உங்களின் 7ம் வீட்டை குரு தனது 5ம் பார்வையால் பார்ப்பதால், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். தம்பதிக்கு இடையே சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் அந்நியோன்யம் குறையாது.
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் உயரும். திருமணம் தடைப்பட்ட அன்பர்களுக்கு விரைவில் கூடி வரும்.
குரு 7ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையின் நோய் குணமாகும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உங்களது லாப வீடான 11வது வீட்டை குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். ஷேர் மூலமாக பணம் வந்து சேரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்களின் பிரபல யோகாதிபதியும்பூர்வ புண்யாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், முன்கோபம் குறையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகன வசதிகள் பெருகும். எதிர்பார்த்து ஏமார்ந்த பணம் கைக்கு வரும். பெற்றோருடனான மனஸ்தாபங்கள் நீங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் சேவகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. 21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால் தாயாரின் உடல்நிலை சற்று பாதிப்பு அடையலாம். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் உண்டு.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணப்பற்றாக்குறையை மிக சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
7.2.16 முதல் 7.3.16 வரை உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரம் அடைவதால், அரசு காரியங்கள் இழுபறியாகும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், வாகனத்தில் செல்லும் போது அதீத கவனம் தேவை. ஓரளவு பண வரவு உண்டு. முன்னேற்றம் தடைப்படாது.
வியாபாரிகளுக்கு, தொழில் ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டியது இருக்கும். வேற்று மாநில ஆட்களை பணியில் அமர்த்தும்போது கவனம் தேவை. ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்துப் போவது அவசியம்.
உத்தியோகஸ்தர்கள், எவரொருவர் வற்புறுத்தினாலும் நீங்கள் நேர்பாதையில் செல்வது அவசியம். மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். வேலைச் சுமை, எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.
கன்னிப்பெண்கள், பாரம்பரிய உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். ஃபேஸ் புக், இமெயிலை எல்லாம் கவனமாகப் பயன் படுத்துங்கள். புதிய வேலையில் இணையும்போது மிகக் கவனமுடன் பணியாற்றுங்கள்.
மாணவர்கள், பாடங்களை சேர்த்துவைத்து படிக்கலாம் என்று எண்ணாமல், அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து விடுவது நல்லது. கலைத் துறையினர், பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால், கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சக கலைஞர்களால் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சில தருணங்களில் உங்களை புலம்பவைக்கும். என்றாலும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் வெற்றிபெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் திருத்தணிக்குச் சென்று ஸ்ரீ தணிகைவேலனான முருகப் பெருமானுக்கு மறிக்கொழுந்து அல்லது முல்லைப் பூ சமர்ப்பித்து வணங்குங்கள். நடக்க இயலாதவர்களுக்கு உதவுங்கள்; தடைகள் நீங்கி சாதிப்பீர்கள்.