குழந்தை இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும். அத்துடன் கணேச ஓமம் செய்தால் புத்திர தோஷம் விலகி புத்திரன் பிறப்பான். தொடர்ந்து பதிநான்கு ஏகாதசிகள் விரதம் இருந்தாலும் புத்திர பாக்யம் ஏற்படும்
சிறு சந்தான கிருஷ்ண விக்கிரகம் ஒன்று செய்து வீட்டில் வைத்துப் பூசை செய்து வந்தால் சந்தான பாக்யம் உண்டாகும். ராகு, கேது காளஹஸ்திக்குச் சென்று மூன்று இரவுகள் தங்கி ஈசனை வணங்கி வந்தால் நாக தோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள். ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள். ராமநாதபுரம் ரயில் நிலையித்தில் இறங்கி தேவி பட்டினம் போகும். பஸ்ஸில் ஏறி நவபாஷணத்தில் இறங்கவும்.
கடலில் ஸ்ரீ ராமபிரானால் அமைக்கப்பட்ட நவக்கிரகங்கள் இருக்கின்றன. கடலில் நீராடி நவக்கிரக பூஜை செய்தால் நாகதோஷம் பரிகாரமடையும், சந்தான பாக்யம் உண்டாகும். அதே ராமநாதபுரத்திலிருந்து தர்ப்ப சயனம் சென்று விபீடணனுக்கு அபயமளித்த க்ஷத்திரம் வணங்கி, அங்குள்ள ஸ்தல விருட்சத்தில் தாங்கள் கட்டியுள்ள உடையில் சிறிது கிழித்து ஒரு சிறு கல் வைத்து மரக் கிளையில் கட்டி வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.
நாகர்கோவிலில் நாகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கு சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும். கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேசுவரம் இருக்கிறது. அந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
பொருள் படைத்தவர் சொர்ணத்தால் குழந்தை பதுமை செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி துண்டு தாம்பூலம் பழத்துடன் சொர்ண விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும். சொர்ணத்தில் செய்ய சக்தியில்லாதவர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம்.
Friday, January 3, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 Facebook:
Post a Comment