Banner 468 x 60px

 

Monday, July 13, 2015

சனி பகவானுக்கு சிறந்த பரிகார தலம் திருநள்ளாறு


சனி பகவானுக்கு சிறந்த பரிகார தலம் திருநள்ளாறு

புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அமைந்துள்ளது. புராதான சிறப்பு கொண்ட இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். பக்தர்கள் முதலில் நள தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு அதன் பிறகே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்கிறார்கள்.

அவ்வாறு செய்தால்தான் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து கொண்டு வடக்கு முகமாகவோ, அல்லது கிழக்கு முகமாகவோ 9 முறை ஸ்நானம் செய்து தலைகுளிக்க வேண்டும். அதன்பின்பு பிரம்மதீர்த்தம், சரஸ்வதி குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கர்ப்ப கிரகத்தில் `தர்ப்பாரண்யேஸ்வரர்' எனும் திரு நாமம் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபட வேண்டும்.

அவரை தரிசித்து வலம் வரும்போது கட்டை கோபுரச் சுவரில் சிறிய மாடத்தினுள் எழுந்தருளியுள்ள சனிபகவானை தரிசிக்கலாம். இவரை வழிபடத்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini