பாடியவர் - திருஞானசம்பந்தர்
பாடிய தலம் - திருப்பிரமபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில்) சீர்காழி
திருச்சிற்றம்பலம்
தோடுடைய செவியன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து
ஏத்தஅருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய
பெம்மான்இவன் அன்றே.
திருச்சிற்றம்பலம்
பொருள் - தோடு என்னும் அணியை அணிந்துள்ளவர், உமாதேவியை இடப்பாகம் உடையவர் இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய பூசிய சிவபெருமான் என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா !