Banner 468 x 60px

 

Wednesday, December 31, 2014

வைகுண்ட ஏகாதசி விரதம்

நாளை ( 01.01.2015 ) ஆங்கில புத்தாண்டும், வைகுண்ட ஏகாதசியும் சேர்ந்து வருகிறது. மார்கழி மாதம் வரும், வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

சிலர் தோசை, இட்லி சகிதமாகவும், பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

பெருமாள் பக்தர்கள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிகச் சிறந்த வழிபாடு, வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறுகிறது. மனிதப் பிறவியின் பயனே, மறுமையில் மோட்சம் அடைவதுதான் என்ற தத்துவத்தின் ஒத்திகை அந்த நாளில் நடைபெறுகிறது. மோட்சத்துக்கு எப்படிப் போவது? இப்பிறவியில் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காது வாழ்ந்தால் போகலாம். சரி, யார் அழைத்துப் போவார், நம்மை? அந்த பரந்தாமனேதான். அவ்வாறு பரந்தாமன் அழைத்துப் போகும் அந்த சம்பவம்தான் இப்போது ஒரு ஒத்திகையாக ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி தினத்தன்றும் நடத்தப்படுகிறது. அதாவது சொர்க்க வாசல் திறக்க, அதனுள் முதலில் பெருமாள் புக, பின்னால், அவர் அழைத்துவரும் அத்தனை பக்தர்களும் புகும் புண்ணிய வைபவம்.

ஏகாதசியன்று இறந்தால் முக்தி கிடைத்துவிடுமா?


வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.

ஏகாதசியன்று செய்யக்கூடாதது: ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.



ஏழு பிரகாரம்: 

இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா  உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

துவாதசிக்கு அகத்திக்கீரை: 

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன்
உணவு தயாரிக்க வேண்டும். சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

ஏகாதசி விரத முறை

கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.

மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி  என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.

சொர்க்கவாசல்: 

 வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.
வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் திருவரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் இகபரசுகம் நிச்சயம்.
Read more...

Tuesday, December 30, 2014

வறுமை போக்கும் பவுர்ணமி அம்பிகை வழிபாடு

ம்பிகை வழிபாட்டிற்கு உகந்த நாட்களில் பவுர்ணமி தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளை   வழிபட்டால் குடும்பத்தில் வறுமை என்னும் இருள் நீங்கி, செழிப்பு என்ற ஒளி உண்டாகும்.

பவுர்ணமி அன்று உபவாசம் இருந்து அம்மனை வழிபாடு செய்து வந்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறலாம். பவுர்ணமி பூஜை பொதுவாக நன்மை பயக்கும் வழிபாடு என்றாலும், பெண்களுக்கு அது கூடுதலாக சிறந்த பலன்களை அளிக்கக்கூடியது.

திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணமாகாத பெண்கள் திருமணப்பேறு கிடைக்க வேண்டியும் பவுர்ணமி நாளில் அம்பிகையை நினைத்து வழிபாடு செய்யலாம்.




Read more...

மகர விளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு!

கர விளக்கு கால பூஜைக்காக, சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வரும், 20ம் தேதி காலை வரை நடை திறந்திருக்கும். மண்டல கால பூஜை முடிந்து, சபரிமலை நடை டிச., 27ம் தேதி இரவு அடைக்கப்பட்டது. அதன்பின் சன்னிதானத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சன்னிதானத்திலும், பம்பையிலும் துப்புரவு பணிகள் நடந்தன. தேவசம்போர்டு மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்களை சன்னிதானம் கொண்டு வந்தனர். இன்று மாலை, 5:30 மணிக்கு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு விசேஷ பூஜைகளின்றி, இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், மகரவிளக்கு கால நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு துவங்கி வைப்பார்.

ஜன., 18ம் தேதி பகல் 11:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். இன்று மாலை திறக்கப்படும் நடை, ஜன., 20ம் தேதி காலை, 6:30 மணி வரை திறந்திருக்கும். 19ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனம் நடத்தலாம். 20ம் தேதி காலை, 5:00 மணிக்கு நடை திறந்து, 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும்; அன்று, பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடையாது.




Read more...

Friday, December 26, 2014

சிறப்பு வாய்ந்த மார்கழி மாத நோன்பு

மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கின்றேன் என்று கண்ணபிரான் பகவத்கீதையில் அருளினார். அவரது திருவாய்மொழி மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசும் புண்ணிய மாதமாக அமைந்து விட்டது. மார்கழி மாதத்தை சிலர் பீடை மாதம் என்பார்கள்.

அது தவறு ‘‘பீடு’’ என்ற சொல்லுக்கு ‘பெருமை’ என்று பொருள். பீடுடைய மாதம், அதாவது பன்னிரு மாதங்களில் மார்கழி மிக்க பெருமையுடைய மாதம். சூரியன் பயணத்திசையை வைத்து ஒரு ஆண்டை 2 அயனங்களாக பிரிப்பார்கள். சூரியன் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வடக்கு திசையில் பயணிப்பதை ‘உத்திராயணம்’ என்று கூறுவார்கள்.

இது கோடைக்காலத்தின் தொடக்கத்தை குறிக்கும். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு திசையில் பயணிக்கிறான். இதை தட்சிணாயண காலம் என்பர். இது மழைக்காலமாகும். தட்சிணாயணத்தின் ஆறாவது மாதம், அதாவது மார்கழி மாதம் தேவர்களின் இரவு காலம் முடிந்து வைகறை பொழுதாக அமைகிறது.

இதை ‘உஷா காலம்’ என்றும், ‘வைகறை பொழுது’ என்றும் கூறுவதுண்டு. விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள காலம் பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது. பனி விழும் அவ்வேளையிலான அதிகாலை வழிபாடு, உடல் சுறுசுறுப்புக்கும், உள்ளத்தெளிவுக்கும் எப்போதும் சிறந்தது. இந்த மாதம் முழுவதும் பகவானை தியானிப்பதும், அவனை நினைப்பதும் சகல சுகத்தையும் அளிக்கிறது.

ஆன்மிக மார்க்கத்திற்கு செல்ல முதன்மையான மாதமாக கருதப்படும் இந்த மாதத்தை ‘தனுர் மாதம்’ என்றும் அழைப்பார்கள். மார்கசீரிஷம் என்ற சொல்லுக்கு தலையான மார்க்கம் என்று பொருள். அதுவே நாளடைவில் மருவி மார்கழியாக விளங்குகிறது. சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி பரவசம் அடைவர். திருப்பாவை, பெண்ணான ஆண்டாளால் பாடப்பெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை மணாளனாக அடைய வேண்டியும், அவன் பெருமைகளை ஒரு பெண் மற்ற பெண்களுக்கு கூறி, அவரை துக்கத்தில் இருந்து எழுப்புவதை போல அமைந்தது இப்பாடல். ‘மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்னாள். நாராயணனே நமக்கே பறை தருவான். வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள், நீங்காத செல்வம் நிறைந்தலோர் எம்பாவாய்.

செங்கண் திருமுகத்து செல்வ திருமாலால் எங்கும் இன்புற்று இருப்பதோர் எம்பாவாய்’ என்று ஆண்டாள் நாச்சியார் அரங்கனை தொழுது வணங்கி, பாடி பரவசம் அடைந்துள்ளார். திருப்பாவையை போலவே திருவெம்பாவையும், ஒரு பெண் மற்றவரை மார்கழி அதிகாலை பொழுதில் எழுப்புவதாக அமைந்துள்ளது.

சிவபெருமான் திருவண்ணாமலையில் மாணிக்கவாசகரிடம், ‘கோவை பாடிய வாயால் பாவை பாடு’ என்று கேட்க, மாணிக்கவாசகர் பெண் பாவத்தில் நின்று சிவபெருமானை நாயகனாக நினைத்து பாடினார். ‘சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை’ என்று தேனினுமினியது அப்பாடல்கள். திருப்பாவை, திருவெம்பாவை நூல்கள் இரண்டும் பாவை நோன்பு, மார்கழி நோன்பினை பாடுகின்றன.

சிவாலயங்களில் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி பாடல்களும் பாடப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் அதிகாலை சுப்ரபாதம் பாடல்கள் பாடப்படும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடல்கள் பாடப்படும். இது இம்மாதத்திற்கு புகழ் சேர்ப்பதாகும். மேலும் வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல்பத்து என்ற முறையில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தை நீராடல் என்ற நோன்பு வழிபாட்டை தை மாதத்தில் மேற்கொண்டனர். பின்னர் அது மார்கழி மாதத்திற்கு மாறிவிட்டது.  வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை, அனுமன் ஜெயந்தி போன்ற பண்டிகைகளும் இம்மாதத்தில் வருகின்றன.  எங்கும் பக்தி, எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் மார்கழியின் சிறப்பாகும்.
Read more...

காலசர்ப்ப தோஷம் போக்கும் 3 தலங்கள்

வரது ஜாதகத்தில் ராகு சுபமான இடம் அல்லது ராசியைப் பாதித்திருக்கின்றாரோ, எவரது ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டுள்ளதோ அவர்கள் கீழ்கண்ட மூன்று திருத்தலங்களையோ அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றிற்கோ சென்று அபிஷேகம் செய்து பூஜித்து விட்டு வருவது மிகச்சிறந்த பலனைத்தரும். அந்த தலங்கள் வருமாறு:-

திருநாகேஸ்வரம்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருத்தலம். இங்கு ராகுவிற்கு தனி சந்நிதி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்: ஐந்து தலை நாகமான ஆதிசேஷன் வைணவ மகாபுருஷராகிய ஸ்ரீராமானுஜராக அவதரித்த திருத்தலம். ஸ்ரீராமானுஜருடைய விக்கிரகத் திருமேனி ஜீவ விக்கிரமாகும். பின்புறம் தரிசிக்கும் போது படம் விரிந்து நிற்கும் நல்ல பாம்பினைப்போல் காட்சி அளிப்பது சேவிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும்.

திருக்காளத்தி: லிங்க வடிவமாகத் தரிசனம் தரும் இறைவனுடன் சேர்ந்து ஒரு சேர ஐக்கியமாகி ராகு, கேது இருவரும் தரிசனம் தருகிறார்கள். இம்மூன்று திருத்தலங்களும் இக்கலியுகத்தில் அளவற்ற சக்தி பெற்ற தெய்வீகப் பரிகாரத் திருத்தலங்களாகும்.
Read more...

நன்மைகளை வாரி வழங்கும் திருச்சிற்றமுடையான் கோவில்

தேவாரம் ஓதுவதற்கு முன்பு திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விட்டு தொடங்குவது மரபாகும். இதற்கு காரணம், சிதம்பர புண்ணியஸ்தலம் தான் சைவ திருமுறைகளை பாதுகாத்து, உபசரித்து வந்துள்ளது. அதனால் தான் திருமுறை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்கிறார்கள்.

சிறப்புமிக்க திருச்சிற்றம்பலம் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. இதற்கு எடுத்துக்காட்டாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரச்சித்தி பெற்ற அழகிய திருச்சிற்றமுடையான் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவராக நடராஜபெருமான் காட்சியளிக்கிறார். மிக உயரமான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை இங்கு தான் உள்ளது.

இந்த சிலையின் உயரம் 10 அடி 1 அங்குலம், அகலம் 8 அடி 4 அங்குலம். இதன் எடை 2 ஆயிரத்து 420 கிலோ ஆகும். நடராஜர் அருகே வீற்றிருக்கும் சிவகாமி அம்பிகை 7 அடி உயரத்தில் அழகுற பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்பிகையின் சிலையானது, சுமார் 750 கிலோ எடை கொண்டது. என்.எல்.சி. நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், எழில்மிகு இயற்கை அழகோடு காட்சியளிக்கிறது.

இது சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்று கூறப்படுகிறது. நடராஜர் என்றால் சிதம்பரம் கோவில் தான் அனைவரின் நினைவிற்கும் வரும். அந்த மாவட்டத்திலேயே மற்றொரு சிறப்பாக மிகப்பெரிய ஐம்பொன்னால் ஆன சிலையுடையதாக இக்கோவில் அமைந்துள்ளது.

சிறப்பம்சங்கள் : 

வழக்கமாக எல்லா கோவில்களிலும் உள்ள நடராஜரின் பாதத்தில் மாணிக்கவாசகர் இருப்பார். ஆனால், இந்த கோவில் நடராஜர் பாதத்தில் திருமூலர் இருக்கிறார். மேலும், வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் நடராஜரின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். இது தவிர, சிவாலயங்களில் சிவனின் எதிரே சூரிய பகவான், சந்திரர் ஆகியோருக்கு சன்னிதி அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், இந்த கோவிலில் சூரியனுக்கும், பைரவருக்கும் சன்னிதி அமைந்துள்ளது. பத்து கரங்களுடன் ‘தசபுஜ பைரவர்’ பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும். இந்த கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபம் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரே கல்லால் நவக்கிரக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நவக்கிரகங்களின் நடுவில் தாமரை பீடத்தில், பெரிய வட்ட வடிவிலான தேரில் சூரிய பகவான் வீற்றிருக்கிறார். இந்த தேரை தேர்பாகன் ஓட்ட, 7 குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரை சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் உள்ளனர். மற்ற கிரகங்கள் எட்டு திசையை நோக்கி, தவக்கோலத்திலும் உள்ளனர். நடராஜருக்கு 5 சபைகள் இருப்பதை போல, கோவிலில் பளிங்கு சபை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

நாயன்மார்களுக்கு தனிக்கோவில் : 

சிவாலயங்களில் சாமியை தரிசித்துவிட்டு, அதன் சுற்றுபிரகாரத்தில் வலம் வரும்போது, நாயன்மார்களின் சிலை வரிசையாக இருப்பதை காணமுடியும். ஆனால், இந்த கோவிலில் நாயன்மார்களுக்கு என்று தனிக்கோவில் உள்ளது. அதாவது, இக்கோவில் வளாகத்தில் 9 கலசங்களுடன் திருத்தொண்டர் திருக்கோவில் என்ற பெயரில் நாயன்மார்களுக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு பக்தர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரத்தில் அதற்குரிய நாயன்மார்களை பூஜை செய்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோருக்கு தனி சன்னிதி உள்ளது.

தல வரலாறு :

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிதம்பரம் கோவிலில் சிவபெருமான் எழுதி அதன் முடிவில் திருச்சிற்றபலமுடையான் என்று எழுதினாராம். அதனை அடிப்படையாக கொண்டு இத்தலம் அமைக்கப்பட்டதாக வரலாறு. இதன் காரணமாக இக்கோவிலுக்கு ‘அழகிய திருச்சிற்றம்பலமுடையான்’ என்று பெயர் வந்ததாம்.

இங்கு நடராஜர் இடது காலை தூக்கி ஆட, அவரது அருகில் சிவகாமி அம்பிகை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும். சித்திரை முதல் தேதி சிவனும், பார்வதியும், 63 நாயன்மார்கள் மற்றும் 12 திருமுறைகளுடன், குறுந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோரது குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவனும், பார்வதியும் கோவில் பிரகாரத்தில் உலாவரும் விழா நிகழ்வு நடைபெறும். இது தவிர பிரதோஷம், ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம், அமாவாசை, பவுர்ணமி போன்ற காலங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு : 

சிறப்புமிகு இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்தவுடன் நந்தி பகவானை தரிசிக்கலாம். தியான மண்டபம் என்னும் பெரிய மண்டபத்தில் ஐம்பொன்னாலான நடராஜர், சிவகாமி அம்பிகை பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அவர்களை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவுடன் கோவில் சுற்றுசுவரில் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் சைவ சித்தாந்த பயிற்சி மையம் சார்பில் திருமுறை பாடல்கள் கல்வெட்டுகளில்பதிக்கப்பட்டிருக்கின்றன.

இதில் வயிற்று வலி, தலைவலி, செல்வம் பெருக, வாழ்க்கையில் சங்கடம் தீரும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, எந்த பாடல்களை பாடி இறைவனை வழிபட வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது.

கோவிலில் அண்ணாமலையார், அறம் வளர்த்தநாயகி சன்னிதியும், அதனை தொடர்ந்து, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், தனி சனீஸ்வரர், சூரியன், சந்திரன் உள்ளிட்ட சாமிகளுக்கு தனித்தனி சன்னிதிகள் உண்டு.

ஆராய்ச்சி மணி : 

மக்கள் தம் குறைகளை மன்னரிடம் எளிதாக எடுத்துரைக்கும் பொருட்டு, அரண்மனையில் கட்டப்படும் மணியே ஆராய்ச்சி மணியாகும். மன்னரிடம் தம் குறைகளை கூற வரும் மக்கள், மன்னரின் கீழுள்ள எவரிடமும் அனுமதி பெறாமல் மன்னரை நேரடியாக சந்திக்க முடியாது. ஆனால், இந்த ஆராய்ச்சி மணி ஒலி கேட்டவுடன் மன்னர், மக்கள் வந்திருப்பது அறிந்து அவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிவார்.

இதே போல் திருசிற்றமுடையான் கோவில் நுழைவு வாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஒரு தாளில் நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப்பெட்டியில் போட்டு, பின் 3 முறை மணி அடிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும், பக்தர்கள் கோரிக்கைகளாக எழுதி மனுநீதி பெட்டியில் போடப்படும் கடிதங்களை கோவில் தீட்சிதர்கள் எடுத்தும், நடராஜர் முன்பு ரகசியமாக படித்துவிட்டு, அதனை எரிப்பது வழக்கம். அவ்வாறு கோரிக்கைகள் நிறைவேறிய பக்தர்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து நன்றிக் கடிதம் எழுதி பெட்டியில் போட வேண்டும்.

திருவிழாக்கள் :

கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. இதே போல், ஒரு ஆண்டுக்கு நடராஜருக்கு 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம் ஆகிய நாட்களில் காலையில் மகா அபிஷேகம் நடக்கும். சித்திரை, ஆவணி, மாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் மகாஅபிஷேகம் மாலையில் நடைபெறும்.

இப்படி புகழ்வாய்ந்த கோவிலுக்கு நாம் சென்று நடராஜரின் அருளை பெறுவோம். நடராஜரின் உயரமான சிலையையும், ஆராய்ச்சி மணியையும் பார்த்து அருள்பெறுவோம்.

Read more...

அய்யப்பனுக்கு நாளை மண்டல பூஜை

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த மாதம் 17–ந்தேதி முதல் நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான அய்யப்பனுக்கு மண்டல பூஜை வழிபாடு நாளை நடைபெற உள்ளது. அப்போது அய்யப்பனுக்கு பாரம்பரிய தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

இதனை காணவும், மண்டல பூஜை நாளில் அய்யப்பனை தரிசிக்கவும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்துள்ளனர்.

சன்னிதானத்தில் திரண்டு நின்று 18–ம் படி ஏற காத்திருக்கும் அவர்கள் எழுப்பும் சரணகோஷம் சபரிமலையெங்கும் எதிரொலிக்கிறது.

அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி கடந்த 23–ந்தேதியே ஆரான்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலை புறப்பட்டது.

இந்த ஊர்வலம் நாளை பகல் 1.30 மணிக்கு பம்பை கணபதி கோவிலை வந்தடையும். அங்கிருந்து மாலை 3.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்து செல்ல மேளதாளம் முழங்க தங்க அங்கி சபரிமலைக்கு தலைசுமையாக எடுத்துச் செல்லப்படும்.

சபரிமலை சன்னிதானம் சென்றடைந்ததும் அவை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதனை கருவறைக்கு கொண்டு சென்று மாலை 6.30 மணிக்கு அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்தி தங்க அங்கியை அணிவிப்பார்கள்.

தங்க அங்கியில் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். அப்போதும் சரண கோஷம் விண்ணை பிளக்கும். அத்துடன் 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை விழா நிறைவுக்கு வரும். இரவு அய்யப்பனுக்கு அத்தாள பூஜை நடத்தப்பட்டு அரிவாராசனம் பாடி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

அதன் பிறகு மகர விளக்கு பூஜைக்கான விழா வருகிற 30–ந்தேதி தொடங்குகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
Read more...

சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவிக்கக் கோரி வேண்டு கோள்

சுவாமி அய்யப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலையை, தேசிய புனித தலமாக அறிவிக்கக் கோரி, அக்கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியம், பிரதமர் மோடிக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வாரியம் வெளியிட்ட அறிக்கை விவரம்:சபரிமலையை தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில், ஏற்கனவே தேவசம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, வரும் ஜனவரி 31ம் தேதி, திருவனந்தபுரத்தில், 35வது தேசிய விளையாட்டு போட்டியை துவக்க வரும் பிரதமரிடம், நேரில் வலியுறுத்தப்படும். சபரிமலையின் அபிவிருத்திக்காக, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் உருவாக்கப்பட்டு, மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகளுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Read more...

Wednesday, December 24, 2014

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!

ந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால்  ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.

* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.

*வாடகை..... பலசரக்கு.... பால்பாக்கி... எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம், சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்! எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.

* ஈரம், ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும். எனவே பர்சில்... வங்கியில்.... பீரோவில் வறட்சி கூடாது.  குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.

*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள். வீடு.... அலுவலகம்.........கல்லாப்பெட்டி.....பணப்பை.... எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.

*வணிகத்தை... தொழிலை.... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள். சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.


* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.

ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்....... குபேராய நமஹ.........!

 மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள். வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.
Read more...

ஜெனன தோஷமும் பரிகாரமும்

வ்வொரு பிறப்பு நட்சத்திரத்தில் குறிப்பிட்ட நான்கு நாழிகை நேரம் தியாஜ்யம் எனும் தோஷம் பெற்ற காலமாகும். இந்த நேரத்தில் குழந்தைகள் பிறப்பு, ருதுவானால் கீழ்க்கண்ட கெடுபலன்கள் உண்டாகும். அந்த நான்கு  நாழிகையில் ஏற்படும் கெடுதலை பார்ப்போம்.

முதல் நாழிகை - தந்தை மரணம், இரண்டாம் நாழிகை - தாய் மரணம், மூன்றாம் நாழிகை - பெருள் அழிவு, தனநாசம், நான்காம் நாழிகை - தனக்கே மரணம், அற்ப  ஆயுள்.

இந்த விஷகாலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நட்சத்ததிரத்தன்று அதற்கான  நட்சத்திர விருட்சத்தை வணங்கி பூஜைகள் செய்து, அன்னதானம், ஆடைதானம் செய்து, கோபூஜை செய்ய தோஷம் நீங்கும்.
Read more...

ஷிர்டி பாபா புனிதத் திருச்சரிதம் பகுதி - 5

கானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த சாந்த் படீலுக்கு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. கடுமையான தாகம். என்னப்பா! தண்ணீர் வேண்டுமா? பரிவோடு கேட்ட பக்கிரி, கையில் இருந்த சிறிய தடியால் தரையில் ஒரு தட்டுத் தட்டினார். அடுத்த கணம் தரையிலிருந்து நீர் ஊற்று குபீரெனப் பொங்கியது! பஞ்சபூதங்களும் அவர் கட்டளைக்குப் பணிவதைப் பார்த்து சாந்த்படீலுக்கு மயக்கமே வந்தது. தங்களைப் படைத்தவருக்குத்தான் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற அந்தப் பஞ்சபூதங்கள் கட்டுப்படுகின்றன என்னும் ரகசியத்தை அவரால் உணர இயலவில்லை. ஆனால், தன் முன்னே அமர்ந்திருப்பவர் மாபெரும் ஆற்றல் படைத்த மெய்ஞ்ஞானி என்பதை மட்டும் அவர் புரிந்துகொண்டார். ம்... தண்ணீரைக் குடி! முதலில் உன் தாகம் தீரட்டும்! என்றார் பக்கிரி. சாந்த்படீல் விழிகளால் புனிதப் பக்கிரியின் தெய்வீக அழகைப் பருகியவாறே, கைகளால் அள்ளி நீரைப் பருகினார். அது தண்ணீரா இல்லை அமிர்தமா? அப்படித் தித்தித்தது அது.

சாந்த்படீல் உடலில் புத்துணர்ச்சி தோன்றியது. முன் எப்போதும் இல்லாத நிம்மதியும் சாந்தியும் மனத்தில் எழுந்தன. அந்த அதிசயப் பக்கிரியைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் ஓர் ஏக்கமும் ஏற்பட்டது. காந்தம் இரும்பை இழுப்பதுபோல் பரமாத்மா, ஜீவாத்மாவை இழுப்பது இயல்புதானே! மனித வடிவில் இருக்கும் மூலப் பரம்பொருள் தான், தன்னிடம் பக்தி செய்யச் சொல்லித் தன்னை ஈர்க்கிறது என்ற உண்மையை சாந்த்படீலால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதேநேரம், அவரை தரிசித்துக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆவலையும் அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை.

சுவாமி! என் இல்லத்திற்கு வாருங்களேன்!  மிகுந்த பணிவோடும் பரம பக்தியோடும் அழைத்தார். தன் மனைவிக்கும் குடும்பத்தினர்க்கும் இவரது தரிசனத்தால் மங்கலங்கள் உண்டாகவேண்டும் என ஆசைப்பட்டார். பகட்டே இல்லாத எளிமையும், அப்பழுக்கற்ற தூய பக்தியும் குன்றாத ஆர்வமும் எங்கிருக்கிறதோ அந்த இடம்நோக்கித் தன்னிச்சையாக இறைவனின் திருப்பாதங்கள் நடக்கும் என்பது உண்மைதானோ! சாந்த்படீல் தம்மை அழைத்ததும், அதற்கென்ன! போகலாமே! என்றவாறே அவருடன் நடந்தார் பக்கிரி.

சாந்த்படீல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. யசோதையின் இல்லத்தில் வெண்ணெய் திருடப் பதுங்கிப் பதுங்கி நடந்த பாதங்கள், கைகேயியின் கட்டளைப்படி வனத்தில் பதினான்கு ஆண்டுகள் கல்லிலும் முள்ளிலும் நடந்த பாதங்கள், இன்று அன்போடு அழைத்த சாந்த்படீலின் அழைப்பையும் ஏற்றுக்கொண்டன. தன்னுடன் வருவது தன்னிகரற்ற பரம்பொருளின் மானிட வடிவம் என்பதை அறியாவிட்டாலும் அவர் ஒரு புண்ணிய புருஷர் என்ற பக்தி உணர்வோடு அவரைத் தம் இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார் சாந்த்படீல். கோயிலில் இறைவன் உறைவான் என்றால், இறைவன் உறையும் இடமெல்லாம் கோயில் தானே! அன்று அந்த எளிய இல்லம் கோயிலாயிற்று. விதுரர் வசித்த குடிசைக்குக் கிருஷ்ணர் வருகை தந்ததுபோல், அந்தப் பக்கிரியும் அந்த இல்லத்திற்கு வருகை தந்தார். அவருக்கு விருந்துபசாரம் செய்து மகிழ்ந்தாள் சாந்த்படீலின் மனைவி. சாந்த்படீல் தூப்காவன் என்ற அந்த கிராமத்தின் அதிகாரி. அங்கிருந்த மக்களெல்லாம் வியப்போடு அவர் இல்லத்திற்கு வந்து அந்த அதிசயப் பக்கிரியை தரிசித்தார்கள். அவரைப் பார்க்கும்போது மனத்தில் இனந்தெரியாத சாந்தி பிறப்பதை உணர்ந்தார்கள்.

தாம் பெற்ற புண்ணியம் மற்றவர்களுக்கும் கிட்டட்டும் என எல்லோரிடமும் சாந்த்படீல் இல்லத்திற்கு ஒரு யோகி வந்திருப்பதை அறிவித்தார்கள். அக்கம் பக்கமிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. வைரக்கல்லைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து மூட முடியுமா? அந்தப் பக்கிரி அந்த இல்லத்திற்குள் இருந்தாலும், அவரது புனிதப் பிரகாசம் சுற்றுப்புறத்தைஎல்லாம் வெளிச்சப்படுத்தியது. அவர் அருட்செல்வம் படைத்த ஆண்டவனின் மனித வடிவம் அல்லவா! அவர் படங்கள் இருக்கும் இல்லத்திலேயே இன்று ஏராளமான மங்கலங்கள் நடைபெறுகின்றன என்றால், அவர் மானிட உரு எடுத்துக் கொஞ்சகாலம் தங்கிய அந்த இல்லத்திற்கு மங்கலச் சேதிகள் உடனே வந்து எட்டாமல் இருக்குமா? அப்படியொரு சேதி மிக விரைவில் அந்த இல்லத்தாரை எட்டியது. சாந்த்படீலின் மைத்துனனுக்குத் திருமணம் நிச்சயமாயிற்று. பல காலமாகத் தள்ளிப் போன திருமணம் இப்போது உடனடியாகக் கூடிவந்தது, பக்கிரியின் அருளால்தான் என்று சாந்த்படீல் எண்ணினார். திருமணத்திற்கு வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். ஏராளமான உறவினர்கள் கூட்டம் தூப்காவன் கிராமத்திலிருந்து திருமணத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டது. அந்தப் பக்கிரியையும் தங்களோடு வரவேண்டும் என சாந்தபடீல் பக்தியோடு வேண்டினார். முக்காலமும் உணர்ந்த பக்கிரி, எதுவுமே தெரியாதமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, திருமணம் எங்கு நடக்கிறது என்று விசாரித்தார்.

 மணப்பெண் ஷிர்டியைச் சேர்ந்தவள். திருமணம் ஷிர்டியில்தான் நடக்கிறது என்றார்கள் அவர்கள். இதைக் கேட்டவுடன் சப்தம் போட்டுச் சிரித்தார் அவர். அந்தச் சிரிப்பின் பொருள் யாருக்கும் புரியவில்லை. தம்மை ஷிர்டி நிரந்தரமாக அழைக்கிறது என்ற ரகசியம், அவருக்குத் தெரிந்ததுபோல் மற்றவர்க்குத் தெரிய வாய்ப்பில்லையே! ஷிர்டி கிராமத்தின் எல்லையில், கண்டோபா தெய்வத்திற்கான ஆலயம் இருந்தது. திருமண கோஷ்டி சென்ற மாட்டு வண்டிகள், கண்டோபா கோயிலுக்கு வந்து சேர்ந்தன. ஒரு பெரிய ஆலமரத்தடியில் வண்டிகளை நிறுத்தி, ஷிர்டியின் உள்ளே செல்வதற்காக அனைவரும் இறங்கினார்கள். அந்தப் பக்கிரி தானும் ஷிர்டி எல்லையில் கால்பதித்து கம்பீரமாக நின்றார். அப்போது கண்டோபா கோயிலில் மங்கல ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. ஆரத்தித் தட்டைக் கையில் ஏந்தியவாறு கோயிலுக்கு வெளியே வந்தார் கோயிலின் பூஜாரியான மகல்சாபதி. பக்கிரியைப் பார்த்த மாத்திரத்தில் அவர் விழிகளில் கரகரவென ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இந்தப் பெருமகனை வாழ்வில் இன்னொரு முறை  தரிசிப்பேனா என்று தவமிருந்தேனே! சில ஆண்டுகளுக்கு முன் ஷிர்டியில் வேப்ப மரத்தடியில் தோன்றிய அதே பால யோகியல்லவா இவர்!  ஆகா...! மறுபடியும் ஷிர்டி வந்துவிட்டார்! இவரின் வருகையால் ஷிர்டி புனிதமடையப் போகிறது!  இறைவனுக்கான மங்கல ஆரத்தியை அந்தப் பக்கிரிக்குக் காட்டி, ஆவோ சாயி ஆவோ! என ஆனந்தக் கண்ணீர் மல்க வரவேற்றார் அவர். சாயி என்றால் சுவாமி. பாபா என்றால் அப்பா என்ற பொருள்தரும் சொல்.  சாயிபாபா மீண்டும் ஷிர்டி வந்துள்ள செய்தி ஒரு கணத்தில் ஷிர்டி ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் ஷிர்டி எல்லைக்கே வந்து வரவேற்றார்கள். திருமண வீட்டிற்குள் சாயிபாபா சென்றதும், அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.  சாந்த்படீல், தங்கள் இல்லத்தில் தங்கியவர் முன்னரே ஷிர்டிக்கு வந்த யோகிதான் என்றறிந்து வியப்பில் ஆழ்ந்தார். தூப்காவன்  மக்களும் ஷிர்டி மக்களும் சாயிபாபா கி ஜெய்! என முழக்கமிட்டார்கள். அன்று தொட்டு அவர் சாயிபாபா ஆனார்.  அன்று அளவற்ற நிறைவில் ஆழ்ந்த சாந்த்படீல், திருமணம் முடிந்த பின்னர் எதிர்பாராத ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு ஜீரணிக்க வேண்டியிருந்தது.....!
Read more...

சபரிமலையில் 18 படிகளை புதுப்பிக்க முடிவு

பரிமலை 18 படிகளின் ஐம்பொன் தகடுகளை புதுப்பிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. சபரிமலையில் 18 மலை தேவதைகளை நினைவு கூறும் வகையில் இப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருமுடிக் கட்டு இருந்தால் மட்டுமே இப்படி வழி ஏறிச் சென்று ஐயப்பனை தரிசிக்க முடியும்; இருமுடி இல்லாதவர்கள் வடக்கு வாசல் வழி அனுமதிக்கப்படுவர்.

முன்பு இந்த கற்படிகளில் தான் பக்தர்கள் தேங்காய் உடைத்தனர். படிகள் சேதம் அடைந்ததால் ’தேவபிரசன்னம்’ நடத்தப்பட்டது. இதில் கூறியபடி 30 ஆண்டுகளுக்கு முன் படிகளில் ஐம்பொன் தகடுகள் பொருத்தப்பட்டன; படியில் தேங்காய் உடைப்பது நிறுத்தப்பட்டது. தற்போது ஐம்பொன் தகடுகளில் விரிசல் விட்டு பக்தர்களின் காலில் காயம் ஏற்படுகிறது. பக்தர்களுக்கு ரத்தம் சிந்தியது தெரியவந்தால், படி ஏறுவது நிறுத்தப்பட்டு ’பஞ்ச புண்ணியாகம்’ நடத்தப்படும்.

இதுபோன்ற சூழ்நிலையை தவிர்ப்பதற்காக படிகளில் ஐம்பொன் தகடுகளை புதுப்பிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்கான மதிப்பீடு தயாரிக்க திருவாபரண ஆணையரிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ”இதற்கான செலவை தேவசம்போர்டு ஏற்றுக்கொள்ளும். நன்கொடையாளர்கள் முன்வந்தால் பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு மாதப்பிறப்புக்கும் நடைதிறக்கும் இடைவெளியில் பணிகளை தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என நிர்வாக அதிகாரி  கூறினார்.
Read more...

இன்றைய ராசிபலன் ( 24.12. 2014 திங்கக் கிழமை )

மேஷம்:

இன்று, வெகுநாள் சிந்தித்த திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பீர்கள். நண்பர், உறவினர்களின் ஆதரவு பலமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் அபிவிருத்தி செய்ய, கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப் பணம் எளிதில் வசூலாகும். பணியாளர்கள் நல்ல முறையில் செயல்பட்டு பாராட்டு, வெகுமதி பெறுவர்.



ரிஷபம்: 

இன்று, உங்கள் தன்மானத்திற்கு சிறு சோதனை வரலாம்; மனதில் பொறுமை, நேர்மை குணங்களை பின்பற்றுவது நற்பலன் பெற உதவும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணவரவின் தன்மைக்கு ஏற்ப, செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். ஒவ்வாத உணவு வகையை தவிர்ப்பது நல்லது.



மிதுனம்: 

இன்று, மனதில் சுய கவுரவ சிந்தனை அதிகரிக்கலாம். தொழிலில் உருவாகிற மாறுபட்ட சூழ்நிலையை சரி செய்வது நல்லது. குறைந்த அளவில் பணம் வரவு இருக்கும். குடும்ப உறுப்பினர், கூடுதல் செலவுக்கு இயன்ற அளவில் பணம் கொடுத்து உதவுவர். சீரான ஓய்வு, உடல் நலத்தை பாதுகாக்கும்.

கடகம்: 

இன்று, எதிரி உங்களுக்கு செய்கிற கெடுதல் முயற்சி பலம் இழந்து போகும். இஷ்ட தெய்வத்திற்கு நன்றி சொல்லி, அன்றாட பணிகளை உத்வேகமுடன் துவங்குவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.


சிம்மம்: 

இன்று, உங்கள் நற்செயல்களால் பிறர் பாராட்டுகிற நன்னிலை பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். சராசரி பணவரவுடன் உபரி பணவருமானம் கிடைக்கும். உறவினர் செய்த உதவிக்கு பிரதி உபகாரம் செய்வீர்கள். சக தொழில் சார்ந்த நண்பருடன் முக்கிய பேச்சு வார்த்தை இருக்கும்.

கன்னி:

 இன்று, சிலரது செயல் மனவருத்தம் தரலாம். அன்றாட பணிகளை செயல்படுத்துவதில் குளறுபடி, தாமதம் இருக்கும். கூடுதல் பொறுமை பின்பற்றி, தொழில் இலக்கில் குறிப்பிட்ட அளவை அடைவீர்கள். மாமன், மைத்துனரின் உதவி எதிர்பார்த்த வகையில் வந்து சேரும். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றுவது நல்லது.

துலாம்: 

இன்று, உங்களின் செயலை சம்பந்தம் இல்லாதவர் கூட குறை சொல்கிற சூழ்நிலை ஏற்படலாம்; பொறுமை அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, கூடுதல் பணி தேவைப்படும். முக்கிய செலவுகளுக்கு பயன்படுகிற வகையில் பணவரவு கிடைக்கும். உடல்நலம் சீராக, தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள்.


விருச்சிகம்: 

இன்று, உங்கள் மனதில் புத்துணர்வும், செயல்களில் திறமையும் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த பணிகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் தரும். குடும்ப உறுப்பினர்கள் விரும்பிய பொருட்களை வாங்கித் தர, தாராள பணச்செலவு செய்வீர்கள்.

தனுசு: 

இன்று, உங்கள் உடல்நலத்தை பாதுகாப்பதில் முக்கிய கவனம் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரம் சீராக, சில மாற்றங்கள் உதவும். சிலரிடம் கேட்டிருந்த பணக்கடன் அதிக நிபந்தனையின் பேரில் கிடைக்கும்.


மகரம்: 

இன்று, உங்கள் நண்பர்களிடம் கலை உணர்வுடன் பேசி மகிழ்வீர்கள். வாழ்க்கை தரம் உயர, புதிய அனுகூல வாய்ப்பு உருவாகும். உத்வேகமுடன் உழைத்து, தொழில் வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


கும்பம்: 

இன்று, உங்களிடம் பழகுகிற சிலர், தவறான ஆலோசனை சொல்வர்; உங்களின் சுயமான செயல்பாடு மட்டுமே, தகுந்த வெற்றியை தரும். தொழில், வியாபாரம் வளர்வதற்கு கிடைத்த புதிய வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். குடும்ப செலவுகளுக்கு தாராள அளவில் பணம் செலவு செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.








Read more...

Monday, December 22, 2014

இன்றைய ராசிபலன் ( 22.12. 2014 திங்கக் கிழமை )

மேஷம்:

இன்று, உங்களின் பேச்சு, செயல் பிறருக்கு புரியாத புதிர் போல இருக்கும். சுய தேவை நிறைவேற்றுவதில் தாமதம் குறுக்கிடும். தொழில், வியாபாரம் சிறக்க மாற்று உபாயம், அதிக உழைப்பு மட்டுமே உதவும். பணவரவை முக்கிய செலவுக்கு மட்டும் பயன்படுத்துவீர்கள். போக்குவரத்தில் கவனநடை பின்பற்றுவது நல்லது.

ரிஷபம்:

இன்று, உங்களிடம் கடந்த காலத்தில் உதவி பெற்ற ஒருவர் நன்றி மறந்து செயல்படுவார்; மனவருத்தம் இருந்தாலும், அதனை வெளிப்படுத்த மாட்டீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு, மனதிற்கு கூடுதல் நம்பிக்கை தரும்.

மிதுனம்: 

இன்று, மனமும், உடலும் புத்துணர்வு பெறும். வெகுநாள் தாமதமான செயலை நிறைவேற்ற, புதிய முயற்சி எடுப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறக்க, அனுகூல காரணி பலம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்: 

இன்று, எதிர்கால வாழ்வு சிறக்க உதவுகிற பணி ஒன்றை செய்வீர்கள். நல்லவர்களின் ஆசியும், வழிகாட்டுதலும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். பணப்பரிவர்த்தனை சிறந்து, முக்கிய செலவுகளை ஈடுகட்டும். புத்திரர் விரும்பிய பொருள் ஒன்றை வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்: 

இன்று, உங்களின் மனதில் சோர்வு, உடல் நலக்குறைவு ஏற்படலாம். திட்டமிட்ட பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் சிறக்க, சிலரது உதவியை கேட்டுப் பெறுவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்களை எவரிடமும் இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது.


கன்னி: 

இன்று, உங்களுக்கு எதிர்மறையான சிலர், ஏளனமாக பேசுவர்; உங்களின் எதார்த்த போக்கில் மாறுபடாமல் செயல்படுவது நல்லது. கூடுதல் உழைப்பால், தொழில் வளர்ச்சி சீராகும். பணவரவு பற்றாக்குறை அளவில் இருக்கும். நிர்பந்தத்தின் பேரில், அதிக பயன்தராத பொருளை வாங்க வேண்டாம்.


துலாம்: 

இன்று, உங்கள் மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்வு சிறக்க தேவையான உதவி, ஆலோசனை வழங்குவீர்கள். தொழில், வளர்ச்சியில் இருந்த தடை விலகி, நல்வழி பிறக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். வீட்டை அழகுபடுத்த, அலங்காரப் பொருட்களை வாங்குவீர்கள்.


விருச்சிகம்: 

இன்று, பேச்சுகளில் அதிருப்தி கருத்துகள் கலந்திருக்கும். உங்களின் நலனில் அக்கறை உள்ளவர் கூடுதல் அன்பு, பாசத்துடன் தைரியம் சொல்வார். தொழில், வியாபாரம் வளர, கிடைக்கிற புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவீர்கள். போக்குவரத்தில் கவன நடை நல்லது. நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.


தனுசு: 

இன்று, உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். நண்பர், உறவினர் வியக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். ஆதாய பணவரவு கிடைத்து, குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள். புத்திரர், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவர்.


மகரம்:

 இன்று, உங்களை சுற்றி நடக்கிற பொதுவிவகாரங்களை கண்டு விலகிப் போவது நல்லது. சக தொழில் சார்ந்த ஒருவர், உங்களின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவார். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். சேமிப்பு பணத்திலிருந்து செலவு செய்வீர்கள். ஒவ்வாத உணவு வகையை தவிர்ப்பதால், உடல் நலம் பாதுகாக்கலாம்

கும்பம்: 

இன்று, பிறர் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். தெய்வ அனுக்கிரகம் துணை நின்று, உங்களை வழி நடத்தும். தொழில், வியாபாரத்தில், எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். பணவரவும், நன்மையும் கூடும். குடும்பத் தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள்.


மீனம்: 

இன்று, நல்ல கருத்துகளை பேசி, பிறர் மனதில் இடம் பெறுவீர்கள். சுறுசுறுப்பான செயலால், அன்றாட பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில், எதிர்பார்த்த வளர்ச்சி நிலை ஏற்படும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணமும் கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

Read more...

Saturday, December 20, 2014

ராசிபலன் 20.12. 2014 சனிக் கிழமை

மேஷம்:

 இன்று  நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிறர் ஏற்படுத்துகிற காலவிரயமான பேச்சுக்களை தவிர்ப்பது அவசியம். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய தொழில் நுட்பம், யுக்தி பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்:

இன்று  உங்கள் மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். துவங்குகிற செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத் தொடர்பு பலன் பெறும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், பணியாளர்களை அன்புடன் வழி நடத்தி, திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவர்.


மிதுனம்:

இன்று  முன் யோசனையுடன் செயல்படுவீர்கள். எதிரி செய்த கெடுதல் முயற்சி பலமிழந்து போகும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்கள் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்:

இன்று  அடுத்தவர் மீதான நம்பிக்கையில், அதிருப்தி கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூல தன்மைகளை பாதுகாப்பது நல்லது. உறவினர் வகையில் சீர்முறை செய்ய, அதிக பணம் தேவைப்படும். இயந்திரப் பிரிவில் பணிபுரிபவர்கள், பாதுக்காப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.


சிம்மம்:

 இன்று  உங்கள் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நம்பகத்தன்மை இல்லாதவர்களிடம் சிரமங்களை சொல்வதால், ஒரு மாற்றமும் வராது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

கன்னி:

இன்று  எதிர்கால வாழ்வில் நன்மை பெற, புதிய திட்டமிடுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அபரிமிதமான வளர்ச்சி பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சகோதரர் கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர்.



துலாம்:

இன்று  உங்களின் கவனக்குறைவால், குறிப்பிட்ட செயல் நிறைவேறுவதில், தாமதம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழிகாட்டும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குளறுபடியை சரிசெய்வீர்கள். உற்பத்தி, விற்பனை சீராகி எதிர்பார்த்த பணவரவைத் தரும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.


விருச்சிகம்:

இன்று  உங்கள் எண்ணத்திலும், செயலிலும் உறுதித்தன்மை இருக்கும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறு வராமல் கவனமுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு:

இன்று  சில பணிகளை நிறைவேற்றுகிற கட்டாய சூழ்நிலை ஏற்படலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரம் உற்பத்தி விற்பனையில் மந்தகதி இருக்கும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்ற வேண்டும்

மகரம்:

இன்று  உங்கள் வாழ்வில் உருவாகிற தடையை, தகர்த்தெறிய தகுந்த பணிபுரிவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.


கும்பம்:

இன்று  உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பணிகள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலகாரணி பலன் பெறும். கூடுதல் சொத்து சேர்க்கை பெறுவீர்கள். இல்லறத்துணை அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

மீனம்:



 இன்று  உங்களின் சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படும். இனிய அணுகு முறையால் சில நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்தகதியை சரிசெய்வது நல்லது. உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றவும். பணியாளர்கள் பெற வேண்டிய சலுகை கிடைப்பதில், தாமதம் இருக்கும்
Read more...

ராசிபலன் 20.12. 2014 சனிக் கிழமை

மேஷம்:

 இன்று  நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிறர் ஏற்படுத்துகிற காலவிரயமான பேச்சுக்களை தவிர்ப்பது அவசியம். தொழில், வியாபாரம் செழிக்க, புதிய தொழில் நுட்பம், யுக்தி பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்:

இன்று  உங்கள் மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். துவங்குகிற செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத் தொடர்பு பலன் பெறும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், பணியாளர்களை அன்புடன் வழி நடத்தி, திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவர்.


மிதுனம்:

இன்று  முன் யோசனையுடன் செயல்படுவீர்கள். எதிரி செய்த கெடுதல் முயற்சி பலமிழந்து போகும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்கள் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்:

இன்று  அடுத்தவர் மீதான நம்பிக்கையில், அதிருப்தி கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூல தன்மைகளை பாதுகாப்பது நல்லது. உறவினர் வகையில் சீர்முறை செய்ய, அதிக பணம் தேவைப்படும். இயந்திரப் பிரிவில் பணிபுரிபவர்கள், பாதுக்காப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.


சிம்மம்:

 இன்று  உங்கள் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நம்பகத்தன்மை இல்லாதவர்களிடம் சிரமங்களை சொல்வதால், ஒரு மாற்றமும் வராது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம். உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

கன்னி:

இன்று  எதிர்கால வாழ்வில் நன்மை பெற, புதிய திட்டமிடுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அபரிமிதமான வளர்ச்சி பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சகோதரர் கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர்.



துலாம்:

இன்று  உங்களின் கவனக்குறைவால், குறிப்பிட்ட செயல் நிறைவேறுவதில், தாமதம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நல்வழிகாட்டும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற குளறுபடியை சரிசெய்வீர்கள். உற்பத்தி, விற்பனை சீராகி எதிர்பார்த்த பணவரவைத் தரும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.


விருச்சிகம்:

இன்று  உங்கள் எண்ணத்திலும், செயலிலும் உறுதித்தன்மை இருக்கும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறு வராமல் கவனமுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

தனுசு:

இன்று  சில பணிகளை நிறைவேற்றுகிற கட்டாய சூழ்நிலை ஏற்படலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரம் உற்பத்தி விற்பனையில் மந்தகதி இருக்கும். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்ற வேண்டும்

மகரம்:

இன்று  உங்கள் வாழ்வில் உருவாகிற தடையை, தகர்த்தெறிய தகுந்த பணிபுரிவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.


கும்பம்:
இன்று  உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பணிகள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலகாரணி பலன் பெறும். கூடுதல் சொத்து சேர்க்கை பெறுவீர்கள். இல்லறத்துணை அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

மீனம்:

 இன்று  உங்களின் சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படும். இனிய அணுகு முறையால் சில நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்தகதியை சரிசெய்வது நல்லது. உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு பின்பற்றவும். பணியாளர்கள் பெற வேண்டிய சலுகை கிடைப்பதில், தாமதம் இருக்கும்




Read more...

ஏழுமலையான் குபேரனிடம் பெற்ற கடன் 21 லட்சம் பொற்காசுகள்!

திருமலை ஏழுமலையான், பத்மாவதி தாயாரை மணம் புரிய குபேரனிடம் பெற்ற கடன், 21 லட்சம் பொற்காசுகள் என்பது, தற்போது தெரிய வந்துள்ளது. ’ஏழுமலையான், குபேரனிடம் பெற்ற கடன் தொகை எவ்வளவு?’ என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேவஸ்தானம் சரியான பதில் அளிக்கவில்லை.தற்போது, அது குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. திருமலை ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம், ராமர் உருவம் பொறித்த, 21 லட்சம் பொற்காசுகளை கடனாக பெற்றார். அதற்கு அடையாளமாக, ஒரு செப்பு பட்டயத்தில் கடன் பத்திரம் ஒன்று எழுதப்பட்டது.

’கடன் பெற்றதற்கு சாட்சி, திருமலை, திருக்குளக்கரையில் உள்ள வராகசாமி மற்றும் ஏழுமலையானின் தாயார் வகுளமாதா’ என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செப்பு கடன் பத்திரம், வராகசாமி கோவிலில் உள்ள, மூலவர் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்தது. வராக சாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, செப்பு கடன் பத்திரத்தை காட்டி, அது குறித்து விளக்கியும் வந்தனர்.சிறிது காலத்திற்கு பின், வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும், செப்பு கடன் பத்திரம் காட்டப்பட்டது. அவர்களில், 2008ல், தேவஸ்தான செயல் அதிகாரியாக பொறுப்பேற்றகிருஷ்ணராவும் ஒருவர். அவர் தற்போதைய ஆந்திர மாநில தலைமை செயலராக உள்ளார். ’இத்தனை மகத்துவம் பெற்ற ஒரு பொருளை, இவ்வளவு அஜாக்கிரதையாக வைத்துள்ளீர்களே?’ என, கிருஷ்ணாராவ் கண்டித்தார். மேலும், செப்பு கடன் பத்திரத்தின் எழுத்துகள் அழியாமல் இருக்க அதை, ’லேமினேட்’ செய்து, தேவஸ்தான கருவூலத்தில் பத்திரப்படுத்த கூறினார்.

அவர் உத்தரவின்படி, அந்த செப்பு கடன் பத்திரம் கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், அது குறித்து யாருக்கும் தெரியவில்லை. கடந்த, 2011ல், தேவஸ்தான செயல் அதிகாரியாக இருந்த எல்.வி.சுப்ரமணியத்திடம், குறைகேட்பு நாளில், இது குறித்து பக்தர்கள் புகார் அளித்தனர். ஆனால், அதற்கு அவர் தகுந்த பதில் அளிக்கவில்லை.அப்போது அவர் அளித்த விளக்கம் இது தான்: ஏழுமலையான், குபேரனிடம் கடன் பெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அது குறித்து அறிந்தவர் எவருமில்லை.புராணங்களில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களை, வளரும் தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவே, திருமலையில் ஒவ்வொரு உற்சவமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவிர, அது உண்மையாக நிகழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை. இது தான் அவர் அளித்த விளக்கம்.எனவே, கருவூலத்திற்கு சென்ற, முக்கியத்துவம் வாய்ந்த செப்பு கடன் பத்திரம் எங்கு உள்ளது என்பது, தேவஸ்தானத்திற்கே தெரியவில்லை. அதனால் தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டும் அவர்களால், சரியான பதிலை கூற முடியவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
Read more...

சபரிமலை மாளிகைப்புறத்தம்மனுக்கு 2.5 கிலோ தங்க அங்கி காணிக்கை!

பரிமலையில் மாளிகைப்புறத்தம்மனுக்கு 2.5 கிலோ தங்க அங்கி காணிக்கையாக வழங்கப்பட்டது. இனி வரும் நாட்களில் பக்தர்கள் இதனை தரிசிக்கலாம். சபரிமலை வரும் பக்தர்கள் ஐயப்பனை வணங்கி விட்டு மாளிகைப்புறத்தம்மனுக்கு மஞ்சள் சமர்ப்பணம் செய்து வழிபடுவர்.

ஐயப்பனுக்கு காணிக்கையாக பொருட்களை வாரி வழங்கும் பக்தர்கள் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் அவ்வாறு செய்வதில்லை. அண்மையில் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் தேவபிரஸ்னம் நடத்தப்பட்ட போது இது ஒரு குறையாக தெரிவிக்கப்பட்டது. நடப்பு சீசன் தொடக்கத்தில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஐயப்பன் கோயிலுக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பூஜா பாத்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது.

இதை பெற்றுக்கொண்ட தந்திரி கண்டரரு ராஜீவரரு, மாளிகைப் புறத்தம்மனுக்கு தங்கத்தில் ஒரு அங்கி காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அந்த நிறுவனத்தில் சார்பில் ரமணி 2.5 கிலோ தங்கத்தில் அம்மனின் உருவ அங்கியை காணிக்கையாக வழங்கினார். மாளிகைப்புறம் மேல்சாந்தி கேசவன் நம்பூதிரி அதனை பெற்றுக்கொண்டார். இனி வரும் நாட்களில் பக்தர்கள் இதை தரிசனம் செய்ய முடியும்.
Read more...

Friday, December 19, 2014

திதிகளில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்கள்

திருவாதிரை விரதம் :

மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்திலே சிவனை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் செய்தல் வேண்டும். இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து அனுட்டிப்பது மிகவும் நல்லது.

விநாயக சஷ்டி விரதம் :

கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டி வரை இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதம் ஆகும். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனம் செய்து இறுதி நாளாகிய சஷ்டியில் உபவாசம் செய்தல் வேண்டும்.


பிரதோஷ விரதம் : 

சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியிலே சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும்.

இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி அநுட்டித்தல் வேண்டும். பகலிலே சாப்பிடக்கூடாது. சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே குறித்து சிவபூஜை பண்ணித் திருக்கோயில் சென்று சிவதரிசனம் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு போசனம் சாப்பிட வேண்டும்.

பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இந்த எட்டும் செய்ய கூடாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து வந்தால் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு சிறந்த காலம்.


கார்த்திகை விரதம் : 

கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதம் ஆகும். இதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளலாம். இவ்விரதம் பன்னிரெண்டு வருஷகாலம் இருத்தல் வேண்டும்.

சோமவார விரதம் : 

கார்த்திகை மாத முதல் சோமவாம் தொடங்கிச் சோமவாரம் தோறும் சிவபெருமானைக் குறித்து கடைபிடிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம் அது கூடாதவர் ஒரு பொழுது சாப்பிடலாம். அதுவும் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் சாப்பிடலாம். இவ்விரதம் வாழ்நாள் முழுவதும் அல்லது பன்னிரண்டு வருஷகாலமாயினும் மூன்று வருஷ காலமாயினும் ஒரு வருஷ காலமாயினும் அனுட்டித்தல் வேண்டும். பன்னிரெண்டு மாதத்திலும் அனுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இருக்க வேண்டும்

உமாமகேஸ்வர விரதம் :

கார்த்திகை மாதத்து பவுர்ணமியிலே உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே சாப்பிடலாம். இரவிலே பணியாரம் பழம் உட்கொள்ளலாம்.

சிவராத்திரி விரதம் : 

மாசி மாதத்து கிருஷ்ணபட்ச சதுர்த்ததி திதியிலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இதில் உபவாசம் செய்து நான்கு ஜமமும் நித்திரையின்றிச் சிவ பூசை செய்தல் வேண்டும். நான்கு யாமப் பூசையும் அவ்வக் காலத்தில் செய்வது நல்லது. சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும்.

சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் செய்தல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் சாப்பிடுவது மத்திமம், பழம் உண்பது அதமம், தோசை முதலிய பலகாரம் உண்பது அதர்மம், சிவராத்திரி தினத்திலே இராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் லிங்கோற்பவ காலமாகும்.

நான்கு யாமமும் நித்திரையொழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் தூங்காமல் இருத்தல் வேண்டும். இக்காலத்திலே சிவதரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதம் அனைவராலும் அவசியம் இருக்க வேண்டும்.

கேதார கவுரி விரதம் :

புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாம்.

இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு வகை சாப்பாடு செய்து சாப்பிட்டு இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்பஸ்தாபனம் பண்ணி பூஜை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பலகாரம் உட்கொள்ள வேண்டும்.

சுக்கிரவார விரதம் : 

சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் தொடங்கிச் சுக்கிர வாரம் தோறும் பார்வதி தேவியாரைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுது பகலிலே சாப்பிட வேண்டும்.

நவராத்திரி விரதம் : 

புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதமாகும். இதிலே முதலெட்டு நாளும் பலகாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசம் செய்தல் வேண்டும்.

விநாயக சதுர்த்தி : 

ஆவணி மாதத்துச் சுக்கிலபட்சத்து சதுர்த்தியிலே விநாயகக்கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுதில் பகலிலே போசனம் செய்து இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்க கூடாது.


கந்த சஷ்டி விரதம் : 

ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது முடியாதவர் முதல் 5 நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசம் செய்ய வேண்டும்.

இவ்விரதம் ஆறு வருஷ காலம் அனுஷ்டித்தல் வேண்டும். மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே சுப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் ஏதாவது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.
Read more...

சர்வ மங்கள யோகம் தரும் விளக்கு

காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும். ஒரு முகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் மத்திய பலன் கிட்டும், இருமுகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் குடும்ப ஒற்றுமைக் கிட்டும்.

மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றுவதால் புத்திர சுகம், நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் பசு, பூமி லாபம் கிடைக்கும். ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.

விளக்குகளில் பித்தளை, வெள்ளி, அகல் விளக்குகள் கூட உள்ளன. ஆனால், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளும், வெள்ளை, பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்குகளும் பூஜைக்கு மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது.

விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதாவது
மகாலட்சுமி தாய்க்கு நெய் விளக்கும்,
நாராயணனுக்கு நல்லெண்ணையும்
கணபதிக்கு தேங்காய் எண்ணையும்
ருத்ராதி தேவதைக்கு இலுப்பை எண்ணையும்
தேவிக்கு ஐந்து வகை எண்ணையும் 
சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணையும் 
சிறப்பு வாய்ந்தது.
Read more...

Thursday, December 18, 2014

காதல் திருமணத்திற்கான ஜாதக அமைப்பு !

1 )  7 -ம் அதிபதி . 7 -ம் வீட்டுடனான 5 ம் அதிபதியின் நெருங்கிய தொடர்பு - இணைவோ , பார்வையோ , பரிவர்த்தனையோ இருப்பின் காதல் திருமணம் உண்டு ...

2 )  குரு அதிகமாக பாதிப்படைந்து , 7 - ம் அதிபதி லக்னாதிபதியை விட பலம் பெற்றும் மற்றும் சனி , செவ்வாய் அல்லது இராகு 9 - ம் வீட்டில் இருக்க ...

3 )  லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ , 7 ம் அதிபதியோடு இணைந்து கேந்திர மேற ....

4 )  சந்திரனும் , சுக்கிரனும் இணைந்து 7 ல் இருக்க ...

5 )  7 ல் சுக்கிரன் இருந்து , செவ்வாயால் பார்க்கப்பட ....

6 )  செவ்வாய் , சுக்கிரன் , இராகு இணைந்து 7 ல் இருக்க ....

7 )  7 ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரனை , சனி அல்லது செவ்வாய் பார்க்க ....



கலப்பு திருமணத்திற்கான ஜாதக அமைப்பு !

1 ) சுக்கிரனும் , இராகுவும் இணைந்து 6 அல்லது 11 - ல் இருக்க ...

2 ) 7 மிடத்தை அல்லது அதன் அதிபதியை இராகு பார்க்க ....

3 ) சந்திரனும் , செவ்வாயும் 6 / 8 ஆக ..

4 ) சுக்கிரனும் செவ்வாயும் கோணத்திலிருக்க அல்லது 12 ல் இருக்க

5 ) துலாம் அல்லது கும்பம் 7 மிடமாகி அதில் குரு இடம் பெற ...

6 ) 7 -ம் அதிபதியுடன் செவ்வாய் , இராகு இணைய ....

7 ) 5 -ம் இடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க , 7 மற்றும் 12 ம் இடங்களில் ஆண் கிரகங்கள் இடம் பெற ....

8 ) 7 -ம் அதிபதி சனியுடன் இணைத்து 12 ல் இருக்க ...

9 ) 7 -ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரன் , சனி அல்லது நிழல் கிரகங்களால் பாக்கப்பட ...

Read more...

தினசரி வழிபாடாக மாறிய களப பூஜை!


பரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான களபபூஜை தற்போது தினசரி வழிபாடாக மாறியுள்ளது. இதற்கு 19 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நாட்களில் அதிகாலை 3.15 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும் தொடர்ந்து நெய்யபிஷேகம் நடைபெறும். இதனால் ஐயப்பனின் விக்ரகத்தில் ஏற்படும் சூட்டை தணிப்பதற்காகவும், ஐயப்ப சைதன்யத்தை (சக்தி ) அதிகரிப்பதற்காகவும் களபபூஜை நடத்தப்படுகிறது.

இந்த பூஜை பக்தர்களின் வழிபாடாக நடத்தப்படுகிறது. பூஜிக்கப்பட்ட பிரம்ம கலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு அதனை மேல்சாந்தி கையில் ஏந்திய படி தந்திரி மற்றும் தேவசம் அதிகாரிகளுடன் மேளம் முழங்க கோயிலை வலம் வருகின்றனர். பின்னர் கோயிலுக்குள் கலசம் கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனின் விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டுக்கு தேவசம்போர்டு கட்டணமாக மூவாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் களப அபிஷேகத்துக்கான பொருட்களுக்கு 16 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது: களப அபிஷேகம் சபரிமலை ஐயப்பனுக்கு நடத்தப்படும் மிக முக்கிய வழிபாடு. தற்போது களபபூஜை எல்லா நாளிலும் ஒரு வழிபாடாக நடத்தப்படுகிறது. இதில் பக்தர்கள் அதிகம் பங்கேற்கின்றனர். முன்பு ஜன,18ம் தேதி மட்டும்தான் களபபூஜை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
Read more...

சனியின் ஆதிக்க காலத்தில் வணங்க வேண்டிய தெய்வங்கள்

னியால் பாதிக்கபட்டவர்கள் ஏழரை, அஷ்டமம், அர்த்தாஷ்டமம், கண்டகச்சனி நிலையில் இருப்பவர்கள் ஒரே நாளில் 4 தெய்வங்களுக்கும் மாலை அணிவித்து வழிபட்டு வர வேண்டும். 

விநாயகருக்கு - அருகம்புல் மாலையும் 
விஷ்ணுவிற்கு - வெண்தாமரை மாலையும் 
அனுமனுக்கு - வடை மாலையும் 
சனிக்கு - சுகந்த மாலையும் 
அணிவித்து நவதானிய தானமும் கொடுத்து வந்தால், சனி சந்தோஷமடைந்து சகல நன்மைகளையும் தருவார். திருமணத் தடை விலகும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் கூடும்.
Read more...

செய்யும் தொழில் விருத்தி பெற!

ருமானம் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான அடையாளமாகும். அபார நிர்வாகத் திறனும் தொழில் செய்வதற்கான முதலீடும் ஒருவரிடத்தில் இருக்குமானால் அப்படிப்பட்ட திறமை வாய்ந்தவர்களுக்கே தொழில் செய்து சம்பாதிப்பது என்பது அமையும். 

அப்படி சொந்த தொழில் மூலம் அதிக லாபம் பெற்று முன்னேறியவர்களும் உண்டு. நஷ்டமடைந்து காணாமல் போனவர்களும் உண்டு. லாபரமான தொழில் செய்யக்கூடிய யோகம் எல்லோருக்குமே அமையாது. தொழிலை திறமையாகச் செய்து வாழ்க்கையில் முன்னேற ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது. 

சிலருக்கு என்ன வியாபாரம் செய்தாலும் விருத்தி அடையாதபடி தோஷம் இருக்கும். அவர்கள் தினமும் காலை குளித்து விட்டு மஹாலக்ஷ்மி படத்திற்கு முன் பால், தேன், ஏலக்காய், கிஸ்மிஸ் பழம், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை கலந்து நிவேதனம் செய்ய வேண்டும். 

ஐந்து முகம் கொண்ட வெள்ளி விளக்கை ஏற்றி அந்த பஞ்சாமிர்தத்தை எடுத்துச்சென்று நிறுவனத்தில் வேலை செய்யும் முக்கியஸ்தர்களுக்கு அல்லது அனைவருக்கும் உணவிட்டு வந்தால் தொழிலில் நஷ்டம் வராமல் விருத்தி அடையும்.
Read more...

Wednesday, December 17, 2014

கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்!

கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக் கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதிகம்.  கோலங்கள் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை. இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. அழகுக்காக வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம்.

இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும் ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது. இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கும்; மனை விளங்கும்.  வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது. புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம்.

படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும். கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது, சகல நன்மையும் தரும்.
Read more...

மனநிம்மதிக்கு ஆண்டாளை வேண்டுங்க!

காலட்சுமியிடம் செல்வத்தை வேண்டுமானால் யாசிக்கலாம். செல்வம் இருந்தால் மனநிம்மதி கிடைத்து விடுமா! அந்த நிம்மதியைத் தருபவள் ஆண்டாள். அவள் பூமாதேவியின் அவதாரம் என்பதால் பொறுமை மிக்கவள். நாம் செய்கிற தவறுகளை பகவானிடம் மறைத்து விடுவாள்.

அதேநேரம், ஏதேனும் ஒரு நல்லது செய்தால் போதும். அதை பெரிதுபடுத்திக் காட்டி, வேண்டிய வரத்தை வாங்கித் தருவாள். அவளை பரமகாருண்ய தேவதை என்பர். மனிதனாகப் பூமியில் பிறந்தவன், ஸ்ரீவில்லிபுத்துõருக்கு வந்து, தான் செய்த பாவங்களையெல்லாம், ஒரு முறையாவது ஆண்டாளிடம் சொல்லி விட வேண்டும்.

அவள் அவற்றையெல்லாம் மறைத்து, மனம் திருந்திவிட்டதை மட்டும் பகவானிடம் எடுத்துச்சொல்லி மன்னிப்பைப் பெற்றுத் தருவாள். நாம் நிர்மலமான (குற்றமற்ற) மனதுடன் இல்லம் திரும்பலாம்.
Read more...

Tuesday, December 16, 2014

கோடீஸ்வர யோகம்

வ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர். உண்மையில், அன்றாட வாழ்க்கைக்குப் போராடும் பலருக்கு கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எப்போது என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுவதுதான், நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
பிறப்பால் கோடீஸ்வர யோகம்:
கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர். குருவும் 9ம் அதிபதியும் இணைந்து கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், பிறப்பால் கோடீஸ்வரர். லக்னாதிபதி மற்றும் 4ம் அதிபதிகள் பலம்பெற்று இணைந்து தசை நடந்தால் பல வாகனங்களுக்கு அதிபராகவும், பிறப்பு முதல் இறப்பு வரை பெருஞ்செல்வந்தராகவும் வாழ்வார்.
9ம் அதிபதியுடன் சுபகிரகங்கள் இணைந்து லக்னாதிபதி பலம் பெற்றால், தந்தை முன்னேற்றம் பெற்று, அவர் மூலம் பணம், புகழ் பெறுவர். 9ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று கேந்திரத்தில் இருப்பது பலவித பாக்கியங்களைத் தரும். சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, நீச பங்கம் முதலான வகைகளில் பலம் பெற்று கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும், சுபகிரக தசைகள் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நடைபெற்றாலும் சுகமும், செல்வமும் பெற்றிடுவர். 2, 9, 11ம் அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருந்தால், குடும்பத்தினரால் பாக்கியம் அனைத்தும் கிடைக்கப்பெற்று, பெரும் செல்வந்தராக வாழ்க்கை நடத்துவர்.
ராசி, லக்னாதிபதி தசை:
ஒவ்வொருவருக்கும் ராசியைப் போல லக்னம் உண்டு. பிறந்த நாளில் உள்ள நட்சத்திரத்தின் அடிப்படையில் ராசியையும், பிறந்த நேரத்தைக் கொண்டு லக்னத்தையும் அறிந்துகொள்ளலாம். மேஷம் விருச்சிகத்துக்கு செவ்வாய் தசை, ரிஷபம் துலாமுக்கு சுக்கிர தசை, மிதுனம் கன்னிக்கு புதன் தசை, மீனம் தனுசுக்கு குரு தசை, மகரம் கும்பத்துக்கு சனி தசை, சிம்மத்துக்கு சூரிய தசை, கடகத்துக்கு சந்திர தசை என லக்னாதிபதி, ராசி அதிபதிகளின் தசை நடக்கும்போது ஜாதகர் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். திடீர் வளர்ச்சி, பணம், புகழ், செல்வாக்கு ஏற்படும். சாதாரண நிலையில் இருப்பவரும் சுபகிரக பார்வை பலம் பெற்று லக்னாதிபதி, ராசி அதிபதி தசை நடந்தால், பெருத்த முன்னேற்றத்தை எளிதில் அடைவாா்்கள். அதேபோல், 2, 10, 11ம் அதிபதிகளின் தசை சுப பலம் பெற்று நடைபெற்றால், செல்வச் சேர்க்கை, தொழிலால் லாபம், குடும்ப முன்னேற்றம் போன்றவை உண்டாகும்.
குரு, கேதுவினால் கோடீஸ்வர யோகம்:
குருவிற்கு கேந்திர (1, 4, 7, 10) திரிகோண (1, 5, 9) இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும், உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். குரு, கேது கெடாமலும், குரு, கேது கேந்திர திரிகோணங்களில் இணைந்து நின்றாலும்் தன் புத்தி, உழைப்பால் கோடீஸ்வரராகிவிடுவர். குரு, கேது இணைவும், கேதுவுக்்கு குரு பார்வை ஏற்படுவதும் குரு தசையிலோ, கேது தசையிலோ சாதாரணமானவரையும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, புகழுடன் கோடீஸ்வரராக்கிவிடும். 6, 8, 12ல் குரு இருந்து, கேது 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்து குருபார்வை பெறுவது யோக பலனைக் குறைக்கவே செய்யும்.
தொழிலால் கோடீஸ்வரர்:
10ம் அதிபதி, 11ம் அதிபதி பலம் பெற்று சுபகிரக பார்வை பெற்றாலும், 10, 11ம் அதிபதி இணைந்து 4, 9 இடங்களில் இருந்தாலும், 4, 9ம் அதிபதியின் பார்வை பெற்றாலும் தொழில் வருவாய் மூலம் கார், பங்களா என்று சுகமாக வாழ்வர். 10, 11ம் அதிபதிகள் பாதிக்கப்படாமல் இருந்து தசை நடைபெற்றால் தொழில் மூலம் புகழ், செல்வம் சேரும். 4ம் இடத்துக்கு பலம் பெற்ற சுபகிரக பார்வை ஏற்பட்டாலோ, 4ல் லக்னாதிபதியோ, 2, 5, 9, 11ம் அதிபதிகள் நின்றாலோ வாழ்க்கையில் சுகத்துக்குப் பஞ்சம் இருக்காது. பஞ்சமாதிபதி, தனஸ்தானாதிபதி தசை, சுபகிரக பார்வையுடன் நடைபெற்றால், சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு, கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும்.
யாரால் யோகம்?
11, 9ம் இடங்களில் சூரியன் பலம் பெற்றால் தந்தையாலும், சந்திரன் பலம் பெற்றால் தாயாலும், செவ்வாய் பலம் பெற்றால் நண்பர், கணவர், உடன்பிறப்பாலும், புதன் பலம் பெற்றால் மாமனாலும், சொந்த அறிவாலும், குரு பலம் பெற்றால் முன்னோர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், புத்திரர்களாலும், சுக்கிரன் பலம் பெற்றால் மனைவியாலும், சனி, ராகு, கேது பலம் பெற்றால் வேலையாட்கள் மூலமும், நேர்மையற்ற வழியிலும் செல்வம் சேரும். 2, 7, 9ம் அதிபதிகள் இணைந்து 4, 11ம் வீடுகளில் நின்றால் வசதியான, அழகான கோடீஸ்வரரைத் திருமணம் செய்வர்.
விபரீத ராஜ யோகம்:
'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12ம் இடங்கள் மறைவு ஸ்தானம். 3ம் அதிபதி 6, 8, 12ம் இடத்திலோ, 6ம் அதிபதி 3, 8, 12ம் இடத்திலோ, 8ம் அதிபதி 3, 6, 12ம் இடத்திலோ, 12ம் அதிபதி 3, 6, 8ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12ம் அதிபதிகள் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தால் புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும், ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று அம்சத்தில் பலம் பெற்றாலும், சுபயோக பலன்களையே தருவர்.
கோடீஸ்வரராக வழிமுறைகள்:
சராசரி வாழ்க்கைக்கே போராடுகிறோம்; இந்த நிலையில், நாம் எங்கே கோடீஸ்வரராவது என்றே பலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். முறையான உழைப்பாலும், புதிய சிந்தனையாலும், எந்தத் தொழில் மூலமாகவும் கோடீஸ்வரராகி விடலாம். பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் கோடீஸ்வரராக முடியும் என்பதைக் கண்டறிய வேண்டும்.
பல வருடங்கள் சேமித்த பொருளைக் கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா, தொழிலால் லாபம் கிடைக்குமா, கூட்டுத் தொழில் வெற்றி தருமா என்பதையெல்லாம் கருத்தில் கொள்வது பாதுகாப்பானது. அவசரக் கோலத்தில் தொழில் தொடங்கி, முடங்கிப்் போனவர்கள் ஏராளம். கோசாரத்தில் 10ல் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்னையால் தொழில் நஷ்டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அத்தகைய காலங்களில் புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நலம். குரு வருடந்தோறும் மாறுவதால், பொதுவாக குருபலம் இருக்கிறது என்று புதிய தொழில் தொடங்கிவிடக்கூடாது.
கோசார பலனை மட்டும் பார்க்காமல் 3, 6, 8, 12ம் அதிபதி தசை, பாதகாதிபதி தசை, மாரகாதிபதி தசைகளைத் தவிர்த்தும், நடக்கும் தசையின் நிலையை ஜாதகத்தில் முறையாகத் தெரிந்துகொண்டும் புதிய முடிவுகளை எடுத்தால், தோல்விகளைத் தவிர்க்கலாம். கோடீஸ்வர யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், புதாதித்ய யோகம் போன்ற ராஜயோக பலன்கள் இருந்தும் அதற்குரிய தசை, பலம் இவற்றை அறிந்து சுப பலன்களை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளைப் பலர் அமைத்துக் கொள்ளாமல் விடுவதால், யோகங்களின் பலன்கள் முழுதாகக் கிடைப்பதில்லை. உங்களை நீங்கள் சரிசெய்து கொண்டால் அடுத்த நொடியேகூட உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து நீங்களும் கோடீஸ்வரராகிவிட முடியும்.
Read more...

ஷிர்டி பாபா புனிதத் திருச்சரிதம் பகுதி - 4

ஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்! அவனை மறுநாள் காணோம். அதை அறிந்து, சொந்த மகனைத் தொலைத்தது போல், பாய்ஜா மாயி கண்களிலிருந்து கரகர வெனக் கண்ணீர் வழிந்தது. எங்கே போனான் அவன்? தாயுள்ளம் கொண்ட அந்த பக்தையின் கண்ணீரைக் காலம் தன் பேரேட்டில் குறித்துக்கொண்டது. அழுதால் அவனைப் பெறலாம் என்பதல்லவா சத்திய வாசகம்! இறைவனுக்காக அழுபவரைத் தேடி இறைவன் வராவிட்டால் அப்புறம் அவன் எப்படி இறைவனாவான்? ஷிர்டிக்கு மீண்டும் அந்த இளைஞன் வருவான் என்பதை அவள் கண்ணீரே உறுதி செய்கிறதே! 1854ல் ஷிர்டியில் நடந்த சம்பவம் இது...... சூரியதேவன் தன் ஏழுவண்ணக் குதிரைகளின் லகானைப் பிடித்துச் சுளீரென்று ஒரு சொடுக்குச் சொடுக்கினான். குதிரைகள் வேகமெடுத்துப் பாய்ந்தன. நான்கு ஆண்டுகள் கிடுகிடுவெனப் பஞ்சாய்ப் பறந்தன. அதன்பின் இன்னொரு கிராமத்தில் இன்னொரு நாள்... நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த அவுரங்காபாத் பகுதியில், தூப்காவன் என்றொரு சிறிய கிராமம்.

சாந்த்படீல் என்ற முஸ்லிம் பெருமகன் அங்கே வாழ்ந்து வந்தார். இறைநம்பிக்கை உடைய நல்ல மனிதர். யாரையும் ஏமாற்றாமல் நியாயமாக வணிகம் செய்து வாழ்பவர். ஐந்துவேளை தொழுகை நிகழ்த்துபவர். அன்பு மயமான அவர், ஒருநாள் சில குதிரைகளுடன் ஒரு வேலை நிமித்தம் அருகேயிருந்த அவுரங்காபாத் நகருக்குச் சென்றார். பார்த்துப் பார்த்துத்தான் பயணம் செய்தார். குதிரைகள் அவரது செல்வம் அல்லவா? அவற்றை மிக எச்சரிக்கையாகத் தான் கூட்டி வந்தார்.

ஆனால், வந்து சேர்ந்தபின், கணக்கிட்ட போதுதான் தெரிந்தது, அவற்றில் ஒரு பெண்குதிரையைக் காணோம்! என்ன ஆச்சரியம்! எங்கே போயிற்று அது? ஒரு குதிரை தொலைவது என்பது அவரது செல்வத்தின் ஒரு பகுதி தொலைவதுபோல் அல்லவா? மீண்டும் ஒரு குதிரையை விலைக்கு வாங்க அவர் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்? அவர் பதட்டத்தோடு, தான் வந்த வழியே தொலைந்துபோன குதிரையைத் தேடிச் சென்றார். ஆனால், என்ன சோதனை! குதிரை எங்கும் தென்படவே இல்லை. என்ன மாயம் இது! யார் அந்தக் குதிரையை மறைத்தார்கள்? இரண்டு மாதங்கள் மிகுந்த முயற்சியுடன் தேடித் தேடிப் பார்த்தார்.

கண்டுபிடிக்க இயலவில்லை. உண்ணும்போதும் உறங்கும்போதும் தொலைந்துபோன குதிரையைப் பற்றித்தான் அவருக்குச் சிந்தனை. மிகவும் சோர்வடைந்தார். யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், என் குதிரை இப்படித் தொலைவானேன்! என்று அவர் உள்ளம் மருகியது. அவர் உடல் மெலியத் தொடங்கியது. ஒருநாள் இன்று எப்படியும் குதிரையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னந்தனியாய், மீண்டும் முன்னர் தேடிச் சென்ற பாதையிலேயே நடந்து தேடலானார். காட்டுப் பாதை. கல்லும் முள்ளும் காலைக் குத்திக் கிழித்தன.

எங்கேதான் போயிருக்கும் குதிரை? ஏதாவது மரத்தடியில் புல் மேய்ந்து கொண்டிருக்குமோ என்று பல இடங்களில் தேடினார். குளம் குட்டைகளில் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்குமோ என்று அங்கெல்லாம் போய்ப் பார்த்தார். எங்கு தேடியும் காணவில்லை. நடந்து நடந்து கால்கள் வலிகண்டதுதான் மிச்சம். மிகுந்த ஏமாற்றத்துடன் தளர்ந்த நடையோடு வந்த வழியே திரும்பி நடக்கலானார். இனி, தன் குதிரை மீண்டும் தனக்குக் கிடைக்கும் என்ற எண்ணம் அவர் மனத்திலிருந்து விடைபெறத் தொடங்கியது. அப்போது ஒரு மாமரத்தின் நிழலில் ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். தலையில் ஒரு குல்லாய். நீண்ட அங்கி. கையில் சட்கா என்னும் குட்டையான ஒரு தடி.

ஏ சாந்த்படீல்! என்று கூவி அழைத்தார் பக்கிரி. சாந்த்படீலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. யார் இவர்? கானகத்தில் தன்னந்தனியே அமர்ந்திருக்கும் இவருக்குத் தன் பெயர் எப்படித் தெரியும்? அந்த அழைப்பில் தென்பட்ட அளவற்ற கம்பீரமும், குரலில் தென்பட்ட இனிமையும், உடனடியாக அந்தக் குரலுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தின. வியந்தவாறே அந்த அதிசயப் பக்கிரியின் அருகே வந்தார் அவர். நெருங்க நெருங்கக் காந்தம் இரும்பை இழுப்பதுபோல் அவர் தன்னை இழுப்பதாக உணர்ந்தார். அவர் பக்கத்தில் செல்லும்போது மனத்தில் ஒரு சாந்தி தோன்றுவதையும், தன் உள்ளச் சுமை குறைந்து இதயமே லேசாவதையும் உணர்ந்தார். அந்தக் கானகத்திற்கு அந்தப் பக்கிரி எப்போது எப்படி வந்தார் என்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக அதே கானகத்தில் வசிப்பவர் போல் தோன்றினார்.

அவரைச் சுற்றி இனம் புரியாத ஒரு புனித ஒளி பரவியிருந்தது. அவரது பால்வடியும் முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டது. என்ன தூய்மையான முகம்! எந்த மனிதரிடமும் இத்தகைய பளிங்குபோன்ற முகத்தை சாந்த்படீல் பார்த்ததே இல்லை. இந்த முகம் உடையவரைப் பளிங்குச் சிலையாகவே ஆக்கி, பின்னால் மக்கள் வழிபட்டுப் பலன் பெறப் போகிறார்கள் என்றெல்லாம் சாந்த்படீலுக்கு அப்போது தெரியாது. ஹரே சாந்த்படீல்! உன் காணாமல் போன பெண்குதிரையை இங்கே தேடினால் எப்படியப்பா கிடைக்கும்? வடக்குப் பக்கமாகப் போ.

ஒரு பெரிய ஆலமரத்தடியில் நின்று கொண்டிருக்கிறது உன் குதிரை. போய்ப் பார்! சாந்த்படீல் ஏதொன்றும் பேசாமல் அவரை வணங்கிவிட்டு அவர் சொன்னபடியே, விசை முடுக்கப்பட்ட பொம்மை மாதிரி, வடக்குப் பக்கம் நோக்கி நடந்தார். கொஞ்ச தூரம் நடந்ததும் அவர் கண்ட காட்சி! மகிழ்ச்சியில் அவருக்குத் தொண்டை அடைத்தது. அந்தப் பக்கிரி சொன்னது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான். குதிரை அங்கேதான் சாதுவாய்த் தன் எசமானனை எதிர்பார்த்துக் காத்திருந்தது! அவரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கனைத்தது. தான் முன்னரே இந்த இடத்தில் தேடினோமே? அப்போது குதிரை இங்கே இருந்ததாய்த் தெரியவில்லையே? குதிரை இங்கிருப்பதை இடத்தை விட்டு நகராமலே எப்படிக் கண்டுபிடித்தார் அந்தப் பக்கிரி? அது இருக்கட்டும். தான் யார் என்பதும், குதிரையைத் தான் தேடும் விவரமும் அவருக்கு எப்படித் தெரிந்தன?

சந்தேகமில்லாமல் அவர் பெரிய மகானாகத் தான் இருக்க வேண்டும். சாதுவாய்த் தன்னைத் தொடர்ந்த குதிரையை அழைத்துக் கொண்டு, மீண்டும் பக்கிரியை நோக்கி நடந்தார் சாந்த்படீல். தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அவருக்கு பணிவு கலந்த வணக்கம் தெரிவித்தார். அவருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. வெகுதூரம் நடந்த களைப்பு. கடுமையான தாகம் தொண்டையை வாட்டியது. என்னப்பா! தாகத்தால் தவிக்கிறாய் போலிருக்கிறதே? தண்ணீர் வேண்டுமா உனக்கு? பரிவோடு கேட்டார் அந்த அதிசயப் பக்கிரி. அடுத்த கணம் நடந்த சம்பவத்தைப் பார்த்து ஏறக்குறைய மயங்கிவிழும் நிலைக்கு ஆளானார் சாந்த்படீல்...அருள்மழை கொட்டும்......
Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini