Banner 468 x 60px

 

Monday, July 13, 2015

வீட்டு பூஜை அறையில் கடவுளை கைகூப்பி வணங்கும் விதிமுறை


வீட்டு பூஜை அறையில் கடவுளை கைகூப்பி வணங்கும் விதிமுறை

வீட்டு பூஜை அறையில் அமர்ந்து இருக்கும்போது கைகூப்பி வணங்க சில விதிமுறைகள் உள்ளது. இறைவனை வணங்கும்போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கும் வகையில் வணங்கக்கூடாது.

தாமரை மொட்டு போல குவித்து வைத்தே வணங்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் நீங்கள் வழிபாடு செய்யும்போது ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அது பாம்பு வடிவத்தில் பக்தனை நோக்கி வருமாம். அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும்.

அப்போது புத்துணர்ச்சி ஏற்படும். பூமி சக்தி சிறிய விரல் மூலமாகவும், தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும், அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும், வாயு சக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும், ஆகாய சக்தி பெருவிரல் வழியாகவும் செல்லும் என்று நம்முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இத்தகைய புத்துணர்ச்சியுடன் செய்யப்படும் செயல்கள் வெற்றி பெறும். இது நமது வீட்டு பூஜை அறை நமக்குத் தரும் ஈடு இணையற்ற பலனாகும்.

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini