Banner 468 x 60px

 

Monday, March 23, 2015

நவக்கிரக தோஷம் விலகும் நவகிரக லிங்க வழிபாடு

சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது கிரகங்களும் தில்லை நடராஜப் பெருமானையும் திருமூலட்டானரையும் வான் பொருளையும் வணங்கித்தொழுத பின்னர் ஒவ்வொருவரும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் லிங்க மெய்ப்பொருளை பிரதிஷ்டை செய்து பூஜை புரிந்தனர்.

இவர்களது பூஜை புரிந்த லிங்க கல் உள்ள சன்னதி நவகிரக லிங்க சன்னதி என்று வழங்கப்படுகின்றன. இந்த ஒன்பது லிங்கங்களையும் சன்னதியின் வாசல் வழியாகத் தரிசனம் செய்வது மட்டுமின்றி ஒன்பது துவாரங்களின் வழியேயும் தரிசிக்கலாம்.

நவகிரக லிங்க சன்னதி சிதம்பரம் கோயிலின் தனிச் சிறப்புகளில் ஒன்று. நவகிரக தோஷம் உள்ளவர்கள் இந்த நவகிரக லிங்கங்களை வழிபட்டால் தோஷம் அனைத்தும் நிவர்த்தியாகி நன்மை உண்டாகும். சிவபூஜை செய்த நவகிரகங்களுக்குச் சன்னதி பிரகாரத்தில் உள்ளது.

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini