Banner 468 x 60px

 

Wednesday, January 28, 2015

திருஷ்டி தோஷ நிவர்த்தி

லுமிச்சம் பழம் இறைவழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மகத்தானது.

வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டு அரைவட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும. எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.

எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேல்புறத்தில் தொங்கவிட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும். வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிட வேண்டும்.

இதனால் பார்வை திருஷ்டிகளை தடுக்கலாம். எலுமிச்சம் பழத்தை அரிந்து (இரு பிளமாக) குங்குமத்தில் தோய்த்து அதை இருகைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட திருஷ்டி விலகும்.

தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வதால் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து தற்காத்து கொள்ள முடியும்.
Read more...

Tuesday, January 20, 2015

மீன ராசி

ல்ல மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!
கடந்த மாதத்தை விட கூடுதல் பலன் எதிர்பார்க்கலாம். உங்கள் நட்புக் கிரகமான சூரியன் 11ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை. ஜன.23 வரை சுக்கிரன் நற்பலன் கொடுப்பார். குருவும், புதனும் மாதம் முழுவதும் நன்மைஅளிப்பர். இதனால் எந்த ஒரு செயலையும் துரிதமாக செய்து நல்ல வளர்ச்சிநிலை அடைவீர்கள். பணப்புழக்கம், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.அரசு வகையில் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களால் நன்மை ஏற்படும். பொன், பொருள் சேரும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் மேம்படும். லாபம் தாராளமாக இருக்கும். நிறுவனத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.பணியாளர்களுக்குச் சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வு தொடர்பாக இருந்த தடை நீங்கும். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு ஊழியர்கள் உற்சாகத்துடன் காணப்படுவர்.
சிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.

கலைஞர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். ஜன. 23க்கு பிறகு அதிகமாக முயற்சி செய்து புதிய ஒப்பந்தம் பெற நேரிடும். அரசியல்வாதிகள் நல்ல பணப்புழக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த செல்வாக்கு கிடைக்காது.

மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். புதனால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்க பெறுவீர்கள்.

விவசாயம் சிறக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் காணமுடியாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை சேரும். விருந்து விழா என சென்று வருவர். ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர். அக்கம் பக்கத்தினருடன் நட்புடன் இருப்பர்.

நல்ல நாள்: ஜன. 18, 19, 20, 21, 22, 25, 26, 29, 30,  பிப். 5, 6, 7, 8, 9

கவன நாள்:  ஜன. 15,  பிப். 10,11 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1, 9                நிறம்: செந்துõரம், பச்சை

வழிபாடு: பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு உணவும், உடையும் வழங்குங்கள். ஜன. 23க்கு பிறகு சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
Read more...

கும்ப ராசி

ழைப்பில் ஆர்வம் காட்டும் கும்ப ராசி அன்பர்களே!
உழைப்பும், விடா முயற்சியும் கொடுக்க வேண்டிய மாதமாக அமையும். திறமைக்கு சவால் விடும் காலம் இது. சுக்கிரனை தவிர மற்ற அனைத்தும் சாதகமற்ற நிலையில் உள்ளன. இதனால் எந்த ஒரு செயலையும் அதிக முயற்சி எடுத்தே செய்ய நேரிடும். வருமானம் ஓரளவு இருக்கும். எதிர்பாராமல் செலவு அதிகரிக்கும். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சுக்கிரனால் ஜன. 23 க்கு பிறகு பெண்களால் பெருமை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும். புதன் ஜன. 28ல் வக்ரம் அடைவதால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். இந்த சமயத்தில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிடும். திடீர் செலவு நேரிடலாம். சிக்கனமாக இருப்பது நல்லது. பணியாளர்களுக்கு திடீர் இடமாற்றத்தால் செலவு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்கமான சலுகைகளுக்கு குறைவில்லை. விண்ணப்பித்த கடன் கிடைக்க தாமதமாகலாம்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு எதிர்பார்த்த படி கிடைக்காமல் போகலாம். ஜன. 23 க்கு பிறகு சிறப்பான நிலை பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது.

மாணவர்களுக்கு புதன் சாதகமற்று காணப்படுவதால், கவனமுடன் படிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும்.

பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். விருந்து, விழாஎன சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வீட்டில் சமையல் செய்யும் போது கவனமாக இருக்கவும்.

நல்ல நாள்: ஜன.16, 17,1 8, 19, 23, 24, 27, 28,  பிப்., 4, 5, 6, 12

கவன நாள்: பிப்.7, 8, 9    சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2, 5                 நிறம்: வெள்ளை, ஆரஞ்ச்

வழிபாடு:   தினமும் காலையில் சூரியனை வழிபடுங்கள். புதன்கிழமை ஏழைகளுக்கு தானம்
செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாளை வணங்குங்கள்.
Read more...

மகர ராசி

மைதியை விரும்பும் மகர ராசி அன்பர்களே!
இந்த மாதக் கடைசியில் செவ்வாய் நற்பலனைக் கொடுப்பார். இதனால் Œமூக மதிப்பு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியே. பொருளாதார வளம் உயரும். மேலும் சனி, கேது, குரு, சுக்கிரனின் பலன்களும் தொடர்ந்து கிடைக்கும். இதனால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். Œமூக மதிப்பு  சிறப்பாக இருக்கும். புதனால் ஜன. 28 வரை செல்வாக்கு பாதிக்கப்படலாம்.  ஜன.23க்கு பிறகு பணவரவு இருக்கும். பிப். 8க்கு பிறகு கணவன்-மனைவி இடையே சிற்சில மனக்கசப்புகள் வரலாம். விட்டுக் கொடுத்து போகவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஜனவரி 23க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும்.  செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமாய் இருக்கவும். போட்டியாளர் வகையில் தொல்லை வரலாம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மாதஇறுதியில் இந்த நிலை மாறி பொருளாதார வளம் மேம்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். ஜன.28க்குள் இடமாற்றம் காணலாம். பொருள் விரயம் ஏற்படும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். பெண்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு தற்போதைக்கு உரிய பலன் கிடைக்காவிட்டாலும், உங்கள் கடினமான மனப்பயிற்சிக்குரிய பலன் பின்னால் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக இருந்த தொய்வு நிலை மாதக்கடைசியில் மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். புத்தாடை, நகை வாங்கலாம். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 20, 21, 22, 25, 26, 31,  பிப்.  1, 2, 3, 4, 10, 11, 12.

கவனநாள்: பிப். 5, 6

அதிர்ஷ்ட எண்: 4, 6    நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு:  ராகு சாதகமற்ற நிலையில் உள்ளதால், காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள்.  பைரவர் வழிபாடும் உங்களை முன்னேற்றும்.
Read more...

தனுசு ராசி

பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் தனுசு ராசி அன்பர்களே!
சுக்கிரன் ஜன. 23ல் இடம்மாறினாலும் மாதம் முழுவதும் நன்மையளிப்பார். செவ்வாயால் பிப். 10 வரை நன்மை உண்டாகும். சந்திரன் பெரும்பாலான நாட்கள் சாதகமாக இருப்பதாலும் நன்மை உண்டு. மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. செவ்வாயால் பக்தியுணர்வு மேம்படும். எடுத்த முயற்சியில் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. ஜன. 23 க்கு பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர்.  புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான பலன் கிடைக்கும்.  ஜன. 23 க்குள் அரசின் சலுகை கிடைக்கும். உங்கள் நேரடி பார்வையில் நிறுவனம் செயல்படுவது நல்லது. பணியாளர்களுக்கு பணிச்சுமை, வீண் அலைச்சல் ஜன. 23க்கு பிறகு மறையும். சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான நிலை காணலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். பிப். 10க்கு பிறகு அவப்பெயர் வரலாம். சக மாணவர்களுடன் வீண் விவாதம் கூடாது.

கலைஞர்கள் பெயரும், புகழும் தொடர்ந்து கிடைக்கப் பெறுவர். அரசிடம் விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் எளிதாக வந்து சேரும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மக்கள் நலப்பணியில் ஆர்வம் கூடும்.

விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். எள், பனை பொருள், மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கைவிட்டுப்போன பொருள் பிப். 10க்குள் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பைப்  பெறுவர். பிள்ளைகளின் நலனில் ஆர்வம் காட்டுவர்.

நல்ல நாள்: ஜன. 15, 18, 19, 23, 24, 29, 30, 31,  பிப்.  1, 2, 7, 8, 9, 10, 11

கவன நாள்: பிப். 3, 4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 5                  நிறம்: சிவப்பு, வெள்ளை

வழிபாடு: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். தினமும் ராமபிரானை வணங்குங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
Read more...

விருச்சிக ராசி

சுறுசுறுப்புடன் திகழும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் சாதகமான 3-ம் இடத்திற்கு வந்துள்ளார். புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்து நற்பலனை கொடுப்பார். அதோடு மாதம் முழுவதும் ராகு, குரு, சூரியன், சுக்கிரனும் நற்பலனை தருவார்கள். பெண்களால் நன்மைஅதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே  ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறு மறையும். பார்ட்னர்களிடையே ஒற்றுமை ஏற்படும். மாதக்கடைசியில் எதிர்மறையான போக்கு ஏற்படும்.  பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஜன.28க்கு பிறகு அலைச்சல் குறையும். பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பர்கள், மாத பிற்பகுதியில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைத்தால் சிக்கல் வரலாம்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு ஓரளவு ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும்.

மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் படிப்பில் பின்தங்கும் நிலை தெரிவதால், மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் சுமாரான வருமானம் காண்பர். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கால்நடைகள் கைகொடுக்கும்.

பெண்கள் சிறப்பான பலன் காணலாம். கன்னியருக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குழந்தைகளின் நடத்தையைகண்காணிப்பது நல்லது. ஜனவரி 29,30ல் நல்ல தகவல் எதிர்பார்க்கலாம். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்:  ஜனவரி 16, 17, 20, 21, 22, 27, 28, 29, 30  பிப்ரவரி  5, 6, 7, 8, 9, 12.

கவன நாள்:  ஜன. 31,  பிப். 1, 2  சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 7,9                   நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு: கேது, சனி கிரகங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாளை வணங்குங்கள். இதனால் கிரகதோஷம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.
Read more...

துலா ராசி

டப்பது நன்மைக்கே என நினைக்கும் துலாம் ராசி அன்பர்களே!
செவ்வாய் பிப். 10ல் கும்பத்தில் இருந்து மீனத்துக்கு மாறி நன்மை செய்வார். புதன் ஜன. 28 வரையும், பிப். 8 க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார். கேது, சுக்கிரனாலும் நன்மையே உண்டாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.  மனதில் அபார ஆற்றல் பிறக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜன. 23க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பிப். 8க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதேநேரம், உங்களுக்கு இடைஞ்சல் செய்தவர்களால் ஏற்பட்ட தொல்லை தீரும் ஆற்றல் பிறக்கும். ஜன. 28 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.பணியாளர்கள் சுக்கிரனின் பலத்தால் நன்மையான பலன் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த சலுகை தற்போது கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஜன. 28க்கு பிறகு புதனால் அலைச்சல் அதிகரிக்கும்.

கலைஞர்கள் சிறப்பான பலன் பெறலாம். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் நற்பெயர், பொருளாதர வளம் பெறுவர்.

மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம். ஜன. 28க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் படிப்பில் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நன்மையளிக்கும்.

விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் பிப். 10க்கு பிறகு கை கூடும்.

 பெண்கள் குதுõகலமாக இருப்பர்.

நல்ல நாள்:  ஜன.  15, 18, 19, 25, 26, 27, 28,  பிப்.  3, 4, 5, 6

கவன நாள்: ஜன. 29, 30 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 8          

நிறம்: சிவப்பு,வெள்ளை

வழிபாடு: சனியன்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாள் கோவிலுக்கும் சென்று வாருங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள்.
Read more...

கன்னி ராசி

பாச உணர்வுடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!
குரு,சனி இந்த மாதம் நற்பலனை தருவார்கள். சுக்கிரன் ஜன. 23 வரையும் , செவ்வாய் பிப்.10 வரையும் நன்மையளிப்பர்.  பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெரியோர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். தக்க சமயத்தில் உறவினர், நண்பர்கள் உதவி செய்வர். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஜன. 28 க்கு பிறகு எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடைபெறலாம். பிப். 8 க்கு பிறகு கணவன் - மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கூடும். முக்கிய முடிவுகளை பிப். 8 க்குள் செய்வது நல்லது. அதன் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜன. 23 க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படும்.

அரசியல்வாதிகள் சீரான பலனை பெறுவர். பிப்ரவரி 9க்கு பிறகு அலைச்சல் ஏற்படும்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது

விவசாயிகள் ஆடு, மாடு மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். ஜன. 25,26 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சிநிலைத்திருக்கும்.

நல்ல நாள்: ஜன. 16, 17, 23, 24, 25, 26, 31,  பிப்.  1, 2, 3, 4, 7, 8, 9, 12

கவன நாள்: ஜன. 27, 28  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,3                        நிறம்: சிவப்பு, மஞ்சள்

வழிபாடு: புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
Read more...

சிம்ம ராசி


துணிவே துணை என எண்ணும் சிம்ம ராசி அன்பர்களே!
சூரியன், புதனால் சிறப்பான பலன்கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் புதன் ஜன. 28 முதல் பிப். 8 வரை வக்ரம் அடைவதால் கவனமாக இருக்க வேண்டும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற நேரிடும்.சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாதத் தொடக்கத்தில் எடுத்த காரியம் வெற்றி பெறும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். ஜன. 28க்குப் பிறகு கணவன்- மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். புதன் பிப். 8ல் வக்ர நிவர்த்தி அடைவதால் பிரச்னைகள் மறைந்து குடும்ப ஒற்றுமை ஏற்படும். தம்பதிஇடையே அன்பு பெருகும்.

தொழில், வியாபாரிகளுக்கு பகைவரால் தொல்லை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். ஜன. 28 க்கு பிறகு கூடுதல் வளர்ச்சியும் பணவரவும் இருக்கும்.பணியாளர்கள் மாதத்தின் மத்தியில் சிறப்பான வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வு நல்ல முறையில் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் தடை குறுக்கிடலாம். ஜன.23 க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.

அரசியல்வாதிகளுக்கு கடின அலைச்சல் ஏற்படும். போட்டியாளர்களால் பிரச்னை குறுக்கிடும். மாணவர்கள் இந்த மாதம் புதனால் கூடுதல் நன்மை காணலாம். அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவர்.

விவசாயிகளுக்கு நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். விருந்து, விழா என சென்று வரும் வா#ப்பு கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன. 15, 20, 21, 22, 23, 24, 29, 30, 31,  பிப். 1, 2, 5, 6, 10, 11

கவன நாள்: ஜன.25, 26  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3, 9                 நிறம்: பச்சை, செந்துõரம்

வழிபாடு:வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள்.
ஏழைக்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுங்கள்.
Read more...

கடக ராசி

திட்டமிட்டு பணியாற்றும் கடக ராசி அன்பர்களே! இந்த மாதம் பிற்பகுதியில் நன்மை மேலோங்கும். அதற்கு காரணம் சுக்கிரன் ஜன. 23ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மனதில் உற்சாகம் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ராகு மாதம் முழுவதும் சாதகமாக நின்று நன்மை வழங்குவார். புதன் ஜன. 28 முதல் பிப்.8 வரை வக்ரம் அடைவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் குழப்பம் நிலவும். கணவன்-மனைவி இடையே உண்டான மனக்கசப்பு ஜன. 28 க்கு பிறகு மறையும். அதன் பிறகு உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் அதிகமாக உழைக்க  நேரிடும். உழைப்புக்கு மரியாதையும், வருமானமும் கிடைக்கும். ஜன. 28க்கு பிறகு பணியில் சிறப்பான பலனை பெறுவர்.

தொழில், வியாபாரிகளுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும். பொருளாதார வளம் கூடும். செவ்வாயால் பிப். 9 க்கு பிறகுஅலைச்சல் அதிகரிக்கும். எதிரியால் இடையூறு வரலாம். பகைவரை வெற்றி கொள்வீர்கள்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சிஎடுக்க வேண்டியதிருக்கும்.  புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் உழைப்புக்கேற்ற பலனை எதிர் பார்க்க முடியாது. பிப். 9க்கு பிறகு முயற்சியில் தடையும் ஏற்படும்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.  பிப். 8க்குப் பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் கடின உழைப்பு தேவைப்படும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் இருக்காது. பெண்களுக்கு அண்டை வீட்டார்
அனுகூலமாக இருப்பர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.

நல்ல நாள்: ஜன. 18, 19, 20, 21, 22, 27, 28, 29, 30,  பிப்.  3, 4, 7, 8, 9

கவன நாள்:  ஜன.14,15,16 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,7                         நிறம்: நீலம், வெள்ளை

வழிபாடு: விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும். கேதுவை அர்ச்சிப்பதால்  செயல்தடை நீங்கும்.
Read more...

மிதுன ராசி

புத்திசாலித்தனம் மிக்க மிதுன ராசி அன்பர்களே! மாத தொடக்கத்தில் நற்பலன் உண்டாகும். புதன் ஜன. 28ல் வக்ரம் அடைந்து சாதகமற்ற நிலைக்கு வந்தாலும், பிப். 8ல் வக்ரம் நிவர்த்தி அடைந்து நற்பலன் தருவார். மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டபடி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். சுக்கிரன் ஜன. 23ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். பொருளாதார வளம் மேம்படும். பெண்களால் நற்சுகம் ஏற்படும். பிப். 10க்கு பிறகு அண்டை வீட்டாரின் தொல்லை ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். செவ்வாயால் பொருள் நஷ்டம் வரலாம். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது. பணியாளர்கள் சந்தித்த பிரச்னை அனைத்தும் குருவால் இருந்தஇடம் தெரியாமல் மறையும். அரசாங்க ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும்.அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் சிறந்த மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். குரு பக்கபலமாக இருப்பதால் சற்று முயற்சி எடுத்தால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

நல்ல நாள்:  ஜன.16, 17, 18, 19, 25, 26, 27, 28, 31  பிப். 1, 2, 5, 6, 12

கவன நாள்:  ஜன. 20, 21, 22  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,6                    நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: காலையில் எழுந்து சூரியனை வணங்குங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு  தைரியத்தை வரவழைக்கும்.
Read more...

ரிஷப ராசி

சாமர்த்தியம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே! உங்கள் நட்புக்கிரகமான புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்தும், கேது மாதம் முழுவதும், சுக்கிரன் ஜன. 23வரையும், செவ்வாய் பிப். 10 முதலும் நன்மை தருவார்கள். சூரியன் 9ல் இருப்பதால் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். ஜன. 23க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கூடும்.  ஜன. 29,30 பெண்களால் பணம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக அமையும். போட்டியாளர் வகையில் தொல்லையும், மாதக்கடைசியில் வீண் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.  பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் பொல்லாப்பை சந்திக்கலாம்.  வேலைப்பளு குறைவால்
நிம்மதியாக இருக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்துசேரும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் முன்னேற்றம் காண்பர்.  மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும். மாதக் கடைசியில் புதிய சொத்து வாங்கும் நிலை உருவாகலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் நிதி நிலைமையில் வளர்ச்சியடைவர். கணவருடன் இணக்கமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜன. 16,17 மகிழ்ச்சியாக அமையும். குடும்ப சுகம் மேம்படும். விருந்து-விழா என சென்று வரலாம். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். சிறு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரைச் சந்தித்து விடுவது நல்லது.

நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 23, 24, 25, 26, 29, 30,
பிப்.  3, 4, 10, 11, 12.

கவன நாள்:  ஜனவரி  18, 19  சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 7                  நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்தியையும், செவ்வாய்,வெள்ளியில் சிவ பார்வதியையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு  உதவுங்கள்.
Read more...

தை மாத ராசி பலன் - (15.1.2015 _ 12.2.2015)

ல்லதையே நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே!  இந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்தும், ராகு மாதம் முழுமையும் நற்பலனை கொடுப்பர். செவ்வாய் பிப்.10 வரை நன்மை தருவார். சுக்கிரன் ஜன. 23ல் 11-ம் இடத்திற்கு வருவது நல்லதே.  இப்போது புதன் 10ம் இடத்தில் இருப்பதால், பெண்களால் பெரிதும் முன்னேற்றம் காண்பீர்கள். அவர்களால் பொருள் சேரும். ஜன. 28ல், 9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும்.    செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகல வசதிகளும் கிடைக்கும். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். ஜன. 31, பிப். 1,2ல் ஆடம்பரபொருள் வாங்கலாம்.  

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.   பணியாளர்களுக்கு திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டி வரும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். எதிரிகளால் தொல்லைகள், போட்டிஅதிகம் இருக்கும். ஜன. 23க்கு பிறகு நல்ல பணவரவு காணலாம்.

மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்.போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான மகசூல் பெறுவர். காய்கறிகள், பழ வகைகள் நல்ல விளைச்சலை கொடுக்கும். சொத்து வாங்க நினைப்பவர்கள் பிப்.10க்குள் பத்திரம் பதியவும்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பிப். 8க்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.

நல்ல நாள்:
ஜன. 15, 20, 21, 22, 23, 24, 27, 28, 31,
பிப். 1, 2, 7, 8, 9, 10, 11.

கவனநாள்:  ஜன. 16, 17,  பிப். 12  சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,9             நிறம்: வெள்ளை, செந்தூரம்.

வழிபாடு: கிருஷ்ணர் வழிபாடு மனதைரியத்தை வரவழைக்கும். ஜன.23 வரை வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
Read more...

Friday, January 16, 2015

2015 ஜனவரி மாத எண்ணியல் பலன்கள்


1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். இதுவரை வராமலிருந்த பாக்கிகள் யாவும் வசூலாகும். தொழிலதிபர்கள் புதிதாக தொழில்தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். வங்கியில் எதிர்பார்த்த கடன் வந்துசேரும். வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ள பொருட்கள் யாவும் நல்ல விலைக்குச் செல்லும்.

விவசாயிகள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். கோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை வைத்திருப்போரும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். உடன் பணிபுரியும் பெண் ஊழியர்களால் பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நிதானமாகச் செயல்படும் ஒவ்வொரு காரியத்திலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் உண்டு.

சுயதொழில் புரிவோருக்கு இந்த மாதம் முழுவதும் விருத்தி ஏற்படும். திருமணமாகாத ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வரன்கள் அமையும். குழந்தையே இல்லையென்று ஏங்கும் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்வு பெறுவார்கள். அரசியல் பிரமுகர்கள் புதிய பதவிகளை அடைவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 3; 4, 22, 31; 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: பெருமாள், விஷ்ணு.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் செயல்பாடுகளில் மிகுந்த கவனம் தேவை. தடை, தாமதங்கள் ஏற்படலாம். எனினும் முயற்சிக்குத் தகுந்த பலன்களை அடைவீர்கள். கடன் தொல்லை நீங்கும். புதிய வரவுகள் உங்களை மகிழ்ச்சியில் திளைக்கவைக்கும்.

பொருளாதாரம் மேம்படும். கணவன்- மனைவியிடையே வாக்குவாதம் வந்து நீங்கும். பிரிந்துவாழும் தம்பதியர் திடீரென மனம் மாறி ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். புதிய பங்குதாரர்கள் வந்துசேர்வார்கள். வியாபாரிகளுக்கு- போட்டி வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை மாறும். உங்கள் விற்பனை கூடும்.

அரசு ஊழியர் மற்றும் இதர பணியாளர்களின் வேலைப்பளு கூடும். அதிகாரிகள் பாராட்டி கௌரவப்படுத்துவார்கள். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிட்டும். ஒருசிலர் பதவி உயர்வையும் அடைவார்கள். உடல்நிலை சீராகும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டிய மாதம். கடினமாகப் படிக்கவேண்டும். அரசியல் பிரமுகர்கள் சிலர் பொதுமக்களால் வெறுக்கப்படுவார்கள். எனவே மக்கள் சேவையில் கவனமுடன் செயல்படவேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 8; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 1; 2, 11, 20; 29; 7, 25.

வணங்கவேண்டிய தெய்வம்: அம்மன் தெய்வங்கள்.

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. பெண்களால் உயர்வுண்டு. மனைவியின் யோசனையைக் கேட்டு செயல்படுபவர்கள் கூடுதல் பலன்களைப் பெறுவார்கள்.

இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். வெளிநாடு சென்று வேலைசெய்ய எடுத்த முயற்சிகள் கைகூடும். ஒருசிலர் மத்திய அரசில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். கணவன்- மனைவியிடையே இணக்கமான நிலை நீடிக்கும். ஒருசில பெண்களுக்கு தாய்வீட்டு சொத்துகள் வந்துசேரும்.

தொழிலதிபர்கள் திட்டமிட்டபடி தொழிலில் வளர்ச்சி கூடும். தொழிலாளர்கள் ஒற்றுமையும் உண்டு. வியாபாரிகளுக்கு, வியாபாரம் கூடுவதோடு பழைய பாக்கிகளும் வசூலாகும். வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் கேட்ட இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். இதுவரை இருந்துவந்த வேலைப் பளுவும் குறையும்.

பங்காளிகளுக்குள் நிலவிய சொத்துப் பிரிவினை  சம்பந்தமான பிரச்சினைகள் சுமுக தீர்வுக்கு வரும். பூர்வீக சொத்துகள் வந்துசேரும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். இதுவரை இருந்துவந்த மந்தநிலை மாறும். அரசியல் பிரமுகர்கள் அதிக பதட்டத்துடனேயே மாதம் முழுவதும் இருப்பார்கள். எதிலும் நிதானமாகச் செயல்படவேண்டும்.

அதிர்ஷ்ட தேதி: 3, 12, 21, 30; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31; 6; 17, 26; 29.

வணங்கவேண்டிய தெய்வம்: அங்காள பரமேஸ்வரி மற்றும் அம்மன் தெய்வங்கள்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாணவர்கள் கல்வி நிறுவனம் மற்றும் ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப அரசுப் பதவிகளைப் பெறுவார்கள். ஒருசிலர் வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். துணிச்சலாக அதிகநேரம் வேலைசெய்து, கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள். உங்களை மிகவும் வாட்டிவதைத்த நோய் நீங்கும்.

தொல்லை கொடுத்துவந்த உறவினர்களும் விலகிச்செல்வார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து கோரிய தம்பதியர் திடீரென ஒன்றுசேர்ந்து இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியைத் தருவார்கள். நீண்டகாலமாக தாய்- தந்தையரைவிட்டு விலகி வாழ்ந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதலை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வும் வந்துசேரும்.

தொழிலதிபர்களுக்கு, தொழிலாளர்கள் ஒற்றுமையால் உற்பத்தி கூடும். ஆனால் நிர்வாகத்தில் உள்ளவர்களால் மறைமுகத் தொல்லை வந்துபோகும். வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ள சரக்குகள் அனைத்தும் விற்பனையாகி நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. மகான்களின் தரிசனம் கிட்டும்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19, 28.

தவிர்க்கவேண்டிய தேதி: 8, 17, 26.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர், துர்க்கையம்மன்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இம்மாதம் உங்களுக்கு பொற்காலம். மாதம் முழுவதும் நல்ல பலன்களாகவே நடக்கும். நாள்தோறும் நல்ல செய்திகளையும், காரிய வெற்றிகளையும் சந்திப்பீர்கள். ஆலய தரிசனங்கள் நினைத்தபடி நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்திட போட்ட திட்டம் நிறைவேறும். புதிய பங்குதாரர்கள் வரவால் மூலதனம் உயரும். வியாபாரிகள் புதிய கிளைகளைத் தொடங்கி அதிகமான வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். இளம் விஞ்ஞானிகள் சிலர் வெளியுலகத்துக்கு வருவார்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தடையில்லாமல் கிட்டும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும்.

இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்த உடல்நலக்குறைவுகள் முற்றிலுமாகத் தீரும். பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச்செலவும் குறையும். வெளிநாடு சென்று நீண்டகாலமாக வராத பிள்ளைகள் வந்துசேர்வார்கள். மாணவர்கள் மிகவும் கவனமாகப் படிக்கவேண்டும். அரசியல் பிரமுகர்கள் சிலர் தலைமையால் பாராட்டப்பட்டு, புதிய பதவிகளையும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21.

வணங்கவேண்டிய தெய்வம்: துர்க்கை, மகாலட்சுமி, விஷ்ணு.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இதுவரை உங்களுக்கு கிடைக்காமலிருந்த பூர்வீகச் சொத்துகள் கிட்டும். அரசு ஊழியர்களில் ஒருசிலர் தற்காலிகப் பணிநீக்க தண்டனை மாறி, மீண்டும் பணியில் சேர்வார்கள். அதிகாரிகளின் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளுக்குத் திருமணம் நடக்கவில்லையே என்று ஏங்கும் பெற்றோர்களின் கவலை தீரும்; நல்ல வரன்கள் வந்துசேரும்.

வீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றிவந்த பிள்ளைகள் தங்களுக்கென ஒரு வேலையைத் தேடிக்கொள்வார்கள். கணவன்- மனைவியிடையே சண்டை வராது. குழந்தை பாக்கியமில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருள் அனைத்தையும் விற்பனை செய்து, நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் வரவால் வியாபாரம் கூடும்.

பழைய பாக்கிகள் அனைத்து வசூலாகும். இளைஞர்கள் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கப்பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும். மாணவர்கள் அதிக நாட்டத்தோடும் உற்சாகத்தோடும் படிப்பார்கள். அரசியல் பிரமுகர்கள் ஆதாய வரவுகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 6, 15, 24; 9, 18.

தவிர்க்கவேண்டிய தேதி: 3, 12, 21, 30.

வணங்கவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மாத ஆரம்பம் முதல் முடிவுவரை சுறுசுறுப்பிற்குப் பஞ்சமில்லை. பம்பரமாகச் சுழன்று வேலைசெய்வீர்கள். நல்ல வருவாயையும் பெறுவீர்கள். செலவுகள் கூடுதலாகும். அதனை சமாளிக்க மனைவியின் சேமிப்பு கைகொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த உறவுகள் விலகிச்செல்லும். பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள்; பெற்றோர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பார்கள்.

மத்திய அரசு வேலைக்குத் தேர்வெழுதி பதவி நியமன ஆணைக்காகக் காத்திருப்போரின் எண்ணம் நிறைவேறும். அரசு ஊழியர்கள் நிலுவை பாக்கிகள் வரப்பெறுவார்கள். ஒருசிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் கிட்டும். தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தங்கள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். புதியதொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். வியாபாரிகளுக்கு விற்பனையில் இருந்துவந்த மந்தநிலை மாறும். அனைத்து தரப்பு மக்களும் நல்ல பலன்களைப் பெறக்கூடிய மாதம். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். அரசியல் பிரமுகர்களில் ஒருசிலர் புதிய பதவிகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 2, 11, 20.

தவிர்க்கவேண்டிய தேதி: 7, 16.

வணங்கவேண்டிய தெய்வம்: கணபதி, சுப்பிரமணியர்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்களது முயற்சிகள் அனைத்திலும் வெற்றியையும் அதனால் நல்ல பலன்களையும் அடைவீர்கள். பொருளாதார நிலையில் இருந்துவந்த தட்டுப்பாடுகள் நீங்கும். கடன் படிப்படியாகக் குறையும். பிள்ளைகள் வகையில் தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரன்களாக அமையும். மக்களால் நன்மையடையும் காலம்.

தொழிலதிபர்கள் வெளிநாட்டில் தொழில்தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதற்கான நிதி உதவிகளும் கிடைக்கும். பங்குதாரர்கள் பக்கத்துணையாக இருப்பார்கள். வியாபாரிகள் வர்த்தகத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப அரசுப்பணியில் சேர்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்தவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். காணாமல்போன பொருட்கள் கிடைக்கும்.

அரசுப்பணியில் உள்ளவர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலைப் பெறுவார்கள். தற்காலிகப் பணி நீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் உத்தரவு பெற்று நல்ல இடத்தில் பணியில் சேர்வார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அரசியல் பிரமுகர்கள் ஒருசிலர் தலைமையின் போக்கு பிடிக்காமல் கட்சியிலிருந்து விலகுவார்கள். நிதானம் தேவை.

அதிர்ஷ்ட தேதி: 1, 10, 19; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 4, 13, 22, 31.

வணங்கவேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி,  முருகன்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த மாதம் உங்கள் காரியங்களில் முயற்சிக்குத் தக்க மேன்மையை அடைவீர்கள். பொருளாதார வரவு தடையின்றி அமையும். ஒருசிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். கணவன்- மனைவி ஒற்றுமை யில் குறைவிருக்காது. பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள்.

இளைஞர்கள் வேலைதேடி வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் அவர்கள் வேலைபார்க்கும் கம்பெனிமூலம் வெளிநாடு சென்றுவருவார்கள். பிள்ளைகளின் திருமணம் நல்லபடியாக முடியும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவாக்க போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலாளர்கள் ஒற்றுமை கூடும். மகான்களின் தரிசனம் கிட்டும்.

வியாபாரிகளுக்கு விற்பனை படுஜோராக இருக்கும். அரசு ஊழியர்களின் வேலைப்பளு கூடும். அதனை சிறப்பாகச் செய்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத் தலைவர்கள் பொருளாதார உயர்வால் மகிழ்ச்சிகொள்வார்கள். பிரிந்துசென்ற உறவுகள் மற்றும் பிள்ளைகள் வந்துசேர்வார்கள்.

அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.

தவிர்க்கவேண்டிய தேதி: 2, 11, 20, 29.

வணங்கவேண்டிய தெய்வம்:  முருகன்.

Read more...

குழந்தைக்கு திருஷ்டி விழுந்து விட்டதா?

குழந்தை பிறந்த ஒரு மாத காலம் முதல் ஒரு வருட காலம் வரை திருஷ்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த தோஷம் குழந்தை இல்லாதவர்கள், குழந்தையைப் பெற்று பிறகு இழந்தவர்கள், குறைப்பிரசவத்தோடு குழந்தையைப் பெற்றவர்கள் ஆகியோரால் ஏற்படும்.

இத்தோஷம் ஏற்பட்ட குழந்தை அலறி அலறி அழும். பால் குடிக்காது. அதன் உடல் கனமாக இருக்கும். இஷ்ட தெய்வத்தை வணங்கி விபூதி பூசி, குடத்து நீரில் மூன்று துளிகள் குழந்தைக்கு நாவில் ஊற்றி, உடல் முழுவதும் நீரைத் தொட்டுத் தடவினால் திருஷ்டி விலகும்.

இதிலும் திருஷ்டி விலக வில்லையென்றால் இரவில் குழந்தையின் உடல் முழுவதும் கற்பூரத்தை கொண்டு தடவி, தலையை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மும்முறை சுற்றி வாய் பேசாது வாசலில் சென்று கற்பூரத்தை தரையில் வைத்துக் கொளுத்தி விட்டு வரவேண்டும்.
Read more...

Wednesday, January 14, 2015

மகரவிளக்குக்கு பின் என்னென்ன பூஜைகள் நடக்கும்?

பரிமலையில் மகரவிளக்குக்கு பின் என்னென்ன பூஜைகள் நடக்கும்? பக்தர்கள் எந்த நாள் வரை தரிசனம் நடத்த முடியும் என்ற விபரங்களை தேவசம் போர்டு வெளியிட்டு உள்ளது. சபரிமலையில் இன்று மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. எனினும் வரும் 20ம் தேதி காலை 7 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பல்வேறு சடங்குகள் சபரிமலையில் நடக்கிறது.

எழுந்தருளல்: மகரவிளக்கு முடிந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து சன்னிதானத்தில் 18ம் படிக்கு முன்னர் யானை மீது எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இது ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாளிகைப்புறத்தம்மன் வருகிறார் என்பது ஐதீகம்.

படிபூஜை: 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் படிபூஜை நடைபெறும். மாலை தீபாராதனைக்கு பின்னர் 7 மணிக்கு தொடங்கும் இந்த பூஜை இரவு 8 மணி வரை நடைபெறும். இதனால் இந்த நாட்களில் மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் 18ம் படியேற முடியாது.

வரவேற்பு: பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்பட்ட போது பந்தளம் மன்னர் பிரதிநிதியாக வருபவர் 14ம் தேதி பம்பையில் தங்கி விடுவார். அவர் 16ம் தேதிதான் சன்னிதானம் வருவார். அவரை தேவசம்போர்டு சார்பில் வரவேற்கும் நிகழ்ச்சி அன்று மாலை 5 மணிக்கு பெரிய நடைப்பந்தலில் நடக்கும்.

நெய்யபிஷேகம்: 60 நாட்களாக நடந்த நெய்யபிஷேகம் 18ம் தேதி காலை 10 மணிக்கு நிறைவுபெறும். அதை தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு, தேவசம்போர்டு சார்பில் களபம் பூஜிக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனால் 18ம் தேதி காலை 10 மணிக்கு பின்னர் சன்னிதானம் வருபவர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது.

சரங்குத்திக்கு எழுந்தருளல்: 14 முதல் 17 வரை 18ம் படி முன்னர் எழுந்தருளும் மாளிகைப்புறத்தம்மன், 18ம் தேதி இரவு 9.30 மணிக்கு சரங்குத்திக்கு எழுந்தருளுவார். முதல் நான்கு நாட்கள் 18ம் படி முன்னர் செல்லும் மாளிகைப்புறத்தம்மன், ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டுகோள் விடுப்பதாகவும், கன்னி ஐயப்பன் வராத ஆண்டில் திருமணம் செய்வதாக ஐயப்பன் கூறியதாகவும், இதனால் கன்னி ஐயப்ப பக்தர்கள் சரக்கோல் ஊன்றும் சரங்குத்திக்கு மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளுவதாகவும் ஐதீகம். அங்கு மலைபோல் குவிந்துள்ள சரக்கோலை கண்டு தேவி திரும்ப கோயிலுக்கு எழுந்தருளுவார்.

தரிசனம் முடிவு: 19ம் தேதி இரவு 10 மணியுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும். 10.30க்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடக்கும்.

நடை அடைப்பு: 20ம் தேதி காலை 7 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் மேல்சாந்தி நடை அடைத்து சாவியையும், பணக்கிழியையும் கொடுப்பார். 18ம் படிக்கு கீழே வந்ததும் மீண்டும் அந்த சாவியையும், பணக்கிழியையும் மேல்சாந்தியிடம் கொடுத்து வரும் நாட்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி ஆபரணங்களுடன் மன்னர் பிரதிநிதி புறப்படுவார்.
Read more...

எண்ணும் உணவும்!

ங்கிலாந்தில் பிரபல ஜோதிட அறிஞராகத் திகழ்ந்தவர் ஷீரோ. சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இந்த அறிஞர், இந்தியாவுக்கு வந்து ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் ஜோதிடம் ஆகியவற்றைக் கற்றுத் தெளிந்தார். அத்துடன் தனது அனுபவம் மற்றும் பண்டைய நூல் ஆதாரங்களைக் கொண்டு மனிதர்களைத் தரம் பிரித்து ஆய்வு செய்து, பொதுவான பிணிகள் குறித்து அவர் தந்த குறிப்புகள் பெரிதும் வரவேற்பு பெற்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக இதய நோய்கள், படபடப்பு, ரத்த அழுத்தம் மற்றும் கண்பார்வை பாதிப்பு வரலாம். உணவுடன் ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், பேரீச்சம்பழம், குங்குமப்பூவைப் பாலில் சேர்த்து அருந்துதல் நலன் தரும்.
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு வயிறு, ஜீரணம் தொடர்பான நோய்கள், சர்க்கரை வியாதி, ஈரல் நோய், குடல், வாய்ப்புண், சிறுநீரகக் கோளாறுகள் வரலாம். இவர்கள் இனிப்பைக் குறைப்பது அவசியம். கோதுமை நன்மை தரும். முட்டைகோஸ், வாழை, முலாம்பழம், வெள்ளரிப் பழம், கீரை வகைகள் ஏற்றவை. பாகற்காய், வேப்பம் பூ ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குத் தோல் சம்பந்தமான நோய்கள், மூச்சுப்பிடிப்பு, நரம்பு நோய்கள் வரலாம். உணவுடன் நெல்லிக்கனி, மாதுளை, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, அத்திப்பழம், பாதாம் ஆகியன ஏற்றவை. ஆலிவ் எண்ணெய் உபயோகிக்கலாம். கோதுமையும் நல்லது.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரத்தச் சோகை, மனச் சோர்வு, வாயுக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் வலிகள் வரலாம். வாயுக் கோளாறு உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளியைக் குறைப்பதும் அவசியம். இஞ்சி, சுக்கு, மிளகு, திப்பிலி, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, பாரிச வாயு, தூக்கக் குறைவு வரலாம். அதீத யோசனை, வேலைகளைக் குறைக்கவும். பாதாம், பிஸ்தா, கேரட், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு மூக்கு, தொண்டை, நுரையீரல் நோய்களும், வயது ஏற ஏற இதய நோய்களும், மர்ம உறுப்புகளில் பிணிகளும் வரலாம். கீரைகள், பீன்ஸ், ஆப்பிள், மாதுளை, அன்னாசி, அத்தி, முலாம்பழம், பால், தேன் ஆகியன பலன் தரும்.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு வியர்வை மற்றும் தோல் வியாதிகள், மனச் சோர்வு, உஷ்ணக் கட்டிகள் வரலாம். இல்லாத நோய் குறித்த வீண் கவலையும் எழும். இவர்கள் கீரை வகைகள், முட்டைகோஸ், பூசணி, வெள்ளரி, திராட்சை, அன்னாசி, ஆரஞ்சுப் பழரசங்கள் அருந்துவது நல்லது.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பித்த நோய், பித்த ஜுரம், காமாலை, கை- கால் மூட்டுவலி, தலைவலி, வாத நோய்கள் வரலாம். அசைவம் மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவும். காய்-கனிகள், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உஷ்ண வியாதிகள், அம்மை நோய்கள், ரண காயங்கள் வரலாம். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனம் நல்ல பலன் தரும். நுங்கு, இளநீர் அருந்தலாம். மிளகாய், புளி நீக்க வேண்டும். மிளகு, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை சேர்க்கலாம்.
Read more...

Monday, January 12, 2015

நன்றி சொல்லுவோம் ஆதவனுக்கு !

சூரியன் - இந்த உலகின் ஆதாரம். ஆதவன் அளிக்கக்கூடிய ஆற்றலே நம்முடையதாக வெளிப்படுகிறது. அவருடைய வெப்பத்தால் உலகில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்து அனைத்து ஜீவராசிகளையும் வாழ்விக்கக் கூடிய சக்தி படைத்தவரே ஆதவன். அவரின் அசைவே காலம். அவர் எந்த ராசியில் அமர்கிறாரோ அதுவே மாதமாகவும், எந்த நேரத்தில் உதிக்கிறாரோ அதுவே நாளாகவும், தன்னுடைய ஒளியினால் மற்ற கிரஹங்களுக்கும் நக்ஷத்திர கூட்டங்களுக்கும் ஒளி பெறச் செய்து, உலகை திறம்பட வழி நடத்துபவரே சூரிய பகவான்!

நன்றி குறித்து நாளெல்லாம் பேசுகிறோம். 'நன்றி கெட்ட உலகம்’ என்று புலம்புகிறோம். உண்மையில், நம் வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை ஆற்றலை அளித்துவரும் கதிரவனுக்கு நன்றி சொல்கிறோமா என யோசியுங்கள். நம் முன்னோர்கள், தேவர்களின் காலைப்பொழுதின் முதல் மாதமான இந்த தை மாதத்தில், அதாவது சூரியன் உதிக்கக்கூடிய வேளையில், சூரியனுக்கு நன்றி சொல்வது சிறப்பானது என்று சொல்லிச் சென்றுள்ளார்கள். சூரிய நமஸ்காரம் சூரியனை குறித்த தோத்திரங்கள் சொல்வதால் தேக ஆரோக்கியம் கூடும்; மனத்துள் தெளிவு பிறக்கும்!

அதேபோல், உழவர்களுக்கும் உழவுத் தொழிலுக்குப் பயன்படும் மாடுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி செலுத்துவோம். அதனால்தான் இந்த விழாவை உழவர் திருநாள் என்று கொண்டாடுகிறோம்.

எப்படிச் செய்யவேண்டும் பொங்கல்?

பொங்கல் பானையில் பசுமஞ்சள் கிழங்கை கங்கணமாக சுற்றி, அரிசி, பால், வெல்லம், திராட்சை, முந்திரி போன்றவற்றை இணைத்து, அந்தப் பானையில் சமைத்த பொங்கலைப் பொங்கியவுடன் ஆதவனுக்கு அர்ப்பணம் செய்து, தானும் தன்  குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் பகிர்ந்து சாப்பிட்டு  பெரியோரின்  ஆசிகளைப் பெற வேண்டும்.

ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்த நாளை மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பொருள் அமைந்ததாகவும் ஆக்க நமது முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த நாளில் முன்னோர்களைக் குறித்து தர்ப்பணம் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும்.

இந்நாளில் புண்ணிய நதிகளிலோ, கடலிலோ நாம், ஸ்நானம் செய்து தான தர்மங்களைச் செய்வதால், சிறந்த பலன்களை பெறலாம் என்கின்றன நீதி நூல்கள்.

மாட்டுப்பொங்கல்

'மாதர: ஸர்வ பூதானாம்
காவ: ஸர்வ சுக்ப்ரதா:’ என்று உலகுக்கே தாயாகவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்பத்தை அளிக்கக்கூடியதுமான கோமாதா என்று போற்றக்கூடிய பசுவையும், காளைகளையும் சிறப்பாக வழிபட சிறந்த நாள்! அருகில் உள்ள பசு மடங்களுக்குச் சென்று பசுவை வழிபடுவதால், அளவற்ற இன்பம், சகல காரியங்களிலும் நன்மை, அழியாச் செல்வம் எனப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை!



Read more...

சந்ததி வளர்க்கும் தை அமாவாசை வழிபாடு!

 நம் வம்சம் வளர்வதற்கு, முன்னோர்களின் ஆசிர்வாதமும் அருளும் மிக முக்கியம். பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோரின் ஆசி கிடைக்காத வீட்டில், சுபிட்சம் தங்காது. இதை, பித்ரு தோஷம் என்பார்கள்.
பித்ரு தோஷம் என்பது நம்முடைய மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும். சங்கடங்களும் பிரச்னைகளும் அடுத்தடுத்து வந்தபடியே இருக்கும்.
சிலரது குடும்பத்தில் எப்போதும் ஏதாவதொரு சண்டை, சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். மகப்பேறு பிரச்னை ஏற்படும். பலமுறை கருக்கலைவும் உண்டாகும். குழந்தை பாக்கியம் என்பது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.
ஒரு சிலர், சுறுசுறுப்பாகவே இருக்க மாட்டார்கள்.  எதையோ பறிகொடுத்தவர்கள்போல, எதற்கோ ஏங்குகிறவர்கள்போலக் காணப்படுவார்கள். அவர்களுக்குள் ஏதோ ஓர் இனம்புரியாத சோகம் இருந்துகொண்டே இருக்கும்.
வேறு சிலர், மருத்துவர்களால்கூட இன்ன நோய் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்குப் புதுவிதமான நோய்களால் அவதிப்படுவார்கள். சிலரது தொழிலில் முடக்க நிலை ஏற்படும்.கல்வியிலும் தடை உண்டாகும்.
ஜாதகமும் தசாபுக்திகளும் நன்றாக இருந்தும், ஏன் இப்படிச் சிலருக்கு ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால், இவை அனைத்தும் பித்ரு தோஷத்தால் வந்த விளைவுகளாக இருக்கும்.
ஜாதகத்தில், சூரியன் பித்ருகாரகர் ஆவார். தந்தையைக் குறிக்கும் காரக கிரகம்.
9-ம் இடம் பித்ரு ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 9-ம் வீட்டுக்கு உரிய கிரகம் தந்தையைக் குறிக்கும்.
9-ம் பாவத்துக்குக் காரகத்துவம் உடைய கிரகம் சூரியன் தவிர, குருவும் ஆவார்.
ஒருவரது ஜாதகத்தில் சூரியனும் கரும்பாம்பான ராகுவும் 9-ஆம் இடத்தில் இருந்தால், பித்ரு தோஷம் உண்டாகும். பித்ருகாரகனான சூரியனுடன் பாபக் கிரகமான சனி சேர்ந்தாலும், பித்ரு தோஷம் உண்டாகும். சூரியனுடன் செம்பாம்பான கேது சேர்ந்தாலும், பித்ரு தோஷம் ஏற்படும்.
லக்னம் பலமானால் லக்னத்தில் இருந்தும், சந்திரன் பலமாக இருந்தால் சந்திரனில் இருந்தும் இதைப் பார்ப்பது உண்டு.  
நம் முன்னோர்கள் இறந்த பிறகு மோட்ச நிலை அடைந்துவிட்டால், அவர்களால் நமக்கு எந்தவிதத் தொந்தரவும், கெடுதல்களும் ஏற்படாது. மோட்சம் அடையாத ஆத்மாக்கள் அதை அடையும்வரை நம்முடன் தொடர்பு கொண்டிருக்கும் என்பர் பெரியோர்.
இயற்கை மரணம் அடையாதவர்கள், இளம் வயதில் நிறைவேறாத ஆசைகளுடன் மரணம் அடைந்தவர்கள், கெட்ட காரியங்களில் ஈடுபட்டவர்கள், துர்குணமும் கெட்ட பழக்கவழக்கங்களும் உடையவர்கள், அடக்கமுடியாத கோபம் உள்ளவர்கள், பழிவாங்கும் நிலையில் இறந்தவர்கள் ஆகியோர் தன் வழி வந்தவர்களுக்குப் பாதிப்பு உண்டாக்குகிறார்கள்.
நாம் என்னதான் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று வேண்டிக்கொண்டாலும், அவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப பாதிப்பு அடைவார்கள் என்பதை உறுதிபடச் சொல்கிறார்கள், முன்னோர்கள்!

இதனால்தான் இந்து தர்ம நெறிப்படி பித்ரு தோஷ நிவர்த்தி செய்யப்படுகிறது.
மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றி, மண்ணுலகில் வாழ்ந்து, மீண்டும் அவரிடமே ஐக்கியமாகிறோம். இதையே முக்தி அடைதல் என்கிறோம்.
முக்தி அடைந்தவர் யார், அடையாதவர் யார் என்பதை நம்மால் அறியமுடியாது. எனவே, இறந்த நம் முன்னோர்கள் அனைவருமே முக்தி பெறவேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்வதே சிறப்பு. இது, இறந்து போனவருக்கும் சாந்தியைத் தரும். வாழ்கின்ற நமக்கும் நிம்மதியைக் கொடுக்கும். அடுத்து வரும் நம் தலைமுறைகளும் சிறப்புற்று வாழும்.  
நினைவு நாள் மட்டுமின்றி, மாதந்தோறும் அமாவாசை நாளில், முன்னோருக்கான காரியத்தைச் செவ்வனே செய்பவர் வீட்டில், பீடைகள் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு அமாவாசை நாளிலும், இறந்தவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பது அவசியம். எவ்வளவு வேலைகள், பண நெருக்கடிகள் இருந்தாலும், வருடம் ஒருமுறை செய்யவேண்டிய சிராத்தத்தைத் தவறாமல் செய்ய வேண்டும்.
பசுவின் சாணத்தால் செய்த வறட்டியால், வீட்டில் வேத விற்பன்னர்களைக் கொண்டு அக்னி வளர்த்து, அதில் பசு நெய்யால் ஆஹுதி செய்வதுடன், நம் முன்னோர்களின் (இறந்தவர்களின்) பெயர்களைச் சொல்லி சாதத்தையும் நெய்யையும் அதில் இட்டு பிண்ட தானம் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கிவிடும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அமாவாசை நாளில், பித்ருக்கள் நெகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது உறுதி!
வேத விற்பன்னர்களைக் கொண்டு வீட்டில் தில ஹோமமும் செய்து பித்ரு கடமையைச் செய்யலாம். பசுவுக்கு உணவு கொடுப்பதன் மூலமும், ஏழைப் பெண் யாரேனும் திருமணம் ஆகாமல், பொருளாதார நெருக்கடியால் சிரமப்படுகிறார் என்றால், அவரது திருமணம் நடைபெற உதவி செய்வதன் மூலமும் பித்ரு தோஷம் நீங்கும்.
அமாவாசையில், புனித நதிகளில் நீராடி, பித்ரு கடன் தீர்ப்பதும் பாவம் போக்கவல்லது என்பார்கள். குறிப்பாக ராமேஸ்வரம், காசி, கயா ஆகிய புனித இடங்களுக்குச் சென்று பித்ரு தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். காவிரி, தாமிரபரணி முதலான புண்ணிய நதிகளில் நீராடலாம். பித்ரு காரகன் சூரியனுக்கு உகந்த மாணிக்கக் கல்லை மோதிர விரலில் அணிவதும் சிறப்பு சேர்க்கும்.  
மந்திரங்களிலேயே உயர்ந்தது எனப் போற்றப்படுவது ஸ்ரீகாயத்ரி மந்திரம். அந்த மந்திரத்தைத் தினமும் 108 அல்லது 1008 முறை சொல்வது நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் ஜபிக்கிறோமோ அந்த அளவுக்கு நன்மை உண்டாகும். முகத்தில் தேஜஸ் கூடும். மனதுள் தெளிவு குடிகொள்ளும். பித்ரு தோஷம் மட்டுமல்லாது, எல்லாவித தோஷங்களும் நீங்கும்.
அமாவாசை அன்றோ, முன்னோர்களின் நினைவு நாளன்றோ பாலால் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதும் நல்லது.
மாதந்தோறும் வருகிற அமாவாசையை விட, தை அமாவாசை, மஹாளய பட்ச அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகியவை மிகுந்த புண்ணியத்தைத் தருகிற முக்கியமான நாட்கள். எனவே வருகிற தை அமாவாசை நாளில், முன்னோர்களை ஆராதனை செய்யுங்கள்.
'முன்னோர்கள் இறந்த தேதி மறந்துடுச்சே! அதனாலதான் நான் திதி, திவசம்னு எதுவும் பண்ணமுடியாம தவிச்சுக்கிட்டிருக்கேன்’  எனப் புலம்புவோரும் தை அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகிய நாட்களில் திதி கொடுத்து, முன்னோர்களை வணங்கி வழிபடலாம். இதனால், பித்ருக்களின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும்.
குருவும், பித்ருக்களுக்குக் காரகர். எனவே, குருவருள் கிடைத்துவிட்டால், சகல தோஷங்களும் நம்மை விட்டு அகலும். ஆகவே, தை அமாவாசை நாளில், குருவைத் தியானிப்போம். முன்னோர் கடமையைச் செய்து அவர்களின் ஆசியைப் பெறுவோம்.
Read more...

அள்ளித்தரும் ஐந்து யோகங்கள்!

ராசி சக்கரத்தில் சில கிரகங்களின் நிலை அல்லது இணைவு, யோகம் எனப்படும். இந்த இணைவின் மூலமாக ஜாதகத்தின் பலன் கூடவோ, குறையவோ செய்யும். சுபகிரகங்களின் நல்ல அமைப்பு சுபயோகங்களைத் தரும். இந்த சுபயோகங்கள் தனயோகம் (செல்வம் தரும் அமைப்பு), ராஜயோகம் (பெயர், புகழ், மதிப்பு தரும் அமைப்பு) எனப் பல்வேறு விதமாக அமையும். மிகவும் உயர்தரமான கஜகேசரி, பஞ்சமஹா புருஷ யோகம் போன்றவையும் உள்ளன. பழைமையான ஜோதிட நூல்களில் இவ்வாறான யோகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.
பஞ்சமஹா புருஷ யோகங்கள்
ருசக, பத்ரா, ஹம்ஸ, மாளவ்யா மற்றும் சசயோகம் என ஐவகை யோகங்கள் உள்ளன. இவை முறையே செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களால் ஏற்படுகின்றன. மேற்கண்ட கிரகங்கள் கேந்திர வீட்டில் இருப்பதுடன், மேற்படி வீடு அந்தக் கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச வீடாகவும் இருக்க வேண்டும்.
ருசக யோகம்
செவ்வாய் தனது சொந்த ராசிகளாகிய மேஷம், விருச்சிகம் அல்லது உச்ச ராசியாகிய மகரத்தில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாகவும் அமைவது ருசக யோகம் ஆகும். நல்ல உறுதியான உடலையும், வேகமான தன்மையையும் இது தருகிறது.
ருசக யோகத்தில் பிறந்தவர் நீண்ட முகம் உடையவர்; தீரமான செயல்கள் புரிந்து, செல்வம் சம்பாதிப்பவர்; தைரியமானவர்; எதிரிகளை வெல்பவர்; அதிகாரம், வலிமை உள்ளவர். தன் திறமையால் புகழ்பெறுபவர். தன் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடைபவர். அரசனுக்குச் சமமானவர். தியாகம் செய்யத் தயங்காதவர். பக்தி உடையவர். விஞ்ஞானி. 70 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் உடையவர்.
பத்ரா யோகம்

புதன் தனது மிதுனம் அல்லது கன்னி ராசிகளில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாகவும் அமைவது பத்ரா யோகம் ஆகும்.
பத்ரா யோகத்தில் பிறந்தவர் அதிர்ஷ்டமானனவர், வலிமையான உடலுடையவர், சுத்தமானவர், கற்றவரும் பாராட்டும்படி உள்ளவர். மிகப் பெரும் செல்வந்தர். பிறவியிலேயே அறிவாளி. நல்ல பேச்சாளர். தன் பேச்சில் யாரையும் கவரும் திறம் உடையவர். புலி போன்ற வேகமும், யானை போன்ற நடையும், அகன்று விரிந்த மார்பும், நீண்ட கைகளும், உயரமும் அதற்கு ஏற்ற பருமனும் உடையவர். புகழும், 80 வயதுக்கு மேற்பட்ட ஆயுளும் உடையவர்.
ஹம்ஸ யோகம்
குரு தனது சுய ராசிகளாகிய தனுசு, மீனம் அல்லது உச்ச ராசியாகிய கடகத்தில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாக அமைவது ஹம்ஸ யோகம் ஆகும். பாலையும் நீரையும் பிரித்து எடுக்கும் குணம் கொண்ட ஹம்ஸம் எனும் அன்னம் போன்றவர். அழகு, வசதி வாய்ப்புகள், சுயமரியாதை, தூய்மையான மனம், சரியான தீர்ப்பு இவற்றோடு ஊதாரிக் குணமும் உள்ளவர்.
ஹம்ஸ யோகத்தில் பிறந்தவர் நல்லவரால் புகழப்பெறுவார். அவர் கைகளிலும், கால்களிலும் சங்கு, தாமரை, மீன், அங்குசம் போன்ற ரேகைகள் இருக்கும். நன்னடத்தையும், அழகான உடலும், உயர்ந்த சிறப்பான உணவைப் புசிப்பவரும் ஆவார். சகலத்தையும் அறிந்த வராகவும் ஆசாரமாகவும் இருக்கும் இவர், 80 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் உடையவர்.
மாளவ்ய யோகம்
சுக்கிரனால் அமையும் யோகம் மாளவ்ய யோகம். சுக்கிரன் தனது சுய ராசிகளாகிய ரிஷபம், துலாம் அல்லது உச்ச ராசியாகிய மீனத்தில் இருக்க, மேற்படி ராசி கேந்திர வீடாக அமைவது மாளவ்ய யோகம் ஆகும்.
மாளவ்ய யோகத்தில் பிறந்தவர் உறுதியான உடல், செல்வம், உறுதியான மனம், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, அறிவான குழந்தைகள், நல்ல அதிர்ஷ்டம், செல்வச் செழிப்பு, சுவையான நல்லுணவு, சந்தோஷங் களை அனுபவித்தல், நல்ல வாகன வசதி, புகழ், கல்வி உடையவர் ஆவார். தீர்க்கமான புலன்கள் உடையவர். அழகான கண்கள்; தாராள குணம்;  75 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் உடையவர்.
சச யோகம்
சனி தனது சுய ராசிகளான மகரம், கும்பம் அல்லது உச்ச ராசியாகிய துலாமில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாக அமைவது சச (மக்கள்) யோகம் எனப்படும்.
சச யோகத்தில் பிறந்தவர் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, ஏராளமான செல்வம் ஆகியவற்றை உடையவர். எல்லோராலும் புகழப்படுபவர், நல்ல வேலையாட்கள் அமைவர். வலிமையானவர், ஒரு கிராமம் அல்லது நிலப்பகுதிக்குத் தலைவராக விளங்குவார்.  மகிழ்ச்சி உடையவர்.  தாயிடம் பணிவுள்ளவர். கருமை நிறம்; 70 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் உள்ளவர்.
பஞ்ச மஹா புருஷ யோகங்கள் லக்னத்திலிருந்து அமைவதைப் பார்த்தோம். இவ்வாறே சந்திரனிலிருந்து அமைந்தாலும், அவையும் 'பஞ்சமஹா புருஷ யோகங்கள்’ எனப்படும்.

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்
Read more...

Saturday, January 10, 2015

யோகம் நல்ல யோகம்!

ல்லாவற்றுக்கும் ஒரு யோகம் வேணுமப்பா’ என்பார்கள் கிராமப்புறங்களில்! மனிதனின் சாதனைக்கும், உயர்வுக்கும் உரிய காலத்தை 'யோக காலம்’ என்றும் சொல்லி வைத்தார்கள். ஜோதிடம் சார்ந்த ஞானநூல்களும் கிரக அமைப்புகளைக் கொண்டு பல்வேறு யோகங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றுள் சில யோகங்கள்...
 ( இசை யோகம்... )
சாம்ராஜ்ய யோகம்: லக்னம் கன்னியாக அமைந்து, சனி 10-ம் பாவத்திலும், சுக்கிரனும் புதனும் 5-ம் பாவத்திலும், குருவும் சந்திரனும் 7-ம் பாவத்திலும் இருந்தால், சாம்ராஜ்ய யோகம் ஏற்படும். செல்வம், செல்வாக்கு ஓங்கும். அதேபோன்று, லக்னத்துக்கு 7, 9-ம் பாவாதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், அரசாளும் யோகம் உண்டாகும்.
மிருதங்க யோகம்: 11-ம் பாவாதிபதியானவர் சுக்கிரனுடன் சேர்ந்து உச்சம் பெற்றிருக்க, அந்த ராசிக்கு உடையவர் 4, 7, 9, 10 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தால், மிருதங்க யோகம் ஏற்படும். இதன் பலனாக, எல்லோரையும் வெல்லும் திறமை உண்டாகும். மத்திய வயதில் யோக பலனை அனுபவிப்பார். செல்வம் சேரும்.
நாக யோகம்: 10-ம் பாவாதிபதி நின்ற அம்சாதிபதியும், லக்னாதிபதியும் லக்னத்தைப் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ நாகயோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ள ஜாதகர் அதிகம் படித்தவராக, தர்மத்தின் வழியில் நடப்பவராக இருப்பார். சுகமான வாழ்க்கை அமையும்.
9-ல் குரு, 10-ல் பாவாதிபதி, 7-ல் சந்திரன் சுபக் கிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் நாக யோகம் உண்டாகும். இதனால், இளம் வயதிலேயே செல்வம் ஈட்டுபவராக ஜாதகர் திகழ்வார். சுகமான வாழ்க்கை அமையும்.
பதும யோகம்: 9-ல் சுக்கிரன் இருக்க, 9ம் பாவாதிபதி வளர்பிறைச் சந்திரனுக்கு 9-ல் இருக்க, பதும யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மந்திரி ஸ்தானத்தில் உள்ளவரும் நட்பாக இருப்பார்.
வீணை யோகம்: லக்னம் முதற்கொண்டு 7-ம் இடம் வரை வரிசையாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பின், வீணை யோகம் ஏற்படுகிறது. இதனால் சங்கீதத்தில் சிறப்புற்றுத் திகழ்வார்கள். நல்லொழுக்கமும் சாமர்த்தியமும் அதிகம் இருக்கும்.

- ஜோதிடர் டி.செல்வக்குமரன்
Read more...

அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்

தலபெருமை:
   றைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும். சிதம்பர ரகசியம்: சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம்.

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு.  இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருக்கிறார்.

சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம்=சிதம்பரம். சித்அறிவு. அம்பரம்வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.

தேவாரம் கிடைத்த தலம்: மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர்.

பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது.

திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.

நால்வர் வந்த வழி: 

சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள்.  சம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார்.

நாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார்.

சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர்.

மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார்.

இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம். இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம்.

இத்தலத்து திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும்.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

மூலவர் யார் தெரியுமா? :

பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்.

பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.

தரிசிக்க முக்தி : திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

தேரில் நடராஜர்:

இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

சிலையின் முன்னும் பின்னும் தீபாராதனை: 

ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர்.

இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10, 11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.

உடலின் அமைப்பில் நடராஜர் சன்னதி: மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது.. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.

கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.


ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

 
 தல வரலாறு:
   
முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக் காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார்.இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார்.

இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.


பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

  சிறப்பம்சம்:
 
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

  திறக்கும் நேரம்:
 
 காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்- 608 001.கடலூர் மாவட்டம்.
 
மூலவர் : 
திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)

அம்மன்/தாயார் : உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)

 தல விருட்சம் : தில்லைமரம்

 தீர்த்தம் : சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
ஆகமம்/பூஜை : -
 பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர் : தில்லை
 ஊர் : சிதம்பரம்
 மாவட்டம் : கடலூர்
 மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் மலையாள் மகளொடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே.

-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது.

 தல சிறப்பு:
 
 இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும். மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும்.

Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini