பாச உணர்வுடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!
குரு,சனி இந்த மாதம் நற்பலனை தருவார்கள். சுக்கிரன் ஜன. 23 வரையும் , செவ்வாய் பிப்.10 வரையும் நன்மையளிப்பர். பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெரியோர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். தக்க சமயத்தில் உறவினர், நண்பர்கள் உதவி செய்வர். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஜன. 28 க்கு பிறகு எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடைபெறலாம். பிப். 8 க்கு பிறகு கணவன் - மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கூடும். முக்கிய முடிவுகளை பிப். 8 க்குள் செய்வது நல்லது. அதன் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜன. 23 க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படும்.
அரசியல்வாதிகள் சீரான பலனை பெறுவர். பிப்ரவரி 9க்கு பிறகு அலைச்சல் ஏற்படும்.
மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது
விவசாயிகள் ஆடு, மாடு மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம்.
பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். ஜன. 25,26 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சிநிலைத்திருக்கும்.
நல்ல நாள்: ஜன. 16, 17, 23, 24, 25, 26, 31, பிப். 1, 2, 3, 4, 7, 8, 9, 12
கவன நாள்: ஜன. 27, 28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: சிவப்பு, மஞ்சள்
வழிபாடு: புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.