Banner 468 x 60px

 

Saturday, January 18, 2014

வீட்டில் சுவாமி சிலை எத்தனை வைக்கலாம் ?

0 Facebook
வீட்டில் சிலை வழிபாடு செய்யப் போகிறீர்களா? ஒவ்வொரு சுவாமிக்கும் ஒரு சிலை இருப்பதைத் தான் சாஸ்திரம் அனுமதிக்கிறது. இரண்டு சிவலிங்கம், இரண்டு சங்கு, இரண்டு ஸ்படிகம், மூன்று பிள்ளையார், மூன்று அம்மன், இரண்டு சக்கரங்கள் வைக்கக்கூடாது என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அப்படியானால், மூன்றுக்கு குறைவாக இரண்டு பிள்ளையார், இரண்டு அம்மன் சிலைகள் வைக்கலாமா என்று கேட்கக்கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட சிலைகளை பூஜித்தால்,

 அதற்கென்று பல விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஒரு சுவாமிக்கு ஒரு சிலை வீதம் வைத்து வணங்குவதே உத்தமமானது. பல சிலை வழிபாடு மனக்குழப்பத்தை தரும். ஒரே சுவாமிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிலைகள் இருந்தால் அகற்றி விடுங்கள்.
Read more...

குரு எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்

0 Facebook
வகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக  புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.

குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடம் பாழ், பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும். குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்வார். பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும்.
Read more...

கருட புராணம் பகுதி - 6

0 Facebook
சிரவணர்கள் தோற்றம்

அதைக் கேட்ட பிரம்மன் ஒரு தர்ப்பைப் புல்லைக் கொண்டு நீண்ட கண்கள், அழகு, அகக்கண் கொண்டு புண்ணிய பாவங்களை அறிந்து இயமனுக்கு உதவ பன்னிருவரைத் தோற்றுவித்தார். அவர்களே பன்னிரண்டு சிரவணர்கள். இயமன் அவர்களுடன் தென்புலம் அடைந்து சேதனர்களின் பாவபுண்ணியங்களை அறிந்து அதற்கேற்ப காத்தும், தண்டனை அளித்தும் வரலானான். உலகில் ஒரு ஜீவனின் இறுதிக்காலம் முடிந்தவுடன் அங்குஷ்ட அளவில் வாயு வடிவிலான ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.

Read more...

Tuesday, January 14, 2014

சபரிமலையில் மகரஜோதி

0 Facebook

பரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர். சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டது.
Read more...

Saturday, January 11, 2014

புத்தாண்டு ராசிபலன் - 2014 கும்பராசி

0 Facebook
நிதானமாக செயல்பட்டு, வெற்றிக் கனியைப் பறிக்கும் தன்மையுள்ள கும்பராசி அன்பர்களே!  உங்கள் ராசி நாயகன் சனிபகவான், உங்களின் கவுரவத்தை பாதுகாக்க உதவுவார். அவர் துலாமில் உச்சநிலையில் இருக்கும் காலகட்டத்தில், இந்த ஆண்டு மலர்கிறது. அவர் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் கூட, முக்கிய கிரகங்கள் பல சாதாகமாக இருக்கும் நிலையில்தான், இந்த ஆண்டு பிறக்கிறது.

குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார். இங்கு அவர் பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி களை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம்.
Read more...

Friday, January 10, 2014

புத்தாண்டு ராசிபலன் - 2014 மகர ராசி

0 Facebook
தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு ஒளிவுமறைவின்றி கற்றுத்தரும் மகர ராசி அன்பர்களே!  நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். யாரையும் சட்டை செய்யாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். கடந்த ஆண்டு எந்த முக்கிய கிரகமும் சாதகமாக இல்லாமல் இருந்ததால், எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள். ஆனால், அந்த நிலை மாறி இந்த ஆண்டு பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். குறிப்பாக ஆண்டின் பிற்பகுதி அனுகூலம் நிறைந்ததாக அமையும். உங்கள் ஆட்சி நாயகன் சனி, துலாமில் உச்சம் பெற்றிருக்க இந்த ஆண்டு பிறக்கிறது.

10ம் இடத்தில் இருக்கும் அவரால் நன்மை செய்யமுடியாது. பொதுவாக, அவர் அவப்பெயரையும் பொல்லாப்பையும் தருவார் என்பது நியதி. பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அதேநேரம்,
Read more...

Thursday, January 9, 2014

கருட புராணம் பகுதி - 5

0 Facebook
பிறத்தலும் இறத்தலும்

ஒருவன் மரிக்கும் காலத்தில் அவன் ஜீவனைக் கவர்வதற்காகவே காலன் (அ) இயமன் நியமிக்கப்பட்டிருக்கிறான். உலகில் வாழ்கின்ற ஜீவர்கள் அவரவர் செய்யும் தோஷங்களால் ஆயுள் குறைந்து மரிக்கின்றனர். பாவ காரியங்களைச் செய்பவர்கள் யமலோகத்தில் எப்போதும் நரகத்தில் உழல்வார்கள். அறநெறிகளிலிருந்து நழுவி வாழ்பவர்கள் யமலோகத்தில் வேதனைப்படுகிறார்கள். தேவாராதனை செய்யாத தினம் மஹான்களையும், நல்லவை ஆற்றுவாரையும், வழிபடாமை, சாஸ்திரம் உணராத நாள் வீணேயாம். எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதில்லை. அது கர்ம வினையினால் உண்டானது என்றறிந்து மீண்டும் பிறவாமலிருக்க நற்கருமங்கள் ஆற்றவேண்டும்.

Read more...

புத்தாண்டு ராசிபலன் - 2014 தனுசு ராசி

0 Facebook
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் தனுசு  ராசி அன்பர்களே !வாய் சாமர்த்தியத்திலேயே காரியம் சாதித்து விடும் திறமை கொண்ட நீங்கள், கொண்ட குறிக்கோளில் இருந்து சிறிதும் விலகாதவர்கள். ஆன்மிக செயல்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முற்பகுதியில் அதிக நன்மைகள் நடக்கும். குருபகவான் 7-ம் இடத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. ஆண்டின் தொடக்கமே குருவின் பக்க பலத்தோடு தொடங்குகிறது. அவர் மூலம் உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றலாம். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
Read more...

Wednesday, January 8, 2014

புத்தாண்டு ராசிபலன் - 2014 விருச்சிகராசி

0 Facebook
எதிலும் போராடி வெற்றி காணும் விருச்சிகராசி அன்பர்களே!
நீங்கள் சுறுசுறுப்புக்கு பெயர்போனவர்கள். ராசி நாயகன் செவ்வாய் 11-ம் இடத்தில் சிறப்பான நிலையில் இருக்க இந்த ஆண்டு பிறக்கிறது. அவரால் செயல்பாடுகளில் வெற்றி ஏற்படும். நாளைய தலைமுறை கூட, உங்கள் வெற்றி குறித்து பெருமையாக பேசுமளவுக்குரிய நிலை ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், மேலும், முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்கவே வாய்ப்பு உண்டு. குரு பகவான், தற்போது 8-ம் இடமான மிதுனத்தில்
Read more...

Tuesday, January 7, 2014

வீட்டில் பூஜை செய்யும் போது செம்பில் நீர் வையுங்கள்

0 Facebook
வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.
Read more...

புத்தாண்டு ராசிபலன் - 2014 துலாம் ராசி

0 Facebook
பணிகளை சுதந்திரமாக செய்யும் விரும்பும் துலாம் ராசி அன்பர்களே! உங்கள் ராசியின் சின்னம் தராசு. உங்கள் மனமும் நியாயத்தின் பக்கமே நிற்கும். உங்கள் ராசி நாயகன் சுக்கிரன், தனது நட்பு வீடான மகரத்தில் இருக்க புத்தாண்டு மலர்கிறது. இதனால், கடந்த ஆண்டை விட அவர் மூலம் இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. செல்வாக்கு மிகுதியும். உறவினர்கள் வகையில் அனுகூலங்களும் நிறைந்திருக்கும்.

ஏழரைச் சனியால் விழுந்தாலும் விதை போல் முளைத்தெழுந்து சிகரம் தொடுவீர்கள். கடந்த ஆண்டு பிற்பகுதியில் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான மிதுனத்திற்கு வந்தார். அங்கு அவர் மகிழ்ச்சியை தந்திருப்பார். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க உறுதுணையாக இருப்பார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும்.
Read more...

Monday, January 6, 2014

உங்கள் ஜாதகத்தில் ராகு கேது எங்கு உள்ளார்

0 Facebook
லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும் வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப் இரக்க வேண்டியிருக்கும், மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!

Read more...

புத்தாண்டு ராசிபலன் - 2014 கன்னிராசி

0 Facebook
னைவரிடமும் பண்புடன் நடந்து கொள்ளும் கன்னிராசி அன்பர்களே!  புதனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் வாக்கு வன்மையால் பிறரைக் கவருவீர்கள். புத்திசாலித்தனமாக பேசுவீர்கள். கடந்த ஆண்டு நீங்கள் எண்ணற்ற இன்னலுக்கு ஆளாகி இருப்பீர்கள். இது ஏழரை சனி காலம் என்பதால், உங்கள் கஷ்டம் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு பிற்போக்கான நிலை மாறி வாழ்வின் எல்லா நிலை களிலும் நற்பலனைப் பெற்று மகிழ்வீர்கள்.

உங்கள் ஆட்சி நாயகன் புதன் நட்பு வீடான தனுசுவில் சாதக நிலையில் இருக்க, இந்த புதிய ஆண்டு பிறக்கிறது. இதனால் பொருளாதார வளம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடந்த ஆண்டு சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான துலாமில் இருக்கிறார். அவரால் குடும்பத்தில் பிரச்னையை சந்தித்து இருப்பீர்கள். பொருள் களவு கொடுக்க நேரிட்டிருக்கலாம். இந்த ஆண்டும் சனிபகவான் அதே இடத்தில் தான் இருக்கிறார். இருந்தாலும், சாதகமற்ற பலனை தருவாரோ என்று அஞ்ச வேண்டாம். 
Read more...

சிவனுக்கு உகந்த விரதங்கள்

0 Facebook
சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப்பெறலாம்.

1. சோமவார விரதம் - இந்த விரதம் திங்கள் கிழமைகளில் இருப்பது. சிவனுக்கு உகந்த விரதங்களில் சோமவார விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது..


2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இந்த விரதத்தை ஆரம்பித்து மாதம் தோறும் பின்பற்றுவது.


3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது


4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது. இந்த மற்ற சிவன் விரதங்களை விட மிகவும் முக்கியமானது.
Read more...

Sunday, January 5, 2014

புத்தாண்டு ராசிபலன் - 2014 சிம்ம ராசி

0 Facebook
ஆர்வமுடன் உழைத்து குறிக்கோள் களை எட்டிப்பிடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே !  சூரியனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் ஆளுமை தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். எந்த துறையில் இருந்தாலும் தனித்துவத்தோடு காணப்படுவீர்கள். சூரியன் நட்பு வீடான தனுசுவில் இருக்கும்போதுதான் ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. அந்த இடத்தில் அவரால் நன்மை தர முடியா விட்டாலும், அவர் மீது குருவின் பார்வை படுவது சிறப்பாகும். கடந்த ஆண்டு பல கிரகங்கள் சாதகமாக இருந்ததால், பல்வேறு நற்பலன்களை பெற்றிருப்பீர்கள். இந்த ஆண்டும் நன்மை தொடர்ந்து கிடைக்கும். 
Read more...

சனியின் பாதிப்பிலிருந்து விடுபட என்ன பரிகாரம்

0 Facebook
சனி என்ற சொல்லுக்கு குளிர்ச்சி என்று தான் பொருள். இன்றைய விஞ்ஞானிகள் கூட, சனி கிரகத்தை ஆராய்ந்து அது பனிமயமாக இருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள். நல்லதைச் செய்ய வேண்டிய காலங்களில் வாரி வழங்குவதில் வள்ளல். கெடுதலைச் செய்ய வேண்டிய சூழலில், சற்று பாதிப்பையும் தரும் குணம் படைத்தவர். எல்லாரும் பயப்படும் அளவிற்கு கெட்டவர் கிடையாது. இவரது பாதிப்பிலிருந்து விடுபட, பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் உயர்ந்தது. மேலும், அன்றைய தினம் காளை மாட்டிற்கு அரிசி, வெல்லம், எள் கலந்து கொடுப்பது சிறந்த பரிகாரம்.
Read more...

Saturday, January 4, 2014

0 Facebook





VISHNUPURAN EPISODE 1 PART 2 

Vishnupuran is one of the most popular TV serials from India. It is the story of Lord Krishna, who, in man's fight against evil, comes to earth time and again to maintain the balance between good and evil, destroy the demons and please His devotees. Vishnupuran covers the stories of the ten incarnations of Lord Krishna, Matsya (horned fish), Kurma (mighty turtle), Varaha (fierce boar), Narasimha (half man, half lion), Vamana (dwarf incarnation), Parasurama (ferocious sage), Rama (dutiful prince), Krishna (His original form as Vrndavana cow-herd boy), Buddha (compassionate sage), and Kalki (end-times Messiah). c, Mahabharat. Written by Ram Govind and music composed by Raj Kamal. The chief roles are played by Nitish Bharadwaj as Vishnu and Vaidehi as Lakshmi.

Read more...

புத்தாண்டு ராசிபலன் - 2014 கடக ராசி

0 Facebook
விடாமுயற்சியுடன் செயலாற்றி வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!
பிறரை கவரும் தன்மை கொண்ட மதிநுட்பம் மிக்கவரான நீங்கள், கடந்த ஆண்டு சிரமமான பலனையே சந்தித்திருப்பீர்கள். காரணம், முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதமாக அமைய வில்லை.

ஆனால் இந்த ஆண்டு நற்பலன் தரும் விதத்தில் கிரகநிலை ஓரளவு மாறுகிறது. உங்கள் ராசி நாயகன் சந்திரன், தனது நட்பு வீடான தனுசுவில் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பிறக்கிறது. அதனால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் துணிவுடன் செயலாற்றுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

 ஆண்டின் முற்பகுதியைக் காட்டிலும், பிற்பகுதி அதிக முன்னேற்றத்தை தரும் வகையில் அமையும். முக்கிய கிரகங்களில் ஒன்றான குருபகவான் 12-ம் இடத்தில் இருப்பதால், கடந்த காலத்தில் மனவருத்தத்திற்கு
Read more...

Friday, January 3, 2014

அத்திரி மகரிஷி

0 Facebook
லகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர்.

 ராமாயணத்தில் அத்திரி முனிவரின் ஆஸ்ரமத்திற்கே ராமனும் சீதையும் முதன்முதலில் சென்றனர். சித்திரகூட பர்வதத்திலிருந்து காட்டிற்குள் சென்ற ராமனும் சீதையும், அத்திரி முனிவர் ஆஸ்ரமத்தில் ஒருநாள் தங்கினர். அப்போது ராமசீதா தம்பதிகளிடம் அத்திரி முனிவர் தன் மனைவி
Read more...

கருட புராணம் பகுதி - 4

0 Facebook
தோஷ பரிகாரங்கள்

பிரேத ஜன்மம் பெற்றவன் தன்னவர் கனவில் தோன்றினாலும், துன்பங்களைச் செய்தாலும் அது பற்றி பெரியோர்களிடம் தெரிவித்து அவர்கள் காட்டும் தர்மவிதிகளில் சித்தம் வைத்துத் தென்னை, மா, சண்பகம், அரசு ஆகிய மரங்களை வைத்துப் பயிர் செய்யலாம். நந்தவனம் அமைக்கலாம். பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் அமைக்கலாம். அந்தணர்களுக்குப் பூதானம் செய்யலாம். நீர் நிலைகள் ஏற்படுத்தலாம். பகவத் கைங்கரியம், பாகவத கைங்கரியம் செய்யலாம். புனித நதிகளில் நீராடி தான, தருமங்கள் செய்யலாம். தோஷ காரணமாக எதிலும் நாட்டம் இல்லாமல் போனாலும் ஊக்கமுடன் முயன்று அந்தந்த தர்மங்களைச் செய்து இன்பம் அடையலாம். இவ்வாறு செய்வதால் பிரேத ஜன்மத்தின் பிரேத சரீரம் நீங்கிவிடும். அவன் குலம் விளங்க ஒரு புத்திரன் உண்டாகவும் செய்வான்.
Read more...

கோவிலில் ஆஞ்சநேயரை வழிபடும் முறைகள்

0 Facebook
ஞ்சநேயர் சுவாமியின் சன்னதியை அடைந்ததும் நீள்வசமாக தரையில் படுத்து வணங்கி சேவித்து எழுந்து நிற்க வேண்டும். பக்தர்கள்- காது இரண்டு கைகள் இரண்டு, மோவாய்க்கட்டை ஆகிய உடலுறுப்புகள் எட்டும் தரையில் படும்படி வீழ்ந்து வணங்க வேண்டும். இதனை அஷ்டா நமஸ்காரம் என்று கூறுவார்கள். ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனியாக சன்னதி இருக்கும். அவரை தரிசிக்க வேண்டுமானால் முதலில் விஷ்ணுவின் முன் வீற்றிருக்கும் பெரிய கருடாழ்வாரை தரிசிக்க வேண்டும். பின்னர் மூலஸ்தான மூர்த்தியை தரிசித்து துளசியும் தீர்த்தமும் பெற்றுக்கொண்டு சடாரி சாத்துதல் பெற்று தாயார் சன்னதிக்குச் சென்று அம்பாளை தரிசித்து விட்டு உட்பிரகாரத்தில் இருக்கும் மும்மூர்த்திகளையும் தரிசிக்க வேண்டும். கடைசியாகத்தான் ஆஞ்சநேயர் சுவாமியை தரிசித்து தன் குறைகளை கூறி நிவர்த்திப் பெற வேண்டும்.
Read more...

புத்தாண்டு ராசிபலன் - 2014 மிதுனம்

0 Facebook
புதனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் எப்போதும் புத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்வீர்கள். அறிவு பூர்வமாக பேசுவீர்கள். அவர் தனது நட்பு வீடான தனுசுவில் இருக்க இந்த ஆண்டு மலர்கிறது. அவர் மூலம் இந்த ஆண்டு முயற்சியில் வெற்றி உண்டாகும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். உத்தியோகத்திலும் உயர்வு உண்டாகும். கடந்த ஆண்டு சனிபகவான் உங்கள் ராசிக்கு, 5-ம் இடமான துலாமில் இருந்து பல்வேறு இன்னல்களை தந்திருக்கலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி இருக்கலாம்.

Read more...

நாகதோஷ பரிகாரங்கள்

0 Facebook
குழந்தை இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதம் இருக்க வேண்டும். அத்துடன் கணேச ஓமம் செய்தால் புத்திர தோஷம் விலகி புத்திரன் பிறப்பான். தொடர்ந்து பதிநான்கு ஏகாதசிகள் விரதம் இருந்தாலும் புத்திர பாக்யம் ஏற்படும்

சிறு சந்தான கிருஷ்ண விக்கிரகம் ஒன்று செய்து வீட்டில் வைத்துப் பூசை செய்து வந்தால் சந்தான பாக்யம் உண்டாகும். ராகு, கேது காளஹஸ்திக்குச் சென்று மூன்று இரவுகள் தங்கி ஈசனை வணங்கி வந்தால் நாக தோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள். ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள். ராமநாதபுரம் ரயில் நிலையித்தில் இறங்கி தேவி பட்டினம் போகும். பஸ்ஸில் ஏறி நவபாஷணத்தில் இறங்கவும்.
Read more...

தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்

0 Facebook
தீபம் ஏற்றுவதால் நம் வேண்டுதல் நிறைவேறுகின்றன. தீபம் ஏற்றுவதற்கு பலவித முறைகள் உள்ளன. கடவுளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம் வேண்டுதல்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன. 

மேலும் தோஷம், பாவம் பரிகாரங்களுக்கு என்று உள்ள எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் அதன் பலனை விரைவில் அடையலாம். இப்போது தோஷங்களை போக்கும் தீப எண்ணிக்கையை பார்க்கலாம்.
Read more...

Wednesday, January 1, 2014

புத்தாண்டு ராசிபலன் - 2014

0 Facebook
னஉறுதியுடன் செயலாற்றி வெற்றி வாகை சூடும் மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாயகன் செவ்வாய் தனது நட்பு வீடான கன்னியில் இருக்கும் போது இந்த புத்தாண்டு மலர்கிறது. ஆறாம் இடத்தில் இருந்து இந்த ஆண்டை தொடங்கி வைக்கும் செவ்வாய் பல்வேறு
முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பார். கடந்த ஆண்டு முக்கிய கிரகங்கள் சாதகமற்ற இடங்களில் இருந்ததால் எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்து இருக்கலாம்.

Read more...

பிறவியின் பயனை அடைய என்ன செய்ய வேண்டும்

0 Facebook
னிதர்களுக்கு, ஆண்டவன் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணமும், அவரிடம், பக்தியும் இருக்க வேண்டும். இதர ஜீவன்களுக்கு, பகவான் மேல் பக்தி என்பதெல்லாம், கிடையாது. அதனால், அவை, உயிர் வாழத் தேவையானதை மட்டும் தேடி,
உண்டு, வாழ்ந்து, மடிகின்றன. ஆனால், மனிதன் வாழ்வு அப்படியல்ல. அவன், மனிதப் பிறவியைத் தாண்டி, முக்தி எனும், உயர்ந்த நிலைய அடைய முயல வேண்டும்.

Read more...

எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று சுற்றுவது

0 Facebook
விநாயகரை மட்டும் ஒரே ஒரு தடவை சுற்றி விட்டு செல்ல அனுமதியுண்டு
.
சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும்.

சிவன் கோயிலில் மூன்று, ஐந்து, எழு , ஒன்பது  முறை சுற்ற வேண்டும்.

பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம்
வர வேண்டும்.

பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி, சிவாலயத்திலுள்ள அம்மன் சந்நிதி அல்லது அம்மன், தாயார் தனிக்கோயில்களில் ஐந்துமுறை சுற்ற வேண்டும்.
Read more...

கிரக தோஷம் நீங்க

காஞ்சி காமாட்சியை வணங்குபவர்களுக்கு கிரகதோஷம் அணுகாது என்கிறார் மூகர் என்னும் புலவர். அவர் எழுதிய மூக பஞ்சசதி என்னும் 500 ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்திர நூல் இதைத் தெரிவிக்கிறது. இதிலுள்ள ஸ்லோகம் 59ஐப் படித்தால் இது புரியும்.

ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:விநம்ராணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந்!கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்தம: கேதுர்-
மாத:ஸ்தவ சரணபத்மோ வியதே!! 

சூரியன் முதல் கேது வரையான ஒன்பது கிரகங்களின் சமஸ்கிருதப் பெயர் இந்த ஸ்லோகத்தில் உள்ளது. அம்பாளின் திருவடியை இந்த கிரகங்களெல்லாம் பற்றிக் கொண்டிருக்கின்றன அல்லது பார்த்துக்
Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini