Banner 468 x 60px

 

Monday, June 22, 2015

ஜூன் மாத எண்ணியல் பலன்கள்


1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதத் துவக்கம் சற்று மந்தமாக இருக்கும். பணத்தை கணக்குவைத்து செலவிட்டால் கூடுதல் செலவினத்திலிருந்து தப்பலாம். செய்யும் தொழிலில் கெடுதல் ஏற்படாமலிருக்க மிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படவேண்டும். தனியார் துறைகளில் பணிபுரிவோர், வேறு கம்பெனிக்கு மாறுதல் அல்லது இடமாற்றத்தை சந்திக்கலாம். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்குவதை தாமதப்படுத்த வேண்டும். தொழிலாளர்களால் எந்தப் பிரச்சினையும் வராது. வியாபாரிகள் புதிய தொழில் துவங்குவதையும், கூடுதல் கொள்முதல் செய்வதையும் தவிர்க்கவேண்டும். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். அரசுப் பணியாளர்கள் உடன்பணிபுரிகின்றவர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். மாணவர்கள் வீணான பொழுதுபோக்கில் நேரத்தைக் கழிக்க மனம்போகும். அதனைத் தவிர்க்கவேண்டும்.

அரசியல் பிரமுகர்கள் தலைமையால் கண்டிக்கப்பட்டு, பதவி மாற்றம் ஏற்படலாம். புதிய காரியங்களை இம்மாதம் நிறுத்தி வைக்கவேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் மனதிற்குத் தெம்பளிக்கும் செயல்களாக நடக்கும். வருவாய் இரட்டிப்பாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். வீட்டில் உள்ளவர்கள் கேட்டபடி ஆடை, அணிகலன்கள் வாங்கித்தருவீர்கள். பெண் பிள்ளைகளால் உறவினர்கள் வருகை இருக்கும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விட்டுப் போன- விலகிப்போன சொந்தங்கள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை வெளிநாட்டில் விரிவுபடுத்திட போட்ட திட்டம் நிறைவேறும். அரசுப்பணி மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு மேலதிகாரிகள் கரிசனமும், வரவேண்டிய நிலுவை பாக்கிகளும் கிட்டும். திருமணப் பேச்சுகள் கைகூடும். இதுவரை சொத்துப் பிரச்சினையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும். பெரிய கல்வி நிறுவனங்களை நடத்துவோர் சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மாணவர்களால் பிரச்சினைகள் வரலாம். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களால் போற்றப்படுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20, 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாதத் துவக்கத்தில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டபோதிலும், மாதப் பிற்பகுதியில் பொருளாதாரநிலை சீராக இருக்கும். வேலைதேடும் இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். அரசாங்கத்தில் எதிர்பார்க்கும் வேலைக்கான உத்தரவுகள் வந்துசேரும். இளைஞர்கள் அயல்நாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை வீட்டிற்கடங்காத பிள்ளையாக இருந்தவர்கள்கூட பணத்தை நல்ல வழிகளில் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பார்கள். முரட்டுத்தனத்துடன் இருந்த தொழிலாளர்கள், இப்போது தொழிலதிபர்களுக்கு சாதகமாக பணிபுரிவார்கள். தொழிலதிபர்கள் சக பங்குதாரர்கள் சொல்லும் கருத்துப்படி செயல்பட வேண்டியது வரும். பங்குதாரர் களுடன் பகைவர வாய்ப்புள்ளது. அரசு ஊழியர்கள், தனியார்துறை பணியாளர்கள் ஆகியோருக்கு நினைத்த இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். திருமணப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பார்கள். வியாபாரிகள் புதிய தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். பிரச்சினைகள் உங்களைச் சுற்றிவரும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் இதுவரை வாட்டி வதைத்துவந்த வியாதிகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வங்கி சேமிப்புக் கணக்கை உயர்த்திக்கொள்வீர்கள். உடன்பிறந்தோரிடையே இருந்துவந்த சொத்துப் பிரச்சினை சுமுகமான முடிவுக்கு வரும். புதிய வீடுகட்டும் திட்டம் நிறைவேறும். ஒருசிலர் கட்டிய வீடுகளை வாங்குவார்கள். தொழிலதிபர் கள் புதிய ஆர்டர்கள் நிறையப் பெற்று உற்பத்தியையும் பெருக்குவார்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலைப் பெறுவார்கள். இதுவரை தடைப்பட்டுவந்த பதவி உயர்வு வந்துசேரும். கடிதத் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். தடைப்பட்டுவந்த திருமணப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். பிரிந்த தம்பதியர் தாங்களாகவே ஒன்றுசேர்வார்கள். பெண்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல் பிரமுகர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி மதிப்பு மரியாதையைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களது உழைப்புக்கேற்ற வருமானத்தைப் பெறுவீர்கள். ஒருசிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, விற்க நினைத்த பூர்வீக சொத்துகளில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். காரண காரியமில்லாமல் ஏற்பட்ட குடும்பச் சண்டைகள் விலகி தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். குழந்தைப்பேறில்லாத ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பெரும்பாலும் ஆண் வாரிசுகளை அடைவர். களவுபோன பொருட்கள் வந்துசேரும். தொழிலதிபர்கள் புதிய சூழலில் தங்களது தொழிலைத் தொடங்குவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவார்கள். மகான்களின் சந்திப்பு கிட்டும். எதிரிகள் தொல்லை மாறும்; அவர்கள் திருந்தி உங்கள் யோசனையைக் கேட்பார்கள். பிள்ளைகளின் கல்வி உயர்வு பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும். அரசியல் பிரமுகர்கள் புதிய பதவிகளை அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களுக்கு கூடுதல் வருமானம் கிட்டும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் நீங்கி மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். புதுமணத் தம்பதியரிடையே இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். உங்கள் குடும்பத்தில் இதற்கு முன்னர் காணாமல்போன ஒருவர் திடீரென வந்துசேர்வார். தொழிலதிபர்கள் ஆச்சரியப்படும்படியான வகையில் உற்பத்தி பெருகும். தொழிலாளர்கள் ஒற்றுமை கூடும். பங்குதாரர் களும் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் தொடங்கும் திட்டம் நிறைவேறும். வரவேண்டிய பாக்கிகள் அனைத் தும் வந்துசேரும். பெண்களுக்கு இதுவரை தாய்வீட்டிலிருந்து வராத சொத்துகள் கிட்டும். வீட்டில் நடக்கவுள்ள மங்கள நிகழ்ச்சிக்கு உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். அரசுப் பணியாளர்கள் எதிர்பார்த்த பணவரவுகளும் பதவி உயர்வும் கிட்டும். அரசியல் பிரமுகர்கள் தங்களது அயராத உழைப்பினால் சாதனைகள் படைத்து, தலைமையால் பாராட்டப்பட்டு புதிய பொறுப்புகளை அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை உங்களது வருமானத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி கூடுதல் வருவாயைப் பெறுவீர்கள். எதிர்கால நலன்கருதி சேமிப்பையும் உயர்த்துவீர்கள். எந்தக் காரியத்திலும் சோம்பல் இல்லாமல் விடாமுயற்சியாக செயல்பட்டு வெற்றியைக் காண்பீர்கள். உடன்பிறந்தோரிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். விவசாய நிலத்தில் சிலர் புதையல் போன்ற பொருட்களை அடைய வாய்ப்புகள் உள்ளது. கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழிலதிபர்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதோடு புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் உற்பத்தியைப் பெருக்குவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலை கிட்டும். ஒருசில குடும்பத்தில் தாய்- தந்தையரால் மருத்துவச் செலவுகள் வரலாம். அரசுப்பணியாளர்கள் பிரச்சினைகள் இல்லாமல் பணியைச் செய்வார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல் பிரமுகர்கள் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய மாதம் இது.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். எந்தவொரு செயலிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு அதில் வெற்றியையும் காண்பீர்கள். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். நல்ல வரன்களாக வந்துசேரும். மேல்படிப்பு முடிந்த நிலையிலுள்ள பிள்ளைகள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். உடல்நிலையில் இருந்துவந்த பிரச்சினைகள் விலகும். உங்கள் தேவைகளைத் தன்னிறைவு செய்யும் வகையில் வருமானம் அமையும். தொழிலதிபர்கள்- பங்குதாரர்களிடையே நிலவிய பிரச்சினைகள் சுமுகமாகும்; அதனால் லாபம் கூடும். வியாபாரிகள் கூடுதல் வாடிக்கையாளர்களை அடைவார்கள்; வியாபாரம் பெருகும். அரசு ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்துவந்த அதிகாரிகள் மாறுதலில் செல்வார்கள். ஒருசில அதிகாரிகள் பணி இடைநீக்கத்தை அடைவார்கள். பணியாளர்கள் நினைத்தபடி வருவாய் அமையும். உடன்பிறந்தவர்கள் சிலரின் நயவஞ்சகத்தன்மை வெளிப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். அரசியல்வாதிகள் பொதுமக்களால் பாராட்டப்படுவார்கள். புதிய பதவிகளையும் அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி, திருச்செந்தூர் முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மாதக்கடைசியில் வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். ஓட்டுநர் வைத்திருப்பவர்கள் அவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். விபத்துகளைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற நல்ல வருவாயைப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். அதற்குரிய பொருளதாரமும் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய தொழில்களைத் துவங்குவார்கள். எதிர்பார்த்த கடன் தொகைகள் தாமதமின்றிக் கிடைக்கும். வியாபாரிகள் கைவசம் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் விற்று, நல்ல லாபத்தையும் அடைவார்கள். அரசுப்பணியாளர்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் எதிர்பார்த்த பணவரவுகளைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். இதுவரை இழுபறியாக இருந்துவந்த சொத்துப்பிரச்சினைகள் சுமுகமாக முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டபடி வெற்றியைப் பெறுவார்கள். கூடுதல் வருவாயையும் அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்: திருச்செந்தூர் முருகன்.

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini