Banner 468 x 60px

 

Friday, December 27, 2013

கலியுகத்தில் கண்ணனை கண்டாரும் உண்டோ?

0 Facebook
கார்முகில் என்னும் சொல்லைக் கேட்ட வுடனே நமக்கெல்லாம் நினைவில் வருவது இருண்டு திரண்ட மேகக் கூட்டம்தான்.
வறண்ட வயல்களில் உள்ளவர்களுக்கு- நீரை எப்பொழுது பார்க்கப்போகிறோமென்று வாடிக்கிடக்கிறவர்களுக்கு இந்த மேகக் கூட்டத்தைப் பார்த்தவுடனேயே முக மலர்ச்சி வருகிறது. மழையும் பெய்துவிட்டால் அவர் கள் ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது. இதுவே பரம பாகவதர்களுக்கு அருள் மழை யாகப் பரிணமிக்கிறது. அவர்கள் நம்மைப்போல் சாதாரண நீருக்குக் காத்திருப்பதில்லை. பரமன் அவர்கள் தாபத்துக்கு அவனுடைய கடாக்ஷ மாகிய மழையைப் பெய்து, இந்த பந்தத்திலிருந்து விடுபடும் வழியைத் தெரிவிக்கிறான். ஆகையால்தான் "கார்முகில்' என்று எல்லாரும் பரமனைப் பாடுகிறார்கள்.

நிஜமாகவே பரமன் இந்த நிறம்தானா?

அல்லது ஒருவர் முதலில் பாடிவிட்டு அதையே தொடர்ந்து எல்லாரும் பின்பற்றி வருகிறார் களா? இல்லையென்றால் யார் யார் இந்த வண்ணத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற ஐயம் பலருக்குத் தோன்றலாம். ராமாயணத்தில் வசிஷ்டர், விசுவாமித்ரர் இன்னும் அநேகர் ராமனைப் பார்த்திருக்கிறார்கள்.


வால்மீகியின் வாக்குப்படி, கிருஷ்ணாவதாரத்தில் விதுரரும் கோபிகைகளும் பார்த்து அனுபவித்த கிருஷ்ண னைப்போல் யாரும்  அனுபவிக்கவில்லை. இவையெல்லாம் கலியுகத்திற்குமுன் நடந்தவை. இக்கலியில் யார் யார் இந்தக் கார் முகில் வண்ணனைப் பார்த்திருக்கிறார்கள்?

முதலாவதாக நம்மாழ் வாரை எடுத்துக் கொள் வோம். அவர் நேரில் பரமார்த்த ஸ்வரூபத்தைப் பார்த்துப் பாடிக் கொண்டே வர, மதுரகவியாழ்வார் நமக் குத் திருவாய் மொழியினைத் தந்திருக்கிறார். அப்படி செய்து தந்துள்ள வேதத்துக்கும் சமமான அதில் என்ன சொல்கிறார்?

"ஈசன் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்.'

"கற்பகம் என்னமுதம் கார்முகில் போலும் வேங்கடம் நல்வெற்பன்.'

"கார்முகில்போல் வண்ணன், என் கண்ணனை நான் கண்டேனே!'

அழகர் திருமேனியை அனுபவிக்கும் பாட்டில்: "முந்நீர்ஞாலம் படைத்த எம்முகில் வண்ணனே.'

பரமனை எப்படியெல்லாம் கூப்பிட வேண் டும் என்று சொல்லும்போது, "பங்கயக் கண் ணன் என்கோ? பவளச் செவ்வாயன் என்கோ?' என்று சொல்லி வந்தவர் பாட்டின் கடைசி அடி யில் "சாதி மாணிக்கத்தையே' என்று கூறுகிறார்
"கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல் வண்ணன் கண்ணன், எம்மானைப் பாடி' என்றெல்லாம் பாடினார்.

அடுத்தபடியாக ஸ்ரீ ஆண்டாள் என்ற நீளாதேவியை எடுத்துக்கொள்வோம். இவள் பெரியாழ்வாரால் துளசி வனத்தில் கண்டெடுக் கப்பட்ட- ஸ்ரீமந் நாராயணன் மார்பிலுறையும் மகாலட்சுமியே என்பதை யாவரும் அறிவர். இருந்தாலும் பாரில் தோன்றியவுடனே நம் போல்தான் பரமனுக்கு ஏங்குகிறாள். இங்கு "நம்போல்' என்றது, பெரியாழ்வார் மற்றும் அடியார்களையே குறிக்கும். நமக்கு பரமனைச் சிந்திக்கவும் இந்த உலகில் காலம் கிடைப்ப தில்லை.

சம்சாரக் கடலில் தினம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயேதான் காலம் கடந்துவிடுகிறதே! திருப்பாவை என்னும் வேத சாரமாகிய பாடல்களில் ஆண்டாள் என்ன சொல்கிறாள்? "கார்மேனிச் செங்கண், ஆழி மழைக் கண்ணா, மெய்கறுத்து, முகில் வண்ணன் பேர்பாட, பூவைப் பூவண்ணா, மணி வண்ணா' என்றெல் லாம் கிருஷ்ண பரமாத் வைப் பாடுகிறாள். எல்லாம் கருமேகத்தின் திருமேனியைப் பற்றியே பாடுவதைப் பார்க்கிறோம்.

அடுத்தபடியாக கேரள நாட்டில் பிறந்து, வாதநோயினால் கஷ்டப்பட்டு, ஸ்ரீகுருவாயூரப்பனை பாடிப்பாடி, "இவையெல்லால் உண்மையா?' என்று கேட்டுக் கேட்டு, அப்பனும் "ஆம்' என்று தலையசைத்து ஆமோதிக்க, பிறகு பாடிய நாராயண நம்பூதிரிகள், நாராயணீயம் 1,023 பாடல்களைப் பாடிவிட்டு தனக்கு இன் னும் குருவாயூரப்பன் தரிசனம் கிடைக்க வில்லையே என்று ஏங்கி, தலையைக் கீழே வைத்து வணங்கி, கால்களை மேலே தூக்கிய வுடன் அப்பன் அவருக்கு நேரில் தரிசனம் தருகிறார். அதில் "அக்ரே பச்யாமி' என்று தொடங்கி அப்படியே ஒவ்வொரு அங்கங் களாக வர்ணிக்கிறார். அதிலும் இதே கார்முகில் வண்ண விளக்கங்கள்தாம்.

அடுத்து, மிகக் குறுகிய காலத்துக்குள் நம் பாரத தேசத்தில் காவேரிக் கரையில் வாழ்ந்து முக்தியடைந்த மகான் ஸ்ரீ தியாகராஜர். அவர் ராமனையே நினைந்துருகி அவனை நேரில் பட்டாபிஷேக ராமனாகப் பார்த்தவர். அவரு டைய சில கீர்த்தனைகளைக் கவனிப்போம்.

"அந்துரு தயராதுரா' என்ற கீர்த்தனத்தின் சரணத்தில், "நீர தாப சரீர' என்கிறார்.

"கோடி நதுலு' என்ற கீர்த்தனத்தின்

அநுபல்லவியில் "ஸுடிக ச்யாம ஸுந்தர மூர்த்தி நி' என்பதால், நீல வண்ண காந்தியுடைய மிகவும் கருத்த நீலமானது கார்முகிலுக்குச் சமம் என்பதையும் ஒப்புக் கொள்வோம்.

இப்படியாக பல ஆழ்வார்கள், திருத் தொண்டர்கள் பலவிதமாக அனுபவித்த பரம்பொருளின் கார்மேக நிறத்தினை- மேகங் களைக் காணும்போதாவது நாம் நினைத்தால் அவன் தன் அருள் மழையினைப் பொழிந்து நமக்கு உய்யும்வழி காட்டுவான் என்பது திண்ணம்!

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini