Banner 468 x 60px

 

Thursday, July 16, 2015

ஆடியில் பிறப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டா?

குழந்தை பிறந்ததும் ஜாதகம் கணிக்க நாள், நட்சத்திரம் பார்ப்பது வழக்கம். ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தாலும், பெண் குழந்தை பிறந்தாலும் அதனால் தோஷம் வருமோ என்று கவலைப்படுவார்கள். ஆனால் இனி கவலைப்படத் தேவையில்லை. தேடிப்பிடித்து தெய்வங்களை வழிபட்டால் ஆடியில் பிறந்தவர் களைத் தேடி அதிர்ஷ்டம் வந்து சேரும். ஆடி மாதத்தில் பிறந்த எத்தனையோ பேர் இன்று கோடீஸ்வரர்களாக வாழ்கிறார்கள். எல்லாவற்றிற்கும் நவக்கிரகங்கள் தான் காரணமாக அமைகின்றன.

'நாளும், கோளும் செய்வதை நல்லவன் கூட செய்ய மாட்டான்' என்பது பழமொழி. அப்படிப்பட்ட கோள்களில் ராஜ கிரகமாகப் போற்றப்படும் சூரியன், கடக ராசியில் சஞ்சரிக்கும் காலம் தான் ஆடி மாதமாகும். இந்த மாதம் ஆண் குழந்தைகள் பிறந்து விட்டால், 'பெற்றோர்களை ஆட்டி வைக்கும்' என்று சொல்வார்கள்.

பெற்றோர்கள் நல்ல செல்வ வளத்தோடும், செல்வாக்கோடும் இருக்கும் நேரத்தில் ஆடி மாதத்தில் ஒரு குழந்தை பிறக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு தொழிலில் இழப்புகள் ஏற்பட்டால் கூட, தங்கள் சுயஜாதகத்தின் தெசாபுத்தி பலம்இழந்திருக்கிறதா என்பதை அறியாமல் பிறந்த குழந்தை மீது குற்றம் சுமத்துவது சமூக வழக்கம்.

குழந்தை பிறந்த நேரத்தில் ராசிநாதன், லக்னாதிபதி ஆகியவற்றின் பலமறிந்து அதற்கான பரிகாரங்களையும், வழிபாடுகளையும் மேற்கொண்டால் பெற்றோர்களுக்கும் பெருமை வந்து சேரும். பிரச்சினைகள் இல்லாமல் பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்க வழிகோலும்.

பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் பலர் மேதைகளாகவும், தலைசிறந்த அறிஞர்களாகவும் விளங்குகிறார்கள். பிடிவாத குணத்தை மட்டும் இவர்கள் தளர்த்திக் கொண்டால் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்.

பொதுவாக ஆடி மாதத்தில் பிறந்த பிள்ளைகள் பெற்றோர்களின் சொற்களைக் கேட்காமல் ஆடி, ஓடிக்கொண்டு திரியும் சுட்டிப் பிள்ளைகளாக விளங்குவர். இளம் பருவத்திலேயே நல்ல அறிவு முதிர்ச்சியைப் பெறுவர். எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை அடிமனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்வர். இவர்களுக்கு மூளை பலம் அதிகம் உண்டு.

வழக்குகள் எத்தனை வந்தாலும் கடைசியில் இவர்  களுக்குத் தான் வெற்றி கிடைக்கும். இவர்களது சுறு    சுறுப்பு மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும். பார்ப்பதற்கு அவசரக்காரர்களைப் போல தோற்றமளித்தாலும் எதையும் ஆலோசித்து முடிவெடுப்பர். எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. வாழ்வில் சுகபோகமாக வாழ வேண்டும் என்று விருப்பப்படுவர்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை எளிதில் சாதித்து விடுவார்கள். தூக்கத்தையும், துக்கத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு துள்ளித்திரியும் செயல்வீரர்களாக விளங்குவர்.

திருமண விஷயத்தில் மற்றும் பெற்றோர்களின் சொல்லிற்கு கட்டுப்படுவார்களா? என்பது சந்தேகம் தான். இவர்களிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தப்பிக்க முடியாது. தங்களிடம் பணம் சம்பாதிக்கும் திறமை இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். எளிமையாகவே எப்பொழுதும் காட்சியளிப்பர்.

இவர்கள், கட்டிடத் தொழிலுக்குரிய பொருட்கள் விற்பனை நிலையம், மளிகை, பதப்படுத்தாத உணவுப் பொருட்கள், தண்ணீர் வஸ்துக்கள் வியாபாரம், நூல், துணி விற்பனை நிலையங்கள், ஆயத்த ஆடையகம், மின்சாரம் மற்றும் திரையரங்கத் துறைகளைத் தேர்ந்   தெடுத்து தொழில் செய்து வளர்ச்சியும், வருமானமும் காண்பர்.

இந்த ஆடி மாதம் பிறந்த ஆண், பெண் இருபாலரும் ஆவணி, கார்த்திகை, தை ஆகிய மாதங்களில் பிறந்தவர்களை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் வாழ்வில் நலமும், வளமும் வந்து சேரும்.

நீங்கள் ஆடியில் பிறந்தவர்களாக இருந்தாலும், உங்கள் குழந்தைகள் ஆடி மாதம் பிறந்திருந்தாலும் அவர்   களின் ராசி அதிபதி, லக்னாதிபதியின் நிலைமைக்கேற்ற ஆலய வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்துச் சென்று வழிபட்டு வந்தால் கண்டிப்பாக கோடி, கோடியாய் நன்மை கிடைக்கும். ஆடியில் பிறந்தவர்களை எண்ணி யாரும் பயப்படத் தேவையில்லை. அதிர்ஷ்டம் தானே தேடிவரும்.
Read more...

Wednesday, July 15, 2015

அற்புத பலன்தரும் ஆடி அமாவாசை



திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை கோண அளவில் குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுது அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும்.

திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகவுள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை முதல் அமாவாசை இறுதியாகவுள்ள 15 திதிகளும் அபரபக்கம் எனப்படும். பூர்வபக்கம், அபரபக்கம் என்பன முறையே சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை என்றும் அழைக்கப்படும்.

‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும். ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ எனப்படும்.

சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உயிர்களின் ஆத்ம அமைப்பு சூரியனால்தான் நிகழ்கின்றன. ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் யாவும் சூரியனாலேயே தோன்றுகின்றன.

சந்திரன் மனதிற்கு அதிபதி. மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியன சந்திரனால் அடையத்தக்கவை. இத்தகைய சூரியர், சந்திரர் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள் ஆகும். சகல தேவர் களும் அமாவாசையின் அதிபர்களாவர். சிறப்புமிக்க அமாவாசை தினத்தில் விரதம் மேற்கொள்வது, இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும்.

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் அனுஷ்டிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இந்த  இரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள்.

காலையில் எழுந்து ஆற்றிலோ, குளத்திலோ நீராடிவிட்டு, கரையோரத்தில் அமர்ந்து அந்தணர்களைக் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆற்றிலோ, குளத்திலோ நீராட முடியாதவர்கள், வீட்டில் நீராடிவிட்டு அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்று, அங்கு அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு இந்தியாவில் காசியும், இலங்கையில் கீரி மலைக் கடற்கரையும் விசேஷமான தலங்களாக கருதப்படுகிறது.

வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்ய வேண்டும். யார், யாரை வணங்க வேண்டுமோ, அவர்களை நினைத்தபடி இலைகளை போட்டு, சமைத்த உணவை அதில் படைத்து தீப– தூபம் காட்டி வழிபட வேண்டும். பின்பு இலையில் இருந்து எல்லா பதார்த்தங்களிலும் சிறிது சிறிது எடுத்துத், தனியாக ஓர் இலையில் வைத்து, காகம் உண்ணக் கூடியதான உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அவ்வுணவைக் காகங்கள் உண்ணத் தொடங்கிய பின்னர், விரதம் இருப்பவர்களும் வீட்டில் உள்ளவர்களும் உணவை உண்பார்கள். நமது முன்னோர்களே காகங்களாக வந்து, உணவை உண்பதாக நம்பிக்கை இருக்கிறது.

மேற்கண்டவாறு விரதத்தை மேற்கொள்வதால், இறந்த நமது முன்னோர்களின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
Read more...

ஆடி மாத சிறப்பு

ஆடிப்பூர மகிமை

* உலகை ஆளும் அன்னை பராசக்தி, தனது திருவிளையாடல்களை அரங்கேற்ற பூலோகத்தில் மனித உருவில் அவதரித்தது ஆடிப்பூரம் அன்றுதான்.

* ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், ஆடிப்பூரத் தினத்தில் தான் அவதரித்தார்.

* அம்மனின் திருநட்சத்திரம் ஆடிப்பூரம். அன்றைய தினம் திருவையாறில் ‘ஆடித் தபசு’ மிகவும் விசேஷமாக நடைபெறும்.

* ஆடிப்பூரம் நாளில் திருவண்ணாமலையில் அபித குசலாம்பாளுக்கு தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

ஆடி பவுர்ணமி

* ஆடி அமாவாசை போன்று, ஆடி பவுர்ணமி தினமும் விசேஷமானது. இந்த சிறப்பு மிக்க தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதரித்தார். எனவே அன்றைய தினம் ஹயக்ரீவரை வழிபாடு செய்தால் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கலாம்.

* சங்கரன்கோவில் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கோமதியம்மன், பழங்காலத்தில் அந்தப் பகுதியில் அடர்ந்திருந்த புன்னை வனத்தில் தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக, ஆடிப் பவுர்ணமி உத்திராட நட்சத்திரம் அன்று சங்கர நாராயணர், அன்னைக்கு காட்சி அளித்து அருள்புரிந்தார்.

ஆடி வழிபாடு

*     ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மன் பாடல்களைப் பாடி, அம்பாளை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

*     ஆடி வெள்ளியில் புற்று உள்ள அம்மன் கோவில்களுக்குச் சென்று, நாக தேவதைக்கு பால் தெளித்து, விசேஷ பூஜை செய்து வந்தால் நாக தோஷங்கள் தீரும் என்று கூறப்படுகிறது.

*     ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை துவாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை, துளசியை வழிபாடு செய்து வந்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

ஆடிப்பெருக்கில் முளைப்பாரி

ஆடி மாதம் 18–ந் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காவிரிக் கரையோரங்களில் பெண்கள் முளைப்பாரி எடுப்பது வழக்கம். தங்களது வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கும் பெண்கள், ஆடிப் பெருக்கு அன்று அவற்றை கைகளில் ஏந்திக் கொண்டு காவிரி ஆற்றுக்கு செல்வார்கள். ‘இந்த ஆண்டு எல்லா வளமும் பெருக வேண்டும்’ என்று நினைத்து பூஜை செய்வார்கள். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த முளைப்பாரியை காவிரியில் விட்டு விட்டு, கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
Read more...

பத்ரகாளியம்மனை வழிபடும் குரங்கு பக்தர்கள் பரவசம்



வைத்தீஸ்வரன் கோவிலில் பத்ரகாளியம்மனை வழிபடும் குரங்கை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

வைத்தீஸ்வரன் கோவில்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகி, செல்வமுத்துகுமாரசாமி, விநாயகர், தன்வந்தரி மற்றும் அங்காரகன் (செவ்வாய்), சாமிகள் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வேண்டுதல்கள் மற்றும் பரிகாரங்கள் செய்து சாமியை தரிசித்து செல்கின்றனர். இந்த கோவில் வளாகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம், தேங்காய் போன்ற உணவு பொருட்கள் கொடுத்து மகிழ்வர்.

அம்மனை வழிபடும் குரங்கு 

வைத்தியநாதர்சாமி கோவில் பிரகாரத்தில் கிருத்திகை மண்டபத்திற்கு அருகில் பத்ரகாளி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பத்ரகாளி அம்மன் சன்னதிக்கு ஒரு குரங்கு வந்தது. பின்னர் அம்மன் முன்பு அமர்ந்து கொண்டு பக்தர்கள் கைகூப்பி சாமியை வழிபடுவதுபோல் குரங்கும் தன் இரண்டு கைகளையும் கூப்பி சாமியை வழிபட்டது. இதனைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். நீண்ட நேரம் அந்த குரங்கு ஒரே இடத்தில் அமர்ந்து எந்தவித சேட்டையும் செய்யாமல் ஆழ்ந்த பக்தியுடன் அம்மனை வழிபட்டு கொண்டு இருந்தது. வழக்கம்போல் இரவு சுமார் 10 மணிக்கு நடைகள் மூடப்பட்டும் தனது வழிபாட்டில் இருந்து சற்றும் கலையாமல் அதே இடத்தில் அமர்ந்து இருந்தது.

பரவசம்

கோவில் பணியாளர்கள் சாமியை வழிபட்டு கொண்டிருக்கும் குரங்கை தொந்தரவு செய்யாமல் பத்ரகாளியம்மன் கோவில் சன்னதியை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். மீண்டும் நேற்று காலை கோவில் பணியாளர்கள் பத்ரகாளியம்மன் சன்னதியை திறக்க முற்பட்ட போது, நேற்று முன்தினம் மாலை அமர்ந்து வழிபட்டு கொண்டிருந்த குரங்கு அதே இடத்தில் அமர்ந்து அம்மனை வழிபட்டு கொண்டிருப்பதை கண்டு பரவசமடைந்தார். இந்த செய்தி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடை«ய் பரவியதால் ஏராளமான பக்தர்கள் பத்ரகாளியம்மனை வழிபடும் குரங்கிற்கு வாழைப் பழம், தேங்காய், சாதங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை குரங்கின் அருகில் வைத்தனர். அந்த குரங்கு பக்தர்கள் வழங்கிய உணவு பொருட்களை பெயரளவிற்கு மட்டுமே உண்டுவிட்டு மீண்டும் பத்ரகாளியம்மனை வழிபட தொடங்கியது. இந்த அதிசய சம்பவத்தை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் பத்ரகாளியம்மன் சன்னதியின் முன்பு குவிந்தனர்.

பரபரப்பு

ஆனால் அந்த குரங்கு யாரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பத்ரகாளியம்மனை வழிபட்டு வருகிறது. ஆஞ்சநேயராக பாவித்து வணங்கப்படும் குரங்கு, பத்ரகாளியம்மனை இடைவிடாது வழிபட்டு கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை பொதுமக்களியே உருவாக்கி உள்ளது. இதனைக் கண்டு பலரும் வியப்படைந்து சென்றனர். இந்த சம்பவம் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more...

Monday, July 13, 2015

பாவங்கள் போக்கும் ஸ்படிக லிங்க பூஜை


பாவங்கள் போக்கும் ஸ்படிக லிங்க பூஜை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.

தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர்.

இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.

கோவிலில் ஸ்படிக லிங்க பூஜைக்கென தனி கட்டணம் உண்டு அதிகாலையில் எழுந்து 21 தீர்த்தங்களிலும் நீராடி இந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொண்டால் திருமணம், குழந்தையின்மை, முன்னோர் சாபம், உள்ளிட்டவைகளில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தீர்த்த யாத்திரைக்கு பெயர் பெற்ற இக்கோவிலில் இந்த ஸ்படிக லிங்க பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிகாலையில் இந்த ஸ்படிக லிங்க பூஜையில் கலந்து கொள்வதற்க்கு அதிக மக்கள் கூட்டம் வரும். பாவங்கள் நீக்கும் ஸ்படிக லிங்க பூஜையில் நாமும் கலந்து கொண்டு நற்பேறை அடையலாம்
Read more...

கிரகங்களால் ஏற்படும் இடையூறுகளை போக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபாடு


கிரகங்களால் ஏற்படும் இடையூறுகளை போக்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபாடு

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும். பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதை பார்த்து இருப்பீர்கள்.

காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப்பான தலங்கள். காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப்படுகிறார். குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார். மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார்.

பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதைகள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங்கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளியுள்ளார். இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி “ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம’ என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம். திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.

திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார்..! சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப் பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோராவது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே! மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகத் திகழ்ந்தது.

அம்பரீச மன்னனுக்கு சுதர்சனர் அருளிய வரலாறும் உண்டு. இந்திரத்யும்னன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்திற்கு உள்ளாகி கஜேந்திரன் என்னும் யானையாக மாற நேர்ந்த்து.. ஒருநாள் தடாகத்தில் கஜேந்திரன் இறங்கியபோது முதலை ஒன்று யானையின் காலைக் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கவே, “ஆதிமூலமே’ என்று கஜேந்திரன் குரல் கொடுக்க, மஹா விஷ்ணு உடனே கருட வாகனத்தில் தோன்றினார். அப்போது திருமாலின் கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீசுதர்சனச் சக்கரம் முதலையை வதைத்து, கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றியது.

பொதுவாக சக்கரம் மஹாவிஷ்ணுவின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.

பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது.

சுதர்சன சக்கரத்தால் சூழ்வினை ஓட்டும் விஷ்ணுவை, வியாழக்கிழமைகளில், விஷ்ணு கோலமிட்டு, ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம் சொல்லி வணங்க மலர்ச்சி தருவார் மஹாவிஷ்ணு. ஓம் நமோ நாராயணாய. ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்.

Read more...

திருமணத்தடை நீக்கும் திருச்சி வயலூர் முருகன்



இத்தலம் நான்குபுறமும் பசுமை நிறைந்த வயல் வெளிகளால் சூழப்பட்டுள்ளது. இத்தலத்தின் முன்பு சக்தி தீர்த்தம் எனப்பெயர் பெற்ற திருக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இது கால சர்ப்ப தோஷம் நீக்கும் வல்லமை உடையது.

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய இடம் இக்கோவில். முருகன் இத்தலத்தில் தன் தாய் தந்தையர் ஆகிய ஆதிநாதர், ஆதிநாயகியை முன்னதாக வணங்கிய பின்னர் தான் தன் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

நீண்டகாலம் சிலருக்கு திருமணம் ஆகாமல் தோஷங்களால் தடை இருக்கும். திருமணதோஷம் அகன்று திருமணம் நடைபெற இத்திருக்கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் செய்வித்தலால் திருமண தோஷம் நீங்கி திருமணம் கை கூடி நடைபெறும் என்பது நம்பிக்கை.

திருக்கல்யாணம் செய்விக்கும் விவரங்களை ஆலயத்தில் கேட்டுப்பெற வேண்டும்.
Read more...

சனி பகவானுக்கு சிறந்த பரிகார தலம் திருநள்ளாறு


சனி பகவானுக்கு சிறந்த பரிகார தலம் திருநள்ளாறு

புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அமைந்துள்ளது. புராதான சிறப்பு கொண்ட இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். பக்தர்கள் முதலில் நள தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு அதன் பிறகே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்கிறார்கள்.

அவ்வாறு செய்தால்தான் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். நல்லெண்ணெயை தலையில் தேய்த்து கொண்டு வடக்கு முகமாகவோ, அல்லது கிழக்கு முகமாகவோ 9 முறை ஸ்நானம் செய்து தலைகுளிக்க வேண்டும். அதன்பின்பு பிரம்மதீர்த்தம், சரஸ்வதி குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கர்ப்ப கிரகத்தில் `தர்ப்பாரண்யேஸ்வரர்' எனும் திரு நாமம் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபட வேண்டும்.

அவரை தரிசித்து வலம் வரும்போது கட்டை கோபுரச் சுவரில் சிறிய மாடத்தினுள் எழுந்தருளியுள்ள சனிபகவானை தரிசிக்கலாம். இவரை வழிபடத்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்.
Read more...

சக்தி வாய்ந்த முக்கிய பரிகாரங்கள்

தடைப்பட்ட   திருமணம்   நடைபெற

  ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் அருகில் உள்ள சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்.

பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும். விரைவில் திருமணம் நடைபெறும்.


ஏற்றமான வாழ்வு அமைய

விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான  மரம்  வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ்  உள்ள விநாயகரை   வழிபடுவதால் சனி, ராகு, கேது, தசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள்  சேர்க்கை  ஏற்றமான வாழ்வு அமையும்.

புத்திர பாக்கியத்திற்கு

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து    வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.

கடும் குடும்ப பிரச்சினைகள் அகல

தினமும் வீட்டில் உள்ளூர்  பெருமாள்  கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி  வழிபட பாதிப்பு நீங்கும்.

Read more...

ஏற்றம் தரும் ஏகாதசி விரதங்களை பற்றி தெரியுமா?


ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் ஏகாந்தம் ஏற்படாமல் எப்படி இருக்கும். அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

இதில் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய் பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.  வைகாசி மாத வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகிறது.

இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமய மலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.  ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘அபார ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிகளில் தங்கள் விரதத்தை மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.

ஆடி மாதத்து வளர்பிறை ஏகாதசி ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளது. இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.  ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியானது ‘புத்ரஜா’ என்றும், தேய்பிறை ஏகாதசியானது ‘காமிகா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.  புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ என்றும் பெயர் பெற்றது.

இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.  ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ‘பிரபோதின’ எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை கொண்டு நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.  மார்கழி மாத ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி‘ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும்.

இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி’ ஏகாதசி எனப்படுகிறது.  தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.  மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும்.

இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர் களின் முக்திக்கான வழியை பெறுவார்கள்.  பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும். ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.
Read more...

ராகு கேது தோஷம் நீங்க சில அரிதான பரிகாரங்கள்

ராகு கேது தோஷம் நீங்க சில அரிதான பரிகாரங்கள்
* தங்கம் அல்லது வெள்ளியில் செய்த பாம்பு வடிவத்தை செவ்வாயன்று இரும்பு பாத்திரத்தில் வைத்து தட்சிணையுடன் தானம் செய்வது.

* ஆலயத்தில் வெள்ளிக்கிழமையன்று துர்கைக்கு நலெண்ணை அபிஷேகம் 21 உளுந்து வடை, உளுந்து சாதம் நைவேத்யம் செய்வது.

* மஹா விஷ்ணுவிற்கு பக்தியுடன் அபிஷேகம் அர்ச்சனை செய்தல்.சக்கரை பொங்கல் நைவேத்யம், பாராயணம் விஷ்ணு ஸ்தோத்ரம் செய்தல்

* தன்னை விட வயதில் மூத்த ஏழு சுமங்கலி பெண்களை வீட்டிற்கு வர சொல்லி நல்ல எண்ணை தேய்த்து ஸ்நானம் பண்ண சொல்லி ஆடை ஆபரணங்கள் கொடுத்து அறுசுவை உணவளித்து.அவர்களை ப்ராஹ்மி, கெளமாரி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி, சாமுண்டா என்பதான 7 மாத்ருக்களாக பாவித்து பூஜை செய்து ஆசி பெறுதல்.

* தன் கைப்பட எட்டு கையுடன் கூடிய துர்கை படம் பட்டு துணியில் வரைந்து தினசரி விடாமல் முப்பது நாட்கள் பூஜை செய்து தானம் செய்தல்.

* ஒரு பட்டு துணியில் எட்டு இதழ்களுடன் கூடியதான தாமரையை வரைந்து அதன் தளங்களில் ப்ராஹ்மி, கெளமாரி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணீ, சாமுண்டா, என்ற பெயர்களை எழுதவும் .எட்டாவது இதழில் உங்கள் நக்ஷத்திரத்தை எழுதவும்.

விடாமல் தொடர்ந்து 45 நாட்கள் பூஜை செய்யவும். நைவேத்யம் , உளுந்து சாதம்,எள்ளு சாதம் தேன். தினமும் படைத்து மனதால் ராகு, கேதுவை வணங்கவும்

* தேவி மாஹாத்மியம் புத்தகம் வாங்கவும். தொடர்ந்து 45 நாட்கள் பாராயணம் செய்யவும்.  முதலில் தேன், கடைசியில் பால் நைவேத்யம் செய்யவும். 45 நாட்கள் கழித்து இந்த புத்தகத்தை தானம் செய்யவும்.

* தொடர்ந்து ஆறு சனிக்கிழமைகளில் தேங்காய் சாதத்தில் வெல்லம் சேர்த்து விநாயகர் ஆலயத்தில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

* நுனியுள்ள தர்பத்தை கையில் வைத்துக்கொண்டு ஆலயம் அல்லது கன்றுடன் கூடிய பசு மாடு அல்லது மஹான்கள் வசிக்குமிடம் ஆகியவற்றை தொடர்ந்து ஒரு மாதம் வறை தினசரி பத்து முறை சுற்றி வந்து பிரதட்சிணம் செய்தல்.

* தொடர்ந்து 24 வாரங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில் விஷ்ணு சன்னதியில் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் புருஷ சூக்தம் பாராயணம் செய்தல்.

இவற்றை தொடர்ந்து செய்யும்போது ராகு கேது ஸஞ்சாரத்தால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்கள் நீங்கி பற்பல நன்மைகள் கிடைக்க செய்யும்

Read more...

திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் - பரிகாரங்கள்


திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் - பரிகாரங்கள்

கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள் உண்டு. அந்த கண்பார்வைக்கு தீமைகளை விளைவிக்கும் அபார சக்தி உண்டு. இதை கண்திருஷ்டி தோஷம் என்கிறார்கள்.

மனிதனின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. இவையே கண் திருஷ்டி வலிமை சேர்ப்பதாக கூறப்படுவதுண்டு. பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள், உயர்வுகள், நல்லநிலைகள் போன்றவற்றை கண்டதும் மற்றவர்களுக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சல் ஏற்படக் கூடும்.

நம்மால் இவ்வாறு இருக்க முடியவில்லையே என்ற ஏக்க பெருமூச்சும், பொருமலும், பொறாமையும் வெடித்து சிதறும். இந்த கெட்ட எண்ணங்களின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வை சக்தி வாய்ந்தது. அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இப்படி நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களது பேச்சும் விஷத்தன்மை நிரம்பி காணப்படும்.

இத்தகையோரின் கண்பார்வையே திருஷ்டி தோஷமாக பிறரை பாதிக்கச் செய்கிறது. பணக்காரர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் மற்றவர்களால் திருஷ்டி தோஷம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் 'கல்லடிபட்டாலும் படலாம். ஆனால், கண்ணடி மட்டும் படவே கூடாது' என்பார்கள்.

இப்படி கண்ணடிபடுபவர்கள் பல வகைகளில் பாதிப்பை சந்திப்பார்கள். அவர்களுக்கு கண்திருஷ்டி கவனக்குறைவையும், மந்தத்தையும், நினைவாற்றலில் பிரச்சினைகளையும், நோய் நொடிகளையும் திடீரென்று ஏற்படுத்திவிடும். திருஷ்டியால் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரியாமலேயே இருக்கும். கண்திருஷ்டியால் ஏற்படும் நோய் நொடிகளுக்கு எந்த மருத்துவமும் சரியாக வேலை செய்யாது.

நம்மால் திறமையாக இருக்க முடியவில்லையே என்ற ஒருவிதமான இயலாமை உணர்வின் தாக்கம் கூட திருஷ்டியாக மாறி விடும். இதெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் அனுபவப்பட்டிருப்போம். இவ்வாறு திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல இன்னல்கள், இடையூறுகளை சந்திக்குமாறு பல எதிர்வினை சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். வாழ்வில் எல்லாமே எதிர்மாறாக நடைபெறுவதாக தோன்றும். இந்த இன்னல்களை விரட்ட வழிபாடுகளும், பரிகாரங்களும் பல விதங்களில் உள்ளன.

கண் திருஷ்டி விலக :

சுதர்ஷண எந்திரம் வாங்கி அதை பிரேம் போட்டு உங்கள் வாசற்படியின் மேல் உள்பக்கமாக மாட்டி வைக்கவும். மற்றவர்கள் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் உங்களை பாதுகாக்கும்.

ஸ்ரீசுதர்சன சக்கரம் : 

ஸ்ரீசுதர்சன சக்கரம் மந்திரித்து கழுத்தில் டாலர் போன்ற கட்டிக்கொள்வதால் தினசரி ஏற்படும் திருஷ்டி தோஷங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்
Read more...

ஒரே ஊரில் ஏழு குருக்கள்


குருவைப் பற்றிய “ஸ்ரீகாண்டேயா’ என்ற ஸ்லோகம், தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தெட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோயிலில் தரிசிக்கலாம். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தருகின்றனர். குருவின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பெயர்ச்சியால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.

சிவனுக்கு கொண்டைக்கடலை:

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ள முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர், வியாழனுக்குரிய அதிபதியாக அருளுகிறார். அகத்தியரின் சீடரான உரோமச முனிவருக்கு, சிவன் குரு அம்சமாக இருந்து காட்சி கொடுத்த தலம். இந்த சிவனுக்கு, மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுவர். கோயில் அருகில் ஓடும் தாமிரபரணி நதி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இதை “தட்சிண கங்கை’ என்பர். இதனால், இது கிரகதோஷம் நீக்கும் தலமாக உள்ளது.

பெருமாளுக்கு மஞ்சள் வஸ்திரம்:

திருநெல்வேலி- திருச்செந்தூர் ரோட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதப்பெருமாள் கோயில் குருவிற்கு உரியது. இங்கு பெருமாள், வியாழன் கிரகத்திற்கு அதிபதியாக அருளுகிறார். பொதுவாக, தெட்சிணாமூர்த்திக்குத்தான் மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை (சுண்டல்) மாலை அணிவித்து வழிபடுவர். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு வழிபாட்டைச் செய்கின்றனர். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுவது விசேஷம்.


Read more...

பணக்காரராக மாற்றும் குபேர பூஜை


பணக்காரராக மாற்றும் குபேர பூஜை

வீட்டில் பூஜை செய்யும்போது உள்ளன்போடு முறையாக குபேரனை வழிபாடு செய்தால் நாம் எல்லோருமே குபேரர் ஆகலாம். அதற்கான ஒரு ஆன்மிக வழிதான் லட்சுமி குபேர பூஜை. இந்த பூஜை செய்ய விரும்புவர்கள் முதலில் குபேரன் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கைக்கு அரசனாக விளங்கிய இலங்கேஸ்வரனுக்கும் சூர்ப்பனகைக்கும் சகோதரனாகப் பிறந்தவன் குபேரன். இவன் சிவபெருமானிடம் அதிகமான பக்தி கொண்டு விளங்கினான். அதனால் சதா சர்வகாலமும் சிவபெருமானைக் குறித்தும்,பிரம்ம தேவனை நினைத்தும் பல கால தவம் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக நியமித்துவிட்டார்.

அன்றிலிருந்து செல்வ வளங்களுக்கும் அவன் அதிபதி ஆகிவிட அவனிடம் நவநிதிகளும் சேர்ந்துவிட்டன. ரிக்வேதத்தில் உள்ள துதியின்படி குபேரனும், மகாலட்சுமியும் தனத்திற்கு அதிதேவதைகளாக நியமிக்கப்பட்டுள்ளதால் லட்சுமி தேவியின் அஷ்டமாசக்திகளில் இருவராகிய சங்கநிதி, பதுமநிதி இருவரும் குபேரப் பெருமானுடைய இருபக்கங்களிலும் அருட்செல்வங்களாக நிற்கின்றனர். இந்த குபேரனை பூஜை செய்யும் முறை வருமாறு:-

சிவப்பு நிற பட்டின் மேல் பச்சரிசி பரப்பி, அதன் மேல் பஞ்ச வர்ண நூல் சுற்றப்பட்ட கலச சொம்பை வைத்து அதனுள்ளே தண்ணீர் வார்த்து, தாமரை மலர் பொறித்த தங்கக் காசு அல்லது ஒரு ரூபாய் நாணயம் போட்டு, ஏலக்காய், பச்ச கற்பூரம், குங்குமப்பூ தூள் செய்து இட வேண்டும். பிறகு தேங்காய், மாவிலை கொத்து, பூச்சரம், சந் தனம், குங்குமம் வைத்து கலசத்தை அலங்கரிக்க வேண்டும்.உங்கள் வீட்டில் வலம்புரிச்சங்கு இருந்தால் அதன்மேல் மூன்று பொட்டுகள் வைத்து துளசிநீர் நிரப்பி வைக்க வேண்டும்.

முதலில் மஞ்சள் பிள்ளை யாரைப் பிடித்து வைத்து அதற்கு அருகம்புல், மலர் சாற்றி வழிபட வேண்டும். இரண்டாவது, நவகிரகங்களை எளிய முறையில் வழிபட வேண்டும். மூன்றாவதாக தீபமேற்றி அதில் மஹாலட்சுமியை வரித்து மலர் தூவி வணங்குதல் வேண்டும். பிறகு தூபம் (ஊதுபத்தி) தீபம் (ஒருமுக தீபம்) காட்டுங்கள். லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு போன்ற மூவகை இனிப்புகள்,மூன்று வகை பூஜையை திவ்யமாக முடித்ததும் பழங்கள் வைத்து பால்பாயசம்,தேங்காய் உடைத்து, தாம்பூலம் வைத்து, நீர் சுற்றி பூஜையை நிறைவு செய்யுங்கள்.

பூஜை நிறைவு பெற்றதும்,மூன்று பெண்களை முப்பெருந்தேவிகளாக நினைத்து மனையில் அமர வைத்து திலகம் இட்டு, பூச்சூட்டி, தாம்பூலம் கொடுங்கள். வீட்டில் குபேர பூஜை செய்யும் ஒரு பெண்மணியை துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி தேவியர் வாழ்த்தினால் அவருக்கு எல்லாப் பேறுகளும் கிடைத்து விடும். பூஜை திவ்யமாக முடிந்ததும் கலச நீரில் வலம்புரிச்சங்கு நீரைக் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

இந்த பூஜை நிச்சயம் உங்கள் குடும்பத்தை செல்வ செழிப்புக்கு மாற்றும். இந்த பூஜை தவிர குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். இதுவும் குபேரனின் பேரருளைப் பெற நமக்கு உதவும்.
Read more...

தெய்வாம்சங்கள் நிறைந்த இலுப்பை மரம்


தெய்வாம்சங்கள் நிறைந்த இலுப்பை மரம்

இலுப்பை மரம் தமிழகத்தின் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உட்பட பல முக்கிய சிவாலயங்களில் ஸ்தல விருட்சமாக உள்ளது.

இலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்.

திருவிளக்கெண்ணெய்

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பைஎண்ணெய் எனப்படுகின்றது.

இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. இதற்காகவே திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோட்டமாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது.

இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது இலுப்பை எண்ணெய்தான்.

முன்பு பெரும்பாலான சிவாலயங்களில் இதனால் தான் தீபமேற்றப்பட்டது. இலுப்பெண்ணெய்யை ஆலயங்களின் தீபம் ஏற்றுவதற்கு வழங்குவதன் மூலம் காரியங்கள் வெற்றிபெறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இறைவனுக்கு விளக்கேற்ற மிகவும் சிறந்த ஒரு எண்ணெயாக இது பயன்படுத்தப்படுகிறது.

ஐஸ்வர்யங்கள் பெருகும்

பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பை எண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் வழிபடும் குடும்பத்திற்கு கிடைக்கும்.

இதேபோல் இலுப்பை எண்ணெய் விட்டு மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் உண்டாகும்.

இலுப்பை எண்ணெய் விட்டு சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், உட்பட பல்வேறு தோஷங்களும் நீங்கும்.
Read more...

கிரகப்பிரவேசத்தின் போது பசுவுக்கு பூஜை நடத்துவது ஏன்?


கிரகப்பிரவேசத்தின் போது பசுவுக்கு பூஜை நடத்துவது ஏன்?

வீடு கட்டப்படும் இடத்தில் நாம் அறிய முடியாத சில குறைபாடுகள் இருக்கலாம். சில விலங்கினங்கள் இறந்திருக்கலாம். மனிதர்களே கூட சில தவறுகள் செய்திருக்கலாம். அஸ்திவாரம் தோண்டும் போது, மண்டை ஓடு, எலும்பு போன்றவை கிடைப்பதையும் பார்க்கலாம்.

இதுபோல குறைகள் உள்ள நிலையில் பல வகையான தெய்வங்களைக் குறித்து வேள்வி நடத்தப்பட வேண்டும். பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக ஐதீகம்.

கிரகப்பிரவேசத்தின் போது, கோபூஜை செய்து விட்டால், எல்லா குறைபாடுகளும் நீங்கி விடுவதோடு புதிய இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் பெருகும். அதனால் பசுவும், கன்றுக்கும் மரியாதை செய்கிறார்கள். இதனால் புதிய வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை.
Read more...

சகல செல்வமும் தரும் துளசி வழிபாடு


பெண்கள் துளசியை பறிக்கலாமா?

ஒரு வீட்டில் துளசி இருந்தால் அங்கு சகல செல்வங்களும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி மாடம் அமைத்து, அதில் துளசிச் செடியையும், அதனுடன் தொட்டாற் சிணுங்கி செடியையும் சேர்த்து நட்டு, நன்னீர்விட்டு வளர்க்க வேண்டும்.

நல்ல தினங்களில் துளசி மாடத்தைச் சுற்றிக் கோலம் இட வேண்டும். இதற்கு தேங்காய், பழங்களுடன், தாம்பூலம் மற்றும் நிவேதனப் பொருட்களைப் படைத்து மலர்வழிபாடு செய்ய வேண்டும். நம் நோக்கம் நிறைவேற துளசி மாடத்தை இருபத்தொரு முறை வலம் வந்து வணங்கினால் பலன் யாவும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

கார்த்திகை மாதத்தில் வட மாநிலங்களில் துளசிக்கும், சாளக் கிராமத்திற்கும் திருமணம் செய்வித்த பின்னரே தம் இல்லத் திருமணங்களை நடத்துகிறார்கள்.

வேர்ப்பகுதியில் சகல புண்ணிய நதிகளும் வாசம் செய்வதும், நடுப்பகுதியில் எல்லா தெய்வங்களும் உறைவதும், வேதங்கள் நான்கினையும் உச்சிப் பகுதியில் கொண்டதுமான புனிதம் நிரம்பிய துளசிச் செடியினை வணங்குகின்றேன்.

என்ற துதியைச் சொல்லி துளசியை வழிபாடு செய்து வந்தால் அது நமக்கு சகல செல்வமும் தரும்.

Read more...

வீட்டு பூஜை அறையில் கடவுளை கைகூப்பி வணங்கும் விதிமுறை


வீட்டு பூஜை அறையில் கடவுளை கைகூப்பி வணங்கும் விதிமுறை

வீட்டு பூஜை அறையில் அமர்ந்து இருக்கும்போது கைகூப்பி வணங்க சில விதிமுறைகள் உள்ளது. இறைவனை வணங்கும்போது இரண்டு கைகளையும் ஒன்றுக்கொன்று அழுத்தமாக சேர்ந்திருக்கும் வகையில் வணங்கக்கூடாது.

தாமரை மொட்டு போல குவித்து வைத்தே வணங்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் நீங்கள் வழிபாடு செய்யும்போது ஒருவித காந்த சக்தி வெளிப்படும். அது பாம்பு வடிவத்தில் பக்தனை நோக்கி வருமாம். அவை பஞ்சபூத சக்தியாகப் பிரிந்து விரல்கள் வழியாக மூளையைச் சென்றடைந்து உடல் முழுவதும் வேகமாகப் பரவும்.

அப்போது புத்துணர்ச்சி ஏற்படும். பூமி சக்தி சிறிய விரல் மூலமாகவும், தண்ணீர் சக்தி மோதிர விரல் மூலமாகவும், அக்னி சக்தி நடுவிரல் மூலமாகவும், வாயு சக்தி ஆட்காட்டி விரல் மூலமாகவும், ஆகாய சக்தி பெருவிரல் வழியாகவும் செல்லும் என்று நம்முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இத்தகைய புத்துணர்ச்சியுடன் செய்யப்படும் செயல்கள் வெற்றி பெறும். இது நமது வீட்டு பூஜை அறை நமக்குத் தரும் ஈடு இணையற்ற பலனாகும்.

Read more...

பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம் -சிறப்பு தகவல்கள்


பகவான் விஷ்ணுவின் கல்கி அவதாரம் -சிறப்பு தகவல்கள்

உலகம் எங்கும் அநீதிகள், நியாயமில்லாத விஷயங்கள், சிறுவயதிலேயே ஒழுக்கம் தவறிய செயல்கள் அதிகம் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனால்தான் இதை சரி செய்ய முடியும் என ஆன்மிகவாதிகள் நம்புகின்றனர். மேலும் கலியுகத்தில் இப்படித்தான் உலகம் இருக்கும் என நம்பப்படுகிறது. கலியுகத்தின் இறுதியில்தான் பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து இதை எல்லாம் அழித்து புதிய உலகை உருவாக்குவார் எனவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

சில தமிழ் திரைப்படங்களில் கூட கதாநாயகன் தன்னை கல்கி அவதாரமாக நினைத்து கொண்டு அநீதிகளை அழிப்பதாகவும்
கதைகளில் வருகிறது. கல்கி அவதாரம் பற்றிய நம்பிக்கை பற்றியும் அது நிகழ்வதாக கூறப்படும் காலம் பற்றி புராணம் சொல்லும் தகவல்களை சற்று விரிவாக பார்ப்போம்.

கண்ணன் தன் அவதாரத்தை முடிக்கும் காலம் வந்துவிட்டது என எண்ணி, குரா மரத்தடியில் சரிந்து அமர்ந்தார்.

அங்கு வந்த ஜரா எனும் வேடன் எய்த அம்பு குறி தவறி கண்ணனின் காலில் தைத்தது; கண்ணனின் உயிர் பிரிந்தது. அவர் சரீர தியாகம் செய்து கொண்ட இடம்தான் இப்போது தோரஹரசாகர் என அழைக்கப்படுகிறது. இது ஹிரண்ய நதிக்கரையில் உள்ளது. இந்த நதிக்கரையில் அர்ச்சுனன் கண்ணன் மகனின் உதவியுடன் சந்தனக் கட்டைகளை அடுக்கி, கண்ணனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்து முடித்தான் என நம்பப்படுகிறது.

அப்போது கண்ணனின் தேகம் ஒரு மரக்கட்டையாகி நீரில் மிதந்து பூரி கடற்கரையருகில் ஒதுங்கியது.

அதை எடுத்து ஒரு சிலை செய்து பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.

ராமாவதாரத்தில் ராமனின் அம்பு பட்டு இறந்த வாலியே ஜரா என்ற வேடனாக  கிருஷ்ணாவதாரத்தில் வந்து கண்ணன்மீது அம்பெய்து கண்ணனைக் கொன்றான். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது கடவுள் அவதாரத்துக்கும் பொருந்தும் என்பதை இதனால் நாம் அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணாவதாரம் துவாபரயுக முடிவில் நிறைவுற்றது. அதன்பின் தோன்றிய யுகம்தான் நாம் வாழும் இந்த கலியுகம்.

கிருஷ்ணாவதாரம் பூர்த்தியான நாள்தான் துவாபர யுகத்தின் கடைசி நாள். அன்று பிற்பகல் 2.00 மணி, 27 நிமிடம், 30 வினாடிகளில் கண்ணன் சரீரத் தியாகம் செய்தார். அதுதான் கி.மு. 3102-ஆம் ஆண்டு, பிப்ரவரி 18-ஆம் நாள் என்று குறிப்பிடுகிறார்கள். அதன்பின் கி.மு. 3102, பிப்ரவரி 20-ஆம் நாள் கலியுகம் பிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

சோம்நாத் அருகேயுள்ள பிரபாசபட்டினத்தில் 7-9-2004 அன்று நடந்த மாநாட்டில் ஞானானந்த சரஸ்வதி சுவாமிகள் தன் ஆராய்ச்சிக் கட்டுரையிலும் இதையே குறிப்பிட்டுள்ளார். இவர் விஷ்ணு புராணம், மத்சய புராணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் கணினி மூலம் கணித்து நிர்ணயம் செய்துதான் மேற்கண்ட விவரங்களைத் தெளிவுற விளக்கியுள்ளார். மேலும் கண்ணன் மறைந்த தினமான பிப்ரவரி 18-ஐக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கண்ணன் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள் பூவுலகில் வாழ்ந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். உலகம் தோன்றி 198 கோடியே, 67 லட்சத்து, 73 ஆயிரத்து, 109 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.

கல்கி அவதாரம் என்பது விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரம் என நம்பப்படுகிறது. கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பதும் மக்களின் நம்பிக்கை.

கலியுகத்தில் என்னென்ன நடக்கும், மக்கள் எப்படி இருப்பார்கள், நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை கண்ணன் கூறியுள்ளார்.

"மனிதர்கள் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என வெறியுடன் இருப்பார்கள். பணத்தாசையுடன் அலைவர். துறவிகள்கூட பணத்திற்காகத் தவறுகள் செய்வார்கள். ஆண்கள் மனைவிக்கு மட்டும் கட்டுப்பட்டு பெற்றோரை உதாசீனம் செய்து தூஷிப்பார்கள். மனைவிவழி உறவினர்களிடம் மட்டுமே உறவாடுவார்கள். திருமணத்தில் முறை இருக்காது. சிறிதளவு சொத்துக்குக்கூட உறவினர்களைக் கொல்லத் தயங்க மாட்டார்கள். ஒருவருக்கொருவர் கெடுதல் செய்து கொள்வார்கள்' என்று கூறியுள்ளார் இறுதியில் கல்கி அவதாரம் நிகழும் என்று புராணங்கள் கூறுகின்றன.

பகவான் கண்ணன் கீதையில் தர்மம், நீதி தவறும்போது நான் மீண்டும் பிறப்பெடுப்பேன் என கூறியுள்ளார்.

கல்கி அவதாரம் நிச்சயம் நிகழும் என பலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மறுபுறம் 'கல்கி அவதாரம்' குறித்து தவறான கருத்துகள் பலவும் நிலவி வருகின்றன. புராணங்களின் துணை கொண்டு அவதார உண்மைகளை உணர்ந்து தெளிவு பெறலாம்

கலியுக முடிவிலேயே 'கல்கி அவதாரம்' நிகழும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. கலியுகம் 4,32,000 ஆண்டுகளைக் கொண்டது. தற்பொழுது 5,105 ஆண்டுகளே முடிவடைந்து உள்ளது. யுகம் நிறைவு பெற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.

கல்கி அவதாரம் தசாவதாரங்களில் 10-ஆவது அவதாரமாகும். அது எப்போது என தெரியாவிட்டாலும் நிச்சயம் நடக்கும் என புராணங்கள் சொல்கின்றன. அதில் 'சம்பளம்' என்னும் கிராமத்தில்  "யாஸஸ்” எனும் பிராமணருக்கு மகனாக கல்கி பிறப்பார். இவர் சகல வல்லமையுடன் பட்டுப் பீதாம்பரம் அணிந்து, மார்பில் துளசி மாலை துலங்க, கையில் வாளும் கேடயமும் தரித்து வெண்புரவி மீதேறி புறப்பட்டு வந்து, சிரஞ்சீவியான பரசுராமரிடம் சென்று பற்பல கலைகள் பயின்று உபதேசம் பெற்றபின், குதிரை மீதேறி வாயு வேகத்தில் மூன்று இரவுகள் உலகை வலம் வருவார். பாற்கடல் வாசனான பரந்தாமன் கோடி சூர்ய பிரகாசமாய் கல்கி அவதாரம் எடுத்து அருளுவார் என ஸ்ரீவிஷ்ணு புராணம் தெரிவிக்கிறது.

ஸ்ரீகல்கி, தர்மத்துக்கு விரோதமாக செயல்படும் அனைத்து கொடியவர்களையும் சம்ஹரித்து, உலகம் முழுவதும் தர்மத்தை நிலை பெறச் செய்தருளுவார் என்பது நம்பிக்கை.

அதன்பின் கல்கி அவதாரம் நிறைவடையும். கலியுகமும் முடிவடையும். பின் புதிய யுகமான சத்ய யுகம் பிறக்கும். அதில் அமைதியும் அன்பும் மட்டுமே மலரும்.

ஒரு கல்பம் 14 மன்வந்திரங்களைக் கொண்டது. ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களைக் கொண்டது. நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் (கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்).

தற்பொழுது நடைபெறுவது  (7ஆம்) மன்வந்திரம் - 28ஆவது சதுர்யுகத்தின் கலியுகம். இதன் முடிவில் 29ஆவது சதுர்யுகத்தின் முதல் யுகமான 'கிருத யுகம்' துவங்கும்.

தர்மவிரோத செயல்களைக் காணும் பொழுது 'கலி முற்றிவிட்டது' என்று பொதுவாகக் குறிப்பிடும் வழக்கம் உள்ளது. உண்மையில் இவை எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் அளவுக்கு கலியுகத்தின் கொடுமைகள் முற்ற இன்னும் எண்ணற்ற ஆண்டுகள் மீதமுள்ளது. இப்போதே நாம் அதை சிறிது சிறிதாக உணர முடியும்.

கல்கி அவதாரம் தோன்றும் முன்பே அவருக்கு ஆலயம் அமைத்து வழிபாடும் செய்கின்றனர். திருவனந்தபுரத்தில் முட்டத்தரா எனும் இடத்தில் கல்லுமேடு சந்திப்பின் அருகே கல்கி ஆலயம் அமைத்துள்ளனர். இவ்வாலயத்தின் பெயர் ஸ்ரீ மகாவிஷ்ணு- தேவி க்ஷேத்திரம் என்பதாகும்.

நடைபெறும் அதர்ம நிகழ்வுகளை, கலிகாலம் என்று சொல்லி கண்டும் காணாது இருந்து விடாமல், ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு உட்பட்டு, இயன்ற அளவில் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தை நிலை நிறுத்த முயல வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.

Read more...

விளக்கு துலக்க வேண்டிய நாள்களும் பலன்களும்


விளக்கு துலக்க வேண்டிய நாள்களும் பலன்களும்

பூஜை பாத்திரங்களை துலக்க சில சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எந்த நாட்களில் விளக்கை துலக்க வேண்டும் என்பது. எல்லா நாட்களிலும் விளக்கை துலக்க கூடாது. எந்த நாட்களில் விளக்கை துலக்கினால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து பலன் பெறுங்கள்.

ஞாயிறு : கண் சம்பந்தமான நோய் தீரும்.

திங்கள் : அலைபாயும் மனம் அடங்கி அமைதி பெறும்.

வியாழன் : குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.

சனி : வாகன விபத்துக்கள் ஏற்படாமல் நம்மைக்காக்கும்.

Read more...

ஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்?


ஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்?

குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.

வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார். குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேசுவார்கள் இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.

குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும். குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.

குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும். குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும். குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும்.

குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு. குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும்.

செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர்வதை இல்லாமல் போகும். குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.

குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார். குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும்.

மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும். குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுகத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார்.

Read more...

சிறப்பு வாய்ந்த குரு தலங்கள்


சிறப்பு வாய்ந்த குரு தலங்கள்

பட்டமங்கலம் : 
ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார். அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார். மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்ட மங்கலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது. 

தேவூர்: 

கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள் பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

தக்கோலம்:

அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பான கலைநயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி.

குருவித்துறை:

மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கருவில் இருக்கும் ஊர் குருவித்துறை. இங்கு சித்திரரத வல்லபப்பெருமாள் ஆலயம் உள்ளது. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளிய பெருமாள் இவர். இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக்கோயில் உள்ளது. வைஷ் ணவக் கோயிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

திரிசூலம்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்ப் பொருளாகச் சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று. அம்மனின் உள்ளகை தங்கத்தாலானது. இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள்.

இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம்பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது.

மேதா தட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்தோடு சுருட்டப்பள்ளி, உத்திரமாயூரம்,திருவாய்மூர், திருக்கைக் சின்னம் போன்ற ஊர்களில் அழகிய கோலத்தில் தட்சிணா மூர்த்தியைக்காணலாம். சிவபெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அந்தக் கோலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியைக்காண லால்குடி, திருநெய்தானம், திருச்சக் கரப்பள்ளி, சூரியனார் கோயில், திருவாங்குளம், திருநாவலூர், கீழ்வேளூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.


திங்களூர்:

திங்களூரில் கருவறையை சுற்றிய பிரகாரலத்தின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது அபூர்வமான காட்சியாகும். சிதம்பரத்தில் தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.

பூந்தோட்டம்: 

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் கீழ் அமர்ந்துதான் அருள்பாலிப்பார். ஆனால் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊரில் ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரஸ்வாமி ஆலயத்தில் குருபகவான் பன்னிரண்டு ராசி மண்டலங்களின் மேல் வீற்றிருக்கிறார். இந்த ராசி மண்டல குருபகவான் ‘பரமகுரு‘ என சிறப்பு பெற்றவர். இவரை வணங்கினால் திருமணத்தை தடை நீங்கி, நல்ல மனைவி, புத்திர பாக்கியம், பெரும்புகழ், பெருஞ்செல்வம் ஆகியவை கிட்டும். இவருக்கு புத்திரகாரன் என்ற பெயரும் உண்டு. இந்த குருபகவானுக்கு பிரதோஷ காலத்தில் அபிஷேக அர்ச்சனை செய்தால் எல்லாவிதமான நன்மைகளும் கிட்டும் என்று ஸ்ரீஅகஸ்திய நாடி வாக்யம் கூறுகிறது.

ஓமாம்புலியூர்:

சிதம்பரத்திற்கு தென்மேற்கில் 30 கி.மீ. தொலைவில் ஓமாம்புலியூர் உள்ளது. இறைவன்: ஸ்ரீதுயர்தீர்த்தநாதர், இறைவி: பூங்கொடி நாயகி, இது இறைவன் தட்சிணா மூர்த்தி கோலத்தில் உமையம்பிகைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த திருத்தலம்.

திருலோக்கி: 

கும்பகோணம் - திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி காளை மீது அமர்ந்திருக்கும் காட்சி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. குரு பரிகாரத்திற்கு ஏற்றது.

மயிலாடுதுறை: 

மயூர நாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி - குரு வழிபாட்டுக்கு ஏற்ற தலம் ஆகும்.

கும்பகோணம் :

மகாமக பொற்றாமரைக் குளத்தின் வடகரையில் உள்ள கோபேஸ்வரர் ஆலயம். குரு பரிகாரத்திற்கு ஏற்றது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இது ஒன்று.
Read more...

பாவ– புண்ணியங்களை பதிவேற்றும் காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம்


பாவ– புண்ணியங்களை பதிவேற்றும் காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம்

குடும்பத்தில் கணக்குகளைச் சரியாக கவனித்தால் குடும்பம் செழிக்கும். நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்தால் நிறுவனம் வளர்ச்சி பெறும். அதுபோல் உலகில் வாழும் ஜீவராசிகளின் கணக்கு வழக்குகளைத் துல்லியமாகக் கவனித்துப் பாவ புண்ணியக் கணக்கெழுதி, அதற்குரிய பலனுக்குப் பரிந்துரைப்பவர் சித்திரகுப்தன் ஆவார்.

பணபலமோ, ஆள் பலமோ, அரசியல் அழுத்தமோ ஏதுமின்றித் தன் கடமையைச் செவ்வனே செய்து வருபவர் இவர். எம தர்மராஜனின் உதவியாளரான இவர், நேர்மையான முறையில் தன் கடமையைச் செய்து வருகிறார். இந்தியாவில் கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு பெற்று தனிக்கோவிலாக விளங்குவது, காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம் ஆகும்.

புராண வரலாறு :

காஞ்சி மாநகரைப் பற்றி திருவாவடுதுறை ஆதீனம் சிவஞான சுவாமிகள் இயற்றிய காஞ்சிபுராணம் பெருமைப்படுத்துகின்றது. சித்திரகுப்தனுக்குப் பல்வேறுவிதமான புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம். வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த வைதீகத் தெய்வம் சித்திரகுப்தன் ஆவார். வடஇந்தியாவில் பெரும் வணிகர்களின் மதமாக விளங்கிய சமண மதத்தின் தெய்வமாக இவர் கூறப்படுகிறார்.

சமண மதம் மட்டுமே இறப்பினை முன்னிலைப்படுத்தி அறம் கூறும் வழக்கத்தினை, தமிழ்நாட்டில் உருவாக்கியது. எனவே, மேலோர் மரபில் கணக்கு வழக்கிற்கான தெய்வமாகச் சித்திரகுப்தன் தோன்றியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது வைணவ சமயத்தில் கூறப்படுவது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார்,

சித்திரகுப்தர் எழுத்தால் 
தென்புலக் கோன்பொறி யொற்றி 
வைத்த விலச்சினை மாற்றித்
தூதுல ரோடி யோளித்தார் – எனக் கூறுகிறார்

சித்திரகுப்தர் எழுதிய கணக்குப்படி எமதர்மராஜன் காலமுத்திரை இடுகிறார். ஆனாலும், திருமாலின் அடியாரைக் கண்டால் எமதூதர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என இப்பாடல் குறிப்பிடுகிறது. இனி மற்றொரு கதை. கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியங்களை எழுதும் எமதர்மராஜன் தனக்குப் பெருத்த பணிச்சுமையாக இருந்ததால், தனக்கு உதவும் பொருட்டு, ஒரு உதவியாளர் வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டார்.

அதன்படி பிரம்மாவிடம் கட்டளையிட, இதனைச் சூரியன் மூலம் நிறைவேற்ற விரும்பினார். சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார். சூரியன் வானில் தோன்றும் போது ஒரு வானவில் உருவானது. அந்த வானவில்லே நீளாதேவி என்ற பெண்ணாக மாறியது. அப்போது நீளாதேவி என்ற தேவதை சூரியனின் பேரழகில் மயங்கி தன்னிலையினை இழக்கின்றாள்.

அதன் பயனாய் மகனாகத் தோன்றியவர் சித்திரகுப்தன். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால், சித்திரகுப்தன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. சித்திரகுப்தன் கரங்களில் எழுத்தாணியும் ஏடும் இறைவன் தந்தார் என தலபுராணம் கூறுகிறது. சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு எனப்பொருள்படும். மனிதர்களின் மனதில் மறைவாக உள்ள விஷயங்களை எழுதுவதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என இத்தலபுராணம் கூறுகிறது.

இவருக்குத் துணையாக எமதூதர், புறா, ஆந்தை, நான்கு கண்கள் கொண்ட இரண்டு நாய்கள் ஆகியவை உதவியாட்களாகப் பணிபுரிகின்றனர். இவரது அமராவதியில், பிரபாவதி, நீலாவதி, கர்ணீகை என்ற மூன்று தேவியரோடு வாழ்ந்து கொண்டு மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாகக் கணக்கெடுத்து வருகின்றார் என்பது புராணம்.

இதேபோல, இவரின் பிறப்பினைக் கூறும் கதை இது. சித்திரகுப்தன் காமதேனுவின் கருவில் தோன்றிய மகன் என்று புராணத்தில் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் சித்திரகுப்தனுக்குப் பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவை சித்திரகுப்தனுக்குப் பயன்படுத்துவதில்லை. சித்திரகுப்தனுக்கு ஆலயம் அமைப்பதை ஹேமாத்திரியின் சதுர்க்க வர்க்க சிந்தாமணி என்ற சிற்பநூல் கூறுகிறது. தனிக்கோவிலாக, சித்திரகுப்தனே கருவறையில் வீற்றிருக்கும் பிரதான தேவதையாக விளங்குவது காஞ்சீபுரம் சித்திரகுப்தன் ஆலயம் ஆகும்.

சித்திரகுப்தன் ஆலயம் :

சென்னிச்சோழன் அமைச்சராக இருந்த கனகராயன் என்பவன் சித்திரகுப்தனுக்கு ஆலயம் எழுப்பியதை வரலாறு எடுத்துக் கூறுகிறது. மூன்று நிலைகள் கொண்ட புதிய ராஜகோபுரம் நம்மை வரவேற்க, நேர் எதிரே மூலவராக சித்திரகுப்தன் எளிய வடிவில் அமர்ந்த கோலத்தில் அருள் வழங்குகின்றார். தன் வலது கரத்தில் எழுத்தாணியும், இடது கரத்தில் ஏடும் தாங்கி, தென்முகமாய்க் காட்சியளிக்கின்றார். இவரைத் தரிசிக்கும் போதே, நமது வினைகள் அனைத்தும் நம் கண் முன்னே நிழலாடுகின்றன.

நாம் இப்பூவுலகை விட்டு அகலும் முன்பு வரை நம் வாழ்வில் புரிந்த அத்துணை பாவ, புண்ணியங்களையும் இவர் தன் பதிவேட்டில் எழுதி வருவது நம் நினைவிற்கு வருகிறது. ஒரு செயலைத் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாவக் கணக்கிலும், புண்ணியக் கணக்கிலும் பிரித்தெழுதும் இவரின் கடமையை நினைத்து நம் சிந்தனை செல்கின்றது.

இதனால் சிறு தவறு கூட தவறியும் செய்து விடக்கூடாது என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கி நிற்கிறது. கருவறையின் வலதுபுறம் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் சன்னிதி, அதனருகே சித்திரகுப்தன், அவரது துணைவியார் கர்ணீகை அம்பாள் ஆகிய உற்சவ திருமேனிகள் எழிலுடன் காட்சி தருகின்றன. ஐயப்பன் சன்னிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது. அதன் எதிரில் துர்க்கை சன்னிதியும், அருகே நவக்கிரக சன்னிதியும் அமைந்துள்ளன. ஆலயத்தின் பின்புறம், தீப மண்டபம் அமைந்துள்ளது.


தரிசன நேரம் :

இவ்வாலயம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

அமைவிடம் :

காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தின் வெகு அருகில், நெல்லுக்காரன் தெருவில் தெற்கு முகமாக சுமார் 6000 சதுர அடியில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

விழாக்கள் :

தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தன்று மாலை சித்திரகுப்தனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கு மறுநாள் சித்திரகுப்தன் அவதரித்த நாளான சித்ராப் பவுர்ணமியன்று சித்திரகுப்தனுக்கு பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது.

கேதுவின் தேவதை :

நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு அதிதேவதையாக சித்திரகுப்தன் போற்றப்படுகின்றார். கேது தோஷம் உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் வந்து அர்ச்சனை செய்து கொள்வது சிறப்பு. என்றாலும், பிறந்த கிழமை, பிறந்த நட்சத்திரம் கூடும் நன்னாளில் வந்து அர்ச்சனை செய்து வழிபடுவது கூடுதல் சிறப்பைத் தரும். நீல மலர்கள், பலவண்ண ஆடை சித்திரகுப்தனுக்கு உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...

உஜ்ஜைனி காளி கோவில்-திருச்சி


விக்கிரமாதித்தனால் உருவான உஜ்ஜைனி காளி கோவில்-திருச்சி

திருச்சி சமயபுரம் அருகில் இந்த புகழ்பெற்ற கோவில் உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி சென்றுதான் காளியை வழிபடவேண்டும் என்ற அவசியமில்லை.

உஜ்ஜைனியில் உள்ள காளிக்கு நிகரான காளியம்மன் சிலை இந்த கோவிலில் உள்ளது. இதை இங்கு கொண்டு வந்ததும் உஜ்ஜைனியை ஆட்சி செய்த விக்ரமாதித்த மாமன்னனேயாவார்.

சக்திக்கு உகந்த ஸ்தலங்களில் தமிழக அளவில் மிகவும் புகழ்வாய்ந்தது சமயபுரம் மாரியம்மன் கோவில். அதற்கு அருகிலேயே அம்மனுக்குரிய புகழ் வாய்ந்த ஸ்தலமாக மாகாளிக்குடி என்ற இடத்தில் அமைந்துள்ளது. சமயபுரம் கோவிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் உள்ளது.

விக்கிரமாதித்தனால் கொண்டுவரப்பட்ட சிலை உள்ள கோயில். இங்கு அம்பிகை அர்த்தநாரீஸ்வர கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சிதருகிறார்.

இங்குள்ள அம்பாள் ஆனந்த சவுபாக்கிய சுந்தரிக்கு என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். இவளுக்கு மூன்று கைகள் உள்ளன. பொதுவாக அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு என்ற விதத்தில் கைகள் இருக்கும். ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. வேதாளத்திற்கு இங்கு சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

சீனிவாச பெருமாள் லட்சுமி தாயாருடன் எழுந்தருளி உள்ளார். மதுரையின் காவல் தெய்வமான மதுரை வீரன் இங்கும் பொம்மி, வெள்ளையம்மாளுடன் அருள்பாலிக்கிறார்.

இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மனும் காட்சி தருகிறாள். விக்கிரமாதித்தன் இந்த சிலையை இக்கோயிலுக்கு தந்ததாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வைகயில் விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளமும், விக்கிரமாதித்தனின் மதியுக மந்திரியான கழுவனும் இங்கு வந்துள்ளனர்.

வேதாளத்திற்கும் கழுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேறு எந்த தலத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது. இவர்களில் கழுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மையைப் பெற்று, எதிலும் வெற்றி பெறும் திறன் உண்டாகும்.

"கழுவன் சாதனை' என்ற வார்த்தை இப்போதும் வழக்கில் உள்ளது. இதற்கு "தனது நிலையிலேயே நிலைத்திருத்தல், எதற்கும் அசையாமல் இருத்தல் என்று பொருள்.

ஸ்தல வரலாறு

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்த மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம்.

இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் "உச்சினி மாகாளி, உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார்.

இங்கே தங்கி பூஜை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.

சிவனும் சக்தியும் எவ்வித வேறுபாடும் இல்லாதவர்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அர்த்தநாரீஸ்வர வடிவம் அமைந்தது. பார்வதிதேவி தனக்கும் சிவனைப் போலவே பூஜைகள் நடக்கவேண்டும் என கேட்டதன் விளைவாக இவ்வாறு நடந்ததாக சொல்வர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் அம்பாளுக்குள் சிவன் அடங்கும் விதத்தில் மாகாளிக்குடியில் ஆனந்த சவுபாக்கிய சுந்தரியாக அம்பிகை எழுந்தருளினாள்.

செல்லும் வழி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் பேருந்துகளில் ஏறி சமயபுரத்தில் இறங்கி அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாகாளிக்குடி கோவிலுக்கு ஆட்டோக்களில் செல்லலாம்.
Read more...

Saturday, July 4, 2015

Amman


Read more...

Thursday, July 2, 2015

Golden Temple in Vellore













Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini