குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டைப் பார்ப்பதால், இழுபறியான வேலைகள் உடனே முடியும். ஜென்ம குருவால் கணவன்மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்தாலும், குருவின் பார்வையால் அன்பு குறையாது.
பாக்ய வீடான 9ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாரின் உடல்நிலை சீராகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு மஞ்சள் காமாலை, சோர்வு வந்து நீங்கும். வீண்பழி, குடும்பத்தின் மீது பற்றின்மை வந்து போகும். பூரம், உத்திரம் 1ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, பொருள் இழப்புகள், வீண் அலைச்சல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள், இளைய சகோதர வகையில் சச்சரவுகள் வரக்கூடும். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் உங்கள் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதத்தில் செல்வதால், அடிவயிற்றில் வலி, மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு, வந்து செல்லும். இக்காலக்கட்டத்தில் மகம், பூரம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏமாற்றங்கள் குறையும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் உங்கள் ராசியிலேயே குரு வக்ரமடைவதால், பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
வியாபாரிகளே! தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற கவலை இருக்கும். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலை பார்க்க வேண்டி வரும். ரியல் எஸ்டேட், ஏற்றுமதிஇறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! ஓய்வெடுக்க முடியாதபடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டி வரும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டுவிட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும்.
மாணவமாணவிகளே! பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினால்தான், தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். சந்தேகங்களைத் தயங்காமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதைப் பொருட்படுத்த வேண்டாம். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் உங்களை சூழ்நிலைக் கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், விடாமுயற்சியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைக்கும்.
பரிகாரம்: அமாவாசை தினங்களில், தஞ்சை - கண்டீயூருக்கு அருகிலுள்ள திருவேதிக்குடிக்குச் சென்று, ஸ்ரீ மங்கையர்க்கரசி உடனுறை ஸ்ரீ வேதபுரீஸ்வரரை, வில்வத்தால் அர்சித்து வணங்குங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்; வாழ்க்கை சிறக்கும்.
விலகும்.