Banner 468 x 60px

 

Wednesday, September 14, 2016

புத்திர தோஷ பரிகார பலன்கள்

புத்திர தோஷம் எதனால் ஏற்பட்டது என்பதனை முதலில் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய முடியும். குருவிற்கு, புத்திரபாக்கியம் தருவதில் முக்கிய பங்குண்டு. குரு, புத்திரகாரகன். புத்திரயோகத்தைத் தரக்கூடிய அதிகாரம் பெற்றவன்.

எனவே குருவாலும், சந்திரனாலும் புத்திரதோஷம் உண்டானால், குருவிற்கு உரிய தலத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். குரு வேறு தட்சிணாமூர்த்தி வேறு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், அது குருவிற்குச் செய்ததாகக் கருத முடியாது.

திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். சந்தானகோபாலரும் சந்தான பாக்கியம் தரவல்லவர். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன், கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும், புதன், சுக்கிரனால் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் சிவனை வழிபடலாம்.

செவ்வாய், சனியால் ஏற்படும் புத்திரதோஷத்திற்கு முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்யலாம். குரு பகவானுக்கு வியாழன்று அர்ச்சனை செய்வது சிறப்பு, வியாழக்கிழமை, திருச்செந்தூரில் அன்னதானம் செய்தால் புத்திர தோஷத்திற்கு மிகவும் நல்லது.

பொதுவாக எந்தக் கிரகத்தினால், தோஷம் ஏற்பட்டதோ, அந்தக் கிரகத்தின் தசை அல்லது புத்திக்கு உரிய காலத்தில், அந்தக் கிரகத்திற்கு உரிய அதிதேவதைக்கு அர்ச்சனை செய்ய தோஷம் நிவர்த்தி ஆகும். குலதெய்வம் கோயிலில் அவரவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் புத்திரத்தடை நீங்கும்.

முக்கியமான சிறப்பு நாட்களில், பௌர்ணமி, தமிழ்மாதம் பிறப்பு, தமிழ்வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி கிடைக்கும். எந்த தோஷம் இருந்தாலும், பிரதோஷத்தில் நீங்கி விடும் என்பதற்கேற்ப, பிரதோஷ நாளில் அபிஷேகம் வழிபாடு செய்து புத்திர பாக்கியம் பெறலாம்.

கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, செய்யலாம். குடியிருக்கும் ஊரில் உள்ள அரசமரத்தடியில் வீற்றிருக்கும் நாகர், விநாயகரை வழிபாடு செய்தும் சந்தான பாக்கியம் பெறலாம். 
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini