
மார்கழியில் நாம் சிவனை மட்டுமல்லாது விஷ்ணுவையும் பூஜிக்கும் மாதமாக இம் மாதம் விளங்குகிறது .'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதாகச் சொல்வார்கள். அங்ஙனம் புனிதமான மாதமாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் மாயவனை வழிபட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 'காக்கும் கடவுள்' என்று வர்ணிக்கப்படுபவர் விஷ்ணு ஆவார்.
அவருக்கு பதினாறு திருநாமங்கள் என்று சொல்வார்கள். அவை 1. ஸ்ரீவிஷ்ணு 2. நாராயணன் 3. கோவிந்தன் 4. மதுசூதனன் 5. ஜனார்த்தனன் 6. பத்மநாபன் 7. ப்ராஜபதி 8. வராகன் 9. நரசிம் மன் 10. மாதவன் 11. ரகுதந்தனன் 12. சக்கரதாரி 13. திரிவிக்ரமன் 14. வாமனன் 15. ஜலசாயினன் 16. ஸ்ரீதரன். இந்த 16 பெயர்களுக்கும் உரிய விஷ்ணுவை, 'பெருமாள்' என்று செல்லமாக அழைக்கிறோம்.
அவருக்காக கட்டிய கோவிலை பெருமாள் கோவில் என்று சொல்கிறோம். அவரை வழிபட்டால் நமக்கு பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம். கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள். கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என
முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று.
இத் திருப்பாவை பாடி ஆண்டாள் விஷ்ணுவை வழிபட்டு சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாய் மாறியதையும் நீங்கள் அறியலாம்,
மார்கழியில் அமைந்த மிக முக்கியமான வழிபாடு.
திருவாதிரை
மார்கழி நோன்பு - பாவை நோன்பு
வைகுண்ட ஏகாதசி
போகிப்பண்டிகை
வைகுண்ட நாதனை வைகுண்ட ஏகாதசியில் வழிபட்டால் சொர்க்க லோகமான வாழ்க்கையும் நமக்கு அமையும். ரொக்கத்திற்கும் குறையும் ஏற்படாது. இந்த வருடம் மார்கழி மாதம் 27-ந் தேதி (11.1.2014 சனிக்கிழமை) ஏகாதசி வருகிறது.
வைகுண்ட ஏகாதசியின் மகத்துவம். தொடரும்.................