும் என்ன சம்பந்தம்?
எதிலும் முன்னோரைச் சிறப்பிப்பது நமது பண்பாடு. அந்த வகையில், உலக உயிர்களுக்கெல்லாம் முன்னவராகவும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் முதற்கடவுளாகவும் விளங்கும் கணபதி பெருமானுக்கு பூஜைகளில் முதலிடம் உண்டு. அவ்விதமே, அவரின் திருப்பெயரை இந்தப் புண்ணிய தினத்துக்குச் சூட்டியதாகத் தகவல் உண்டு.
நிகழும் 'ஜய’ வருடம், கார்த்திகை மாதம் 20ம் நாள் (6.12.14), மார்கழி 19ம் நாள் (3.1.15) ஆகிய நாட்கள் தங்க கணபதி தினமாக அமைகின்றன. இந்த தினங்களில் புதிய தங்க நகையைச் செய்யச் சொல்லி அணிந்தால், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் கூடுவதோடு, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்த செல்வமும் நிலைக்கும் என்பது ஐதீகம்.
மேலும், இந்தப் புண்ணிய தினங்களில், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, 'ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம’ என 108 முறை பாராயணம் செய்து, விநாயகர் கோயிலுக்குச் சென்று, கணபதியைத் துதித்து அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுங்கள். இதனால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, கல்வி மேம்பாடு, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், புதிய முயற்சிகளில் வெற்றி, தொழிலில் லாபம் என சகல விஷயங்களும் சாதகமாகும்; பிரச்னைகள் விலகி, வாழ்க்கை இனிக்கும்!
Read more...

Ganapathi

Read more...

Wednesday, November 26, 2014

ஐயப்ப சாமிகள் செய்ய வேண்டிய திருவிளக்கு பூஜை

0 Facebook
1. அச்சங்கோவில் அரசே போற்றி 
2. ஆரியங்காவு அய்யாவே போற்றி 
3. அகில நாயகனே போற்றி 
4. ஆறுமுகன் சோதரனே போற்றி 
5. அன்பர்க்கு மெய்யன்பனே போற்றி 
6. ஆனைமுகன் தம்பியே போற்றி 
7. இருமுடிப் பிரியனே போற்றி 
8. ஈசன் மகனே போற்றி 
9. இடரை தீர்ப்பவனே போற்றி 
10. ஈடில்லா தெய்வமே போற்றி 
11. இளநீர் பிரியனே போற்றி 
12. வன்புலி வாகனனே போற்றி 
13. உண்மையின் தத்துவமே போற்றி 
14. உலகைக் காப்பவனே போற்றி 
15. உலக நாயகனே போற்றி 
16. ஊழ்வினை களைபவனே போற்றி 
17. ஐயந் தவிர்ப்பவனே போற்றி 
18. ஐயப்ப தெய்வமே போற்றி 
19. ஓங்கார ரூபனே போற்றி 
20. ஒற்றுமையில் ஒளிர்பவனே போற்றி 
21. கற்பூரப் பிரியனே போற்றி 
22. காந்தமலை வாசனே போற்றி 
23. கற்பூர ஜோதியே போற்றி 
24. சபரி பீடமே போற்றி 
25. தர்ம சாஸ்தாவே போற்றி 
26. கால சாஸ்தாவே போற்றி 
27. தீப ஜோதியே போற்றி போற்றி 

என்று அர்ச்சித்த பின்னர் சாம்பிராணி, ஊதுபத்தி, காண்பித்து, பானகம், நீர்மோர், கடலை சுண்டல், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து நிவேதனம் செய்து கற்பூரத்தை ஏற்றிக்கொண்டு, ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் சரணம் - என்று காட்டவும். 

பிறகு மூன்று முறை நமஸ்கரித்து மேற்கண்ட நாமாக்களை சரணம் சொல்லி வணங்கவும். பூஜை முடிந்தவுடன் சிறிது பாலை தீபத்திற்கு வைக்கவும். அனுதினமும் இவ்விதம் செய்ய மகர ஜோதியை இறைவனின் கருணையால் நன்கு தரிசித்து சகல சௌபாக்யங்களையும் பெறலாம். ஏழரை ஆண்டு சனி கிரகம் கொடுக்கும் தொல்லைகளிலிருந்தும் விடுபடலாம்.
Read more...

கேட்ட வரத்தை தட்டாமல் கொடுப்பவர் நரசிம்மர்.

0 Facebook
கேட்ட வரத்தை தட்டாமல் கொடுப்பவர் நரசிம்மர். நரசிம்மர் அருள்புரியும் தன்மையை, நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை என்று சொல்வார்கள். நம்பிக்கையுடன் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று ஜெபித்து வாருங்கள். உங்களின் விருப்பத்தை லட்சுமிநரசிம்மர் விரைவில் நிறைவேற்றி அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நரசிம்மர் 108 போற்றி!

ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி
ஓம் நாடியருள் தெய்வமே போற்றி
ஓம் அரசு அருள்வோனே போற்றி
ஓம் அறக் காவலனே போற்றி
ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி
ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி
ஓம் அழகிய சிம்மனே போற்றி
ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
ஓம் அருள் அபயகரனே போற்றி
ஓம் அகோபில நரசிம்மனே போற்றி

ஓம் அரவப் புரியோனே போற்றி
ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி
ஓம் அகோர ரூபனே போற்றி
ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி
ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி
ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி
ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி
ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி
ஓம் ஈரெண் கரனே போற்றி
ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி
ஓம் உக்ர நரசிம்மனே போற்றி

ஓம் உடனே காப்பவனே போற்றி
ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி
ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி
ஓம் கதிர் நரசிம்மனே போற்றி
ஓம் கதலி நரசிம்மனே போற்றி
ஓம் கர்ஜிப்பவனே போற்றி
ஓம் கம்பப் பெருமானே போற்றி
ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி
ஓம் கருடாத்ரி நாதனே போற்றி

ஓம் கனககிரி நாதனே போற்றி
ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி
ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி
ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி
ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி
ஓம் கும்பி நரசிம்மனே போற்றி
ஓம் கோல நரசிம்மனே போற்றி
ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி
ஓம் கோர நரசிம்மனே போற்றி

ஓம் சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சர்வாபரணனே போற்றி
ஓம் சக்ர நரசிம்மனே போற்றி
ஓம் சத்ர நரசிம்மனே போற்றி
ஓம் சண்ட நரசிம்மனே போற்றி
ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி
ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி
ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி
ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி
ஓம் சாந்த நரசிம்மனே போற்றி

ஓம் சிம்மாசனனே போற்றி
ஓம் சிம்மாசலனே போற்றி
ஓம் சுடர் விழியனே போற்றி
ஓம் சுந்தர சிம்மனே போற்றி
ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி
ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்தௌண நரசிம்மனே போற்றி

ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி
ஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றி
ஓம் நவ நரசிம்மனே போற்றி
ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி
ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி
ஓம் நின்றும் அருள்வோனே போற்றி
ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி
ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி
ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி

ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
ஓம் பகையழித்தவனே போற்றி
ஓம் பஞ்ச முகனே போற்றி
ஓம் பத்மாசனனே போற்றி
ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி
ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி
ஓம் பாவக நரசிம்மனே போற்றி
ஓம் பானக நரசிம்மனே போற்றி
ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி
ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி

ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி
ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி
ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி
ஓம் புராண நாயகனே போற்றி
ஓம் புச்ச நரசிம்மனே போற்றி
ஓம் பூவராக நரசிம்மனே போற்றி
ஓம் மால் அவதாரமே போற்றி
ஓம் மாலோல நரசிம்மனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் மலையன்ன தேகனே போற்றி

ஓம் முக்கிய அவதாரனே போற்றி
ஓம் முப்பத்திரு க்ஷேத்ரனே போற்றி
ஓம் யோக நரசிம்மனே போற்றி
ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி
ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி
ஓம் ருண விமோசனனே போற்றி
ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் லோக ரக்ஷகனே போற்றி
ஓம் வஜ்ர தேகனே போற்றி
ஓம் வராக நரசிம்மனே போற்றி

ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி
ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி
ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி
ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி
ஓம் விசுவரூபனே போற்றி
ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி
ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி
Read more...

சனிப்பெயர்ச்சி பலன்! (16.12. 2014 - 18.12.2017) மீனம்:

0 Facebook
நெஞ்சம் மறப்பதில்லைஅது நினைவை இழப்பதில்லை!

இது வரை சனிபகவான் எட்டாமிடத்தில் இருந்து பல்வேறு இடர்பாடுகளை தந்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் தம்பதியினரிடையே கருத்து ÷ வறுபாடு வந்திருக்கலாம். இதனால் அவர்களிடையே விரிசல் ஏற்பட்டு பிரியும் நிலையும் வந்திருக்கும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு உருவாகி இருக்கும். உங்கள் முயற்சிகளில் தடைகள் வந்து, நீங்கள் நினைத்ததை செய்ய முடியாமல் போய் இருக்கலாம். 

மருத்துவச்செலவு வந்திருக்கலாம். இந்த பிரச்னை மட்டுமோடு நின்று இருக்காது. கடந்த சில காலமாக மற்ற முக்கிய கிரகங்களுமே சாதகமாக இல்லாத நிலையில்தான் இருந்தது. இதனால் நெஞ்சம் நிறைய நினைவுகளைச் சுமந்து கொண்டு இருப்பீர்கள். அதனை மறக்கமுடியாமலும் தவித்துக் கொண்டு இருப்பீர்கள். இந்த நிலையில் சனி பகவான் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு வந்துள்ளார். 

இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால், இதற்கு முன்பு போல் கெடுபலனைத் தர மாட்டார். பழைய சிரமமான நினைவுகளில் இருந்து விடுபட ஆரம்பிப்பீர்கள். பொதுவாக சனி 9-ம் இடத்தில் இருக்கும் போது, முயற்சிகளில் தடைகள் வரலாம். எதிரிகளின் இடையூறு தலைதுõக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த கெடுபலன்கள் அப்படியே நிகழும் என்று எண்ண வேண்டாம். கோட்சார பலனைக் கணிக்கும்போது மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் மற்ற கிரகங்கள் மூலம் அவ்வப்போது நன்மை கிடைக்கும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.

2015ம் ஆண்டு நிலைகுடும்பத்தில் உறவினர்கள் வகையில் நல்ல அனுகூலமான போக்கு இருக்கும். அவர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர். வி ருந்து, விழா என்று சென்று வருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வந்து சேரு ம்.பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வியாபாரிகள் மன நிம்மதி ஏற்படும். சனியால் பளு அதிகரித்தாலும் அதற்கான வருமானம் கிடைக்காமல் போகாது. பெண்களை பங்குதாரர்களாக கொண்ட தொழில், வியாபாரம் தழைத்து ஓங்கும். கலைஞர்கள் சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்க பெறுவர். மாணவர்கள் அயல்நாடு சென்று படிப்பீர்கள். விவசாயிகள் கால்நடை செல்வங்கள் பெருகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். குழந்தை பாக்கியம் பெற்று அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். திருமணம் ஆகாதவர்களுக்கு மணப்பொருத்தம் கைகூடும்.

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இது உங்கள் ராசிக்கு 6-ம் இடம். இந்த சமயத்தில் முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக அமைய வில்லை. அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குருபகவானின் 9-ம் இடத்துப்பார்வை சாதகமான அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இ ருக்கும். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதே நேரம் முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிற ப்பாக முடிக்க முடியும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பணியாளர்களுக்கு ÷ வலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய தொழில், வியாபாரம் தற்÷ பாது வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பின் தங்கும் நிலை ஏற்படலாம். விவசா யத்தில் அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகஇருக்கும்.கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.

2016ம் ஆண்டு நிலைகுரு சாதகமான இடத்துக்கு வந்து விடுவார். ராகுவாலும் எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பணியில் உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். வியாபாரம், தொழிலில் தீயோர் சேர்க்கையால்அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கைக்கு கிடைக்கும். பெண்கள், குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர்.கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.

2017 ஜூலை வரைஇந்த காலகட்டத்தில் செலவும் வரும். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டி வரும். உடல் நலம் மட்டுமின்றி மனத்தளர்ச்சியும் ஏற்படும்.

2017 டிசம்பர் வரைகேதுவின் பலத்தால் நல்ல பணப்புழக்கம் ஏற்படும். முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பகைவர்களின் தொல்லையில் சி க்கி அலைக்கழிந்தவர்கள் இனி தைரியமாக செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். சனிபகவான் சாதகமற்று இருப்பதால் பெரியோர்களின் ஆ லோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. பணியில் இடமாற்றப் பீதி சிலருக்கு வரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. கலைஞர்கள் புதிய ஒ ப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டி வரும். மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக பளுவை சந்திப்பர். உடல்நல உபாதைகளால் அவதி ப்பட்டவர்கள் குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.


பரிகாரம்!

சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஊனமுற்றவர்களுக்கும், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும். சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். அஷ்டமி நாளில் பைரவரை வணங்கி வாருங்கள்.
Read more...

சனிப்பெயர்ச்சி பலன்! (16.12. 2014 - 18.12.2017) கும்பம்:

0 Facebook
வந்தார் இருந்தார் போனார் என இருப்பாரா!

இது வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்தார். இது சிறப்பான இடம் இல்லை. அவர் உங்கள் முயற்சியில் பல்வேறு ÷ தால்விகளை தந்திருப்பார். பகைவர்களால் தொல்லைகள் அதிகம் ஏற்பட்டு இருக்கும். சிலர் எதிரிகளுக்கு அடங்கி போய் இருப்பர். உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகி அது பகையாகக் கூட மாறி இருக்கும். இந்த நிலையில் இப்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலன்கள் மாறுபடும். சனியால் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். ஆனால், தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாக நோகச் செய்யலாம். இதுவெல்லாம் சனி 10-ம் இடத்தில் இருக்கும் போது தரும் பொதுவான பலன்கள். அதற்காகக் இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வேறு கிரகங்கள் அவ்வப்போது நன்மை தர காத்திருக்கின்றன. சனியைத் தவிர மற்ற முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது ஆகியவற்றின் நிலை மற்றும் மாற்றங்களையும் சற்று கவனிக்க வேண்டும்.

2015ம் ஆண்டு நிலை எந்த முக்கிய கிரகமுமே சாதகமான இடத்தில் இல்லை. ஆனாலும், குருவின் 9-ம் இடத்து பார்வை உங்களுக்கு மிக சிறப்பாக அமையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். அதற்காக அது முன்பு போல் இருக்காது. தீவிர முயற்சி எடுத்தால் எதையும் சிறப்பாக முடிக்க முடியும். மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் தம்பதியி னரிடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகும்.பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம். ஆரம்ப காலத்தில் சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும் போகப்போக முன்÷ னற்றம் தருவதாக அமையும். தொழிலதிபர்களும், வியாபாரிகளும் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். எனவே அவர்கள் வகையில் எப்போதும் கவனமாய் இருக்கவும். சனி பகவான் அவப்பெயரையும் தருவார். சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் நல்ல முன்னேற்றம் காண முடியும். சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். கவனம் தேவை. விவசாயிகளுக்கு மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப் பது புத்திசாலித்தனம். வேலை பார்க்கும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல்நலத்தில் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.

குரு 2015 ஜூலை மாதம் 4-ந் தேதி அன்று சிம்மத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அதோடு அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். கணவன்-மனைவி இடையே அன்னியோனியம் கூடும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் மாறி ஒற்றுமை ஓங்கும்.

பணியில் உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். ÷ வலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழில் வெற்றி அடையும். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மாணவர்களுக்கு சிறப்பாக அமையும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கைக்கு கிடைக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். 2016ம் ஆண்டு நிலை குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த தடைகளையும் நீங்கள் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்பட்டு கொண்டிருக்கும். அதனைக் கண்டு பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். பணவரவு கூடும். ÷ தவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் குதுõகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியில் சற்று முயற்சி எடுத்தால் ÷ காரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் போட்டியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். நண்பர்கள் என்ற போர்வையில் விரோதிகளும் வர வாய்ப்பு உண்டு. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை பாராது பணி செய்ய வேண்டி வரும். மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியைப் பெறுவர். உடல் நலம் சிற ப்படையும். பிள்ளைகள் உடல்நலம் மேம்படும்.

2017 ஜூலை வரை தடைகள் அகலும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களைப் புகழ்வர்.மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களைப் புரிந் துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். பணியில் வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு அரசின் உதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர்.

2017 டிசம்பர் வரைராகு பல்வேறு முன்னேற்றங்களைத் தருவார். இதனால் நன்மைகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் சிறப்படையும். பொரு ளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும். பணியில் சீரான நிலை இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வீண் அலைச்சல் இருக்காது. தொழிலதிபர்கள், வியாபாரிகள் கடந்த போட்டியாளர்களின் பிடியிலிருந்து விடுபடுவார்கள். தடையின்றி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் நிவாரணம் பெறுவர். இதனால் வீண்விரயம் தடைபடும். கலைஞர்கள் பிரச்னைகளின்றி முன்னேறலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணவிஷயத்தில் தேவைகள் பூர்த்தி அடையும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பர். கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக் கழிந்தவர்கள் இனி நல்ல புத்தியோடு சிறப்பான நிலைக்கு செல்வர். விவசாயிகள் எள், கரும்பு, உளுந்து மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு அதிகமாக கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.மொத்தத்தில் சனீஸ்வரர் வந்தார் இருந்தார் போனார் என்ற சுமாரான நிலையே இந்தப் பெயர்ச்சி காலத்தில் இருக்கும். இப்படி இருந்தாலே ஓரளவுக்கு நல்ல விஷயம் தானே!


பரிகாரம்!

நவக்கிரகங்களை தொடர்ந்து சுற்றுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்திஆசி பெறுங்கள். வசதி படைத்தவர்கள் ஏழைகள் பிழைக்க பணம் கொடுத்து உதவி செய்யலாம். விநாயகரையும் , ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். முருகன் கோயி லுக்கு சென்று வாருங்கள்.
Read more...

சனிப்பெயர்ச்சி பலன்! (16.12. 2014 - 18.12.2017) மகரம்:

0 Facebook
11ல் வந்திருக்கார்! பக்க பலமாய் துணையிருப்பார்!

நீங்கள் மனைவி மீது அதிக பாசம் கொண்டவர்கள். எந்த வகையிலும் அவர்களின் ஆலோசனையை கேட்கத் தவற மாட்டீர்கள். கடந்த பல ஆண்டுகளாக சனிபகவான் பல்வேறு இன்னல்களையே தந்திருப்பார். குறிப்பாக, அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும், தொழிலில் மந்த நிலையையும் கொடுத்திருப்பார். 

உங்கள் செல்வாக்கு கவுரவம் போன்றவைக்கு பங்கம் வந்திருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்காது. ஆனாலும், கடந்த சில மாதங்களாக குருபகவானும், கேதுவும் உங்களுக்கு நன்மை தந்து உங்களை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சனிபகவான் இப்போது 11-ம் இடத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளைத் தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.

2015ம் ஆண்டு நிலைஉங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். உ ங்கள் செல்வாக்கு, அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த பொருளை வாங்கி மகிழலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். விருந்து, விழா என உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.பணியாளர்களுக்கு சம்பள உயர்வு முன்பை விட அதிகமாக கிடைக்கும். வியாபாரிகள், தொழிலதிபர்கள் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை வளம்பெறச் செய்வர். கலைஞர்களுக்கு நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மாணவர்களின் மந்த நிலை மாறும். நற்கல்வி பெறுவர். விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும். பெண்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். உடல்நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு சாதகமற்ற இடத்துக்கு சென்றுவிட்டாலும், அவரது 7-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும்.அந்த பார்வையால் மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். செலவும் வரும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். எனினும், மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும் என்பதால், வீண்விவாதங்களை தவிர்க்கவும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசின் உதவி கிடைப்பது அரிதாகும். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். மாணவர்களுக்கு குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். புதிய வழக்கில் சிக்க வேண்டாம். பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்படையும்.

2016ம் ஆண்டு நிலை அக்கம் பக்கத்தினர் உங்களைப் புகழ்வர். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ÷ தவைகள் பூர்த்தி ஆகும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். கேதுவால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. பணியாளர்களுக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம்.வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இரு க்கும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். பிள்ளைகள் உடல்
நலனில் சற்று அக்கறை காட்டவும்.

2017 ஜூலை வரைமுக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வீட்டில் சிற்சில பூசல் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமகலாம். பணியாளர்கள் கடந்த காலம் போல உன்னதமான பலனை எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகள் புதிய வியாபாரத்தை தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் கிழங்கு நல்ல மகசூலை தரும். பக்கத்து நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது. பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

2017 டிசம்பர் வரைகுடும்பத்தில் திருட்டு பயம் மறையும். தம்பதியினர் இடையே கேது, ராகுவால் சிற்சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். அதே நேரம் உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்னை இனி இருக்காது. அதோடு அவர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். புதிய வி யாபாரம் தொடங்குவதோ, அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். பணவிரயம் ஏற்படலாம். எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய் யும். கவனம் தேவை. தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் அதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம்! உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிபட வாய்ப்பு உண்டு. எனவே முன்பின் தெரியாதவர்களிடம் எதையும் ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சீராக கிடைக்கும். ஆனால், அதற்காகசற்று சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படித்தால் தான் மதிப்பெண் கிடைக்கும். விவசாயம் சீராக இரு க்கும். மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.வழக்கு விவகாரங்கள் சுமராக இரு க்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சிற்சில உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.


பரிகாரம்!

சித்திரபுத்திரநயினாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை யும், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பைரவரையும் வணங்கி வாருங்கள். தினமும் விநாயகர், துர்க்கை, ஆஞ்சநேயரை வழிபடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
Read more...

சனிப்பெயர்ச்சி பலன்! (16.12. 2014 - 18.12.2017) தனுசு:

0 Facebook
பாத்துட்டார் பாத்துட்டார் ஐயையோ பாத்துட்டார்!

நீங்கள் பிறரது குற்றங்களை எளிதில் கண்டு கொள்ளும் திறன் கொண்டவர்கள். சனிபகவான் இதுவரை 11ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மை தந்தார். செய்தொழில் மூலம் சிறப்பாக வருமானம் பெற்றிருக்கலாம். வீட்டில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருந்திருக்கும். பொன், பொருள் என வா ங்கி இருப்பீர்கள். இப்போது சனிபகவான் 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இனிமேல் அவரால் முன்புபோல் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், உங்கள் மீது அவரது பார்வை பட்டு விட்டது. புரிந்து கொண்டிருப்பீர்கள்! அதாவது ஏழரை சனி உங்களுக்கு ஆரம்பித்து விட்டது. சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்பு வரலாம். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு.இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7ம் இடத்து பார்வை ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியைத் தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். இது தவிர மற்ற முக்கிய கிரகங்களான குரு வும், ராகுவும் அவ்வப்போது நன்மை தருவார்கள். மேலும் விரைவாக சுழலும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்களும் இடையிடையே நற்பலனை கொடுக்க தவறமாட்டார்கள். அந்த வகையில் மற்ற முக்கிய கிரகங்களின் நிலையை சற்று காண்போம்.

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். வீட்டில் சிற்சில பிரச்னைகள் வரலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார இழப்பு வரலாம். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் எதிலும் அசட்டையாக இருக்க வேண்டாம். அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிதாகும். புதிய தொழில், வியாபாரம் தற்போது தொடங்க ÷ வண்டாம். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். அரசிய ல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிபெற அதிக பிரயாசைப் பட நேரிடும். விவசாயி கள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். ÷ வலைக்குச் செல்லும் பெண்கள் மிகவும் பளுவைச் சுமக்க வேண்டி வரும். உடல்நல பாதிப்பு வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

2015 ஜூலை 4ல், குருபகவான் சிம்மத்திற்கு மாறி நன்மை தருவார். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அனைத்தும் அகலும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம் பக்கத்தினர் உங்களை புகழ்வர்.குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபங்கள் கைகூடும். வீடு, மனை வா ங்கும் யோகம் கூடி வரும். பணியாளர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். வேலைப்பளு குறையும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம்.
அரசின் உதவி கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறப்பெற்று முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம். விவசாயிகளுக்கு நெல், கோதுமை, கேழ்வரகு பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். பிள்ளைகள் உடல் நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டி வரும்.

2016ம் ஆண்டு நிலைமுக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். சனிபகவானின் 7-ம் இடத்துப் பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும். இந்த காலத்தில் ராகு கன்னியில் இருந்து சிம்மத்திற்கும், கேது மீனத்தில் இருந்து கும்பத்திற்கு மாறுகின்றனர்.கேது நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் ராகு சாதகமற்ற நிலைக்கு வருகிறார்கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு அதிக நன்மை உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகள் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

2017 ஜூலை வரைகுடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வ ருவீர்கள். வேலையில் கடந்த கால பிற்போக்கான நிலை மறையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால் வளம் காணலாம். கலைஞர்கள் மிகச்சிற ப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல் நலம் நன்றாக இ ருக்கும்.

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வாகன சுகம் ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. நகைகளை பாங்கில் வைக்கவும். ஏற்கனவே பணி இழந்தவர்கள் முயற்சி செய்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆ லோசனையுடன் முன்னேற்றம் காணலாம். வாடிக்கையாளர்கள் அனுகூலமாக இருப்பர். வெளியூர் பயணம் சிறப்பை தரும். வேலை இன்றி இருப் பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். ஆனால், உங்கள் பெயரில் துவங்காமல் வீட்டில் உள்ளவர்கள் பெயரில் ஆரம்பிக்க வேண்டும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கலைஞர்களுக்கு சான்ஸ் பெற கடும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். எனினும், கடந்த கால உழைப்புக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். அரசிய ல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்கள் சற்று முயற்சி எடுத்தால் விரும்பிய பாடங்களைப் பெறுவர். விவசா யம் சிறப்பாக நடக்கும். நெல், கோதுமை, கொண்டை கடலை, கேழ்வரகு சிறப்பான மகசூலைக் கொடுக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இரு க்கும். ஆனால், புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் சிறப்பு பெறுவர். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக பளுவைச் சுமக்க வேண்டியது இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.



பரிகாரம்!

ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். பத்ரகாளிக்கு தீபம் ஏற்றுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மாலை அணிவித்து வழிபடுங்கள். திருச்செந்துõர் சென்று வரலாம். ஏழரை சனிகாலம் எனவே சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் மற்றும் ராமர் வழிபாடு உறுதுணையாக இருக்கும்.
Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini