Banner 468 x 60px

 

Friday, September 16, 2016

ராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்(குரு), வெள்ளி(சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு-கேது இரண்டும் சாயா(நிழல்) கிரகங்கள். ராகு-கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. அவர்கள் செய்த தவவேள்விகளால் மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும், நவகிரக பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை, அந்தஸ்தை அவர்களுக்கு அளித்தனர். ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவரவர் செய்த வினைப்பயன்படி ஜாதகத்தில் ராகு-கேது அமர்வார்கள்.

இருவரும் அவரவர் தசை மற்றும் பிற கிரக தசையின் புக்திகளில் யோக, அவயோக பலன்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள். மற்ற ஏழு கிரகங்கள் போல ராகு-கேதுவுக்கு சொந்தவீடு, உச்சவீடு, நீச்சவீடு என்று கிடையாது. ஆனாலும் இவர்களுக்கு உச்சவீடு இருப்பதாக சில ஊர்ஜிதமாகாத தகவல்கள் உள்ளன. அதே நேரத்தில் ராகு-கேதுவுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அஸ்வினி, கேதுவின் நட்சத்திரமாகும்.

ராகு-கேது அம்சங்கள்

ராகு-கேது இருவரும் அவர்கள் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறார்களோ அந்த கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள். அவர்கள் எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திர கிரகத்திற்கு ஏற்ப பலா பலன்களை தருவார்கள். அதோடு மட்டும் அல்லாமல் அவர்களுடன் சேர்ந்த கிரகம், அவர்களைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலன்களையும் சேர்த்துத் தருவார்கள். பொதுவாக சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்தால் சுக்கிரனின் அம்சமாக பலன்களைத் தருவார்கள். சந்திரனின் வீடான கடகத்தில் இருந்தால் சந்திரனின் பலன்களைத் தருவார்கள்.

இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தில் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்தால், களத்திர தோஷத்தைத் தருவார்கள். பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும்.  ஐந்தாம் இடமான புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள். அதேசமயம், மிகப்பெரிய ராஜயோகத்தை தரக்கூடிய வல்லமை ராகு-கேது இருவருக்கும் உண்டு. கேதுவின் தயவு இல்லாமல் யாரும் கோடீஸ்வரர் ஆக முடியாது. கேது ஞானத்தையும், யோகத்தையும், மோட்சத்தையும் ஒருங்கே தரக்கூடிய கிரகம்.

பொதுவாக லக்னத்திற்கு 3, 5, 6, 9, 10, 11  வீடுகளில் உள்ள ராகு-கேது காலசர்ப்ப ராஜயோகத்தை தருவார்கள். திடீர் தனயோகம், பட்டம், பதவி, எதிர்பாராத வளர்ச்சி, உழைப்பின்றியே செல்வம், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை தருவதில் ராகு-கேதுக்கு நிகர் யாருமில்லை எனலாம். கல்வி அறிவு தருவதில் ராகு-கேது மிக முக்கியமானவர்கள். லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகுவோ, கேதுவோ இருந்தால் ஏட்டுக்கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும், புத்தி சாதுர்யமும் வெளிப்படும்.

மேஷம், ரிஷபம், கன்னி ராசிகளில் இருக்கும் ராகு-கேது சிறப்பான பலன்களை தருவார்கள். அத்துடன் கடகமும், மகரமும் ஜலராசியாகும். இதைக் கடக ஆழி என்றும், மகர ஆழி என்றும் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு ஆழிகளில்தான் நான்கு வேதங்களும் இருப்பதாக ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள் அவசியம். ஏனென்றால் கேதுதான் மருத்துவ கிரகம். மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க, டாக்டர் துறையில் புகழ்பெற, மருந்துக்கடை, ஸ்கேன் சென்டர், லேப் போன்ற தொழில்கள் தொடங்க கேதுவின் அருள் இல்லாமல் இத்துறையில் நுழைய முடியாது.

திருமண அமைப்பு

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ராகு-கேது எங்கு இருக்கிறார்கள் என்பதை பார்த்து ஜாதகத்தை சேர்க்க வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால் ஏழில் கேது இருக்கும். இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், எட்டில் கேது இருக்கும். இந்த அமைப்பு ராகு-கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்ற அமைப்பு உள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு மிக முக்கியமானதாகும்.

பத்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது ஒருவருக்கு உண்டாகும் தொழிலை நிர்ணயம் செய்யும். பத்தாம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற முடியும். செவ்வாய்-ராகு, சனி-ராகு என்ற சேர்க்கை கொண்டவர்கள் கேமராமேன் போன்ற டெக்னிக்கல் துறையில் கால் பதிக்கலாம். நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்ற துறைகளிலும் பிரகாசிக்கலாம். இசைத்துறையில் ஆழ்ந்த அறிவும், ஞானமும், பெயரும், புகழும் கிடைக்க கேதுவின் அருள் தேவை. லக்னம், மூன்று, ஒன்பது, பத்து போன்ற வீடுகளில் கேது இருந்தால் இசைத்துறையில் சாதிக்க இயலும்.

ராகு-கேது தோஷ பரிகாரங்கள்

சுக்கிர வார ராகுகால விரதம்:

ராகுவால் ஏற்படும் பல்வேறுவிதமான தோஷங்கள் நீங்க 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, காலை 11-30 முதல் 12 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். கடைசிவாரம் அதாவது, பதினொன்றாவது வாரம் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து மஞ்சள், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு, பழ வகைகள், முழுத்தேங்காய், சர்க்கரைப் பொங்கல் வைத்து உங்களால் எத்தனை சுமங்கலிகளுக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு தரலாம்.

மங்களவார ராகுகால விரதம்:

இந்த விரதத்தை செவ்வாயுடன் ராகு சேர்ந்துள்ள ஜாதகர்கள் செய்யலாம். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, மாலை 4 முதல் 4.30 மணிக்குள் துர்க்கை அம்ம னுக்கு சிவப்பு புடவை சாற்றி எலுமிச்சம் பழம் மாலை போட்டு வணங்கலாம். எலு மிச்சம் சாதம் நற்சீரக பானகம் ஆகியவற்றை கோயிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

பஞ்சமி திதி:

ராகு பரிகாரத்திற்கு மிகவும் சிறப்பான நாளாக பஞ்சமி திதி சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமி திதியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று புற்றுக்கு பால் வார்த்து வழிபடலாம். அத்துடன் அம்மன் சந்நதியில் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கோயிலில் பக்தர்களுக்கு உளுந்துவடை விநியோகம் செய்யலாம்.

பைரவர் வழிபாடு:

ஞாயிற் றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சர்வ தோஷ நிவாரணம் உண்டு. வெள்ளிக் கம்பியில் உளுந்துவடை மாலை கோத்து பைரவருக்கு அணிவிக்கலாம்.

திருவாதிரை வழிபாடு:

ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ஸ்ரீராமானுஜரை வழிபட்டால் சகலதோஷ தடைகள் நீங்கும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரையும் தரிசிக்கலாம்.

குருவார விரதம்:

வியாழக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அல்லது மஞ்சள் நிற புடவை சாற்றி அபிஷேக அர்ச்சனை, ஆராதனைகள் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து விநியோகம் செய்யலாம்.

சங்கடஹர சதுர்த்தி:

கேது தோஷம் நீங்க ஏழு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வணங்கலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்பானதாகும். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கும் கேது பரிகாரம் செய்யலாம்.

Read more...

