Banner 468 x 60px

 

Monday, March 12, 2018

குலதெய்வத்தின் பெயரை குழந்தைக்கு சூட்டலாமா?

0 Facebook
நாமகரணம் என்ற பெயர் சூட்டு விழாவினை குடும்ப புரோஹிதர் நடத்தி வைக்கும்போது, முதலில் குலதெய்வத்தின் பெயரையே குழந்தைக்குச் சூட்டுவார். குழந்தையின் பெயரை தகப்பனார் நெல்லில் எழுதும்போது, முதலில் குலதெய்வத்தின் பெயரையே அந்தக் குழந்தைக்கு வைத்து அதனையே நெல்லில் எழுதி, குழந்தையின் வலது காதில் மூன்று முறை சொல்வார்.

உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் முனீஸ்வரன் குலதெய்வம் என்று வைத்துக் கொண்டால், ஆண்குழந்தையாக இருக்கும் பட்சத்தில் முனுசாமி அல்லது முனியாண்டி என்றும், பெண் குழந்தையாக இருந்தால் முனியம்மா என்றும் பெயர் சூட்டி, அதனை நெல்லில் எழுதி குழந்தையின் வலது காதில் பிள்ளையைப் பெற்ற தகப்பன் மூன்றுமுறை சொல்வார்.

அதன்பின்பு ஜாதக ரீதியாக அதாவது நட்சத்திரத்திற்கு உரிய முதல் எழுத்தின்படி தேர்வு செய்துள்ள பெயரை நெல்லில் எழுதுவார்கள். அதன் பின்பு சான்றிதழில் அளிக்க உள்ள பெயரையும் நெல்லில் எழுதி அந்தப் பெயரைக் கொண்டு குழந்தையை அழைப்பார்கள்.

இவ்வாறு ‘குலதேவதா நாம்னா’, ‘மாஸ நாம்னா’, ‘நட்சத்திர நாம்னா’, ‘வ்யவஹாரிக நாம்னா’ என்று பல பெயர்களை ஒரே குழந்தைக்குச் சூட்டுவார்கள். சான்றிதழில் அளிக்க உள்ள பெயரே அந்தக் குழந்தையின் நிரந்தரப் பெயராக அமைந்தாலும், முதன்முதலில் சூட்டும் பெயர் குலதெய்வத்தின் பெயராகத்தான் இருக்க வேண்டும் என்பதை பெரியவர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini