மேற்கண்ட தோஷம் ஆண்-பெண் இருவருக்கும் வரும் இப்படிப்பட்ட ஜாதகம் அமைந்தவர்களுக்கு இரு தாரம் அமையும் என்பார்கள். இந்த களஸ்திர தோஷம் காரணமாக திருமணம் தடைப்படும். இந்த தோஷத்தை எளிய பரிகாரம் மூலம் நீக்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அடையலாம். அந்த பரிகாரங்கள் வருமாறு:-
சிவப்பு ஜாக்கெட் துணியில் 9- செம்பருத்திப்பூ மற்றும் 27 கொண்டைக்கடலைகளை வைத்தக்கட்டி பகல் முழுவதும் விரதமிருந்து மாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும்.
இதை இல்லையெனில் வள்ளி =தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்கு செவ்வாய்கிழமையில் சென்று, கோவில் அர்ச்சகரிடம் களஸ்திர தோஷம் நீங்க வழிபாடு செய்யக் சொல்லி வழிபட்டு வர வேண்டும். சந்நிதியில் கொடுக்கும் பிரசாரத்தை பூஜையறையில் வைத்த வணங்கி வர வேண்டும்.
இவ்வாறு செய்த 90-ஆவது நாளில் களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கிவிடும். வில்லியனூர் வடுகூரை அடுத்து உள்ளது திருபுவனை. இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையானது.
சுக்கிர பகவானும் குரு பகவானும் ஒன்று சேர்ந்து வணங்கிய இடமாகும். களத்ரதோஷம் எதுவாயினும் இங்கு வழிபட்டால் அவை தீர்ந்து நல்ல வரன் அமையும்.
0 Facebook:
Post a Comment