Banner 468 x 60px

 

Wednesday, December 25, 2013

சபரிமலை மண்டலபூஜை - 26.12.2013

0 Facebook
சபரிமலையில் நாளை மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வருகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டலகாலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற பூஜைகளின் நிறைவாக நாளை மதியம் மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மண்டலபூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள், தங்க அங்கி காணிக்கையாக வழங்கினார். இந்த அங்கி கடந்த 22ம் தேதி ஆரன்முளாவிலிருந்து புறப்பட்டது. இந்த பவனி இன்று மதியம் ஒரு மணிக்கு வருகிறது. அதன் பின்னர் பம்பை கணபதிகோயில் அருகே, பக்தர்கள் தரிசனத்துக்காக அங்கி வைக்கப்படும். மாலை 3 மணிக்கு பெட்டகத்தில் அங்கி வைக்கப்பட்டு, தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும்.
மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு, தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர். 6.15 மணிக்கு 18 படி வழியாக சன்னிதானம் வரும் அங்கியை, தந்திரி கண்டரரு மகேஷ்வரரு, மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி வாங்கி நடை அடைத்து ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிப்பர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெறும். நாளை காலை 3.15 மணிக்கு தொடங்கும் நெய்யபிஷேகம் 10.30 மணிக்கு நிறைவு பெறும். 11.50 முதல் ஒரு மணிக்குள் உள்ள முகூர்த்தத்தில், மண்டலபூஜை நடைபெறும்

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini