அமைதியை விரும்பும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதக் கடைசியில் செவ்வாய் நற்பலனைக் கொடுப்பார். இதனால் Œமூக மதிப்பு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியே. பொருளாதார வளம் உயரும். மேலும் சனி, கேது, குரு, சுக்கிரனின் பலன்களும் தொடர்ந்து கிடைக்கும். இதனால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். Œமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். புதனால் ஜன. 28 வரை செல்வாக்கு பாதிக்கப்படலாம். ஜன.23க்கு பிறகு பணவரவு இருக்கும். பிப். 8க்கு பிறகு கணவன்-மனைவி இடையே சிற்சில மனக்கசப்புகள் வரலாம். விட்டுக் கொடுத்து போகவும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஜனவரி 23க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமாய் இருக்கவும். போட்டியாளர் வகையில் தொல்லை வரலாம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மாதஇறுதியில் இந்த நிலை மாறி பொருளாதார வளம் மேம்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். ஜன.28க்குள் இடமாற்றம் காணலாம். பொருள் விரயம் ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். பெண்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு தற்போதைக்கு உரிய பலன் கிடைக்காவிட்டாலும், உங்கள் கடினமான மனப்பயிற்சிக்குரிய பலன் பின்னால் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக இருந்த தொய்வு நிலை மாதக்கடைசியில் மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். புத்தாடை, நகை வாங்கலாம். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 20, 21, 22, 25, 26, 31, பிப். 1, 2, 3, 4, 10, 11, 12.
கவனநாள்: பிப். 5, 6
அதிர்ஷ்ட எண்: 4, 6 நிறம்: மஞ்சள்,வெள்ளை
வழிபாடு: ராகு சாதகமற்ற நிலையில் உள்ளதால், காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். பைரவர் வழிபாடும் உங்களை முன்னேற்றும்.