Banner 468 x 60px

 

Saturday, January 10, 2015

அமாவாசை, பவுர்ணமியில் குழந்தை பிறந்தால் தோஷமா?

திதிகளில் மகத்துவம் நிறைந்தது பவுர்ணமி மற்றும் அமாவாசை ஆகும். அமாவாசையன்று குழந்தை பிறந்தால் தோஷம் என்று சொல்லுவார்கள். ஆனால் புது முயற்சிகளுக்கு அமாவாசை உகந்தது என்று சொல்கிறோம். அந்த நாளில்தான் கடல்நீர் மேல் நோக்கிச் செல்கிறது. ஈர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

அன்றைய தினம் ஆண்குழந்தை பிறந்தால் எந்த தோஷமும் இல்லை. திறமை மிக்கவராக விளங்குவார். பாதி வயதிற்கு மேல் பாராளும் யோகம் கூட ஏற்படும். அதே போல பவுர்ணமியன்று குழந்தை பிறப்பதும் யோகம்தான். நிலவு நிறைந்த நாளில் மலைவலம் வருகின்றோம்.

எனவே வாழ்க்கையில் சகலயோகமும் நிறைந்து, மலைக்கும் அளவிற்கு வாழ்க்கையும் உயரும். எனவே மேற்கண்ட இரண்டு திதிகளிலும் பிறந்தவர்களுக்கு தித்திப்பாக வாழ்க்கை அமையும்.
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini