Banner 468 x 60px

 

Tuesday, June 30, 2015

குருப்பெயர்ச்சி பலன்கள் 5- 7-2015 முதல் 1-8-2016 வரை




குத்தறிவு சிந்தனை அதிகம் உள்ளவர் நீங்கள். குரு பகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்கிறார். இனி, உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்தப் போகிறார். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். 
குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், முகப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அடகில் இருந்த பத்திரங்கள், நகைகளை மீட்பீர்கள். சிலருக்கு நல்ல வேலை அமையும். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.
குரு பகவான் தனது 5ம் பார்வையால் 9ம் வீட்டைப் பார்ப்ப தால் இழுபறியான வேலைகள் முடிவடையும். புதிய யோசனைகள் உதயமாகும். தந்தை வழியில் ஆதரவு பெருகும். லாப வீடான 11ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், நிர்வாகத் திறமை கூடும். மூத்த சகோதர சகோதரிகளுடனான பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலமாக பணம் வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை கேதுவின் மகம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத் திரக்காரர்களுக்கு தூக்கம் குறையும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.
7.9.15 முதல் 16.11.15 வரை; 20.5.16 முதல் 9.7.16 வரை உங்கள் தனசப்தமாதிபதியான சுக்ரனின் பூர நட்சத்திரத்தில் குரு செல்வதால், அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பொறுமை அவசியம்.
17.11.15 முதல் 20.12.15 வரை; 10.7.16 முதல் 1.8.16 வரை பூர்வ புண்யாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் குரு செல்வதால், அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எனினும், உங்களுடைய  மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டியது இருக்கும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உங்கள் ராசிக்கு 6ல் குரு அமர்வதால், எதிர்ப்புகள், உங்களைப் பற்றிய வீண் விமர்சனங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது, பழைய கடனை நினைத்து மனம் கலங்குவீர்கள். எனினும், உங்கள் வளர்ச்சி தடைப்படாது.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு, உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரையிலும் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரம் அடைவதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து நீங்கும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூர நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிக்கு நெஞ்சு வலி, முழங்கால் வலி வந்து போகும்.
வியாபாரிகள் மாறுபட்ட அணுகு முறையால் சாதிப்பார்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை விளம்பர யுக்தி களால் விற்றுத் தீர்ப்பீர்கள். உணவு, தங்கும் விடுதி, கமிஷன், பவர் ப்ராஜெக்ட், துணி வகைகளால் லாபம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள். உங்கள் கருத்துக்கு ஆதரவு தரும் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.    
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமைகள் குறையும். அலுவலகத்தில் உங்களின் கை ஓங்கும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். புதிதாக வந்து சேரும் அதிகாரி, உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். உங்கள் மீதான அவதூறு வழக்கு, வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தடையின்றி கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்களில் சிலர், உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.
கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். தாயாருடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் யாவும் விலகும்.
மாணவ  மாணவிகள், கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த கலைத் துறையினர், மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். படைப்புகளால் அவர்களுக்கு புகழ் சேரும்.
ஒட்டுமொத்தத்தில், இந்த குருப்பெயர்ச்சி தாழ்வு மனப் பான்மையில் இருந்தும், சோகத்தில் இருந்தும் உங்களை விடுவிப்பதுடன், மகிழ்ச்சி, பண வரவு, செல்வாக்கு ஆகியவற்றை அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
பிரதோஷ நாட்களில், மதுரை மாவட்டம் திருவாதவூருக்குச் சென்று, ஸ்ரீ ஆரணவல்லி உடனுறை ஸ்ரீ திருமறைநாதரை அருகம்புல், வில்வ இலை, இளநீர் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்; நினைத்தது நிறைவேறும்.


 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini