Banner 468 x 60px

 

Tuesday, June 30, 2015

விருச்சிகம்

ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்கும் அசாத்திய திறமை கொண்ட உங்களுடைய ராசிக்கு இதுவரை 9வது வீட்டில் இருந்த குருபகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள்  ராசிக்கு 10ம் இடத்துக்கு மாறுகிறார். ஆனாலும், பதற்றம் வேண்டாம்.உங்கள் யோகாதிபதியான சூரியனின் வீட்டில் குரு அமர்வதால், உங்களுக்கு கெடுபலன்கள் பெருமளவு குறையும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரும்.  
ஒரேநாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் அவ்வப்போது தலை தூக்கும். வழக்கு சம்பந்தமான விஷ யங்களில் பின்னடைவு ஏற்படும். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதைச் சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப் படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.
உங்கள் ராசிக்கு 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால், எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கும். சிறிதளவு பணம் சேமிக்கவும் முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக வண்டி வாங்குவீர்கள்.
குருபகவான் தனது 7ம் பார்வையால் சுக ஸ்தா னத்தைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.  
உங்களின் 6ம் வீட்டை குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்குக் காரணமானவர்களைச் சந்திப்பீர்கள்.  
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை, சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர்ப் பயணங்கள், செலவினங்கள் உண்டு. மனைவியின் ஆரோக்கியமும் பாதிக்கும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். அரசு காரியங்கள் உடனே முடியும். புது வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.        
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவுவார்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகளும், அலைச்சலும் இருக்கும். எதிர்ப்புகள் அடங்கும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியிலான சொத்துகள் கைக்கு வரும்.  
வியாபாரிகளே! சந்தை நிலவரங்களை அவ்வப்போது அறிந்து முதலீடு செய்யவும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துக்களை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. பதவி உயர்வுக்காகப் போராட வேண்டி வரும்.  மாணவமாணவிகளே! படிப்பில் கவனம் தேவை. குறிப்பாக வேதியியல், உயிரியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கலைத் துறையினரே! விமர்சனங்கள் வந்தாலும் முன்னேற்றம் தடைப்படாது. பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அவ்வப்போது ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாலும், சமயோசித புத்தியாலும் கடின உழைப்பாலும் வெற்றிபெற வைக்கும்.
பரிகாரம்: கார்த்திகை நட்சத்திர நாட்களில், மருதமலைக்குச் சென்று, ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 
நெய்தீபம் ஏற்றி வைத்து, வணங்கி வழிபட்டு வாருங்கள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு பொருளுதவி செய்யுங்கள்; மகிழ்ச்சி தங்கும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini