Banner 468 x 60px

 

Tuesday, December 31, 2013

கிரகங்களின் சிறப்பான பலன்கள்

0 Facebook
சூரியன்:  


 லக்னத்திற்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் பரிதி எனப்படும் சூரியன் நின்றால் அந்த ஜாதகனின் வீடு தெய்வத்தால் காக்கப்படும். அத்தகையோனுக்கு நல்ல வாகன யோகமும் சத் விஷயங்களில் ஞானமும் அறிவு கூர்மையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதரவும் புதல்வர்களுக்கு யோகமும் ஏற்படும். அஞ்சா நெஞ்சனாக பகைவர்களை ஒழித்து வீரனாக விளங்குவான். 

Read more...

சபரிமலையில் இளம் வெளிநாட்டு பெண்கள் !

0 Facebook
கானக வாசன் கலியுகவரதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமி கோவில் கொண்டு வாழும் புனிதமான, தெய்வீகம் நிறைந்த இடம் சபரிமலை.  இறையாற்றல் பரிபூரணமாக நிறைந்த இடம். இத் தலத்திற்கு செல்வதற்கு கார்த்திகை மாதம் 1ம் திகதி குரு ஸ்வாமி நமக்கு மாலை அணிவித்து அவரே விரதகாலத்தில் நம்மை வழி நடத்தி,  இருமுடியும்
Read more...

கருட, சக்கர கர்வம்

0 Facebook
ரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார். அது சவுகந்தி என்ற மலரின் மணம். அவ்வகை மலர் குபேரனின் அழகாபுரி நந்தவனத்தில் மட்டுமே இருப்பது அவருக்குத் தெரியும். அந்த சூழ்நிலையில் அவருக்கு தன் வாகனமான கருடனின் மீதும், தன் ஆயுதமான சக்கரத்தின் மீதும் கவனம் சென்றது.

அவைகள் இரண்டும் நீண்டகாலமாகவே ஆணவம் கொண்டு ஆர்பாட்டம் செய்து வந்தன.
Read more...

கருட புராணம் பகுதி - 3

0 Facebook
தான தருமங்கள் விரு÷ஷாற்சனப் பலன்கள்

ஒருவன் தனது மரண காலத்திற்கு முன்பே கோதானம் முதலிய தானங்களைச் செய்வது நல்லது. பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும். தான இடமும் நல் ÷க்ஷத்திரமாக இருக்க வேண்டும். இத்தனையும் கூடியிருக்க ஒருவன் அகத்தூய்மையோடு இருந்தால் ஒரு கோடிப் பயனைத் தரும். எனவே, உத்தமப் பயனடைய, கோதானம் ஆகியவற்றை வேத சாஸ்திரங்களை ஓதி, உணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்கவேண்டும்.ஒரு பசுவை ஒருவனுக்கே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம்
Read more...

எண் ஜோதிட பொது பலன்கள் தொடர்ச்சி -4

0 Facebook
நீங்கள் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களா?

எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால் நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என நினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழைய முடியாததால், பச்சையம் பெற முடியாத இலை போலவும், தாமரை இலைத் தண்ணீர் போலவும், வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணினர்
Read more...

Monday, December 30, 2013

மகர விளக்கு பெருவிழா: சபரிமலை நடைதிறப்பு 30.12.2013

0 Facebook
பரிமலை: சபரிமலையில் "மண்டல காலம், மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றதை அடுத்து நடை அடைக்கப்பட்டது. மகர விளக்குக்காக, இன்று (டிச., 30) மாலை, மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடை திறந்ததும், "மகரவிளக்கு காலம் தொடங்கும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு, நடை திறந்ததும் நெய் அபிஷேகம் தொடங்கும். ஜன.,14 ல், "மகர விளக்கு பெருவிழா நடக்கிறது.

சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!
Read more...

நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்

0 Facebook
நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில்
Read more...

புண்ணியம் வேண்டுமா...

0 Facebook
ரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.

Read more...

எண் ஜோதிட பொது பலன்கள் தொடர்ச்சி -3

0 Facebook
ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?

5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட இவர்கள் கலை நயமிக்கவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை `சோம்பேறி\' என்று வசைபாடவர். இவர்களின் மூளை சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றது போல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர்.

பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி... பக்கத்திலிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். முடியாத சில காரியங்களைக் கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து கெயர் பெற வேண்டும் என விரும்புவர். இவர்களின் இந்த போக்கினால் தான் உலகில் பல கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள் வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூட அப்படித்தான்.

Read more...

Sunday, December 29, 2013

பரிகாசம் செய்தாலும் பலன் தருபவர்!

0 Facebook
விநாயகர் தன் மூஷிக வாகனத்தில் ஏறி சந்திர லோகம் சென்றார். பெருத்த உடம்பும், பெரிய காதும், நீண்ட ஒற்றைத் தந்தமும், தும்பிக்கையும், குட்டைக் கால்களுமாக இருந்த விநாயகரைக் கண்ட சந்திரன் ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கினான்.

இதைக் கண்ட விநாயகர், சந்திரா! நீ வெள்ளை நிறத்தில் இருப்பதால் தான் அனைவரும் உன்னை அழகன் என்று புகழ்கின்றனர். உனக்கு சுயஒளி கிடையாது. சூரியனின் ஒளியைக் கொண்டு தானே நீ பிரகாசிக்கிறாய் என்பதை மறந்து விட்டாய். மேலும், அழகற்றவர்களை பரிகாசமும் செய்கிறாய். எனவே இனி உன் அழகு போகட்டும். யார் உன்னைப் பார்த்தாலும் அவர்கள் துன்பத்திற்கு ஆளாவர், என சபித்தார். இதைக் கேட்ட சந்திரன் பயந்து போனான். தான் தோன்றிய பாற்கடலின் அடியில் போய் ஒளிந்து கொண்டான். 

உலகில் சந்திரன் இல்லாமல் இரவில் இருள் சூழ்ந்தது. சந்திரனால் வளரும் மூலிகைகள் உற்பத்தியாகாததால் உயிர்கள் நோயால் வாடின. தேவர்களும், ரிஷிகளும் மீண்டும் சந்திரன் வானில் ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். பிரம்மா அவர்களிடம், விநாயகரை வழிபட்டால் பிரச்னை தீர்ந்து நன்மை உண்டாகும் என தெரிவித்தார். அதன்படியே, தேவர்கள் சந்திரனை அழைத்து வந்து விநாயகரை வழிபடத் தொடங்கினர். 
Read more...

அவசரப்பட்டு நேர்ந்துட்டேன்! என்ன செய்யுறது!

0 Facebook
சிலபேர் அவசரப்பட்டு, அம்மா தாயே! அப்பா சிவனே! பெருமாளே! நீ மட்டும் இந்த கோரிக்கையை நிறைவேற்றி விட்டால், நான் உன் கோயிலுக்கு பசுமாடு தானமாக தருகிறேன். அல்லது ஒரு பிராமணருக்கு அதைக் கொடுத்து விடுகிறேன். கோயிலுக்கு நிலத்தை எழுதி வைக்கிறேன். தங்கம் தருகிறேன், என்றெல்லாம் நேர்ந்து விடுவார்கள்.

நேர்த்திக்குப் பிறகு, பணக்கஷ்டம் உள்ளிட்ட ஏதோ சில காரணங்களால், இவற்றைச் செய்ய முடியாமல் போய்விடும். இவ்வாறு தவிர்க்க முடியாத பட்சத்தில், மாற்றுதானம் செய்யலாம் என்று வகுத்திருக்கிறார்கள் ஜைமினி, குமரிலபட்டர் என்ற தீர்க்கதரிசிகள்.பசு வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால் அதற்குப் பதிலாக மட்டையுடன் கூடிய தேங்காய்கள், நிலம் எழுதி வைக்க முடியாவிட்டால் ஒரு சந்தனக்கட்டை, தங்கம் கொடுக்க முடியாவிட்டால், சம்பந்தப் பட்ட கோயிலுக்கு தன் உடலால் ஆன சேவை ஆகியவற்றைச் செய்யலாம். உதாரணமாக, அந்தக் கோயிலை சுத்தம் செய்வது, வரிசையை ஒழுங்குபடுத்துவது போன்றவற்றை ஏற்று செய்யலாம்.
Read more...

ஜாதகத்தை எடுங்க லக்னத்தை பாருங்க!

0 Facebook
ருவரது ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் ல/ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ராசிக்கட்டம் தான் லக்னம்..

உதாரணத்துக்கு இந்த படத்தைப் பாருங்கள். ல/ என்று குறிப்பிடப்பட்டுள்ள கட்டத்தில் கேது  இருக்கிறது. அதாவது, கும்பத்தில் கேது  உள்ளது.

இவர் கும்ப லக்னக்காரர். இவருக்குரிய தெய்வங்கள் ,விநாயகர் அல்லது ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்களைத் தரிசிக்க வேண்டும்.

இது போல, ஒருவரது லக்னத்தில் சூரியன் இருந்தால், சூரிய நாராயணர்,

சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தால் மகாலட்சுமி, பாலா, திரிபுரசுந்தரி உள்ளிட்ட அம்பிகையர்,

Read more...

கருட புராணம் பகுதி - 2

0 Facebook
சிறந்த மானிடப் பிறவி

அனைத்திலும் மானிடப் பிறவியே சிறந்தது. எல்லா உயிர்களுக்கும் உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி ஆகியன உரியவை. ஞானம் மனிதனுக்கு மட்டும் உரித்தானது. கிருஷ்ணசாரம் என்ற கருப்பு நிற மானிகள் வசிக்கும் இடம் புண்ணிய பூமி. அதில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பர்.

அந்தப் பூமியும் தேவர்களையும், முனிவர்களையும், பிதுர்க்களையும் பூசிப்பவர்களுக்கு மிக்க நன்மை உண்டாகும். பூதம், பிரேதம், பைசாசங்களுக்கு ஆவியுருவம் மட்டுமுண்டு. தேகம் பெற்ற ஜீவர்கள் சிறப்புடையவர்கள். மானிடர்களில் பிராமணர்கள் சிறப்புடையவர். அவர்களில் பிரம்ம ஞானம் உடையவர்கள் அதிகச் சிறப்புடையவர்கள் ஆவர். சுவர்க்க மோட்சம் அடைய மானிடப் பிறவியே காரணமாகிறது. மண், பெண், பொன் ஆசை கொண்டவன், அதர்மம் புரிபவன், சுயநலக்காரனாகி தீவினைகளைச் செய்பவன் ஆகியோர் நரகத்தை அடைகின்றனர். எனவே கல்வியும், வித்தையும் கற்றவனும் ஞானத்தைப் பெற வேண்டும். ஞானேந்திரியங்கள் நாசமடைய உதவுகின்றன.

உத்தம மார்க்கம்

ஒருவன் செய்த பாவ புண்ணியங்களே ஒருவனுடன் மரணத்துக்குப் பின்னும் செல்லும். எனவே, தான தர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன் பெரும் நன்மையை அடைகிறான். ஆகையால், உள்ளத் தூய்மையோடு, பக்தியுடன் தானதர்மங்கள் செய்வதும், முக்திக்குச் சாதனமான பரம பக்தி பிரபத்தி மார்க்கம் எனப்படும். அதுவே உத்தமமானதென்று பகவான் கருடனுக்குக் கூறுகிறார்.
Read more...

எண் ஜோதிட பொது பலன்கள் தொடர்ச்சி- 2

0 Facebook
நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?

மூன்றாம் எண்காரர்களின் இயல்பு  கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாத இவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர்.  இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.

சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கி நண் பர்களாகி விடுவர்.  சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன் சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம் எண் பேர்வழிகள் போதிக்கும் கலை தெரியாமலேயே பலரைக் கவர்ந்திழுக்கும் பலே கில்லாடிகளாக இருப்பர்.

மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும்
Read more...

Saturday, December 28, 2013

சாஸ்தாவும் ஐயப்பனும்

0 Facebook
எம்.எஸ். சுப்பிரமணியம்

ன்றே தெய்வம் என்பதே அடிப்படைக் கொள்கை. இருப்பினும், அலைபாயும் மனமுடைய மனித மனதிற்கு தெய்வத்திடம் பிடிமானம் ஏற்பட பல்வேறு தெய்வத் திருவுருவங்களைக் கற்பித்துள்ளனர். அத்வைத தத்துவத்தைப் பரப்பிய ஆதிசங்கரரே ஆறுவகை உருவங்களையும் அவற்றை வழிபடும் மதங்களையும் பாகுபாடு செய்து கொடுத்துள்ளார். அவையே சிவனை வழிபடும் சைவம், சக்தியை வழிபடும் சாக்தம், விஷ்ணுவை வழிபடும் வைணவம், கணபதியை வழிபடும் காணாபத்யம், குமரக் கடவுளை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் ஆகியவை.

ஆனால் மக்களோ இந்த ஆறோடும் (ஆறு உருவங்களோடும்) நிற்காமல், மனம் விரும்பிய வாறெல்லாம் உருவ வழிபாட்டை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் சமயச் சண்டைகள்தான் பெருகின. அதுகண்டு வருந்திய வள்ளலார் இராமலிங்க அடிகள், "ஜோதி (ஒளி) வடிவானவனே ஆண்டவன்' என்று சமரச சுத்த சன்மார்க்கக் கொள்கையை உருவாக்கினார்.
Read more...

எண் ஜோதிட பொது பலன்கள்

0 Facebook
நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களா?

நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா?

பழகுவதற்கு இனிமையான சுபாவம், பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, பிறரை வேலை வாங்குவதில் திறமை, மனித நேயம், எதையும் எதிர்பார்த்துப் பழகாத தன்மை போன்ற எத்தனையோ அனுகூலங்கள்.

தன் துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்த ஆலோசனை, துன்பங்களைக் கண்டு துவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத்
Read more...

தீபங்களின் மகிமை

0 Facebook
1. தீபம் ஏற்றும் திசையின் பலன்கள்

கிழக்கு – கிரகதோஷமும், பீடையும் ஒழியும்.

மேற்கு – கடன் தொல்லை நீங்கும்,
சனி பீடை ,கிரகதோஷம், பங்காளிப்பகை தீரும்.

வடக்கு – திரண்ட செல்வம், மங்களம், திருமணம், கல்வி, சர்வ மங்களமும் உண்டாகும்.

தெற்கு – தீபம் ஏற்றுதல் கூடாது.

2. தீபம் ஏற்றும் நேரம்

காலை மூன்றிலிருந்து ஐந்து மணி வரை - சர்வ மங்களமும் உண்டாகும்.
மாலை நேரம் - குடும்ப சுகம், புத்திர சுகங்களைத் தரும்

3. இறைவனுக்கு உகந்த எண்ணெய்கள்

நெய் -              மகாலெட்சுமி

நல்லெண்ணெய் -        நாராயணன்

தேங்காய் எண்ணெய் -     கணபதி

இலுப்ப எண்ணெய் -              ருத்திரபதி, தேவதை

ஆமணக்கு எண்ணெய் -             நல்லது நடக்கும்.

Read more...

விளக்குப் பூஜை நியதிகள்

0 Facebook
லைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்து பூஜை செய்யத் தொடங்க வேண்டும்.
விபூதி, சந்தணம், குங்குமம் ஆகியவற்றை திருவிளக்கின் உச்சியில் ஒரு பொட்டும், அதன் கீழ் மூன்றும், அதன் அடியின் கீழ் இரண்டும், அடியில் இரண்டமாக எட்டு இடங்களில் பொட்டிட வேண்டும்.
உச்சியில் இடும் பொட்டு நெற்றியில் இடுவதாகவும், அடுத்து மூன்று பொட்டும் முக்கண் மூர்த்தி  ( சூரியன், சந்திரன், அக்கினி ) என கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு பொட்டுக்களும் கைகள், கீழே இடும் இரண்டு பொட்டுக்களும் திருவடிகளாகக் கருதி இந்ம எட்டு இடங்களில் பொட்டிடுவது தனிச் சிறப்புடையதாகும்.

எவர்சில்வர் விளக்கு விளக்குப் பூஜைக்கு உகந்தது அல்ல. 
வீடுகளில் கூட எவர்சில்வர் விளக்கு ஏற்றுவது நல்லதல்ல.

வெள்ளி, பஞ்சலோகம், மண் விளக்குகள் பூஜைக்கு மிக உகந்தது.
ஐந்து முக விளக்குகள் மிகச் சிறந்தது.

Read more...

துளசியின் சிறப்பக்கள்

0 Facebook
இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது. துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசியின் மகத்துவத்தால் அந்த நீரும் மருத்துவ குணம் கொண்டதாக மாறும். வைணவ ஆலயங்களில் துளசி தீர்த்தம் நைவேதனமாக வழங்கப்படும். இதற்கு பெருமாள் தீர்த்தம் என்று பெயர்.

துளசிப் பூக்கள், இலைகள் யாவற்றிலும் துளசி இலையே மிகவும் சிறந்தது. மனிதர்கள் கோரியதை யெல்லாம் அளிக்கக் கூடிய சக்தி துளசியிடம் இருக்கிறது. துளசி மிகவும் பரிசுத்தமானது. பகவான் விஸ்ணுவிற்கு பிரியமானது. வைஷ்ணவி என்று அழைக்கப்படுகிறது. துளசி பகவானிடம் பக்தியும், பிறகு முத்தியும் அளிக்கக்கூடியது. மகாவிஸ்ணுவிற்கு துளசியிடம் பிரியம் அதிகம். துளசி
Read more...

வெள்ளெருக்கு விநாயகரின் விசேஷம்.

0 Facebook
லைப் பிரதேசங்களில் கிடைக்கக் கூடியது வெள்ளெருக்கு  என்னும் மூலிகை. இந்த மூலிகைவேரில் அமைக்கும் விநாயகரை வெள்ளெருக்கு விநாயகர் என்கிறோம். இவரை வழிபடுவது மிகவும் விசேஷம். வெள்ளெருக்கு விநாயகரை அமைப்பதற்கு வெள்ளை நிறத்தில் பூக்கும் எருக்கம் செடியையே தேர்வு செய்வார். சுமார் ஆறு ஆண்டுகள் வளர்ந்த வெள்ளெருக்கு செடி தான் சிலை செய்வதற்கு உகந்ததாம். மேலும் ஓர் அடி ஆழத்திற்குள் கிடைக்கும் வேரே உபயோகிக்க சிறந்தது என்கின்றனர்.
வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிலையை உருவாக்க சுமார் ஒருமாதம் ஆகுமாம்.

 சிலை செய்வதற்கு முன்னதாக வெள்ளெருக்கு வேரிற்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜை செய்யப்படுகிறது.
வெள்ளெருக்கு விநாயகர் கிரக தோசங்களைப் போக்க வல்லவர். வீட்டில் வைத்து வணங்கி வந்தால், செல்வத்தை வாரி வழங்குவதுடன், நினைத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தருவாராம். இந்த வெள்ளெருக்கு விநாயகர்.

Read more...

Friday, December 27, 2013

கலியுகத்தில் கண்ணனை கண்டாரும் உண்டோ?

0 Facebook
கார்முகில் என்னும் சொல்லைக் கேட்ட வுடனே நமக்கெல்லாம் நினைவில் வருவது இருண்டு திரண்ட மேகக் கூட்டம்தான்.
வறண்ட வயல்களில் உள்ளவர்களுக்கு- நீரை எப்பொழுது பார்க்கப்போகிறோமென்று வாடிக்கிடக்கிறவர்களுக்கு இந்த மேகக் கூட்டத்தைப் பார்த்தவுடனேயே முக மலர்ச்சி வருகிறது. மழையும் பெய்துவிட்டால் அவர் கள் ஆனந்தத்திற்கு எல்லையே கிடையாது. இதுவே பரம பாகவதர்களுக்கு அருள் மழை யாகப் பரிணமிக்கிறது. அவர்கள் நம்மைப்போல் சாதாரண நீருக்குக் காத்திருப்பதில்லை. பரமன் அவர்கள் தாபத்துக்கு அவனுடைய கடாக்ஷ மாகிய மழையைப் பெய்து, இந்த பந்தத்திலிருந்து விடுபடும் வழியைத் தெரிவிக்கிறான். ஆகையால்தான் "கார்முகில்' என்று எல்லாரும் பரமனைப் பாடுகிறார்கள்.

நிஜமாகவே பரமன் இந்த நிறம்தானா?

அல்லது ஒருவர் முதலில் பாடிவிட்டு அதையே தொடர்ந்து எல்லாரும் பின்பற்றி வருகிறார் களா? இல்லையென்றால் யார் யார் இந்த வண்ணத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற ஐயம் பலருக்குத் தோன்றலாம். ராமாயணத்தில் வசிஷ்டர், விசுவாமித்ரர் இன்னும் அநேகர் ராமனைப் பார்த்திருக்கிறார்கள்.
Read more...

சபரிமலை மண்டல காலம் நிறைவு:

0 Facebook
சபரிமலையில் "மண்டல காலம், நேற்று நடந்த மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. இனி, மகர விளக்குக்காக, டிச., 30 மாலை, மீண்டும் நடை திறக்கப்படும். சபரிமலையில் "மண்டல காலத்தின் கடைசி மூன்று நாட்கள், பக்தர்கள் கூட்டம் அதிகம். நேற்று காலை 8 மணிக்குப் பின், கூட்டம் குறைந்தது.

26.12.2013 (நேற்று) காலை 11 மணிக்கு, நெய் அபிஷேகம் நிறுத்தப்பட்டதும், கோயில் சுற்றுப்புறம் சுத்தப்படுத்தப்பட்டு, முன்புறம் உள்ள மண்டபத்தில், தந்திரி கண்டரரு மகேஷ் வரரு "களபபூஜை நடத்தினார். பின், பிரம்மகலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, அதை எடுத்து கோயிலை வலம் வந்தார். ஐயப்பனின் மூலவிக்ரகத்தில் களப அபிஷேகம் செய்யப்பட்டது. 

Read more...

கருட புராணம் பகுதி - 1

0 Facebook

18 புராணங்களில் ஒன்றான கருட புராணம் 19,000 ஸ்லோகங்கள் கொண்டது. இப்பூவுலகில் தவம் செய்வதற்குச் சிறந்த இடம் நைமிசாரணியம். அங்கிருக்கும் சவுனகாதி முனிவர்களைத் தரிசிக்க சூதமா முனிவர் வந்தார். அவரை முனிவர்கள் வரவேற்று உபசரித்து வணங்கினர். நால்வகை புருஷார்த்தங்களையும் அளிக்கவல்ல விஷ்ணு சம்பந்தப்பட்ட சாத்வீக புராணத்தைச் சொல்லுமாறு வேண்டினர். ஸ்ரீமந் நாராயணனை முன்பொரு சமயம் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வான் பணிந்து உலக நன்மையைக் கருதி ஒரு கேள்வியைக் கேட்க, பகவான் அதற்குத் தக்க விடையளித்தார். 

அவ்வாறு திருமால் கருடனுக்குக் கூறியதையே உங்களுக்குக் கூறுகிறேன் என்று கூறி கருட புராணத்தைக் கூற ஆரம்பித்தார். கருடபுராணம் அளவில் பெரியதோ, சிறியதோ அல்லாமல் நடுத்தரமானது. இது பூர்வ காண்டம் என்று இருபெரும் பகுதிகளைக் கொண்டது. பல அத்தியாயங்களையும் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் முற்பகுதி பெரியது, பிற்பகுதி சிறியது.

உலகில் ஜீவன்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணம் என்ன? ஏன் பிரேத ஜன்மம் அடைகிறது? நரகம், சொர்க்கம் அடைவோர் யார்? ஏன்? நற்கதி கிடைப்பதற்கான வழி யாது? என்றெல்லாம் கேட்க, திருமால் புன்னகையுடன் விடை தரலானார்.

Read more...

Thursday, December 26, 2013

ஐயப்பனின் முதல் தரிசனம் பெண்களுக்கு

0 Facebook
எந்தக் கோவிலாக இருந்தாலும் அந்தக் கோவிலில் குடி கொண்டுள்ள இறைவனின் புராண இதிகாச வரலாறு அடிப்படையில் தான் அந்த இறைவனுக்குரிய வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன. சில தலங்களில் துளசி இல்லை; வைணவக் கோவில்களில் திருநீறு நுழைவதில்லை. ஒவ்வொரு இறைவனுக்கும் தனித் தனி வழிபாட்டுப் பூக்கள் உண்டு; வழிபாட்டு முறைகளும் உண்டு. இந்த இறைவர்களை வணங்கும் பக்தர்களுக்கும் தனித்தனி அனுஷ்டானங்களும் உண்டு.

இறைவழிபாட்டில் காணும் இந்த வேறுபாடுகளை யாரும் காரணம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் இவைகள் கற்பிக்கப்பட்ட காரணங்கள் அன்று. இறைவனே விரும்பி ஏற்கும் வழிபாட்டு முறைகள் ; அனுஷ்டானங்கள். சபரிமலையில் குடிகொண்டுள்ள ஐயப்பனுக்கும் தனியான அனுஷ்டானங்களும் வழிபாட்டு முறைகளும் அமைந்திருப்பது வரலாற்றுப் பின்னணியோடு அமைந்த புனிதமான ஒன்றாகும்.

Read more...

லிங்க புராணம் பகுதி- 1

0 Facebook
சூதர், நைமிசாரண்யத்து முனி வர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் பதினொன்றாவது புராணம் ஆகும். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது. இதைப் பக்தியுடன் கேட்பவர் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்து இருப்பர் என்றார்.

 பஞ்ச பூதங்களின் தோற்றம்

பேரொளியாய் விளங்கும் ஜோதி சொரூபம் சிவம். அந்த ஜோதி லிங்கத்திலிருந்து அனைத்துலகுக்கும், ஆதாரமானதும், வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று. தமக்கென வித்து ஏதுமின்றி, அனைத்து உயிருக்கும் தானே வித்தாகி பிறந்திருக்கும் அப்பெருமானின் ஏவலாய் மாயையிடம் இருந்து மகத்தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடிய அகங்காரம் உண்டானது. தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது. பேரொலியிடமிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் உண்டாயின.
Read more...

மார்கழி மாதத்தில் மாயவன் வழிபாட்டின் மகத்துவம்


 
மார்கழியில் நாம் சிவனை மட்டுமல்லாது விஷ்ணுவையும் பூஜிக்கும் மாதமாக இம் மாதம் விளங்குகிறது .'மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதாகச் சொல்வார்கள். அங்ஙனம் புனிதமான மாதமாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் மாயவனை வழிபட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 'காக்கும் கடவுள்' என்று வர்ணிக்கப்படுபவர் விஷ்ணு ஆவார்.

அவருக்கு பதினாறு திருநாமங்கள் என்று சொல்வார்கள். அவை 1. ஸ்ரீவிஷ்ணு 2. நாராயணன் 3. கோவிந்தன் 4. மதுசூதனன் 5. ஜனார்த்தனன் 6. பத்மநாபன் 7. ப்ராஜபதி 8. வராகன் 9. நரசிம் மன் 10. மாதவன் 11. ரகுதந்தனன் 12. சக்கரதாரி 13. திரிவிக்ரமன் 14. வாமனன் 15. ஜலசாயினன் 16. ஸ்ரீதரன். இந்த 16 பெயர்களுக்கும் உரிய விஷ்ணுவை, 'பெருமாள்' என்று செல்லமாக அழைக்கிறோம்.

அவருக்காக கட்டிய கோவிலை பெருமாள் கோவில் என்று சொல்கிறோம். அவரை வழிபட்டால் நமக்கு பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம். கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள். கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்குச் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என
முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று.
இத் திருப்பாவை பாடி ஆண்டாள் விஷ்ணுவை வழிபட்டு சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாய் மாறியதையும் நீங்கள் அறியலாம்,

மார்கழியில் அமைந்த மிக முக்கியமான வழிபாடு.
திருவாதிரை
மார்கழி நோன்பு - பாவை நோன்பு
வைகுண்ட ஏகாதசி
போகிப்பண்டிகை

வைகுண்ட நாதனை வைகுண்ட ஏகாதசியில் வழிபட்டால் சொர்க்க லோகமான வாழ்க்கையும் நமக்கு அமையும். ரொக்கத்திற்கும் குறையும் ஏற்படாது. இந்த வருடம் மார்கழி மாதம் 27-ந் தேதி (11.1.2014 சனிக்கிழமை) ஏகாதசி வருகிறது.


வைகுண்ட ஏகாதசியின் மகத்துவம். தொடரும்.................



Read more...

Wednesday, December 25, 2013

சபரிமலை மண்டலபூஜை - 26.12.2013

0 Facebook
சபரிமலையில் நாளை மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வருகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய மண்டலகாலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற பூஜைகளின் நிறைவாக நாளை மதியம் மண்டலபூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மண்டலபூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள், தங்க அங்கி காணிக்கையாக வழங்கினார். இந்த அங்கி கடந்த 22ம் தேதி ஆரன்முளாவிலிருந்து புறப்பட்டது. இந்த பவனி இன்று மதியம் ஒரு மணிக்கு வருகிறது. அதன் பின்னர் பம்பை கணபதிகோயில் அருகே, பக்தர்கள் தரிசனத்துக்காக அங்கி வைக்கப்படும். மாலை 3 மணிக்கு பெட்டகத்தில் அங்கி வைக்கப்பட்டு, தலைச்சுமையாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்படும்.
Read more...

பிறந்த இலக்கண பலன்கள்

0 Facebook
மேஷ லக்கினம்

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் செல்வ சீமான்களாக சிறந்து விளங்குவார்கள். பொருள் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பிறரிடம் அன்பாகவும் நல்ல முறையிலும் பழகுவார்கள். பலர் போற்றிப் புகழும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் துரிதப் போக்கை உடையவர்கள். மற்றவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளை லட்சியம் செய்ய மாட்டார்கள். ஆடை ஆபரண விஷயத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும்எந்த நிலையிலும் இருக்க விரும்பக் கூடியவர்கள்.பிறருடைய நற்குணங்களைப் பாராட்டி அவர்களுடைய தகுதிக்குத் தக்க ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பார்கள். இவர்களிடம் பெரும்பாலோருக்கு மத்திம ஆயுளே பிரதானமாகக் கருதப்படுகிறது.

ரிஷப லக்கினம்

ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்கள் செல்வ சீமானாக வாழக் கூடியவராவார்கள். அன்பான மனைவி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள் ஆவார்கள். கணிதத் துறையில் வல்லவர் எனப் பெயர் எடுப்பார். இவர்களிடம் சூது, வாது, வஞ்சனைகள் குடி கொண்டிருக்கும். உண்மை பெருவாரியாக இல்லாத இடத்தில் இப்பிரிவினர் உண்மைக்குக்
Read more...

நட்சத்திரப் பொது பலன்கள்

0 Facebook
அச்சுவினி :-
நட்சத்திரத்தில் பிறந்தவர் தாம் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வனே செய்பவர். மாதரின் அன்பைப் பெறுபவர். தியாகியாகத் திகழ்பவர். வீரதீர பராக்கிரமம் உடையவர். பொய் பேசாதவர். ஆடை அணி ஆபரணங்களை நேசிப்பவர். பெரும் புகழ் படைப்பவர். எழிதில் சாந்தமடையும் கோபங் கொள்பவர். சிவந்த விழிகளையும் அகன்ற மார்பையும் உடையவர். தூய்மையும் செயல் திறனும் பெற்றவர்.

பரணி ;-
நட்சத்திரத்தில் பிறந்தவர் பெற்றோரைப் பேணுபவர். ஞானியாய் மிளிர்பவர். ஆழ்ந்த நித்திரை அற்றவர். செல்வச் செழிப்பும், தரும சிந்தனையும் கொண்டவர். தரமான உணர்வும் மிக்கவர். வாசனாதி தாம்பூலப் பிரியர். இன்சொல் உடையவர். உடலில் இடது புரத்தில் மச்சம் கொண்டவர். சாதுரியம் மிக்கவர். மனைவி சொல்லுக்குக் கட்டுப்பட்டவர். மோவாய் சிறியதாக உள்ளவர்.
Read more...

Tuesday, December 24, 2013

பிரம்ம புராணம் பகுதி - 1

0 Facebook
                                                    

  1. தோற்றுவாய் -   
                                                          புராணங்கள் என்பவை பண்டைய இலக்கியங்கள் ஆகும். அவை மகா புராணங்கள் 18, உப புராணங்கள் 18. மகா புராணங்கள் பதினெட்டின் வரிசையில் சிலர் நான்காவது வாயு புராணம் என்றும், சிலர் சிவபுராணம் என்றும் கூறுவர். மகா புராணங்களில் முதலில் தோன்றியது பிரம்ம புராணம் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுவர். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது.

புராண லக்ஷணங்கள் ஐந்து. 1. இந்தப் பேரண்டப் படைப்பு, 2. பிரளயம் மூலம் உலக அழிவும், மறுபடி தோற்றமும் 3. வெவ்வேறு மன்வந்தரங்கள் 4. சூரிய வமிச, சந்திர வமிச வரலாறு 5. அரச பரம்பரைகள் சரிதம். இந்த ஐந்தும் பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக எல்லாப் புராணங்களும் அரி, அரன், அயன் என்ற மும்மூர்த்திகளைப் பற்றி கூறினும் சிவபுராணங்களில் சிவனை உயர்த்தியும், சிலவற்றில் விஷ்ணுவை உயர்த்தியும்
Read more...

ஐயப்பமார்களுக்கான முக்கிய குறிப்புகள்

1 Facebook

1. ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியில் கட்டிய ஒரு மாலையே போதுமானது. துணை மாலை அவசியமே இல்லை.

2. முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை போடுவதில் தவறேதும் இல்லை.

3. சென்ற தடவை உபயோகித்த மாலையை அது உறுதியாய் இருக்கும் பட்சத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.

4. சபரிமலை தரிசனம் செய்தபிறகு, வழியிலேயே மாலையைக் கழற்றாமல் வீட்டுக்குத் திரும்பிய பிறகு மாலையைக் கழற்றுவது முழுமையான, முறையான, உத்தமமான செயலாகும்.

5. மாலையை ஏதாவது ஒரு கோயிலில் கழற்ற இயலாத பட்சத்தில் அம்மாவைக் கொண்டு கழற்றலாம்.
Read more...

ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வதன் மகிமை

1 Facebook
                    
 மனித இதயத்தை தசைநார்கள் சூழ்ந்துள்ளதைப் போல, நார்களால் சூழப்பட்ட தேங்காயைப் பக்தன் தேர்ந்தெடுக்கிறான். அவனது இதயத்தில் உள்ள களங்கமான எண்ணங்களை தேங்காயில் உள்ள நீருக்கு ஒப்பிடலாம். தேங்காயில் துவாரமிட்டு அதை வெளியேற்றி, நவநீதம் என்னும் சுத்தமான எண்ணங்களை பசு நெய்யாக உள்ளே ஊற்றுகிறான். தேங்காயின் துளையை அடைத்து ஐயப்பனின் திருவடியை மனதில் நினைத்து தலையில் வைக்கிறான். பக்தியுடன் சரணம் கூறி சுமந்து செல்கிறான். நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறான். அதாவது, தனது உள்ளத்தில் உள்ள ஆழ்ந்த பக்தியை ஐயப்பனுக்கு காணிக்கையாக்குகிறான். இதன் காரணமாக ஜென்ம சாபல்யம் பெற்ற ஆனந்தம் அடைகிறான்.
Read more...

துளசிமணி மாலை அணிவது ஏன்?

0 Facebook
தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் ஒன்று துளசி. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் துளசி என்று பெயர். துளசிக்கு விஷ்ணுப்பிரியா என்ற பெயரும் உள்ளது. துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத்தான் மாலையாக மணிகண்டன் அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார். பவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பன் விஷ்ணுவின் அம்சம் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள். அதுபோல், விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று.
Read more...

Monday, December 23, 2013

புராணம் ஒரு அறிமுகம்

0 Facebook

                                                             புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக்கூறுவதே என பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார். அதாவது சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம். ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப்பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனசில் பதியும். ஸத்யம் வத (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது. தர்மம் சர (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்மபுத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது. மாத்ரு தேவோ பவ. பித்ரு தேவோ பவ வாக்குக்கு ஸ்ரீராம சரித்ரம் பூதக்கண்ணாடியாய் இருக்கிறது. அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் கட்டளையிட்டுள்ளவற்றை புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படி செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும், கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.
Read more...
0 Facebook

 கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபச{தம்
உமாஸ}தம் ஸோகவிநாஸ காரணம்
நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம்.

என விநாயகரின் தாழ்பணிந்து எனது இச்சிறு முயற்சியை தொடங்குகின்றேன். 

Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini