Banner 468 x 60px

 

Friday, December 26, 2014

காலசர்ப்ப தோஷம் போக்கும் 3 தலங்கள்

வரது ஜாதகத்தில் ராகு சுபமான இடம் அல்லது ராசியைப் பாதித்திருக்கின்றாரோ, எவரது ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டுள்ளதோ அவர்கள் கீழ்கண்ட மூன்று திருத்தலங்களையோ அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றிற்கோ சென்று அபிஷேகம் செய்து பூஜித்து விட்டு வருவது மிகச்சிறந்த பலனைத்தரும். அந்த தலங்கள் வருமாறு:-

திருநாகேஸ்வரம்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருத்தலம். இங்கு ராகுவிற்கு தனி சந்நிதி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்: ஐந்து தலை நாகமான ஆதிசேஷன் வைணவ மகாபுருஷராகிய ஸ்ரீராமானுஜராக அவதரித்த திருத்தலம். ஸ்ரீராமானுஜருடைய விக்கிரகத் திருமேனி ஜீவ விக்கிரமாகும். பின்புறம் தரிசிக்கும் போது படம் விரிந்து நிற்கும் நல்ல பாம்பினைப்போல் காட்சி அளிப்பது சேவிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும்.

திருக்காளத்தி: லிங்க வடிவமாகத் தரிசனம் தரும் இறைவனுடன் சேர்ந்து ஒரு சேர ஐக்கியமாகி ராகு, கேது இருவரும் தரிசனம் தருகிறார்கள். இம்மூன்று திருத்தலங்களும் இக்கலியுகத்தில் அளவற்ற சக்தி பெற்ற தெய்வீகப் பரிகாரத் திருத்தலங்களாகும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini