Banner 468 x 60px

 

Tuesday, December 31, 2013

சபரிமலையில் இளம் வெளிநாட்டு பெண்கள் !

0 Facebook
கானக வாசன் கலியுகவரதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமி கோவில் கொண்டு வாழும் புனிதமான, தெய்வீகம் நிறைந்த இடம் சபரிமலை.  இறையாற்றல் பரிபூரணமாக நிறைந்த இடம். இத் தலத்திற்கு செல்வதற்கு கார்த்திகை மாதம் 1ம் திகதி குரு ஸ்வாமி நமக்கு மாலை அணிவித்து அவரே விரதகாலத்தில் நம்மை வழி நடத்தி,  இருமுடியும்
கட்ட வைத்து , சபரிமலைக்கு அழைத்து செல்ல வேண்டும். என நியதி வகுத்தார்கள்.

அதுமட்டும் அன்றி ஐயன் விரதங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய  பழக்க வழக்கங்களான தினமும் இரண்டு வேளை (காலை, மாலை)
குளிக்க வேண்டும். சோப், எண்ணெய் மற்றும் ஷாம்புக்கள் பயன்படுத்தக்கூடாது. கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது.
காலணிகள் கட்டாயம்  அணியக் கூடாது. படுக்கை மற்றும் தலையணை பயன்படுத்தாமல்  ஒரு துணியை மட்டுமே விரித்து அதில் தலையணையில்லாமல் படுக்க வேண்டும். இப்படி விரதம் இருந்து  சபரி மலை என்னும் தெய்வீகமான தலத்திற்கு  செல்லும்  பக்தர்கள்

 பதினெட்டாம் படியை கடக்க விரதம்  இருந்ததுடன் மட்டுமன்றி இருமுடியுடன் செல்ல வேண்டும். என்பது நியதி . யோக சித்திகள் என்பதே சபரிமலையில் 18 படிகளாக இருக்கிறது.

சபரிமலையில் எந்த காலத்திலும் ஆன்மீக ஆற்றல் குறையாமல் இருந்துகொண்டே இருக்கும்.

இப்படியான  சபரிமலைக்கு  இளம் பெண்கள் செல்லக்கூடாது என்பது மற்றுமொரு மரபு மட்டும் அன்றி விதிமுறையும் கூட அப்படிப்பட்ட தலத்திற்கு

எப்படி? இவர்களை அனுமதித்தனர்.

இவர்கள் இளம் பெண்கள் இல்லையா? இவர்களுக்கு குருஸ்வாமி யாரு? கார்த்திகையில் மாலை அணிந்து கடும்விரதம் தான் இருந்தார்களா? இருமுடிகட்டி ஏன் இவர்கள் சென்றார்கள். புனிதமான 18ம் படியில் ஏறுவதற்கு தானே இருமுடியுடன் செல்ல வேண்டும். அப்படி எனின் இவர்கள் 18 படி ஏறினார்களா?

இந்த ஆண்டு ஐயன் சன்னிதானத்திற்கு மாணவிகள் செல்வதற்கு ஒரு வேளை அரசு அனுமதியளித்து விட்டதோ?

ஐயனே இந்த கலியில் இப்படியும் உனது ஆலயத்தில் நடக்கிறதா? நமது முன்னோர்கள் கட்டிக்காத்த விதிமுறையெல்லாம் காற்றுடன் பறந்து விட்டதா? சபரிகிரீசனே.....


ஸ்வாமியே சரணம் ஐயப்பா

உங்கள்  கருத்துகளை இத் தளத்தில் பதிவிடுங்கள்

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini