Banner 468 x 60px

 

Tuesday, June 30, 2015

ரிஷபம்

அடிமனதில் ஆயிரம் திட்டங்களை கொண்டிருப்பவர் நீங்கள். குரு பகவான் இப்போது 5.7.15 முதல் 1.8.16 வரை 4வது வீட்டில் அமர்கிறார். உங்கள் அஷ்டமாதிபதியும் லாபாதி பதியுமான குரு 4ல் அமர்வதால், உங்களின் அடிப்படை நற்குணங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். செலவும், வேலைச் சுமையும் அதிகரிக்கும்.
வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும்.திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.அரசாங்க அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டவேண்டாம். தம்பதிக்கு இடையே வீண் சச்சரவுகள் ஏற்படலாம். அனுசரித்து போகவும். சொத்து ஆவணங்கள் தொலைந்துபோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குரு 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று நபர்களால் ஆதாயம் உண்டு. 10ம் வீட்டை குரு 7ம் பார்வையால் பார்ப்பதால் உத்தியோகத்தில் பிரச்னை கள் குறையும். சிலருக்கு புது வேலை,  கௌரவ பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டை குரு பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் செலவுகள் உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 7.9.15 முதல் 16.11.15 மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்கள் ராசி நாதனும், சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஓரளவு பணம் வரும். சிலர் புது வாகனம் வாங்குவீர். திருமணம் கூடி வரும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதத்தில் செல்வதால், எதிர்ப்புகள் குறையும். தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட வேண்டாம்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம், கன்னி ராசியில் செல்வதால், மன இறுக்கம் குறையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்களுடனான மோதல்கள் விலகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் மறைமுக எதிரி களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். வழக்கு நெருக்கடிகள் நீங்கும். புது வேலைக்கான முயற்சி பலன் தரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், தள்ளிப்போன காரியங்கள் முடிவடையும். கணவன்மனைவிக்குள் பனிப்போர் நீங்கும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்குக் கடன் வாங்குவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். இந்த கால கட்டத்தில், இந்த ராசியைச் சேர்ந்த சில அன்பர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
வியாபாரிகள், தொழிலை விரிவுப் படுத்த கடன் வாங்க வேண்டாம். வணிக விஷயங்களில் கறார் தேவை. பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம், கூட்டுத் தொழில் துவங்குவது ஆகியவற்றுக்குமுன் வழக்கறிஞரை ஆலோசிக்கவும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். தலைமை அதிகாரிகள் உங்களைப் பற்றி நன்கு புரிந்துவைத்திருந்தாலும், நேரடி அதிகாரி, உங்களை குறை கூறிக்கொண்டு இருப்பார். பதவி, சம்பள உயர்வுகள் சற்று தாமதமாகவே கிடைக்கும். இடமாறுதலும் ஏற்படலாம். சிலருக்கு, அயல் நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். குரு 10ம் வீட்டை பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள்.
கன்னிப்பெண்களுக்கு மனதுக்குப் பிடித்த மணாளன் அமைவார். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விரும்பிய பாடப்பிரிவில் சேர கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.கலைத் துறையினர், வேற்று மொழி படைப்புகளால் புகழ் பெறுவார்கள். எனினும், உங்களைப் பற்றி வீண் வதந்திகளும் வந்துசேரும்; மனம் தளரவேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி இடமாற்றத்தையும் பணப் பற்றாக்குறையையும் தந்தாலும், உங்களுக்கு வாழ்வின் நெளிவுசுளிவுக்ளைக் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஏகாதசி திதி நடைபெறும் நாளில் திண்டுக்கல் அருகிலுள்ள வேடசந்தூர் சென்று, அங்கு அருளும் ஸ்ரீ நரசிம்மருக்கு துளசி மாலை சமர்ப்பித்து வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்; எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini