இத்தலம் நான்குபுறமும் பசுமை நிறைந்த வயல் வெளிகளால் சூழப்பட்டுள்ளது. இத்தலத்தின் முன்பு சக்தி தீர்த்தம் எனப்பெயர் பெற்ற திருக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இது கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய இடம் இக்கோவில். முருகன் இத்தலத்தில் தன் தாய் தந்தையர் ஆகிய ஆதிநாதர், ஆதிநாயகியை முன்னதாக வணங்கிய பின்னர் தான் தன் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.
நீண்டகாலம் சிலருக்கு திருமணம் ஆகாமல் தோஷங்களால் தடை இருக்கும். திருமணதோஷம் அகன்று திருமணம் நடைபெற இத்திருக்கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் செய்வித்தலால் திருமண தோஷம் நீங்கி திருமணம் கை கூடி நடைபெறும் என்பது நம்பிக்கை.
திருக்கல்யாணம் செய்விக்கும் விவரங்களை ஆலயத்தில் கேட்டுப்பெற வேண்டும்.