Banner 468 x 60px

 

Wednesday, December 25, 2013

நட்சத்திரப் பொது பலன்கள்

0 Facebook
அச்சுவினி :-
நட்சத்திரத்தில் பிறந்தவர் தாம் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வனே செய்பவர். மாதரின் அன்பைப் பெறுபவர். தியாகியாகத் திகழ்பவர். வீரதீர பராக்கிரமம் உடையவர். பொய் பேசாதவர். ஆடை அணி ஆபரணங்களை நேசிப்பவர். பெரும் புகழ் படைப்பவர். எழிதில் சாந்தமடையும் கோபங் கொள்பவர். சிவந்த விழிகளையும் அகன்ற மார்பையும் உடையவர். தூய்மையும் செயல் திறனும் பெற்றவர்.

பரணி ;-
நட்சத்திரத்தில் பிறந்தவர் பெற்றோரைப் பேணுபவர். ஞானியாய் மிளிர்பவர். ஆழ்ந்த நித்திரை அற்றவர். செல்வச் செழிப்பும், தரும சிந்தனையும் கொண்டவர். தரமான உணர்வும் மிக்கவர். வாசனாதி தாம்பூலப் பிரியர். இன்சொல் உடையவர். உடலில் இடது புரத்தில் மச்சம் கொண்டவர். சாதுரியம் மிக்கவர். மனைவி சொல்லுக்குக் கட்டுப்பட்டவர். மோவாய் சிறியதாக உள்ளவர்.

கார்த்திகை:-
நட்சத்திரத்தில் பிறந்தவர் அறுசுவை உணவில் விருப்பம் மிக்கவர். ஆழ்ந்த உறக்கமற்றவர். இனிமையாகப் பேச வல்லவர். தெளிந்த அறிவு படைத்தவர். பொய்யும் பேசிப் பொருள் ஈட்டுபவர். கூர்மையான அறிவு மிக்கவர். அரசின் நன்மதிப்பைப் பெறுபவர். பரிசுகளையும் பாராட்டுக்களையும் அடைபவர். உடல் வலிமை மிக்கவர். தமது கருத்தை வலியுறுத்தக் கூடியவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்.

ரோகிணி
நட்சத்திரத்தில் பிறந்தவர் தண்ணீர்த்தாகம் மிக்கவர். பிறர் கூறும் நெறியைப் பின்பற்றுபவர். புலமை மிக்கவர். உயர் பதவிகளைப் பெறுபவர். அன்னதானம் செய்வதில் ஆர்வம் உள்ளவர். இரும்பு போன்ற உலோக வணிகத்தால் உயர்பவர். பால் தயிர் நெய் போன்றவற்றில் பிரியம் மிக்கவர். நெருங்கிய புருவமும் பருத்த விழிகளும் கொண்டவர். புறம் பேசாதவர். உள்ளங் கால்களில் உறுதி உடையவர். திடமான நடையினைக் கொண்டவர்.

மிருகசீரிடம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் அதிகாலையில் நீராட விழைவர். அகன்ற விழிகளும் அழகான கேசமும் உடையவர். கல்வி அறிவு படைத்தவர். தேகபலம் மிக்கவர். தமது மனத்தில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்தாதவர். இசை நாடகம் போன்ற கலைகளில் விருப்பம் உடையவர். தாம்பூலம் தரித்து மகிழ்பவர். தாம் நினைத்த காரியத்தை செயற்படுத்துபவர். அங்கையில் வேல் போன்ற ரேகையும், படர்ந்த நெற்றியும் உடையவர்.

திருவாதிரை
நட்சத்திரத்தில் பிறந்தவர் பொய்கள் பேசுபவர். புகழ் மிக்கவர். செல்வ மற்றவர். நெடிய உருவம் உடையவர். கணுக் காலில் நோய் பெறுபவர். வீண் சச்சரவாளர். புனிதம் மிக்கவர். சிவந்த விழிகளும், சீரான கேசமும் பெற்றவர். தேகபலம் மிக்கவர். நீண்ட நாசியை உடையவர். உறவினரால் பாரட்டப்படுபவர்.

புனர்பூசம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் பேச்சாற்றல் உடையவர். அகங்காரம் மிக்கவர். சிக்கனத்தைக் கடைப் பிடிப்பவர். பல காத தூரம் சலிப்பின்றி நடக்கும் வலிமை உடையவர். கர்வமான உள்ளத்தோடு கடிந்து உறைப்பவர். பூப்போன்ற உள்ளங்கையை உடையவர். புத்தி சாதுரியம் மிக்கவர். பிறருக்குப் பரிந்து பேசுபவர். உண்மையை வலியுறுத்துபவர். பித்த நாடி மேலோங்கியவர். பலரால் பாராட்டப் பெறுபவர். ஐந்து வயதளவில் காலில் ஏதாவது பாதிப்பும் சிலருக்கு ஏற்படலாம்.

பூசம்
நட்சதிரத்தில் பிறந்தவர் பெற்றோரைப் பாதுகாப்பவர். சூட்சம பேச்சாற்றல் பெற்றவர். நெடிய உருவம் கொண்டவர். அழகிய கண்களையும் மூக்கையும் பெற்றவர். ஒழுக்க நெறி உடையவர். பரிமள கந்தாதி வபசனாதி பிரியர். பாகடகியவான் களாகவும், நற்குண சீலர்களாகவும் இருப்பார்கள்.

ஆயில்யம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் கண்களும் புருவமும் உயர்ந்து ஒருங்கப் பெற்றவர். சொற்சாதுரியம் மிக்கவர். பகைவரை வசப்படுத்துபவர். சஞ்சலம் உடையவர். பயணப் பிரியர். பஞ்சையாய்ச் சிறிதே புசிப்பவர். மாதா பிதாவிற்குப் பிரியர். இறைபக்தி கொண்டவர். வஞ்சனை அற்றுப் பிறறுக்கு உதவி புரிபவர். எதிர்ப்பை கண்டு அஞ்சாதவர்.

மகம்
நட்சத்திரத்தில் சுற்றுப் பயணத்திலும், யாத்திரையிலும் பிரியம் உள்ளவர். அங்க லட்சணம் மிக்கவர். சங்கீத சாகித்யப் பற்றுக் கொண்டவர். நீராடுவதில் இச்சையுடையவர். பரிமான கந்தாதி வாசனைப் பிரியர். பொன் பொருள் பெற்றவர். நியாயவாதியர். ஆழ்த உறக்கம் அற்றவர். உடலில் வலப்புறதிதே மச்சம் கொண்டவர்.

பூரம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் சிவந்த விழிகளை உடையவர். இனிமையாகப் பேசக் கூடியவர். கல்வித் தேர்ச்சி மிக்கவர். பெரும் உழைப்பால் பொருள் ஈட்டுபவர். எதிர்கால வினைகளை அறிந்து செயல் படுபவர். பல்பொருள் வணிகர்களாயும், தீமையைக் கடிந்துரைப்போராயும் விளங்குபர். கற்பனை சக்தி மிக்கவர்.

உத்திரம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் பிறர் மனம் நோகாது பேசுபவர். செயல் திறம் மிக்கவர். பலதிறப்பட்ட வித்தைகளைக் கற்றவர். அமைப்பான விழிகளையும் வாயையும் உடையவர். நீராடுவதில் பிரியர். பசியற்றவர். தெய்வ பக்தி கொண்டவர். தரும சிந்தை உடையவர்.

அத்தம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் தாமச குணம் உடையவர். கல்வி ஞானம் மிக்கவர். பசியற்றவர். அரசால் பாராட்டப் படுபவர். குறிப்பறிந்து பிறரை மகிழ்விப்பவர். அஞ்சா நெஞ்சினர். அங்க லட்சணம் பொருந்தியவர். நற்புத்தி மிக்கவர். முதுமை வயதில் செல்வம் பெறுவர். அகன்ற மார்பு உடையர். புறங்கால் வலிமை பெற்றவர். தீர்த்த யாத்திரைப் பிரியர். தானதருமம் செய்ய விழைபவர். குருபக்தி பூண்டவர்.

சித்திரை
நட்சத்திரத்தில் பிறந்தவர் கோபம் மிக்கவர். சஞ்சலம் கொண்டவர். உலோப குணம் படைத்தவர். ஆழ்த உறக்கம் அற்றவர். பிறருக்காக பரிந்து செயல்படுபவர். நற்குணம் உடையவர். தாமச புத்தியாளர். நடைப் பயணத்தில் பிரியம் மிக்கவர். உயர்தோருக்கு உற்ற நண்பராய் இருப்பவர். பரந்து விரிந்த மார்பும், தடித்த கால்களும் கொண்டவர். பலமான சரீரம் உடையவர்.

சுவாதி
நட்சத்திரத்தில் பிறந்தவர் பிறரை வசப்படுத்தும் வல்லமை பெற்றவர். பெண்களைக் கவர்பவர். கடவுள் பக்தி உள்ளவர். பொதுசேவைப் பிரியர். பெற்றோரைப் பேணுபவர். நன்றி மிக்கவர். உறுதியான உடலமைப்பு உடையவர். தொடை பாகத்தில் மச்சம் உடையவர். நீதிநெறியைக் கடைப்பிடிப்பவர். ஆயுதங்களைக் கையாள்வதில் வல்லவர்.

விசாகம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் நெடிய உருவம் உடையவர். சிரசு மார்புப் பகுதிகளில் மச்சம் உடையவர். நீதி நெறிகளை ஓம்புபவர். சுற்றத்தாலும் அரசாலும் பாராட்டப்படுபவர். பொறுமை மிக்கவர். வேதாகம ஈடுபாடு கொண்டவர். செல்வச் செழிப்பு உடையவர். பொதுத் தொண்டில் ஈடுபாடு உடையவர். பொது மக்களால் போற்றப் படுபவர். ஆயுதங்களை கையாள்பவர். முற்கோபம் கொள்பவர். மாதரால் நேசிக்கப்படுபவர்.

அனுசம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் நற்குணம் உடையவர். தாம்பூலம் தரிப்பதில் பிரியமுடையவர். பிறரால் பாராட்டப்படும் திறன் மிக்கவர். நீதி நெறிகளைப் பரிபாலனம் செய்பவர். சிவந்த கண்களை உடையவர். அரசர்களின் அபிமானத்தைப் பெற்றவர். சுகானுபவங்களை அனுபவிப்பதில் வல்லர். அகன்ற மார்பும், அழகிய கோசமும் உடையவர். பெற்றோரை மகிழ்விப்பவர். அழகுற நடக்கும் நடையினர்.

கேட்டை
நட்சதிரத்தில் பிறந்தவர், பலமுள்ளவர், தீயவர் தொடர்பு கொண்டவர், ராஜதந்திரி, தெய்வ பக்தியுடையவர். பிறர்பால் யாசகம் கேட்காதவர். மிகுந்த கோபம் கொண்டவர். மூச்சடக்கி நீராட விருப்பம் மிக்கவர். பகுத்தறியும் அறிவு படைத்தவர். தமையனை இரட்சிக்கக் கூடியவர். சிற்றூண்டிப் பிரியர். அரசுத் தெரடர்பு உடையவர். செம்பட்டை ரோமமும், சிவந்த கண்களும் கொண்டவர். வலது புறத்தே மச்சம் உடையவர். பேச்சுத் திறனால் பொய்யையும் மெய்யாக்கி விடுவதில் வல்லர். கண்டிப்பாக பேசும் குணம் படைத்தவர்.

மூலம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆழ்ந்த உறக்கம் உடையவர். புறங்கால் உயந்தவர். தனது கடமைகளைச் செய்வனே ஆற்றக்கூடியவர். தெய்வ பக்தி கொண்டவர். ஆயுதம் பிடித்துத் தொழில் செய்பவர். பெற்றோருக்கு உகந்தவர். அறிஞரின் பாராட்டைப் பெறுபவர். தின்பண்டப் பிரியர். உலோபத் தன்மை உடையவர். கல்வி கற்றோராய் இருப்பவர். சிவந்த கண்கள் உடையவர். தீமை புரிவதில் துணிச்சல் உள்ளவர். உற்றார் உறவினரோடு ஒட்டி வாழாதவர். கொடிய கோபம் கொள்பவர்.

பூராடம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் நெடிய உருவம் படைத்தவர். குறுகிய நெற்றியைக் கொண்டவர். பரிமள கந்தாதிப் பிரியர். மனச்சஞ்சலம் கொண்டவர். மேலோருக்குப் பிரியர். உற்ற நன்பராயும் உயர் தொழில் செய்பவராயும் விளங்குவர். சிற்றூண்டி உண்பதில் பிரியம் கொண்டவர். தாயாரின் பரிபூரண அன்பைப் பெற்றவர். தன்னை வந்து சார்ந்தோருக்கு ஆதரவு தருபவர். சிவப்பான சிறிய விழிகளை உடையவர், கைகால்கள் நீண்டவர், அழகுள்ளவர், வீரமும் வஞ்சகமும் கொண்டவர். புஜபல பராக்கிரம் உள்ளவர். சுற்றுப் பயணத்தில் ஆர்வம் கொண்டவர். பொய் பேசாதவர், தானதருமம் செய்யும் குணம் கொண்டவர். மாதர் மனத்தைக் கவர்பவர்.

உத்திராடம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் மாதர்களால் விரும்பப் படுபவர், கவர்ச்சியான உருவம் உள்ளவர், சரீர பலம் பெற்றவர், முகத்தில் மச்சம் உடையவர், புத்தி சாதுரியம் படைத்தவர், மூக்குப் பகுதி உயந்தவர், பேச்சாற்றல் கொண்டவர், ஆகாயப் பிரியர், ஆறு குளம் போன்ற நீர் நிலைகளில் அஞ்சாது இறங்கக் கூடியவர். உறவினர் பாசத்தைப் பெற்றவர். வைராக்கியம் படைத்தவர், பிறர் பொருள் விழையாதவர். நல்லோரால் பாராட்டப் படுபவர். இனியவை பேசும் இயல்பு கொண்டவர், தியாக குணம் படைத்தவர்.

திருவோணம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் சிறந்த கல்விமான், தமக்கெனத் தனிக்கௌ;கை உடையவர், கோபத்தைப் பாராட்டாதவர். சுற்றுப்புறச் சூழ்நிலைக் ஏற்ப நடந்து கொள்பவர். உயர்பதவி பெறுபவர். மனைவியை மகிழ்விப்பவர். வாசனை திரவியப் பிரியர். அழகிய கூந்தலை உடையவர். உற்சாகம் கொண்டவர். சிக்கனத்தைப் பேணுபவர். ஏழை எளியவர்களுக்கு உதவி மகிழ்பவர்.

அவிட்டம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் முறையான தொழில் செய்பவர். வாக்கைக் காப்பாற்றக் கூடியவர். தன்னை எதிர்ப்போர்க்கு மண்டியிடாதவர். தியாக குணம் படைத்தவர். நாசியும் பிறங்காலும் சற்று உயர்தவர். பிறர் வசையைத் தாங்கிக் கொள்ளாதவர். சுவையான ஆகாரத்தையே விரும்புவர். பெற்றோருக்கு இனியவர். மனைவி பால் பாசம் கொண்டவர். திரவியம் தேடுவதில் திறமை படைத்தவர். அறிவு ஆற்றல் அடக்கத்தோடு அழகும் அமையப் பெற்றவர். பிறர் பொருளைக் கொள்ளாதவர்.

சதயம்
நட்சத்திரத்தில் பிறந்தவர் பிறர் கூறும் வன் சொல்லைப் பொறுத்துக் கொள்ளாதவர். அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்படுவர். இனிய குணமும் புத்தி சாதுரியமும் உடையவர். கைகால்கள் வலிமை பெற்றவர். உதடுகள் இரண்டும் அழகாக அமைந்த வாயை உடையவர். பொய் பேசுவோரை வெறுக்கும் குணத்தவர். கலைஞர்களின் அபிமானத்தைப் பெற்றவர். கல்விமான், வீரமிக்கவர், மாதர்களின் நேசர், தீர்த்த யாத்திரைப் பிரியர், பல கலைகளில் வல்லர், பொன் பொருள் பெற்றவர், வழக்குகளைத் தீர்த்து வைப்பவர்.

பூரட்டாதி
நட்சத்திரத்தில் பிறந்தவர் பிறர் கூறும் பழிச் சொற்களைத் தாங்கிக் கொள்ளாதவர். வழக்குகளை சுமுகமாக தீர்த்து வைப்பவர். நெய், பால் போன்ற பண்டங்களை உண்பதில் பிரியம் உடையவர். ஒழுக்கம் உடையவர். தொழிற் கல்விப் பயிற்சி பெற்றவர். உயர்ந்த நாசியை உடையவர்.

உத்திரட்டாதி
நட்சத்திரத்தில் பிறந்தவர் தீர்த்த யாத்திரை செய்வதில் பிரியம் உடையவர். நீதி நெறியைக் காப்பவர். பிறர்க்கு உபகாரம் செய்பவர். விவேகம் உடையவர். தாம்பூலம் தரிப்பதில் ஆர்வம் உள்ளவர். புத்தி சாதுரியம் மிக்கவர். பிறர் பொருட்டு உண்மையைத் திரித்துக் கூறும் வழக்குரைக்கும் தொழில் புரிபவர். உத்தமர்களால் பாராட்டப்படுhவர். வழக்குகளை வெல்லும் வாய்ப்பு உடையவர். அகன்ற மார்பும் காதுகளும் உடையவர். பெண்களால் விரும்பி நேசிக்கப்படுபவர்.

ரேவதி

நட்சத்திரத்தில் பிறந்தவர் தன்னை நாடி வருவோருக்கு இல்லை என்னாது உதவுபவர். பிறரால் பழிக்கப்படும் தீய செயல் புரியாதவர். பக்தி உள்ளவர். பெரியோர்களிடம் விசுவாசம் உடையவர். பேச்சுச் சாதுரியம் மிக்கவர். நல்லோர் சொல்லிற்குச் செவி சாய்ப்பவர். மிக்க செல்வந்தர். மனைவியிடம் அன்பு கொண்டவர். அழகிய கண்களை உடையவர்

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini