ஒவ்வொரு பிறப்பு நட்சத்திரத்தில் குறிப்பிட்ட நான்கு நாழிகை நேரம் தியாஜ்யம் எனும் தோஷம் பெற்ற காலமாகும். இந்த நேரத்தில் குழந்தைகள் பிறப்பு, ருதுவானால் கீழ்க்கண்ட கெடுபலன்கள் உண்டாகும். அந்த நான்கு நாழிகையில் ஏற்படும் கெடுதலை பார்ப்போம்.
முதல் நாழிகை - தந்தை மரணம், இரண்டாம் நாழிகை - தாய் மரணம், மூன்றாம் நாழிகை - பெருள் அழிவு, தனநாசம், நான்காம் நாழிகை - தனக்கே மரணம், அற்ப ஆயுள்.
இந்த விஷகாலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நட்சத்ததிரத்தன்று அதற்கான நட்சத்திர விருட்சத்தை வணங்கி பூஜைகள் செய்து, அன்னதானம், ஆடைதானம் செய்து, கோபூஜை செய்ய தோஷம் நீங்கும்.