Banner 468 x 60px

 

Saturday, December 28, 2013

தீபங்களின் மகிமை

0 Facebook
1. தீபம் ஏற்றும் திசையின் பலன்கள்

கிழக்கு – கிரகதோஷமும், பீடையும் ஒழியும்.

மேற்கு – கடன் தொல்லை நீங்கும்,
சனி பீடை ,கிரகதோஷம், பங்காளிப்பகை தீரும்.

வடக்கு – திரண்ட செல்வம், மங்களம், திருமணம், கல்வி, சர்வ மங்களமும் உண்டாகும்.

தெற்கு – தீபம் ஏற்றுதல் கூடாது.

2. தீபம் ஏற்றும் நேரம்

காலை மூன்றிலிருந்து ஐந்து மணி வரை - சர்வ மங்களமும் உண்டாகும்.
மாலை நேரம் - குடும்ப சுகம், புத்திர சுகங்களைத் தரும்

3. இறைவனுக்கு உகந்த எண்ணெய்கள்

நெய் -              மகாலெட்சுமி

நல்லெண்ணெய் -        நாராயணன்

தேங்காய் எண்ணெய் -     கணபதி

இலுப்ப எண்ணெய் -              ருத்திரபதி, தேவதை

ஆமணக்கு எண்ணெய் -             நல்லது நடக்கும்.



இந்த ஐந்து எண்ணெய்களைக் கலந்து 45 நாட்கள் பூஜித்தால் தேவியின் அருள் கிடைக்கும்.
மூன்று எண்ணெய்களைக் கலந்து ஊற்றுவதும் தெய்வத்திற்கு உகந்தது. செல்வம் உண்டாகும்.

4. தீபத்திற்கு எண்ணெய், நெய் போடுவதன் பலன்கள்

நெய் - மிகச்சிறந்தது, சகலவித சுகத்தையும் தரும்.
நல்லெண்ணெய் - பீடைகள் விலகும்.
விளக்கெண்ணை – புகழ், பந்த சுகங்கள் கிடைக்கும்.
கடலை எண்ணெய் - தீபத்திற்கு ஊற்றக்கூடாது. ஊற்றினால் தொல்லைகள் உண்டாகும்.


5. திரிகளின் வகைகள்

பஞ்சு –                                     திரியிடுவது மிகநல்லது

தாமரை -                               இதன் நூலால் தீபம் போடுதல் தீவினை போகும்,                                                                செல்வத்தை நிலைத்து இருக்கச் செய்யும்.

வாழை -                                 இதன் நூலால் திரியிட்டால் குழந்தை பாக்கியம்,                                                              தெய்வ குற்றமும், குடும்ப சாபமும் நீங்கும்.

வெள்ளெருக்கு -                இதன் பட்டையை திரியாக செய்து தீபம் போட்டால்                                                         பெருத்த செல்வம் சேரும், பேய் பிடித்தவர்களுக்கு                                                           தொல்லைகள் நீங்கும்.

மஞ்சள் திரி –                      அம்மனின் அருள் கிட்டும் வியாதிகள் குணமாகும்.

சிவப்புத்திரி –                      திருமணதடை, செய்வினை தோசம் நீங்கும்.

வெள்ளைத்திரி –               வெள்ளைத் துணியை பன்னீரில் நனைத்து                                                                           காயவைத்து பயன்படத்தினால் நல்ல பலன்                                                                         கிடைக்கும்.


6. திரி ஏற்றும் முகப்பாகம்

ஒரு முகம் -                                 மத்திமம்

இரு முகம் -                                 குடும்ப ஒற்றுமை

மூன்று முகம் -                            புத்திர சுகம்

நான்கு முகம் -                             பசு, பரி, பாக்கியம்

ஐந்து முகம் -                                 செல்வத்தை தரும்.


இரு திரி என்றால் கிழக்கு ஒன்று, மேற்கு ஒன்றாக இருக்க வேண்டும்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini