Banner 468 x 60px

 

Tuesday, June 30, 2015

கன்னி

எதிலும் நேர்மறையாகச் சிந்திக்கும் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் இருந்து நற்பலன்களைத் தந்த  குரு பகவான், 5.7.15 முதல் 1.8.16 வரை விரைய வீடான 12ம் வீட்டில் அமர் வதால், உங்கள் முன்னேற்றம் பெரி தாகத் தடைப்படாது. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் எனத் தொடர்ந்து சுபச் செலவுகளும் வந்த வண்ணம் இருக்கும். குடும்ப வருமா னத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும்.
நீண்ட நாளாகப் போகவேண்டும் என்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எந்த ஒரு வேலையையும் நீங்களே நேரடியாகச் செய்வது  நல்லது. சில நாட்களில் தூக்கம் குறையும்.
குரு பகவான் தனது 5ம் பார்வை யால் உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அரசாங்க அனுமதி கிடைத்து சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள்.
உங்களது 6ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், எதிரிகள் ஒதுங்கிப் போவார்கள். சமயங்களில் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி இப்போது கிடைக்கும்.
குரு தனது 9ம் பார்வையால் 8ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் வீண் சந்தேகம், மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை, சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், அறிவுப்பூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் உங்கள் ராசிக்குள் பிரவேசிப்பதால்,  வேலைச் சுமை இருந்துக் கொண்டே இருக்கும். படபடப்பு, வீண் பிடிவாதம், வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும்.    
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் உங்கள் ராசியில் வக்ர கதியில் செல்வதால், ஆரோக்கியம் சீராகும். மனஇறுக்கங்கள் விலகும்.  
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.          
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ரகதியில் செல்வதால், கணவன்மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். எலெக்ட்ரானிக்ஸ் சாதங்கள் பழுதாகும். புதியவர்களால் பணவரவு உண்டு.
வியாபாரிகளே! விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடன் வாங்கி புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வகைகளால் லாபமடைவீர்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும், உங்களை குறை கூறத்தான் செய்வார்கள். ஆனாலும், சம்பள உயர்வு உண்டு.  
மாணவமாணவிகளே! கஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். குறிப்பாகக் கணிதம் அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.
கலைத்துறையினரே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளான நிலை மாறி நிம்மதி பிறக்கும். நல்ல வாய்ப்புக்கள் உங்களைத் தேடிவரும்.
இந்த குரு மாற்றம் ஒரு பக்கம் பயணங்களையும், தவிர்க்கமுடியாத  செலவுகளையும் தந்தாலும் மற்றொரு பக்கம் வசதி வாய்ப்புக்களையும் அள்ளித் தரும்.
பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் அல்லது பெளர்ணமி திதி நாளில் செங்கல்பட்டு அருகிலுள்ள திருமலைவையாவூர் ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாளை வழிபட்டு வாருங்கள். முதியோருக்கு உதவி செய்யுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini