உங்களுடைய 3ம் வீட்டை குரு பார்ப்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கு சாதகமாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
குரு 5ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடைய அடிப்படை வசதிகள் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 7ம் வீட்டைப் பார்ப்பதால், விலை உயர்ந்த ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சோர்வு, சலிப்பு நீங்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு பெருகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. மனைவி வழியில் உதவி உண்டு.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான், சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். அந்தஸ்து உயரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், திடீர்ப் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பல வேலை களையும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். உற்றார், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், அடிவயிற்றில் வலி, வேலைச்சுமை, வந்து செல்லும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன்மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
வியாபாரிகளே! பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் புதிய பொறுப்புகள், பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! உத்தியோகத்தில் இனி உங்கள் கை ஓங்கும். தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.
மாணவமாணவிகளே! படிப்பிலிருந்த மந்த நிலை மாறி அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும்.
இந்த குரு மாற்றம் அடிமட்டத்தில் இருந்த உங்களை மலையென உயர்த்துவதுடன், சாதனைப் பட்டியலிலும் இடம்பெற வைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலி - புன்னைக் காயல் வழித்தடத்திலுள்ள சேர்ந்தபூமங்கலம் சென்று,ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை கயிலாயநாதரை தும்பைப் பூ அல்லது மல்லிகை மாலை அணிவித்து வணங்குங்கள். பார்வை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்; வெற்றி பெறுவீர்கள்.