சதுர்புஜாம் மஹாலக்ஷ்மீம் கஜயுக்மஸுபூஜிதாம்
பத்ம பத்ராய நயநாம் வராபயகரோஜ்வலாம்
ஊர்த்வத் வயகரே சாப்ஜம் தததீம் சுக்ல வஸ்த்ரகாம்
பத்மாஸனே ஸுகாஸீனாம் பஜேஹம் ஸர்வமங்களாம்.
பொதுப்பொருள்:
நான்கு கைகளை உடைய நாயகியே, பேரழகு பொலியும் திருமேனியைக் கொண்டவளே, வலக்கரங்களில் அபய ஹஸ்தமும் தாமரை மலரையும் ஏந்தியருள்பவளே, இடது கரங்களில் வரத ஹஸ்தமும் தாமரை மலரையும் கொண்டவளே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய சதுர்வித புருஷார்த்தங்களையும் தன்னை வணங்குவோர்க்கு அருளி, கல்வி, செல்வ வளம் செழிக்க அருள்பவளே, நமஸ்காரம்.
- இந்தத் துதியை வரலட்சுமி விரத தினத்தன்று ஆரம்பித்து ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் கல்வி, செல்வ வளம் செழிக்கும்.