வீடு கட்டப்படும் இடத்தில் நாம் அறிய முடியாத சில குறைபாடுகள் இருக்கலாம். சில விலங்கினங்கள் இறந்திருக்கலாம். மனிதர்களே கூட சில தவறுகள் செய்திருக்கலாம். அஸ்திவாரம் தோண்டும் போது, மண்டை ஓடு, எலும்பு போன்றவை கிடைப்பதையும் பார்க்கலாம்.
இதுபோல குறைகள் உள்ள நிலையில் பல வகையான தெய்வங்களைக் குறித்து வேள்வி நடத்தப்பட வேண்டும். பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக ஐதீகம்.
கிரகப்பிரவேசத்தின் போது, கோபூஜை செய்து விட்டால், எல்லா குறைபாடுகளும் நீங்கி விடுவதோடு புதிய இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் பெருகும். அதனால் பசுவும், கன்றுக்கும் மரியாதை செய்கிறார்கள். இதனால் புதிய வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.