குழந்தை பிறந்த ஒரு மாத காலம் முதல் ஒரு வருட காலம் வரை திருஷ்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தோஷம் குழந்தை இல்லாதவர்கள், குழந்தையைப் பெற்று பிறகு இழந்தவர்கள், குறைப்பிரசவத்தோடு குழந்தையைப் பெற்றவர்கள் ஆகியோரால் ஏற்படும்.
இத்தோஷம் ஏற்பட்ட குழந்தை அலறி அலறி அழும். பால் குடிக்காது. அதன் உடல் கனமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தை வணங்கி விபூதி பூசி, குடத்து நீரில் மூன்று துளிகள் குழந்தைக்கு நாவில் ஊற்றி, உடல் முழுவதும் நீரைத் தொட்டுத் தடவினால் திருஷ்டி விலகும்.
இதிலும் திருஷ்டி விலக வில்லையென்றால் இரவில் குழந்தையின் உடல் முழுவதும் கற்பூரத்தை கொண்டு தடவி, தலையை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மும்முறை சுற்றி வாய் பேசாது வாசலில் சென்று கற்பூரத்தை தரையில் வைத்துக் கொளுத்தி விட்டு வரவேண்டும்.