ஒருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் ல/ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசிக்கட்டம் தான் லக்னம்..
உதாரணத்துக்கு இந்த படத்தைப் பாருங்கள். ல/ என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டத்தில் கேது இருக்கிறது. அதாவது, கும்பத்தில் கேது உள்ளது.
இவர் கும்ப லக்னக்காரர். இவருக்குரிய தெய்வங்கள் ,விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்களைத் தரிசிக்க வேண்டும்.
இது போல, ஒருவரது லக்னத்தில் சூரியன் இருந்தால், சூரிய நாராயணர்,
சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் மகாலட்சுமி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர்,
செவ்வாய் இருந்தால் முருகன், லட்சுமி நரசிம்மர்,
புதன் இருந்தால் பெருமாள், ராமன், கிருஷ்ணர்.
குரு இருந்தால் சிவன், தட்சிணாமூர்த்தி, பெருமாள்,
சனி இருந்தால் வெங்கடாஜலபதி, சாஸ்தா (ஐயப்பன்), யோக நரசிம்மர், ஆஞ்சநேயர்,
ராகு இருந்தால் துர்க்கை,
கேது இருந்தால் விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்களைத் தரிசிக்க வேண்டும்.
இந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களைத் தினமும் ஜபிப்பது பலனை அதிகரிக்கும்.
Sunday, December 29, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 Facebook:
Post a Comment