Wednesday, September 14, 2016

சகல நன்மை அருளும் 108 விநாயகர் ஆலயங்கள்

ஒரே இடத்தில் 108 விநாயகரும் அமர்ந்திருக்கும் அற்புத கோயில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அவற்றை பார்க்கலாம்.
ஆனந்தத்தை அள்ளி வழங்கும் ஆனை முகனை சரணடைந்து குட்டி கொண்டு, தோப்பு கரண மிட்டால், அளவற்ற செல்வங்களையும், வரங்களையும் வழங்கிடுவான். ஒற்றை விநாயகனாய் அருள்பாலித்தாலே இத்தனை அளிவில்லா ஆனந்தம் வழங்கும் விநாயகப்பெருமான் 108 விநாயகராய் அருள்புரிந்தால், எத்தனை எத்தனை வரங்களை அருள்வான் என்பதற்கு அளவே இல்லை. ஒற்றை, இரட்டை விநாயகரை இதுவரை வணங்கியிருப்போம். ஒரே இடத்தில் 108 விநாயகரும் அமர்ந்திருக்கும் அற்புத கோயில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளன. அத்தகைய 108 விநாயகர் அருள் புரியும் சில ஆலயங்களில் தரிசிப்போம்.

கோவை ஸ்ரீ செல்வ விநாயகர்:-
கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் சாலையில், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் அருகிலேயே ஸ்ரீசக்ர வடிவத்தில் 108 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 108 விநாயகரின் திருநாமங்களின் படி அதன் பெயருக்கு ஏற்ற உருவ வேறுபாடுகளுடன் இருக்கின்றன. 108 விநாயகரும் 5 அடுக்குகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் சுலபமாக 108 விநாயகரையும் சுற்றி விடலாம். விநாயகர் சதுர்தியன்று 108 விநாயகரும் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படும் அழகே அலாதியானது.

திண்டுக்கல் 108 விநாயகர் திருக்கோயில்:-

பல சிறப்புகளை பெற்ற திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபால சமுத்திர கரையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அருள்பாலித்து வருபவர் ஆதி விநாயகர். 2002-ம் ஆண்டு இவ்விநாயகரிடம் திருவுளசீட்டு மூலம் ஆசிபெற்று இங்கு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில் என்று பெயர் பெற்ற இக்கோவில் 108 விநாயகரும் மூல விநாயகரின் இருபுறமும் வரிசைக்கிரமமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள 108 விநாயகருக்கும் நமது கரங்களின் மூலம் அபிஷேகம் செய்து நமக்கு வேண்டி விபரங்களை பெறலாம். அதிசயத்தின் அடிப்படையில் பக்தர்கள் பலர் பல அபிஷேகங்கள் தங்கள் கைகளால் செய்து நல்ல பலன்களை பெற்று உள்ளனர்.

காரைக்குடி வயிரன்பட்டி 108 விநாயகர்கள்:-

காரைக்குடியிலிருந்து வயிரவன்பட்டி செல்லும் வழியிலுள்ள சிவன் கோவிலில் 108 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளனர். அதுபோல் சிதம்பரம் நர்த்தன விநாயகர் கோவிலும் 108 விநாயகர் ஸ்தலங்களில் ஒன்றாக உள்ளது. 
Read more...

சில தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

செவ்வாய் தோஷம் :

செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

ராகு-கேது தோஷம் :

திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.

சூரிய தோஷம் :

ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

களத்திர தோஷம் :

சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம். 

ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
Read more...

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்?

* விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றிருள்கிறார். கண் நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது.

* மதுரை சோழவந்தானில் உள்ளது ஜெனகை மாரியம்மன். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்த நோய் மறைகிறது.

* புதுக்கோட்டை - நார்த்தாமலையில் முத்து மாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.

* நீலகிரி, குன்னூரில் தந்திமாரியம்மன் அருளாட்சி புரிகிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் இந்த மாரியிடம் மனமுருக வேண்டிக்கொள்ள, உடனே பெருமழை பெய்கிறது.

* ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்கின்றனர். இங்குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றனவாம்.

* நாமக்கல் - ராசிபுரத்தில் நித்யசுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுவதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக்கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர் சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப் பேறு கிட்டுகிறது.

* கோவையில் ஆட்சி புரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந் திடவும் அருள்கிறாள்.

* சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள்.

* திருச்சி மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.

* தேனி-பெரிய குளத்தில் உள்ள கௌமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானி யங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.

* கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள்.

* திண்டுக்கல்-கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறைவேறுகிறது.

* தஞ்சை - புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜா மன்னர் மகளின் கண் நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.

* கோவை - உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரையன்று 108 தம்பதி யருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.

* ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்டவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.

* கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண்சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

* ஈரோடு - கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்து அருந்தவும் நோய்கள் நீங்குகின்றன.
Read more...

புத்திர தோஷ பரிகார பலன்கள்

புத்திர தோஷம் எதனால் ஏற்பட்டது என்பதனை முதலில் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய முடியும். குருவிற்கு, புத்திரபாக்கியம் தருவதில் முக்கிய பங்குண்டு. குரு, புத்திரகாரகன். புத்திரயோகத்தைத் தரக்கூடிய அதிகாரம் பெற்றவன்.

எனவே குருவாலும், சந்திரனாலும் புத்திரதோஷம் உண்டானால், குருவிற்கு உரிய தலத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இங்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். குரு வேறு தட்சிணாமூர்த்தி வேறு, தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், அது குருவிற்குச் செய்ததாகக் கருத முடியாது.

திருவெண்காடு, திருக்கருகாவூர் தலங்களுக்குச் சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். சந்தானகோபாலரும் சந்தான பாக்கியம் தரவல்லவர். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன், கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும், புதன், சுக்கிரனால் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் சிவனை வழிபடலாம்.

செவ்வாய், சனியால் ஏற்படும் புத்திரதோஷத்திற்கு முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்யலாம். குரு பகவானுக்கு வியாழன்று அர்ச்சனை செய்வது சிறப்பு, வியாழக்கிழமை, திருச்செந்தூரில் அன்னதானம் செய்தால் புத்திர தோஷத்திற்கு மிகவும் நல்லது.

பொதுவாக எந்தக் கிரகத்தினால், தோஷம் ஏற்பட்டதோ, அந்தக் கிரகத்தின் தசை அல்லது புத்திக்கு உரிய காலத்தில், அந்தக் கிரகத்திற்கு உரிய அதிதேவதைக்கு அர்ச்சனை செய்ய தோஷம் நிவர்த்தி ஆகும். குலதெய்வம் கோயிலில் அவரவரின் ஜன்ம நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் புத்திரத்தடை நீங்கும்.

முக்கியமான சிறப்பு நாட்களில், பௌர்ணமி, தமிழ்மாதம் பிறப்பு, தமிழ்வருடப் பிறப்பு அன்று அன்னதானம் செய்வதின் மூலமாகவும் வம்சவிருத்தி கிடைக்கும். எந்த தோஷம் இருந்தாலும், பிரதோஷத்தில் நீங்கி விடும் என்பதற்கேற்ப, பிரதோஷ நாளில் அபிஷேகம் வழிபாடு செய்து புத்திர பாக்கியம் பெறலாம்.

கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, செய்யலாம். குடியிருக்கும் ஊரில் உள்ள அரசமரத்தடியில் வீற்றிருக்கும் நாகர், விநாயகரை வழிபாடு செய்தும் சந்தான பாக்கியம் பெறலாம். 
Read more...

துஷ்ட சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வசக்திகள்

உலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். 

அதுபோல, அருட்சக்திக்கு எதிரான இருட்சக்தி உலகில் இருக்கத் தான் இருக்கிறது. கண்திருஷ்டி, ஏவல், சூன்யம் போன்றவையும் அதில் அடக்கம். நோய் பரப்பும் கிருமிகள் போல அவை கெடுபலன்களை உண்டாக்குகின்றன. 

இதிலிருந்து தப்பிக்க தெய்வசக்தியைத் தான் பிடித்துகொள்ள வேண்டும். யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார் வழிபாடு பயன்தரும். 

நரசிம்ம துதியான மந்திரராஜபத ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது. முடியாவிட்டால் இயன்ற போதெல்லாம் யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜெபித்து வாருங்கள்.
Read more...

தோஷம் நீக்கும் அரசமர வழிபாடு

1. தீரா நோய் தீர

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும். குறிப்பிட பகுதியில் பாதிப்பு, நோய் இருந்தால் பாதிப்பு  / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு வைக்கவும். விரைவில் குணம் கிடைக்கும்.

2. ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .

3. தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.

4. ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.
Read more...

திருமண தடை நீக்கும் படவேடு ரேணுகாம்பாள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேட்டில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் திருக்கோவில் சக்தி தலங்களில் ஒன்றாகும்.
கருவறையில் வேறெங்குமில்லாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களுடனும் எழுந்தருளியுள்ளார்கள்.

அன்னை ரேணுகாதேவி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பதுடன், அம்மை, பில்லி, சூன்யம் போன்ற பிணிகளை நீக்கி அனைத்து செல்வங்களையும் அளித்து வருகிறாள். திருமணம் கைகூடவும், குழந்தை வரம் வேண்டுவோர் உரிய பலனை பெற்றுச் செல்வதும் கண்கூடாக நடந்து வருகிறது. 

இத்திருக்கோயிலில் ஆகம விதிப்படி தினசரி மூன்று கால பூஜை நடைபெறுகிறது. பிரதி வருடம் ஆடி மாதத்தில் முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து ஏழு வெள்ளிகளில் ஆடிப்பெருவிழா நடைபெற்று வருகிறது. 
Read more...

பிரச்சனைகள் தீர சுழலும் கிரகத்தை சொல்லாலே போற்றுவோம்

நமது வளர்ச்சிக்கு கிரகங்களின் சுழற்சியே காரணம். நவக்கிரகங்கள் நமது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கின்றன. மாற்றம் பெறும் வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டுமானால், கூட்டமாக இருக்கும் நவக்கிரகத்தைக் கும்பிட வேண்டும். தோற்றத்தை அழகாக்குவது முதல் தொழிலை உருவாக்கி எழிலான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது வரை நவக்கிரகத்தின் கையில்தான் இருக்கின்றது.

சூரியன் உடல் ஆரோக்கியத்தை வழங்கும். 

சந்திரன் புகழ் கீர்த்தியைக் கொடுக்கும். 

செவ்வாய் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் தரும். 

புதன் அறிவு வளத்தைப்பெருக்கும். 

குரு நமது மதிப்பையும், மரியாதையையும் கூட்டும். 

சுக்ரன் அழகையும், ஆற்றல் மிகுந்த பேச்சையும் தரும். 

சனி ரோகத்தைத் தவிர்க்கும். இழப்பை ஈடுசெய்யும். 

ராகு பயத்தைப் போக்கும். 

கேது பாரம்பரியத்தை வளர்க்கும். 
Read more...

விநாயகருக்கான முக்கியமான விரதங்கள்


விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். 

1. வெள்ளி விரதம் : வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

2. செவ்வாய் விரதம் - ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.

3. சதுர்த்தி விரதம் - பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.

4. குமாரசஷ்டி விரதம் - கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.

5. தூர்வா கணபதி விரதம் - கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.

6. சித்தி விநாயக விரதம் - புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.

7. தூர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.

8. விநாயக நவராத்திரி - ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.

9. வெள்ளிப்பிள்ளையார் விரதம் - ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.

10. செவ்வாய் பிள்ளையார் விரதம் - ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இப்பூஜை செய்வர். குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஒளவையார் கோவிலில் விசேஷமாகக் செய்யப்படுகிறது. செல்வச்செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக பெண்களின் நம்பிக்கை.

11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை - பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.
Read more...

புருஷோத்தமன் வரம் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்


ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாளில் சிவாலயத்திற்குச் சென்று எள் தீபத்தை சனீஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அதுமட்டுமில்லாத ‘சனி பிடிக்காத தெய்வம்’ என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவோம். எல்லா சனிக்கிழமைகளிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்த கிழமையாகக் கருதப்படுகிறது. 

அன்றைய தினங்களில் விரதம்இருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். ‘புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால்விஷ்ணுவை ‘புருஷோத்தமன்’ என்றுஅழைக்கிறார்கள். அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது. காரணம் ஒரு இல், ஒருசொல், ஒரு வில் என்று வாழ்ந்ததுதான். அந்த ராமாயணத்தை புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். ராமர் பட்டாபிஷேக படம் வைத்து அதன் முன்னிலையில் இன்றும் கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கின்றார்கள். 

ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட்டவர்களுக்கு எல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது. பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி, வன்புகழ் நாராயண சுவாமி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், அரியக்குடி- ஸ்ரீனிவாசப் பெருமாள், கீழச்சிவல்பட்டி கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், செவ்வூர் ரோட்டுப் பெருமாள், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தமிழகமெங்கும் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள். 
Read more...

Tuesday, September 13, 2016

மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்ய வேண்டுமா?


பெற்றோர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது எவ்வளவு அவசியமோ, அதுபோல அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம். 

அதற்காக தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர் கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர். நன்றியுணர்வோடு, அவர்கள் மறைந்த மாதத்தின் திதியன்று மறக்காமல் கவனமுடன் செய்தல் அவசியம் என்பதால் இதனை ‘சிரார்த்தம் என்றும் சொல்வார்கள். 

தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் வரும் அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். சிலர் தை, ஆடி அமாவாசைகளில் மட்டும் கொடுக்கிறார்கள். 

ஒருவேளை, இதுவரை பிதுர் தர்ப்பணமே செய்யாமல் இருந்தால், மகாளாய அமாவாசையன்று அதைத் தொடங்கினால் மிகவும் சிறப்பு. இந்த தருணத்தில் தான் நமது முன்னோர் ஒட்டு மொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம். தர்ப்பணத்தின் போது எள், ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். 

இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம். பூலோகத்திற்கு தங்கள் பிள்ளைகளை பார்க்க வந்த முன்னோர் மீண்டும் பிதுர்லோகத்திற்கு திரும்புவதாக ஐதீகம். 
Read more...

வீட்டில் வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்


கட்டி முடித்த வீட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டில் வாயிலாக சரி செய்யலாம்.

ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:

வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க நலமுண்டாகும்.
Read more...

ராமாயணம் படித்த பலன் கிடைக்கும் ஸ்லோகம்


கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைப்பது உறுதி.

ஸ்ரீ ராமம் ரகுதுலு திலகம் சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தசரம்’  
அங்குல்யாபரண சோபிதம், சூடாமணி தர்ஸன கரம்
ஆங்சநேய மாஸ்ரயம், வைதேஹி மனோகரம்
வாகர சைன்ய ஸேவிதம், சர்வ மங்கள கார்யானு
கூலம் சத்தம் ஸ்ரீராமச்சந்திர பாலயமாம்

 
- இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிட்டும்.

 ‘ராம ராம ஹரே ராம்’ 
 
என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வந்தால் விஷ்ணு சகஸ்ர நாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும். 
Read more...

திருமணம் தடை நீக்கும் ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரம்

திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் துர்வாச முனிவர் அருளிய கீழ்க்காணும் ‘ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லிவரலாம். அடுத்தடுத்துத் தடைகள் ஏற்பட்டு அதனால் திருமணம் கைகூடாமல் வருந்துவோருக்கும் இந்த ஸ்தோத்திரம் நற்பலன்களைத் தந்து மன ஆறுதலையும் அருளும். 

ஆவணியும் பிறந்து திருமண சுபமுகூர்த்த நாட்களும் அடுத்தடுத்து அணிவகுத்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் திருமணத் தகுதிபெற்றிருப்போரும், திருமணம் நிச்சயம் ஆகாமல் பல இடையூறுகளை சந்திப்பவர்களும் விரைவில் மணவாழ்க்கை அமையப்பெற்று வாழ்வாங்கு வாழ பார்வதி தேவியை பிரார்த்தித்துக்கொள்கிறோம். 

ஓம் ஹ்ரீம் யோகின்யை நம:
ஓம் ஹ்ரீம் யோகேஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் பயங்கர்யை நம:
ஓம் ஹ்ரீம் பந்தூக வர்ணாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸுகாத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் அம்போஜருத்யை நம:
ஓம் ஹ்ரீம் அபிலாஷ தாத்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் நிர்ஜாதாரு கல்பாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் மந்த்ராண்யை நம:
ஓம் ஹ்ரீம் காமாயை நம: 

ஓம் ஹ்ரீம் க்ஷேமங்கராண்யை நம:
ஓம் ஹ்ரீம் பால்யாவஸ்தாயை நம:
ஓம் ஹ்ரீம் லலிதாயை நம:
ஓம் ஹ்ரீம் பவத்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீகண்டபாமின்யை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரபதீன வேண்யை நம:
ஓம் ஹ்ரீம் நவயெளவனாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ துர்க்காயை நம:
ஓம் ஹ்ரீம் விலாச பயாக்ஷிண்யை நம:
ஓம் ஹ்ரீம் க்ருச்சாயை நம: 

ஓம் ஹ்ரீம் விலக்ராயை நம:
ஓம் ஹ்ரீம் பர்யுஸ்த்ரிதாயை நம:
ஓம் ஹ்ரீம் குசபராயை நம: 
ஓம் ஹ்ரீம் ஜகன்யை நம:
ஓம் ஹ்ரீம் ஜனகாயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரசுர பக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் கிரிசாயை நம:
ஓம் ஹ்ரீம் பரிசாரிண்யை நம:
ஓம் ஹ்ரீம் அனுகூலாயை நம:
ஓம் ஹ்ரீம் ஈச்வர்யை நம: 

ஓம் ஹ்ரீம் க்ரியாட்ஹ்யஜாயை நம:
ஓம் ஹ்ரீம் பஞ்ச ஹுதாசனாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸதாசிவாயை நம:
ஓம் ஹ்ரீம் வித்ராச தாத்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் வர்ணதாமல ஸத்கராயை நம:
ஓம் ஹ்ரீம் மந்தஹாஸாயை நம:
ஓம் ஹ்ரீம் மோஹாவஹாயை நம:
ஓம் ஹ்ரீம் பவான்யை நம:
ஓம் ஹ்ரீம் பத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரமோத ஜனன்யை நம:

ஓம் ஹ்ரீம் நந்தானுபூதி ரஸிகாயை நம:
ஓம் ஹ்ரீம் கல்யாண்யை நம:
ஓம் ஹ்ரீம் மஹேஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் சம்முக்த மன்மத சராசன
சாருரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் அம்பிகாயை நம:
ஓம் ஹ்ரீம் புவன ஸுந்தர்யை நம:
ஓம் ஹ்ரீம் தீஷ்ணாம்பராலாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸுந்தர்யை நம:
ஓம் ஹ்ரீம் ருத்ரப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் கஸ்தூரிகா திலகின்யை நம:

ஓம் ஹ்ரீம் ரக்தாம்பராபரண
மால்யதராயை நம:
ஓம் ஹ்ரீம் நவகுங்கும மாத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் சாருரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் கிரிஜாயை நம:
ஓம் ஹ்ரீம் கனகமங்கள சூத்ர சோபாயை நம:
ஓம் ஹ்ரீம் சந்த்ரார்த்த சாரு மகுடாயை நம:
ஓம் ஹ்ரீம் நவபத்ம ஸம்ஸ்த்தாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரிநேத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் கதம்ப வன வாஸின்யை நம:
ஓம் ஹ்ரீம் உத்வேலமத்ய வஸத்யை நம: 

ஓம் ஹ்ரீம் மதுராங்காயை நம:
ஓம் ஹ்ரீம் மாயாயை நம:
ஓம் ஹ்ரீம் தத்வாத்மிகாயை நம:
ஓம் ஹ்ரீம் பகவத்யை நம:
ஓம் ஹ்ரீம் சம்பு ப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் சசிகலா வதம்ஸாயை நம:
ஓம் ஹ்ரீம் பாசபாண்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸம்பத்ப்ரதான நிரதாயை நம:
ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் அபாக்ருபாயைக்ஷ நம:

ஓம் ஹ்ரீம் ஆருட துங்க துர்காயை நம:
ஓம் ஹ்ரீம் ம்ருது பாஹுவல்யை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரகல்பாயை நம:
ஓம் ஹ்ரீம் மனோஞாயை நம:
ஓம் ஹ்ரீம் காமாத்மிகாயை நம:
ஓம் ஹ்ரீம் அகில தர்ம மூர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் ஜயாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரிகுணஸ்வரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் கருணாம்ருதாயை நம:
ஓம் ஹ்ரீம் சமஸ்த மூர்த்யை நம: 

ஓம் ஹ்ரீம் விஸ்வஜன மோஹன
திவமாயாயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகதீஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் கர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் பர்த்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹர்த்ர்யை நம: 
ஓம் ஹ்ரீம் விதிஹராத்ம சக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் புக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் அமிதப்ரஸூத்யை நம:
ஓம் ஹ்ரீம் பக்தானுகம்பின்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹாயை நம:

ஓம் ஹ்ரீம் ஸாகர ஸுதாயை நம:
ஓம் ஹ்ரீம் முனிமண்டல
த்ருச்யமூர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸுராபகாயை நம:
ஓம் ஹ்ரீம் வ்யாஹாரரூப கக்ஷமாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரிப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் நீஹாரசைல தனயாயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ருஹத் ப்ரகாச ரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் பரேச மஹிஷ்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹரஜீவ நாதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரிப்ர முகாபி வந்த்யாயை நம: 

ஓம் ஹ்ரீம் ஹேரம்ப சக்திதர நந்தின்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹேம வாண்யை நம:
ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹேமவத்யை நம:
ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
ஓம் ஹ்ரீம் மதுகமலாயை நம:
ஓம் ஹ்ரீம் ச்யாமாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரைலோக்ய ஸமயோகின்யை நம:
ஓம் ஹ்ரீம் பரதேவதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகன்மோஹின்யை நம: 

ஓம் ஹ்ரீம் அத்ரிஸுதாயை நம:
ஓம் ஹ்ரீம் இஷ்டார்தததாயை நம:
ஓம் ஹ்ரீம் தேவ முனீந்த்ர வந்தித பதாயை நம: 
ஓம் ஹ்ரீம் பார்வத்யை நம:
ஓம் ஹ்ரீம் வரப்ரதாயை நம:
ஓம் ஹ்ரீம் தரா தரேந்த்ர கன்யகாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரித்ரா ஸமன்விதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வரா பார்வத்யை நம: 
Read more...

வளமான வாழ்க்கை அமைய லட்சுமி நரசிம்ம ஸ்லோகம்

ஆதிசங்கரர் இயற்றிய லட்சுமி நரசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் நாம் எதிரிகள் பகை நீங்கி, நிம்மதியான, வளமான வாழ்க்கை அமையப் பெறுவோம்.

மத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

பொதுப் பொருள்:  திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷனின் உடல் ஒளிபொருந்திய மணிகளாக ஒளிர அந்த ஒளியின் நிறத்தை மேற்கொண்ட பேரழகுத் திருமேனி கொண்டவரே, கனிந்த முனிவர்களுக்கும், அடைக்கலம் என்று உமை அடைந்த பக்தருக்கும் நிரந்தர சரணாகதி அளிக்க வல்லவர் நீரே அல்லவா! வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பாதுகாப்பான படகாக அருள்புரியும் லக்ஷ்மி நரசிம்மனே, என் கரம் பற்றி தூக்கிவிட்டு அருள வேண்டும்.
Read more...
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini