Banner 468 x 60px

 

Tuesday, June 30, 2015

மகரம்

கொண்ட கொள்கையில் உறுதி யானவர் நீங்கள். குருபகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல், உங்கள் சொந்த முயற்சியில் என்ன முடியுமோ, அதை மட்டும் செய்து முன்னேறப்பாருங்கள்.
எதிலும், அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். புதியவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பிறகு காசோலை தரவும். தம்பதிக்கு இடையே சிறு சிறு பிரச்னைகள் எழலாம். விட்டுக் கொடுத் துப் போகவும். வாகன லைசன்ஸ், காப்பீடு, ஆபரணங்கள் ஆகியவற்றில் கவனம் தேவை. குரு 7ம் பார்வையால் உங்களது 2ம் வீட்டைப் பார்ப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். குரு 9ம் பார்வையால் உங்களது சுக ஸ்தானமான 4ம் வீட்டைப் பார்ப்பதால், புது வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்துக் கட்டுவீர்கள். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு
12ம் வீட்டைப் பார்ப்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், அலைச்சலும் பொருள் இழப்பும் இருந்தாலும் பண வரவும், முன்னேற்றமும், அரசால் ஆதாயமும் உண்டு. பதவிகள் தேடி வரும். பூர்வீகச் சொத்தில் சிக்கல் தீரும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்களின் பூர்வபுண்யாதிபதியும், ஜீவனாதிபதியு மான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் வீண் அலைச்சல், முன்கோபம், காரியத் தடை கள் வந்துசெல்லும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். 21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், எதிரிகளும் நண்பர்கள் ஆவர். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் சலசலப்புகள் நீங்கும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:  
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். வீண் சந்தேகத்தைத் தவிருங்கள். 7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம், சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் உண்டு. எந்த காரியத்தை யும் போராடி முடிக்க வேண்டி வரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்து வரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
வியாபாரிகள், தொழிலில் லாபத்தை ஈட்டுவதற்குப் போராட வேண்டியது வரும். ஒருசிலர், புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். மறைமுகப் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். மற்றவர்களின் பேச்சை கேட்டு அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குதாரர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. இரும்பு, உணவு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். மற்ற வர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பணிகளை சற்று போராடி முடிக்க வேண்டி வரும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். உயர்மட்ட அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சிலர் உங்கள் மீது தவறாக வழக்கு தொடுப்பார்கள்.
கன்னிப்பெண்களுக்குக் கல்யாணம் கூடிவரும். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்க வேண்டாம். மாணவமாணவிகள், கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத் துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். அவர்களைக் குறித்த பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அடுத்தடுத்த செலவுகளால் உங்களின் சேமிப்புகளைக் கரைய வைத் தாலும், புதிய பாதையில் உங்களைப் பயணிக்கவைத்து வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பூச நட்சத்திரம் அல்லது வளர்பிறை மூன்றாம் நாளன்று, தூத்துக்குடி மாவட்டம் - கழுகுமலையில் அருளும் முருகப்பெருமானை விபூதி அபிஷேகம் செய்து வணங்கி வழிபடுங்கள். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்; மன நிம்மதி உண்டாகும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini