மலைப் பிரதேசங்களில் கிடைக்கக் கூடியது வெள்ளெருக்கு என்னும் மூலிகை. இந்த மூலிகைவேரில் அமைக்கும் விநாயகரை வெள்ளெருக்கு விநாயகர் என்கிறோம். இவரை வழிபடுவது மிகவும் விசேஷம். வெள்ளெருக்கு விநாயகரை அமைப்பதற்கு வெள்ளை நிறத்தில் பூக்கும் எருக்கம் செடியையே தேர்வு செய்வார். சுமார் ஆறு ஆண்டுகள் வளர்ந்த வெள்ளெருக்கு செடி தான் சிலை செய்வதற்கு உகந்ததாம். மேலும் ஓர் அடி ஆழத்திற்குள் கிடைக்கும் வேரே உபயோகிக்க சிறந்தது என்கின்றனர்.
வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிலையை உருவாக்க சுமார் ஒருமாதம் ஆகுமாம்.
சிலை செய்வதற்கு முன்னதாக வெள்ளெருக்கு வேரிற்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜை செய்யப்படுகிறது.
வெள்ளெருக்கு விநாயகர் கிரக தோசங்களைப் போக்க வல்லவர். வீட்டில் வைத்து வணங்கி வந்தால், செல்வத்தை வாரி வழங்குவதுடன், நினைத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தருவாராம். இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
0 Facebook:
Post a Comment